Showing posts with label இஸ்லாமிய அடிப்படை. Show all posts
Showing posts with label இஸ்லாமிய அடிப்படை. Show all posts

Monday, August 5, 2013

நன்மைகளின் வாயில்கள்!

வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா?

“ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்றால் அவ்வருடம் முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போன்றவர் ஆவார்” (முஸ்லிம்)

 காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா?
ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!” என்று கூறினார்கள். (புகாரி ஹதீஸ் சுருக்கம்)

நோன்பு திறக்க ஏற்பாடு செய்வதன் சிறப்புகள்:
யார் நோன்பாளி நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு செய்கின்றாரோ அவருக்கு நோன்பாளியின் கூலி கிடைக்கும். எனினும் நோன்பாளியின் கூலியில் எந்தக்குறைவும் ஏற்படாது. (திர்மிதீ)

பன்மடங்கு நன்மைகளை பெற குர்ஆனை ஓதுங்கள்!
“யார் ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒரு நன்மை. ஒரு நன்மை என்பது அதைப் போன்று பத்து மடங்கு. ‘அலிப்’ ‘லாம்’ ‘மீம்’ என்பது ஒரு எழுத்து இல்லை. ‘அலிஃப்’ ஒரு எழுத்து, ‘லாம்’ ஒரு எழுத்து, ‘மீம்’ ஒரு எழுத்து” (புகாரி, முஸ்லிம்)

இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை வேண்டுமா?
“எவர் ‘இஷாத்’ தொழுகையை ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் பாதி இரவை நின்று வணங்கியவர் போலாவார். எவர் சுப்ஹ் தொழுகையையும் ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் முழு இரவும் தொழுததைப் போன்றதாகும்.” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு ஹஜ் செய்த நன்மையைப் பெற!
“ரமளான் மாதத்தில் உம்ரா செய்வது ஒரு ஹஜ் அல்லது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்குச் சமமானதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மை வேண்டுமா?
‘லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர்
(பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)
‘என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர! (புகாரி)

அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிய வேண்டுமா?
“என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்பவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை வேண்டுமா?
(தொழுகை அழைப்பான) பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும்போது,
அல்லாஹூம்ம ரப்ப ஹாதிஹித் தஃவத்தித் தாம்மாத்தி வஸ்ஸலாத்தில் காயிமத்தி ஆத்தி முஹம்மதனில் வஸீலத்த வல்ஃபளீலத்த வப்அஸ்ஹூ மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹூ
பொருள்: பரிபூரணமான இந்த அழைப்புக்கும் நிலைபெறப் போகும் தொழுகைக்கும் சொந்தக்காரணமாகிய அல்லாஹ்வே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ‘வஸீலா’ என்ற உயர் பதவியையும் சிறப்பையும் வழங்கி, அன்னாரை நீ வாக்களித்துள்ள புகழுக்குரிய இடத்தில் எழுப்புவாயாக!
என்று யார் ஓதுகின்றாரோ அவருக்கு எனது பரிந்துரையுண்டு’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

லுஹா தொழுகையின் சிறப்புகள்:
உங்களில் ஒருவர் தனது எலும்பு மூட்டுகளுக்காக தர்மம் வழங்க வேண்டும். (நீங்கள் கூறுகின்ற) ஒவ்வொரு சுபுஹானல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு லாயிலாஹ இல்லல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் தர்மமாகும்.
நன்மையை ஏவுவதும் தர்மமாகும். தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். முற்பகல் நேரத்தில் இரண்டு ரக்ஆத்துகள் தொழுவது இவை அனைத்திற்கும் போதுமான தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

மலைகளைப் போல நன்மைகள் வேண்டுமா?
“மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ‘கிராத்’ அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கிராத்’ அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு ‘கிராத்’ என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

நன்றி:சுவனத்தென்ற

Thursday, June 27, 2013

இலங்கையில் இஸ்லாமிய வங்கித்துறை எதிர்நோக்கும் சவால்கள் – அஷ்ஷெய்க் யூஸுப் முப்தி

yoosuf-mufthi[1]
இஸ்லாமி வங்கி முறை குறித்துப் பேசும்போது இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை குறித்தும் இந்த உலகுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இன்றைய உலகில் இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அதன் யதார்த்தத்தை பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
மீள்பார்வை ஊடக மையத்தினால் வெளியிடப்பட்ட "இஸ்லாமிய வங்கி முறை ஓர் அறிமுகம்" எனும் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும்போது அஷ்ஷெய்க் யூசுப் முப்தி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இன்றைய உலகில் வேலையில்லாப் பிரச்சினை நிலவுகிறது. இதனை நிவர்த்திக்க வேண்டுமாக இருந்தால் உலகம் இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொண்டாக வேண்டும். பணப்புழக்கம், கொடுக்கல் வாங்கல் குறித்து அல்குர்ஆன் பேசியிருக்கிறது. நபியவர்களின் காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் இந்த நடைமுறை இருந்திருக்கிறது. யூசுப் (அலை) அவர்களை பல திர்ஹம்களுக்கு விற்றது குறித்தும் குகைவாசிகள் பணத்தைக் கொண்டு பொருள் வாங்கியது குறித்தும் அது கூறுகின்றது.
இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின் உலகம் ஒரு மாற்றத்தை எதிர்கொள்கிறது. அழிவிலிருந்து மீள வேண்டிய தேவை உலகத்தில் ஏற்பட்டது. இதற்கு பலரது உதவியும் தேவைப்பட்டது. இந்த அடிப்படையில் 1940 – 1970 வரையில் இஸ்லாமிய பொருளாதாரம் குறித்த ஆய்வுகள் ஆங்காங்கே தனிநபர் முயற்சிகளாக நடை பெற்றன. 1970 களில்தான் முதன்முறையாக இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்த ஒரு மாநாடு கராச்சியில் நடைபெற்றிருக்கிறது. 70 வரைக்குமான காலத்தில் தனிநபர்கள் மூலம் இந்த சிந்தனை உலகிற்கு முன்வைக்கப் பட்டிருக்கின்றது. அல்லாஹ் அவர்களுக்கு அருள்பாளிக்க வேண்டும்.
இஸ்லாமிய பிக்ஹ் நூல்களை எடுத்து நோக்கும் போது இஸ்லாமிய வங்கிமுறை, பொருளாதாரம் என்பன குறித்து விரிவாகப் பேசா விட்டாலும் அதனுயை பகுதிகள் குறித்துப் பேசியிருப்பதனை நாம் காணலாம். ஆனால் இரண்டு உலமாக்கள் இது பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்கள் இது குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்கள்.
அப்பாஸியர் காலத்திலே இஸ்லாமிய பொருளாதாரம் எப்படி இருந்தது. எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவுரைகளை அவர்கள் வழங்கினார்கள். மற்றவர் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள். இவர் ஒரு சூபியாக இருந்தாலும் இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்து விரிவாகவும் அழகாகவும் பேசியிருக்கிறார்.
இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்து இப்படியெல்லாம் இருக்கின்ற நிலையில் எமக்கு அது பற்றி என்ன தெரியும் என்ற கேள்வி இங்கு எழுகிறது. எமது நாட்டிலும் இஸ்லாமிய வங்கி முயற்சியின் வரலாறு சுமார் 25 வருடங்களாக இருந்து வருகின்றது. இதனால் பல சாதனைகள் அடையப் பெற்றிருக்கின்றன. ஆனால் இதில் நாம் பல தவறுகளை விட்டிருக்கிறோம். விட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதனை நாம் இப்படி நோக்கலாம் இஸ்லாமிய வங்கி 4 முறைகளுக்கு மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது, சுருக்கப்பட்டிருக்கிறது. இது விரிவாக்கப்பட வேண்டும். இங்கு எந்த இஸ்லாமிய வங்கி அலகை நோக்கினாலும் அங்கு முழாரபா. இஜாரா முராபஹா முஷாரகா காணப்பகிறது. இந்த நான்கையும்தவிர வேறு எதனையும் இங்கு நாம் காண முடியாது. மைக்ரோ பைனான்ஸ் எனும் நுண்கடன் திட்டம் எங்கே போனது? மைக்ரோ தகாபுல் எங்கே போனது? ஏழைகளுக்கு, வங்கிக்குப் போக முடியாதவர்களுக்கு இஸ்லாமிய வங்கியினூடாக என்ன செய்யலாம்? நுண் கடன் குறித்து அவசியம் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். மாநாடுகள் நடத்தப்பட வேண்டும். இஸ்லாமிய நுண்கடன் திட்டத்தை எப்படி இந்த நாட்டிலே அறி முகப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.
பங்கலாதேஷைச் சார்ந்த கலாநிதி யூனுஸ் அவர்கள் பாரம்பரிய வங்கி முறையில் நுண்கடனை அறிமுகப்பத்தியதற்காக நோபல் பரிசு பெற்றார். நாம் இதனை இலங்கைக்கு அறிமுகப்பத்த வேண்டும். எமது வங்கிகளிடம் நான் இதனை எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். ஏழைகளுக்கு எப்படி உதவலாம் என்று நாங்கள் சிந்திக்க வேண்டும். ஏழைகளையும் கரை சேர்க்கத்தான் இந்த வங்கி இருக்கின்றது என்ற உணர்விலே இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் செயற்பட வேண்டும். அப்படி இருக்கின்றதா என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
எனவே எமது நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் சுருக்கப் பட்டிருக்கின்றன. பணக்காரர்களுக்கு மட்டுமான ஒன்றாகவே இஸ்லாமிய வங்கித்துறை இந்த நாட்டிலே இன்று உருவெடுத்து வருகின்றது. இதனை யாரும் மறுக்கவோ நிராகரிக்கவோ முடியாது. ஹராமான முறையிலிருந்து ஹலாலுக்கு வந்திருக்கிருக்கிறோம் என்று திருப்திப்பட முடியும். ஆனால் இதனால் முஸ்லிம்களுக்கு, ஏனையவர்களுக்கு ஏழைகளுக்கு ஏதும் இலாபம் கிடைத்ததா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கும். இது இஸ்லாமிய வங்கித்துறையில் உள்ள முதலா வது சவாலாகும்.
இரண்டாவது சவால் என்ன வென்றால் இஸ்லாமிய வங்கித் துறையானது ஒரு குழப்பமாக மாறியிருக்கின்றது. இதைப்பற்றி வங்கியில் பணிபுரிகின்ற நிறையப் பேர் அறியாதவர்களாக இருக்கிறார்கள். நேற்று பாரம்பரிய வங்கி ஒன்றில் நிறைவேற்று அதிகாரியாக பணிபுரிந்தவர் இன்று காலையில் இஸ்லாமிய வங்கி ஒன்றில் நிறைவேற்று அதிகாரியாக மாறுகிறார். எப்படி மாறலாம்.?
இஸ்லாமியப் பொருளாதாரக் கோட்பாடு வஹியின் பின்புலத்திலிருந்து தோன்றுகின்றது. இதற்கு ஒரு ஆன்மீகம் இருக்கிறது. இது அல்லாஹ்வின் கட்டளை ஒன்றை நிறைவேற்றும் நோக்கிலே செய்யப்பட வேண்டிய ஒன்று. எனவே இது குறித்த அறிவு முக்கியமானதாகும்.
மூன்றாவது சவால் வங்கிக்கு வெளியே இருக்கின்றவர்களும் இதைப் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இதைச் சொல்வதற்கு என்னை மன்னிக்க வேண்டும். இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்து உலமாக்களிடம் கேட்கின்ற போது கூட இதைப் பற்றி அவரிடம் கேளுங்கள். இவரிடம் கேளுங்கள் எனச் சொல்கிறார்கள்.
எனவே நாம் அனைவரையும் அறிவூட்டவேண்டிய தேவை இருக்கிறது. ஹலால் பிரச்சினையில் என்ன நடந்தது? நாங்கள் அறிவூட்டவில்லை. பிரச்சினை வந்த பிறகு அறிவூட்டிப் பயனில்லை. ஹலால் தொடர்பாக பிரச்சினை வந்த பிறகு செய்த மாநாடுகளையும், பத்திரிகை அறிக்கைகளையும் நாம் என்றோ செய்திருக்க வேண்டும். வங்கித் துறையும் இது குறித்து முஸ்லிம்களையும் பெரும்பான்மையினரையும் அறிவூட்ட தமது வருடாந்த நிதி ஒதுக்கீட்டிலே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்த நாட்டின் தலைவர்களிடத்திலே சொல்ல வேண்டும். வட்டிக்கு எதிராக குரல் கொடுக்க வாருங்கள் என அழைக்க வேண்டும். வட்டி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்ட 600 பேருடைய பைல்கள் எமது வங்கியிலே இருக்கின்றன என ஒரு வங்கியின் உரிமையாளரான கிறிஸ்தவர் ஒருவரை நாம் சந்தித்த பொழுது கவலையோடு சொன்னார்.
நாங்கள் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. எதனையோ செய்து கொண்டிருக்கிறோம். இஸ்லாமிய வங்கி என்ற எண்ணக்கருவை நாம் சரியாக மக்கள் மனதில் விதைக்க வேண்டும். இன்று அது கொச்சையாகப் பேசப்படுகிறது.
நான்காவது சவால்தான் இத்துறை வர்த்தகம் செய்பவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. விவசாயத்துறையினருக்கு இங்கு எதுவும் இல்லை. ஆனால் இஸ்லாமிய வங்கிமுறை சூடானிலிருந்துதான் உலகுக்கு அறிமுகமானது. முஸாரஆ, முஹாபரா, முஸாகாத் போன்றவற்றை வைத்துத்தான் அது உருவானது. ஆனால் எங்கள் வங்கிகள் எங்கு பணம் அதிகம் இருக்கிறதோ அங்குதான் தமது கிளைகளை நிறுவுகின்றன.
எனவே இஸ்லாமியப் பொருளாதாரம், வங்கித்துறை குறித்து ஒவ்வொருவரும் அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு ஆரம்ப எட்டாக இந்த நூல் அமையும் என்று எதிர்பார்க்கிறேன். இது போன்ற புத்தகங்கள் சிங்கள மொழியில் வெளிவருவதும் கட்டாயமானது என்ற கருத்தோடு எனது உரையை நிறைவு செய்கிறேன்.
-Meelparvai-

Wednesday, November 7, 2012

தீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்




நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின் அது வரை மதீனாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த யூதர்களின் தலைமைக்கு ஆபத்து வந்தது.
 
பெரும்பாலான மக்கள் நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொண்டதால் ஆட்சியும் அவர்கள் கைக்கு வந்தது. முஹம்மது நபியை எப்படியாவது கொலை செய்தால் தான் ஆட்சி நம் கைக்கு மீண்டும் வரும் என்று யூதர்கள் சதித் திட்டம் தீட்டினார்கள்.
 
இந்தச் சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மதீனாவுக்கு வெளியே ஒரு பள்ளி வாசலைக் கட்டினார்கள். தங்களை முஸ்லிம்கள் என்று அறிவித்துக் கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தங்களின் பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து மறைந்திருந்து தாக்கி அவர்களைக் கொல்வது அவர்களின் நோக்கமாக இருந்தது.

பள்ளிவாசலுக்குள்ளே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்லத் திட்டம் தீட்டிக் கொண்டு நபிகள் நாயகத்தை அழைத்தார்கள். தங்கள் பள்ளிவாசலுக்கு வருகை தந்து முதல் தொழுகை தொழுது ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஊருக்கு வெளியே இப்பள்ளிவாசல் கட்டப்பட்டதால் இதன் பிண்ணணியில் உள்ள சதித்திட்டம் நபிகள் நாயகத்திற்கும், மற்ற முஸ்லிம்களுக்கும் தெரியவில்லை.
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இவர்களின் சதித் திட்டத்தை அறியாமல் அந்தப் போலிப் பள்ளிவாசலுக்குச் செல்ல ஒப்புக் கொண்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் பின் வரும் வசனங்களை இறைவன் அருளினான்.

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் 'நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை' என்று சத்தியம் செய்கின்றனர். 'அவர்கள் பொய்யர்களே' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். திருக்குர்ஆன் 9.107,108

அல்லாஹ் அறிவித்தவாறு அப்பள்ளிவாசலைச் சோதனையிட்ட போது சதிகாரர்களின் சதி அம்பலமானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பது இதன் மூலம் நிரூபனமானது.

நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள்

இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்பதற்கு திருக்குர்ஆன் எவ்வாறு ஆதாரமாக உள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளும் ஆதாரங்களாக அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

1 பாரசீகம் வெற்றி கொள்ளப்படும்

நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் மரணிக்கும் வேளையில் பாரசீகம் மிகப் பெரிய வல்லரசாகத் திகழ்ந்தது. இந்த வல்லரசை முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள் என்றும், இந்த வெற்றி மிகவும் குறுகிய காலத்தில் கிட்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

பாரசீக மன்னன் கிஸ்ராவின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை உனக்கு நீண்ட ஆயுள் வழங்கப்பட்டால் நிச்சயம் காண்பாய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். நூல் : புகாரி 3595

பாரசீகப் பேரரசு முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்படும் என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அந்த வெற்றியைத் தம் கண்களால் காண்பார் என்பதையும் கூறுகிறார்கள்.

பலநுறு வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை. உன் வாழ்நாளிலேயே அதைக் காண்பாய் என்றும் அதீ பின் ஹாதிமிடம் தெரிவிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு பாரசீகத்தை உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். அதன் கருவூலங்களையும் தமதாக்கிக் கொண்டார்கள்.

பாரசீக மன்னன் கிஸ்ராவின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்று அதீ பின் ஹாதம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நூல் : புகாரி 3595

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பும் மாற்றம் ஏதுமின்றி முழுமையாக நிறைவேறியது.

Thursday, July 19, 2012

RAMADAN QUOTES

"(It was) the month of Ramadan in which was revealed the Qur’aan, a guidance for mankind and clear proofs for the guidance and the criterion (between right and wrong). So whoever of you sights (the crescent on the first night of) the month (of Ramadan i.e. is present at his home), he must observe Sawm (fasts) that month…" ~ [al-Baqarah 2:185]

"Allah is with those who restrain themselves." ~ [Quran 16: 128]

He is the One GOD; the Creator, the Initiator, the Designer. To Him belong the most beautiful names. Glorifying Him is everything in the heavens and the earth. He is the Almighty, Most Wise." ~ [Quran 59:24]

"Allaah has made Laylat al-Qadr in this month, which is better than a thousand months, as Allaah says...The Night of Al-Qadr is better than a thousand months. Therein descend the angels and the Rooh [Jibreel (Gabriel)] by Allaah's Permission with all Decrees, there is peace until the appearance of dawn." ~ [al-Qadar 97:1-5]

"(Fasting) for a fixed number of days; but if any of you is ill, or on a journey, the prescribed number (Should be made up) from days later. For those who can do it (With hardship), is a ransom, the feeding of one that is indigent. But he that will give more, of his own free will,- it is better for him. And it is better for you that ye fast, if ye only knew" ~ [al-Baqarah, 2:184]

"O ye who believe! Fasting is prescribed to you as it was prescribed to those before you, that ye may (learn) self-restraint." ~ [al-Baqarah, 2:183]

"When My servants ask you about Me, I am always near. I answer their prayers when they pray to Me. The people shall respond to Me and believe in Me, in order to be guided." ~ [al-Baqarah, 2:186]

"Permitted for you is sexual intercourse with your wives during the nights of fasting. They are the keepers of your secrets, and you are the keepers of their secrets. GOD knew that you used to betray your souls, and He has redeemed you, and has pardoned you. Henceforth, you may have intercourse with them, seeking what GOD has permitted for you. You may eat and drink until the white thread of light becomes distinguishable from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the Masjid (during the last ten days of Ramadan). These are GOD's laws; you shall not transgress them. GOD thus clarifies His revelations for the people, that they may attain salvation." ~ [al-Baqarah, 2:187]

Saturday, July 14, 2012

ரய்யான் எனும் சுவன வாசல் நோக்கி...

Ramadan 1427 e Card version by mekaகண்ணியமிக்க பேரருள்களைச் சுமந்து மீண்டும் ஒருமுறை எங்களை நோக்கி வந்திருக்கிறது
, அல்ஹம்துலில்லாஹ். அந்த அருள்நிறைந்த மாதத்தை எவ்வாறெல்லாம் கண்ணியப்படுத்த வேண்டும் எத்தகைய செயல்களால் அந்த மாதத்தின் பரிசுத்தத் தன்மைக்கு களங்கம் கற்பிக்கக் கூடாது என்பதை இம்மாதத்தில் நீங்கள் கேட்கப் போகும் ஒவ்வொரு மார்க்க விளக்கமும் உங்களுக்கு விளக்கத்தான் போகின்றது.
அந்த விளக்கங்களுக்கு மத்தியில் ரமழான் எங்களை எங்கே அழைத்துச் செல்ல விரும்புகிறது அதன் அழைப்பை கௌரவித்து நாம் பதில் சொல்வோமா அல்லது அதன் அழைப்புக்கு பதில் சொல்லாமலே அதனை வழியனுப்பி விடுவோமா என்பது பற்றிய ஒரு சிந்தனையை இந்த இதழின் தஃவா களத்தினூடாக பகிர்ந்து கொள்கிறேன், இன்ஷா அல்லாஹ்.
குர்ஆன் ஓர் அழைப்பை விடுக்கிறது. கூர்ந்து நோக்கினால் அதுதான் குர்ஆன் இறங்கிய மாதத்தின் அழைப்பாகவும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
குர்ஆனின் அழைப்பு என்ன?
வானம் பூமியளவு விசாலமான சுவனத்தின்பாலும் உங்கள் இரட்சகனது மஃபிரத் (பாவமன்னிப்பு)தின்பாலும் விரைந்து வாருங்கள். (அந்த சுவனம்) இறையச்சமுள்ளவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
குர்ஆனின் இந்த அழைப்பில் மூன்று விடயங்கள் இருக்கின்றன.
  • வானம், பூமியளவு விசாலமான சுவனம்
  • உங்கள் இரட்சகனது பாவமன்னிப்பு
  • பாவமன்னிப்புக்கு ஒரு மனிதனைத் தயார் செய்து சுவனத்தைப் பெற்றுக் கொடுக்கும் இறையச்சம்
இம்மூன்றையும் நினைவில் வைத்துக் கொண்டு நோன்பின் பக்கம் கவனத்தை சிறிது திருப்புவோம். அங்கும் இதோ மூன்று விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருப்பதை நீங்கள் காணலாம்.
  • நோன்பு நோற்றவர் ரய்யான் என்ற பிரத்தியேக வாயிலால் சுவனம் நுழைவார் என்றும்
  • நோன்பு மாதத்தை அடைந்ததும் எந்த மனிதரது பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ, அவர் நாசமாகட்டும் என்றும்
  • உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்படுகிறது, நீங்கள் இறையச்சம் பெறலாம் என்பதற்காக என்றும்
அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன செய்திகள் குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளன.
ஆக, எதன் பக்கம் விரைந்து வாருங்கள் என்று குர்ஆன் அழைப்பு விடுக்கிறதோ, அதன் பக்கமே குர் ஆன் இறக்கியருளப்பட்ட மாதமான ரமழானும் அழைப்பு விடுப்பது தெளிவாகத் தெரிகிறது.
இங்கு நாம் படித்துணர வேண்டிய பாடம் என்ன? குர்ஆனும் ரமழானும் விடுக்கும் அழைப்பின் அர்த்தம் என்ன? இந்த அழைப்பின் பக்கம் நோன்பு நோற்கும் சமூகமும் செல்ல முயற்சிக்கிறதா அல்லது அழைப்பையும் புரியாமல் அழைப்புக்கு பதிலும் சொல்லாமல் ரமழானை நாம் கழித்து விடுகிறோமா?
முதலில் அழைப்பின் அர்த்தத்தை விளங்குவோம்.
  • சுவர்க்கத்தை நோக்கி விரையுங்கள்.
  • சுவனம் வேண்டுமாயின் உங்கள் இரட்சகனிடமிருந்து பாவமன்னிப்பைப் பெறுங்கள்.
  • பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமாயின், உங்கள் வாழ்வு முழுவதையும் இறையச்சத்தால் சீர்செய்து நெறிப்படுத்துங்கள்.
  • இறையச்சத்தைப் பெறுவதற்கு நோன்பு நோற்றுப் பயிற்சி பெறுங்கள்.
  • இறையச்சத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குர் ஆனையும் சுன்னாவையும் படியுங்கள்.
இவ்வாறு சங்கிலித் தொடராக பிணைக்கப்பட்ட ஒரு பாதையில் தொடர்ந்து முன்னேறிச் சென்று சுவர்க்கத்தை அடைந்து கொள்ளுங்கள் என்பதே குர்ஆனினதும் ரமழானினதும் அழைப்பின் அர்த்தமாகும்.
இந்த அர்த்தம் புரியப்பட்டுள்ளதா? நோன்பு நோற்பவர்கள் இவ்வாறானதொரு நீண்ட பாதையில் தமது பயணத்தை ஆரம்பித்து சுவனம் நோக்கிச் செல்கிறார்களா அல்லது நீண்டு செல்லும் சங்கிலித் தொடர் போன்ற இந்தப் பாதையில் ஒரு செயலை (நோன்பு) மட்டும் செய்துவிட்டு, அடுத்த ரமழான் வரை ஓய்வெடுத்துக் கொள்கிறார்களா? அல்லது ரமழானில் நோன்பும் ஷவ்வாலிலிருந்து ஓய்வும் எடுத்துக் கொண்டால் சுவனம் கிடைத்துவிடும் என்று வேறு ஓர் அழைப்பை விளங்கியிருக்கிறார்களா?
அன்பர்களே, சுவனத்துக்கு ஒரு பாதை இருக்கிறது. அந்தப் பாதையில் தொடர்ச்சியாகப் பல வேலைகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானதொரு வேலை தான் நோன்பு நோற்றலாகும்.
நோன்பு இறையச்சத்தைப் பெறுவதற்கான ஒரு பயிற்சி அல்லது பெற்ற இறையச்சத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கும் பாதுகாத்துக் கொள்வதற்குமான ஒரு கேடயம்.
அவ்வாறாயின், நோன்பின் மூலம் பெற்ற இறையச்சத்தை வாழ்வு முழுவதிலும் செயற்படுத்த வேண்டும். அந்த இறையச்சமிக்க வாழ்க்கைக்கு குர்ஆன், சுன்னாவின் போதனைகள் அவசியமாகின்றன.
எனவே, அப்போதனைகளைக் கற்க வேண்டும்.
அவ்வாறு கற்ற போதனைகளால் அலங்கரிக்கப்படும் வாழ்க்கைதான் பாவங்கள் குறைந்த வாழ்க்கையாகும். அது மட்டுமல்ல, பாவங்களுக்குப் பரிகாரம் செய்யப் பட்ட வாழ்க்கையும் அதுதான்.
எந்த மனிதனின் வாழ்க்கை பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகிறதோ அவனுக்கு சுவனம் கிடைக்கும் என்பதை அல்லாஹ் ஆணித்தரமாகக் கூறுகிறான். இந்த அல்குர்ஆன் வசனத்தை உற்று நோக்குங்கள்.
நபியே! நரக வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் ஒரு வியாபாரத்தைக் காட்டி (கற்றுத்) தரட்டுமா என்று கேளுங்கள். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விசுவாசித்து, அல்லாஹ்வின் பாதையில் உங்கள் உயிர் உடைமைகளை அர்ப்பணித்து கடுமையாக உழையுங்கள். (நீங்கள் அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களது பாவங்களை மன்னிப்பான். சதாவும் நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனச் சோலைகளில் உங்களை நுழைவிப்பான். நிரந்தர சுவனத்தில் அதிசிறந்த வசிப்பிடங்களில் உங்களை வாழவைப்பான். அது மகத்தான் வெற்றியாகும். (61: 21)
ஆக, அர்ப்பணங்களும் தியாக உழைப்புகளும் மிக்க வாழ்க்கைதான் பாவங்கள் மன்னிக்கப்பட்ட வாழ்க்கை. அந்த வாழ்க்கைக்குப் பரிசாகவே சுவன பாக்கியம் தயார் செய்யப்பட்டுள்ளது என்ற உண்மை இந்த வசனத்தில் கோடிட்டுக் காட்டப்படுகிறது அல்லவா?
இவ்வாறு ஒரு நீண்ட பாதையில் பயணம் செய்து தான் சுவனத்தை அடைய வேண்டும்.
இன்றைய நோன்பாளிகள் பாதையை மறந்து விடுகிறார்கள். அதில் சுவனம் நோக்கிய ஒரு பயணம் இருப்பதையும் மறந்து விடுகிறார்கள். ரமழானோடு கடமைகள் முடிந்துவிட்டதாகவும் சுவனம் வாஜிபாகி விட்டதாகவும் நினைக்கிறார்கள்.
இவ்வாறு இலேசாக சுவனம் செல்ல முடியுமானால், இறுதித் தூதரோடு இணைந்திருந்த அந்த ஸஹாபிகள் சமூகம் 23 வருடங்களும் ரமழானை மாத்திரம் கொண்டாடியிருக்கலாமே! ரஸூலுல்லாஹ்வுடன் இணைந்து ரமழானைக் கொண்டாடக் கிடைப்பது அது எத்தனை பெரிய பாக்கியம்! ஏன் அந்த உத்தமத்தூதரோடு வாழ்ந்த சமூகம் அப்படியொரு விளக்கத்தை எடுத்துக் கொள்ளவில்லை?
ஆம், அவர்களுக்குத் தெரிந்திருந்தது சுவனப் பாதையில் இருக்கின்ற பிற வேலைகளையும் செய்து பயணித்தால்தான் சுவனத்தை அடையலாம் அவ்வாறு செய்யாத போது நோன்பில் எஞ்சிவிடுவது பசியும் தாகமும் மாத்திரமே என்று
எத்தனை நோன்பாளிகள் நோன்பு நோற்கிறார்கள்! அவர்களுக்கு அவர்களது நோன்பில் பசியையும் தாகத்தையும் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகிறார்கள்.
மற்றோர் அறிவிப்பில், நோன்போடு தமது வேலையை நிறுத்திக் கொண்டு அதற்கடுத்த வேலையைத் தொடராதவர் நோன்பின் நன்மைகளை இழந்து விட்டார். அவரது நோன்பு அல்லாஹ்வுக்கு அவசியமற்றது என்ற கருத்தை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகிறார்கள். பின்வரும் ஹதீஸைப் படியுங்கள்.
கெட்ட வார்த்தைகளையும் கெட்ட நடத்தைகளையும் யார் விடவில்லையோ அவர் உணவையும் குடிப்பையும் விட வேண்டும் என்ற அவசியம் அல்லாஹ்வுக்கு இல்லை.
வார்த்தையும் நடத்தையும் தான் வாழ்க்கை. அந்த இரண்டிலும் கெட்டவற்றை விடாதவர் உணவையும் குடிப்பையும் மாத்திரம் விட்டுவிட்டால் சுவனம் செல்ல முடியுமா?
நோன்பு நோற்றவர் நரகம் செல்லக் கூடாது. அவர் ரய்யான் என்ற சுவன வாயிலை நோக்கிச் செல்ல வேண்டும். அது ஒரு பயணம் பாய்ச்சல் அல்ல. நோன்பு நோற்பவர் ஒரே பாய்ச்சலில் ரய்யான் என்ற வாயிலை அடைந்துவிட முடியாது. அவர் நோன்பு காலத்திலும் சரி, நோன்பு முடிந்த பின்னும் சரி, ரய்யான் நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். பயணத்தின் இடைநடுவில் வரும் ஆபத்துக்களை அறிந்திருக்கவும் வேண்டும். பயணப் பாதையில் சறுக்கும் இடங்களை அவர் அவதானமாகக் கடந்து செல்ல வேண்டும். பாதையின் இரு மருங்கிலும் முன்னாலும் பின்னாலும் சூழ்ந்திருந்து வழிகெடுக்கக் காத்திருக்கும் ஷைத்தானின் தீங்குகளை அறிந்திருக்க வேண்டும். ஷைத்தான் அல்லாஹ்விடம் சபதம் செய்துள்ளான்.
இறைவா! நான் உனது நேரான பாதையில் அவர்களை எதிர்கொண்டு அமர்ந்திருப்பேன். பின்னர் அவர்களுக்கு முன்னாலும் வருவேன் பின்னாலும் வருவேன். வலதாலும் வருவேன் இடதாலும் வருவேன்.(அவர்களை சூழ்ந்து வழிகெடுப்பேன்.) அவர்களுள் அதிகமானோரை நன்றியுள்ளவர்களாக இருக்க நீ காண மாட்டாய். (7: 16)
இத்தகைய தடைகளையெல்லாம் தாண்டித்தான் ரய்யான் எனும் சுவனவாயிலை நோக்கிய பயணம் அமைய வேண்டும்.
அல்லாஹ்வின் தூதரும் அன்னாரின் தோழர்களும் நோன்புகளை நோற்றுவிட்டு ரய்யான் திறந்து கொள்ளும் என்று வாளாவிருக்கவில்லை. அவர்கள் பயணித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்களது பயணத்தில் பெரும் சவால்கள் காத்திருந்தன. பத்ரும் உஹதும் ஹந்தக்கும் சாமான்ய சவால்களா?
ரமழான் மாதத்தில்தான் பத்ரையும் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது, ஏன் இத்தனை சிரமம்? எங்களைப் போன்று நோன்புகளோடு கடமைகளை முடித்துவிட்டு ரய்யான் திறந்து கொள்ளும் எனக் காத்திருந்திருக்கலாமே! ரமழானில்தானா மக்காவை வெற்றி கொள்ளப் புறப்பட வேண்டும்? மக்கா திறந்து கொள்ளாவிட்டாலும் ரய்யான் திறந்து கொள்ளும் என்று அவர்கள் இருந்திருக்கலாமே!?
அன்பர்களே! நாம் விளங்கிய மார்க்கம் வேறு நபிகளார் விளக்கி, செய்து காட்டிய மார்க்கம் வேறு. அவர்கள் காட்டிய மார்க்கத்தில் ஒரு தெளிவான பாதையும் பயணமும் இருந்தன. அந்தப் பயணத்தில் ஆரம்பம் எது, முடிவு எது பாதையில் மேடு எது, பள்ளம் எது சவால் எது, சாணக்கியம் எது பயிற்சி எது, பண்பாடு எது? போன்ற அனைத்தும் தெளிவாக இருந்தன.
நாங்கள் விளங்கிய மார்க்கத்தில் அப்படியொன்றும் இல்லை. ஸஹர் உணவை எதுவரை சாப்பிடலாம்? பேரீத்தம் பழத்தினால் நோன்பு துறப்பதா? பழம் இல்லாமலே நோன்பு துறக்கலாமா? நோன்பாளி ஊசி மருந்து ஏற்றிக் கொள்ளலாமா? இரவில் எத்தனை ரக்அத்துகள் தொழ வேண்டும்? பிறை சர்வதேசத்துக்கா, நம் தேசத்துக்கா? ரமழானில் (வாழ்க்கையிலல்ல) செய்ய வேண்டியவை எவை, செய்யக் கூடாதவை எவை?
இப்படியான சில பல விடயங்களோடு நாங்கள் அறிந்து வைத்திருக் கிற மார்க்கம் முடிவடைந்து விடுகிறது. நாங்கள் அறிந்த மார்க்கம் ரய்யான் வரை பயணிக்கும் மார்க்கம் அல்ல ஷவ்வாலோடு கரைந்து விடும் மார்க்கம்.
அவ்வாறு கரைந்து செல்லும் மார்க்கத்தினுள் மனிதர்களை வைத்துக் கொள்ளத்தான் நாம் பகீரதப் பிரயத்தனம் செய்கிறோம் ரய்யான் வரை பயணிக்கும் மார்க்கத்தில் மனிதர்களை ஒன்று சேர்ப்பதற்கல்ல.
இந்நிலை ஆபத்தானது. இதன் பாரதூரத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ரமழானில் அதிகமாக நன்மைகளில் ஈடுபடுங்கள். வணக்க வழிபாடுகள், கற்றல் கற்பித்தல், ஸதகா, தருமங்கள், பயான்கள், ஒன்றுகூடல்கள்... என நன்மைகள் இம்மாதத்தில் அதிக ரிக்கட்டும். எனினும், ஒரு பயணத்துக்காக அன்றி ஷவ்வாலுடன் விடைபெறுவதற்காக அல்ல!
நீண்டு செல்லும் பயணத்தில் நிலைத்து நிற்கும் உள்ளங்களை வல்ல நாயன் நோன்பாளிகளுக்கு வழங்கு வானாக!
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி