Sunday, March 31, 2013

பொதுபல சேனா, சிங்கள ராவய, ரவாணா பலய அமைப்புக்களை தடை செய்யுங்கள்


http://www.jaffnamuslim.com/2013/03/blog-post_1794.html



பொதுபல சேனா அமைப்பைத் தடை செய்யுமாறு ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, இனவாத மதவாத நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் கடும்போக்குவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுக்க உள்ளார்.

பொதுபல சேனா, சிங்கள ராவய மற்றும் ரவாணா பலய போன்ற அமைப்புக்களை தடை செய்யுமாறு கோரி அமைச்சர் நாணயக்கார விசேட அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க உள்ளார்.

அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான அமைப்பை தடை செய்யக் கூடிய வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

பகிரங்கமாக இன மத குரோதக் கருத்துக்களை வெளியிட்டு குழப்பங்களில் ஈடுபடுவோரை காவல்துறையினர் கைது செய்யத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் குரோதப் பிரச்சாரங்கள் குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் எவரும் எந்த மதத்தையும் பின்பற்ற முடியும் ஏதேனும் அச்சறுத்தல்கள் ஏற்பட்டால் அது குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரலாற்றுத் துரோகிகள் என்பதற்கான அடையாளம்?


எழுதியவர்: மௌலவி M.S. M. இம்தியாஸ் ஸலஃபி


இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டங்களை இனவாதிகள் வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகிறார்கள். “பள்ளிவாசல்களை உடைத்தல், தகர்த்தல், அப்புறப்படுத்தல்” என்ற பணியுடன் இவர்களுடைய போராட்டம் ஆரம்பமானது. தற்போது இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் கலாசார பண்புகளையும் கொச்சைப்படுத்தி, விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள். “அல்லாஹ்” என்ற கடவுள் பொய்யானது என்றும் பத்திரிகையில் விமர்சித்துள்ளார்கள். தனியார் சட்டங்களை நீக்கிக்கொள்ளுமாறும் கூறுகிறார்கள்.

ஹலால் பிரச்சினையைக் காரணம் காட்டி, முஸ்லிம்கள் குறித்து மிக அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். ஹலால் சான்றிதழ் வழங்கி, அதன் மூலம் உலமா சபை பெற்றுக்கொள்ளும் பணம் அல் காயிதாவுக்கு வழங்கப்படுவதாகவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் ஆயுதப் பயிற்சி பெற்ற 12,000 பேர் நாட்டுக்குள் வந்துள்ளதாகவும், பள்ளிவாசல்களில் “பங்கர்கள்” கட்டப்படுவதாகவும் பிரச்சாரம் செய்தார்கள். இது மட்டுமன்றி இஸ்லாமிய கலாசாரங்களை கீழ்த்தரமாக விமர்சிக்கிறார்கள். தற்போது சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையில் அவநம்பிக்கை உருவாகி சந்தேகத்துடன் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த பொது பல சேனாவுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கணக்கிலிருந்து பணம் கொடுக்கப்படுவதாகவும் உறுதியான ஆதாரங்களுடன் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியிருக்கிறார்.

இனவாதிகளின் செயற்பாடுகள் பெரியதோர் கலகத்திற்கு இட்டுச் செல்லுமோ என மக்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் வேளையில், எமது அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து பகிரங்கமான எந்தவொரு கண்டன அறிக்கையும் பாராளுமன்றத்தில் முன்வைக்காதது பெரும் கவலையான விடயமாகும். கடைசியாக கிழக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலின்போது “முஸ்லிம்களுடைய பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். அது குறித்து எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் என்னிடம் கூறியதில்லை” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதை கேட்டு முஸ்லிம் சமூகம் கவலைப்பட்டது. தலைகுனிந்தது. தம்புள்ளையில் அமைந்துள்ள பள்ளிவாசல் இனவாதிகளால் தகர்க்கப்பட்ட காட்சிகளும் செய்திகளும் முழு உலகிற்கும் தெரிந்திருந்த செய்தி. அது ஜனாதிபதிக்குத் தெரியாமல் போயுள்ளது. முஸ்லிம் அமைச்சர்கள் இது குறித்துக் கூறவில்லை என்பத சந்தேகத்திற்குரியது. ஆச்சரியமானது. (இதனை முஸ்லிம்கள் நம்பப் போவதில்லை.)

தற்போது நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் குறித்தும் ஜனாதிபதி இன்னுமொரு தேர்தல் மேடையில், இன்னுமொரு முறையில் மறுத்துக் கூறலாம். முஸ்லிம் அமைச்சர்கள் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டிய செய்தி என்னவென்றால், முஸ்லிம் சமூகத்திற்காக பாராளுமன்றம் போன்றவர்கள் என்ற அடிப்படையில் சமூக நலனுக்காகக் குரல் கொடுப்போம் அநீதிகளை தட்டிக் கேட்போம். அதற்காக பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவோம். எமது சமூக நிலைப்பாட்டை அறிக்கைகளாக முன்வைப்போம். எதிர்கால சமூகம் உண்மைகளைப் புரிந்தகொள்ள உரிய நடவடிக்கைகளை எடுப்போம். பட்டம் பதவிகளுக்குப் பின்னால் குளிர்காயாமல், அரசுக்கு அஞ்சி வாய் மூடி மௌனிகளாக இருக்காமல், அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவன் தந்த அமானிதத்தை (பதவியை) சரியான முறையில் பயன்படுத்துவோம் என்பதேயாகும்.

சிஹல உறுமய கட்சி ஆட்சியில் பங்காளியாக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கெதிராக கூட்டங்கள் மற்றும் ஊடக மாநாடுகள் நடாத்தி பாராளுமன்றத்தற்குள்ளும் இனத்துவேஷத்துடன் பேசமுடியுமென்றால் எங்கள் நியாயங்களை ஏன் முன்வைக்கக்கூடாது.

19 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை இலங்கை வரலாற்றில் வந்ததில்லை. இப்படியிருக்கும் காலத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதப் போராட்டத்தைக் கண்டித்துப் பேச முடியவில்லை என்றால் எப்போது பேசுவது?

50 வருடங்களுக்குப் பின்னால் போய் பாராளுமன்ற நிலவரத்தைப் பார்த்தால் ஓரிரு அங்கத்தினர்கள் இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்திற்காக எல்லா வழிகளிலும் குரல் கொடுத்து பாராளுமன்றத்தில் பேசினார்கள். இன்றும் அத்தகைய தலைவர்கள் (மர்ஹூம் ரீ.பி. ஜாயா, சேர். ராஸிக் பரீத், போன்றவர்கள்) எமது சமூகம் நன்றியுடன் நினைவூட்டுகிறது என்றால் அதற்கான காரணத்தை இன்றைய தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

துருக்கித் தொப்பி எமது வரலாற்றில் அத்தியாயமாகும். ஆங்கில ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்திற்கு தொப்பி போட்டு வர வேண்டாம் என கூறியதை கண்டித்தே மருதானை பள்ளிவாசல் முற்றத்தில் அகிம்சை போராட்டம் துவங்கப்பட்டது. அது பிரித்தானியாவையே நடுங்கச் செய்தது. எமது போராட்டம் வெற்றி பெற்றது. தலைவர்களின் பணி மகத்தானது. இன்றுள்ள தலைவர்களின் நிலவரம் என்ன? பார்க்கவும் கேட்கவும் வெட்கமாக இருக்கிறது. பதவிகளுக்காக அணி மாறுவதும் பிறகு வசைபாடுவதும் காட்டிக் கொடுப்பதும் என்பது அசிங்கமாகத் தெரிகிறது. அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கும் சிஹல உறுமய கட்சியினர் முஸ்லிம்களுக்கு எதிராக பகிரங்கமாக பேச முடியுமானால், அதற்கெதிராக எங்கள் தலைவர்களால் எங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்காமல் போவது ஏன்?

பொதுபல சேனா அமைப்பினர்கள் அதிரடியாக முஸ்லிம்களுக்கு எதிராக வீதியில் இறங்கிய நேரம் ஜே.வி.பி. கட்சி மட்டுமே இனவாதத்திற்கும் மதவாதத்திற்கு எதிராகவும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு, பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றியது. முஸ்லிம் அமைச்சர்கள் கூட இதுவரை இப்படியொரு அறிக்கையை சமர்ப்பித்தது இல்லை. அதன் பின்பு மற்ற கட்சி உறுப்பினர்களும் பகிரங்கமாக பேசத் தொடங்கினர்.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியுடனோ அல்லது அரசாங்கத்துடனோ ரகசியமாக பேசியிருக்கலாம். ஆனால், அதனை சமூகம் நம்பாது. இரகசியமாகப் பேசுவதற்கு கணவன்-மனைவி பிரச்சினைகள் அல்லவே. அரசியலில் பகிரங்கமான இராஜதந்திர முறையே தேவை. சிஹல உறுமய கட்சிக்கு பேச முடியுமானால் ஏன் முஸ்லிம் காங்கிரஸுக்கோ அல்லது ஏனைய முஸ்லிம் தலைவர்களுக்கோ பேச முடியாது.

பேசினால் பட்டங்கள், பதவிகள் பறிபோகலாம் என்று பயப்படலாம். ஆனால், சோரம் போனவர்கள் துரோகிகள் என்று சமூகம் சூட்டும் பதவிகள் உங்களை விட்டும் வரலாற்றை விட்டும் ஒருபோதும் மறைந்து போகாது என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள். எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஆக்ரோஷமாகப் பேசுவதும் வாக்குகளை எதிர்பார்த்துப் பேசுவதும் அரசாட்சியில் அங்கம் பெற்றவுடன் அடங்கிப் போவதும் அனுபவித்துக் கொண்டிருப்பதும் சுயநலமாகும். எங்களுக்காக எங்கள் பிரச்சினைகளை பேசக் கூடிய எங்கள் உரிமைகளை கேட்கக் கூடிய தலைவர்களையே நாம் தெரிவுசெய்ய வேண்டும் என்பதை முஸ்லிம்கள் புரிந்து செயற்படாதவரை இந்நிலைமையை மாற்ற முடியாது.

எமது முஸ்லிம் தலைவர்கள் பேச மாட்டார்கள் என்று புரிந்தால், எங்களுக்காக பேசக் கூடிய உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக முஸ்லிம்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இளம் வாலிபர்களை -இஸ்லாமிய உணர்வுடன்- பண்படுத்தித் தயார்படுத்த வேண்டும். கையேந்தி தயவை வேண்டி நிற்கும் சமூகமாக மாற முடியாது.
சலுகைகள் எமக்குத் தேவையில்லை. உரிமைகளே எங்களுக்குத் தேவை. உரிமைகளைக் கேட்கவும் அனுபவிக்கவும் தகுதிபடைத்த சமூகம் நாம். சகவாழ்வுடனும் நல்லிணக்கத்துடனும் எங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு வழிகாண வேண்டும்.

Monday, March 25, 2013

Ten years after Iraq war, the hell fires of disaster capitalism.


Friday, 22 March 2013 01:04

Ten years on, the lies and deception surrounding the invasion of Iraq continue as a battered Iraqi people wait in desperation for the promised dawn.

The Panorama programme on BBC on Monday took pains to show the whole invasion was based on lies of two Iraqi spies. The flawed logic was simple: The spies told the Americans and the Brits that Iraq’s dictator Saddam Hussein had weapons of mass destruction and they believed them.

Although the programme highlighted how subsequent information prior to the war indicated that Iraq had no WMDs and the war party refused to give it due consideration, there was no attempt by the presenters to accuse Bush or Blair of deliberately manipulating intelligence to justify war. The programme had Lord Butler, who investigated the intelligence failure that led to the Iraq war, and Sir Mike Jackson who led the head of the British Army, to say that Blair did not lie, because he genuinely believed Saddam Hussein had WMD.

So the whitewashing of the war criminals continues. “Blair lied and millions died” was the catchy slogan of the anti-war activists who gathered outside sham trials the British government initiated to cover up its shame. The West’s war on Iraq has brought death to more than 1.4 million Iraqis. Prior to the war, nearly one million Iraqis – half of whom were children -- died due to the crippling United Nations sanctions imposed on Iraq at the insistence of the United States and its allies. Yes, it’s a price worth paying for, said the then United States Secretary of State Madeline Albright. And in the end, it was the Iraqi people who paid with their lives for the war party to plunder not only Iraq’s national oil wealth, but also the American people’s tax money.

They plotted, they came, they conquered and they plundered. The Iraq war was a plan hatched by a neoconservative cabal that authored the infamous white paper called the Project for the New American Century. The group on its website still says that American leadership is good both for America and for the world; and that such leadership requires military strength, diplomatic energy and commitment to moral principle.


Iraqi boys walk near the ruins of a building, which residents and the Local Council claim was bombed during the 2003 Iraq War led by the U.S. forces, in a desert south of Samawa, 270 km (160 miles) south of Baghdad March 14, 2013. REUTERS/Mohammed Ameen

Behind the veneer of such lofty words was moral bankruptcy that manifests in their plot to militarily dominate the world and plunder the resources of other people. The neocon cabal tried to sell their project to President Bill Clinton, but he refused to buy it. They found a willing partner in President George W. Bush.

Dick Cheney, Bush’s Vice President, Donald Rumsfeld, his Defence Secretary, Paul Wolfowitz, his deputy defence secretary, John Bolton, his man at the United Nations, and Lewis ‘Scooter’ Libby, a key White House advisor, were some of the main PNAC architects who served the Bush administration.

One of the first tasks Bush handed over to Defence Secretary Rumsfeld soon after assuming office in 2001 was to work out a plan for an attack on Iraq. This was months before 19 terrorists hijacked civilian planes to attack New York’s World Trade Centre and Pentagon on September 11, 2001. Bush tried to seize the opportunity in the 9/11 attacks to launch a war on Iraq. But he was later convinced that the road to Iraq was through Afghanistan. Overwhelming evidence indicates that the 9/11 attacks could have been prevented. But the Bush administration ignored the warnings from his own national security advisors and also from friendly countries. Many analysts still believe the Bush administration let the attacks happen so that it could launch its PNAC project.

Under the guise of launching a morally right just war, the bombs first fell on Afghanistan first. As the war on Afghanistan continued, the Bush administration began bombarding the American public with lies and deception. In speech after speech in the early days and months after the 9/11 attacks, Bush lumped Iraq together with Iran and North Korea and described the trio as the nations that belonged to the axis of evil. He said Iraq was behind the 9/11 attacks and Saddam Hussein possessed weapons of mass destruction that posed a threat to world peace.

A majority of the American people, who were still recovering from the 9/11 shock believed him and gave the Bush administration the licence to maime and murder anyone who posed a threat to America. Bush and Blair manufactured intelligence, presented such intelligence as facts at the United Nations Security Council, twisted the reports of United Nations weapons inspectors and misinterpreted a UNSC resolution as authorizing war on Iraq, though it was not. The then UN Secretary General Kofi Annan declared the war illegal. For saying this, he was accused of favouring his son as a supplier under the UN food-for-oil programme that sought to minimise the suffering of the Iraqi people during the sanction days.



The Americans cheered when the US troops marched into Iraq, a favoured nation during its war with neighbouring Iran. American companies even supplied Iraq with chemicals which Saddam Hussein converted into chemical weapons and used against his own people.

The modus operandi for both the Afghanistan and Iraq ground invasion was more or less the same. In Afghanistan the Americans had an ally in the anti-Taliban Northern Alliance. In Iraq, it was the Kurds who were fighting for a separate state in the north. The Shiite political dissidents in the south of Iraq were as also roped in. They saw in the US invasion a golden opportunity to set up a Shiite-dominant government for the first time in Iraq’s history.

The Americans thought the Iraqis would welcome them with rice and rose waters. But all hell broke loose when the American boots touched Iraq’s soil after the ‘Shock and Awe” aerial bombing that destroyed much of what was once the cradle of civilization. One fourth of Iraqis became refugees or internally displaced while hundreds of thousands died. The Americans dissolved Iraq’s army and appointed a pro-consul. As the resistance grew, the US and British troops resorted to war crimes of shocking dimensions. Prisoners were tortured and killed. The Abu Ghraib prison pictures, still available on the internet, were a testimony that the Americans were no angels when it comes to war.

The people of Fallujah, a Sunni Muslim city in Iraq, were the first to pluck up courage and tell the Americans to get out. The Americans turned the city into a free-fire zone, using even the banned white phosphorous bombs. As a result almost every other child is born in this city with a birth defect and an unusually a high number of people die of cancer. The horrors of Fallujah and similar stories are rarely reported in the US media which willingly submitted to the Bush agenda. The media called it embedded journalism – which is nothing but prostituting journalism and producing bastardised news. The war also saw the privatisation of military operations with companies such Blackwater undertaking to do the dirty work of the war – the killing and torturing of the Iraqi people.

The resistance in its early days was nationalistic in nature. The Shiites in the south and the Sunnis in Baghdad, Fallujah, Tikrit and other places came together in their opposition to the Anglo-British occupation of the country. The Iraqis were not strangers to occupation. Twice they had chased the colonialists out – first after World War 1 and then after World War II. On both occasions, they said the Brits had said they had come to Iraq as liberators – a lie that every occupying power utters.

So in 2003, when the resistance showed signs of Iraqi unity, the invaders devised a scheme to divide the people. Soon Iraq witnessed a sectarian bloodbath that was absent in its history.

The Iraqi people believe that secret agents of the occupation force were behind such attacks initially. With the sectarian war intensifying, the US facilitated what it called democratic elections. But the democracy which the Americans introduced to Iraq after they ousted Saddam Hussein was limited to only elections. The sham behind the process was exposed when the US opposed the appointment of Ibrahim al-Jaafari as prime minister even though his party won the elections and wanted to make him the PM.

Along with this sham democratisation began the loot. As some US companies including Dick Cheney’s Halliburton, made billions of dollars in profit when Iraq’s reconstruction contracts were handed over to them, others targeted oil. Some oil companies have even started entering into deals with the regional administration run by the Kurds in the North, instead of the central government -- and this could even lead to a civil war against the Kurds as things stand today.

As the plunder continues, the Iraqis live in a socio-economic hell. They feel they were better off during the Saddam regime when they had water, electricity and some security. Today ten years after the invasion and a year after the American troops withdrew, albeit on paper, many areas still have no water facility or uninterrupted electricity.

Bombs still go off in Iraq where the United States’ has set up its biggest embassy with security officials alone numbering 15,000. On March 19, the day on which the Anglo-American war on Iraq began ten years ago, more than 50 people died in a series of bomb blasts that were blamed on a mysterious outfit called al-Qaeda in Iraq.
As the Iraqis marked the tenth year of the invasion that robbed their independence, Iraq is today caught in a labyrinth of global power games. On the one hand, the government in Baghdad is being dictated to by the United States on what to do with oil and to whom to hand over the contracts. On the other, Iran’s influence on the regime and on Shiite organsiations, including the powerful Mehdi Army of the radical cleric Muqtada al-Sadr, is increasingly evident.

Turkey, meanwhile, plays a different game by supporting the autonomous regime of Iraqi Kurdistan although it is fighting a war within to crush a rebellion by its own Kurdish population.

Adding to Iraq’s problems is the spillover of the civil war in neighbouring Syria. In the event the Syrian crisis erupts as a regional war, Iraq and Iran are likely to be dragged into it in support of the Bashar al-Assad regime in Damascus.

As nearly one trillion dollars in American public money and billions of dollars in Iraq’s oil revenue are spent on the destruction of Iraq and the subsequent reconstruction of it, a safe assumption is that much of this money would have gone to the companies with neocon backing. Activist and journalist Naomi Klein describes this plunder as disaster capitalism where big-time companies thrive in the misery of the people.

Meanwhile, President George Bush enjoys his retirement in his Texas ranch while Tony Blair builds his financial empire by giving advice to companies on how to win drilling contracts in Middle Eastern countries. There is no serious attempt to take them before a war crimes tribunal.

Monday, March 18, 2013

எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்!

 -எம். ரிஷான் ஷெரீப்

இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக் கூடிய, பிரிவினை வாத சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறி வைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்த காலங்களுக்குள் இலங்கையில் பெரும்பான்மையானோராக முஸ்லிம்கள் ஆகிவிடுவார்கள் என்ற அச்சம் இனவாத சக்திகளை பெருமளவில் அச்சுருத்தியிருக்கிறது. இந் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், முஸ்லிம்களை அடக்கி வைக்கவும் பல்வேறு விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.
 
முஸ்லிம்களுக்கு எதிராக இனத் துவேஷத்தைக் கிளப்பும் பற்பல நடவடிக்கைகள் காலம் காலமாக இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதிலும், அண்மையில் பங்களாதேஷில் பௌத்தர்களுக்கு எதிராக நிகழ்ந்த சில வன்முறைகள், இலங்கையிலுள்ள முஸ்லிம்களையும் பகிரங்கமாக எதிர்ப்பதற்கு ஏதுவாக அமைந்தன. இலங்கையில், பங்களாதேஷ் வன்முறைகளுக்கான எதிர்ப்பு நடவடிக்கைகள் ‘பொது பல சேனா இயக்கம்’ எனும் பௌத்த அடிப்படைவாத அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டன. இந்த இயக்கத்தின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் அதிகளவில் பௌத்த பிக்குகளே உள்ளனர்.
 
ஒவ்வொரு மாதத்தினதும் பௌர்ணமி தினமானது, போயா எனப்படும் பௌத்தர்களின் புனித தினமாகும். இத் தினத்தில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஆணும், பெண்ணுமாக பௌத்த விகாரைகளில் நடைபெறும் மதப் போதனை நிகழ்வுகளில் வெண்ணிற ஆடையுடன் கலந்துகொள்வர். பௌத்த பிக்குகளால் நிகழ்த்தப்படும் போதனைகளுக்குள் முஸ்லிம் இன வெறுப்பை ஏற்படுத்தும்படியான பல விடயங்கள் பெரும்பான்மையான சிங்கள மக்களிடையே சிறிது சிறிதாக ஊட்டப்படுகின்றன. இவ்வாறாக விதைக்கப்படும் நச்சு விதைகள், எதிர்காலத்தில் பெருவிருட்சங்களாக மாறி, வெகுவிரைவில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரங்கள் ஏற்பட அவை காரணமாக அமையும்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் ‘கொழும்பு நகரத்தில் வசிக்கும் மக்கள் தொகையில் அதிகளவானோர் சிங்களவர்கள் என்ற போதிலும் அந்த எண்ணிக்கை 24% வீதமாகக் குறைந்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012.12.11 ஆம் திகதி வெளியான திவயின எனும் சிங்கள நாளிதழில் ’2012 இன் குடிசன மதிப்பீட்டு அறிக்கைக்கு இணங்க கொழும்பு நகர மக்கள் தொகையில் 24% சிங்களவர்களாகவும், 33% தமிழர்களாகவும், 40% முஸ்லிம்களாகவும் உள்ளனர்’ என பிரசுரிக்கப்பட்டிருந்தது.
 
இவ்வாறாக இலங்கையில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, பௌத்த அடிப்படைவாத அமைப்பினைப் பின்பற்றுவோருக்கு பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. எதிர்வரும் காலங்களில், இந்த எண்ணிக்கை அதிகரித்துச் சென்று இஸ்லாமியர்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக ஆகி விடுவார்களோ என்ற எண்ணம் அவர்களைத் தடுமாற்றமடையச் செய்துள்ளது. ஒப்பீட்டளவில் பார்க்கும்போது முஸ்லிம்களின் குடும்பங்களைப் பொறுத்த வரையில், அவர்கள் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையானது இலங்கையில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிங்கள மக்கள், குடும்ப பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு ஒரு தம்பதியினர் ஓரிரு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்கையில், இஸ்லாமியர் மாத்திரம் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி தமது இன விகிதாசாரத்தைக் கூட்டிச் செல்வது, அந்த அமைப்பினைப் பின்பற்றுவோரை பாரிய அளவில் சிந்திக்கச் செய்துள்ளது. இந் நிலைமையை பிரதிபலிக்கும் விதமாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும், ‘கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினராகி முஸ்லிம், தமிழ் சமூகங்கள் பெரும்பான்மையாகியுள்ளதை நான் வலியுறுத்த வேண்டிய நிலை உள்ளது’ என அவரது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களினுடனான சந்திப்பின் போது தெரிவித்தமை இதனைத் தெளிவுபடுத்துகிறது.
 
“பாதுகாப்பை பற்றி முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களை உடனடியாக அகற்றுவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். அதேவேளை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணிகளையோ ஊர்வலங்களையோ தடுக்க முடியாது. அவ்வாறு தடுப்பது ஜனநாயக விரோத செயற்பாடாக உள்ளதால் அரசாங்கத்தை அது நெருக்கடிக்கு உள்ளாக்கும். முஸ்லிம்களாகிய நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எம்மிடம் முன் வைப்பது போல் ‘பொது பல சேனா’ எனும் அமைப்பும் ‘வெளிநாடுகளில் முஸ்லிம்களுக்கு பர்தா அணிந்து முகம்மூடி செல்வதற்கு அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள். முன்பு பல்கலைக்கழகங்களில் முகம் திறந்து பர்தா அணியாமல் வந்தவர்கள் இப்போது அவ்வாறு வருகின்றார்கள்.ஆகவே அதை தடுங்கள்’ என்பது போன்ற பல விடயங்களை சுட்டிக்காட்டி எமக்கு பல அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்கள்” எனும் பாதுகாப்புச் செயலாளரது தொடர்ச்சியான கருத்து, சில எதிர்வுகூறல்களை முன்வைப்பதாக அமைகிறது.
 
இவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு சக்திகள், பர்தா விவகாரத்தைப் போலவே முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளப்பிவிட்டிருக்கும் இன்னும் இரண்டு பிரதான விடயங்கள், முஸ்லிம்களது கல்வியும், வர்த்தக ரீதியில் அவர்கள் பயன்படுத்தும் ஹலால் நடைமுறைகளும் ஆகும். கல்வி நடவடிக்கைகளில் மிகவும் முன்னிலையில் முஸ்லிம்கள் இருப்பது இத் தீய சக்திகளை உசுப்பி விட்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் நடைபெற்ற சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சையில் முஸ்லிம் மாணவர்கள் அதிகூடிய அளவில் சித்தி பெற்றிருப்பது பல ஆர்ப்பாட்டங்களைக் கிளப்பிவிட போதுமானதாக அமைந்திருக்கிறது. அவ்வாறே இலங்கை முஸ்லிம்கள் ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் பொருட்களை மாத்திரமே கொள்வனவு செய்வதானது, சிங்களவர்களது வர்த்தகத்தைப் பாதிக்கிறது எனும் கருத்தினை பரப்பி வருகிறது இந்த அமைப்பு. இதனால் எவ்வளவுதான் அவசரத் தேவைகள் ஏற்பட்டாலும் கூட, முஸ்லிம்களால் நடத்தப்படும் எந்தவொரு வர்த்தக நிலையத்திலும் எந்தப் பொருட்களையும் கொள்வனவு செய்ய வேண்டாமெனக் கட்டளையிடப்பட்டுள்ளது.
 
2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியன்று இலங்கையிலிருந்து வெளிவரும் ‘திவயின’ நாளிதழின் முன்பக்க செய்தியானது இந் நடைமுறையின் ஒரு பகுதியைப் பிரதிபலிக்கிறது. ‘வர்த்தகப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் சர்வதேச தீவிரவாத இயக்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது’ என டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, ‘பொது பல சேனா’ இயக்கம் தெரிவித்துள்ள கருத்தினை அந் நாளிதழ் தனது பிரதான செய்திகளிலொன்றாக தந்திருந்தது. ‘அல்கைதா’, ‘ஹமாஸ்’ போன்ற இஸ்லாமிய இயக்கங்களை நடத்திச் செல்வதற்கே இந்தக் கட்டணங்கள் செல்வதாகவும், இதனை ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் உடனடியாகக் கவனத்தில் கொண்டு, ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை தடை செய்ய வேண்டுமெனவும் அந்த இயக்கம் தெரிவித்த கருத்தின் மூலமாக வலியுருத்தியுள்ளது. அவ்வாறு நடைபெற சாத்தியமா? சர்வதேச இயக்கங்களான அவை, இலங்கையிலிருந்து அனுப்பப்படும் மிகவும் சொற்பமான பணத் தொகையிலா இயங்கும்? என்பது போன்ற எந்த சிந்தனையுமில்லாது அந்த அமைப்பு கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சிங்கள மக்கள் பெருகி வருகிறார்கள்.
 
2013 ஆம் ஆண்டுக்காக இலங்கை அரசு வெளியிட்டிருக்கும் காலண்டர் கூட, இந்த அமைப்பை மேலும் உசுப்பி விட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அரசால் வழங்கப்படும் காலண்டரில், மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் வரும் பௌத்தர்களின் புனித தினமான போயா தினத்தை அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக அரசு அறிவித்திருக்கும். ஆனால் இந்த வருடம் வெளியிடப்பட்டுள்ள காலண்டரில், மாதந்தோறும் வரும் பௌர்ணமி போயா தினங்கள் அரச, வங்கி விடுமுறை தினங்களாக மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் கொந்தளிப்புற்ற ‘பொது பல சேனா’ அமைப்பானது, ‘முஸ்லிம்களது பெருநாட்களை அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்க முடியுமானால், ஏன் பௌத்தர்களின் புனித தினங்களை அவ்வாறு அறிவிக்க முடியாது?’ என இதிலும் இஸ்லாமியர்களை வம்புக்கிழுத்திருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.
 
இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்களும் முஸ்லிம்களைப் போலவே விலைவாசி, வரிக்கட்டணங்களின் அதிகரிப்பால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். என்றபோதிலும் முஸ்லிம் மக்களை விடவும் சிங்கள மக்களில் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. காரணம் அவர்கள் சார்ந்திருக்கும் பல்வேறு விதமான கடன் சுமைகளாகும். கல்வி, வீடு, திருமணம், வாகனம், மருத்துவம் என அனைத்து பிரதான அம்சங்களுக்குமாக வங்கிகளையும், கடன் கொடுக்கும் நிறுவனங்களையும் அணுகி கடன்களைப் பெற்றுக் கொள்ளும் இவர்கள் தவணை முறையில் வட்டியுடன் அவற்றைச் செலுத்திச் செலுத்தியே சோர்ந்து போகிறார்கள். கடன்களுக்கான வட்டிகளில் தங்கியிராத இஸ்லாமியரின் வாழ்க்கை நெறிமுறை சிங்கள இனத்தவர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியுள்ளதோடு, பொறாமையையும், இஸ்லாமியரின் வர்த்தக முறைமையில் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள ‘பொது பல சேனா அமைப்பு’ பல்வேறு விதமான விஷமப் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
கடந்த சில மாதங்களாக இலங்கையின் பிரதான நகரங்கள் பலவற்றில் இந்த இயக்கத்தின் தலைவரான கலகொட அத்தே ஞானஸார ஹிமியினால் பல கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான சுவரொட்டிகள் நகரெங்கிலும் ஒட்டப்பட்டிருக்கின்றமையைக் காணக் கூடியதாக உள்ளது. இவ்வாறான கூட்டங்களில் ஒன்றாக, கடந்த நவம்பர் மாதம் முப்பதாம் திகதி மஹரகம நகரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்காக பகிரப்பட்ட சுவரொட்டியில் இடம்பெற்றிருந்த கருத்துக்கள் விஷமத்தனமானவையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அவை இவ்வாறு சிங்களமொழியில் அமைந்திருந்தன.
 
‘எனது தாய்நாடு! இன்று எனக்குரியது, நாளை உங்களுக்குரியது. சிங்களவர்களே! சிங்கள சமூகத்தின் அழிவு காலம் தொடங்கிவிட்டது. ஏனென்றால், சிங்கள சமூகத்திற்கும், பௌத்த மதத்திற்க்கும் பல சவால்கள் இருக்கும்போது சிங்கள பௌத்தர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம் தீவிரவாதிகள் புராதன சின்னங்களையும், பாரம்பரியங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த செயல்கள், எந்தவித முடிவும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் அதே நிலையில், நாட்டின் மற்ற பாகங்களுக்கும் இவை பரவிக்கொண்டிருக்கின்றன. இந்தக் கயவர்கள் இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புக்களையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சவால்கள் இத்தோடு நின்றுவிடவில்லை. கிறிஸ்தவர்கள், அவர்களின் பிரச்சார வேலைகளையும் ஆரம்பித்துள்ளார்கள். இந்தக் கயவர்களின் செயல்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகளை, 30 நவம்பர் அன்று உங்களுக்கு தெளிவுபடுத்த முடியும் என நாம் நம்புகின்றோம். உங்கள் நாட்டையும், இனத்தையும், மதத்தையும், பாதுகாக்க விரைந்து வாருங்கள்!’
இந்தக் கூட்டத்தில் இந்த இயக்கத்தின் தலைவரான கலகொட அத்தே ஞானஸார ஹிமியினால் நிகழ்த்தப்பட்ட உரையும், இஸ்லாமியர் மீதான அவர்களது கோபத்தையும், சூழ்ச்சிகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. உதாரணத்துக்கு அவரது உரையிலிருந்து சில பகுதிகளை இங்கு தருவதன் மூலம் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளின் தீவிரத்தை உணரலாம்.
 
‘சிங்கள சமூகத்தை பாதுகாப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பள்ளிவாயலுக்கு கல் எறிவதனால் எதையும் சாதித்துவிட முடியாது. ஒரு முஸ்லிமுக்கு வீதியில் அடிப்பதன் மூலம் எதையும் நாம் அடைந்துவிட முடியாது. நாங்கள் மிகச் சிறந்த முறையில் திட்டமிட்டு, அவர்களின் ஆக்கிரமிப்பை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும். இன்று இலங்கையில், நான்கு ஆயுதம் தாங்கிய குழுக்களைச் சேர்ந்த, 12000 ஆயுதம் தாங்கிய ஜிஹாதிகள் உள்ளனர். அவர்கள் மிக விரைவில் இலங்கைத் தீவை அதிகாரத்தின் மூலம் கைப்பற்றி விடுவார்கள். இந்த அச்சுறுத்தலை எதிர் நோக்குவதற்கு இங்கு உள்ள அனைவரும், 24000 சிங்கள வாலிபர்களைக் கொண்ட ஒரு இராணுவத்தை உருவாக்க வெளிக் கிளம்ப வேண்டும். நாம் அவர்களின் வழியில் சென்றுதான், அவர்களை தோற்கடிக்க வேண்டும். ஆசியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் தலைவர்களின் மாநாடொன்று அண்மையில் மாலைதீவில் நடைபெற்றது.
 
இலங்கையைச் சேர்ந்த மூன்று நபர்கள் இதில் கலந்து கொண்டனர். அதில் அவர்கள், இலங்கை 2050 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்கொண்ட ஒரு நாடாக இருக்குமென்று வாக்குறுதியளித்தனர். தம்பியாக்கள் எங்களுக்கெதிராக திட்டமிட்ட முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக வேண்டும்.” என அவர் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களும், சிங்களவர்கள், இஸ்லாமியர்களைத் திட்டுவதற்குப் பயன்படுத்தும் சொல்லான ‘தம்பியா’ எனும் சொல்லை பகிரங்கமாகக் கூறி சாடியிருப்பதுவும் முஸ்லிம்கள் எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் இனக் கலவரங்களுக்கான எதிர்வு கூறல்கள் என்பதனைத் தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறான விஷமப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டங்களில் கலந்துகொள்ளும் சிங்கள இனத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதைப் போலவே இம் மோசமான கருத்துக்களை ஆதரிக்கும் பௌத்தர்களது இணையத்தளங்களும், சமூக வலைத்தளங்களும் தம் பக்கம் மக்களைச் சேர்த்துக் கொண்டே வருகின்றன.
 
இலங்கையின் முதலாவது சிங்கள – முஸ்லிம் இனக் கலவரமானது, 1915 ஆம் ஆண்டில் கம்பளை நகரில் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றுள்ளது. அதன்பிறகு நாடெங்கிலும் இவ்வாறான பல அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள போதிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், 2001 ஆம் ஆண்டு மாவனல்லை நகரில் இஸ்லாமியர்களின் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற இனக் கலவரம் பிரதானமானது. அவ்வாறான ஒரு கலவரத்தை, இலங்கையின் முதல் இனக் கலவரத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, எதிர்வரும் 2015 ஆம் ஆண்டும் ஏற்படுத்தி, கலவரத்தின் போது முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் குறைப்பது இவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு அமைப்புக்களின் நோக்கமாக உள்ளது என்பது சிங்கள சமூக நல ஆய்வாளர்களது கருத்துக்களாக அமைந்துள்ளன. பரவலான முறையில் நடைபெறப் போகும் இக் கலவரங்களுக்காக சிங்கள இனவாத அமைப்புக்களுக்கு ஆள் திரட்டும் நடவடிக்கைகளே கிராமங்கள், நகரங்கள் ரீதியாகவும், இணையத்தளங்கள் வாயிலாகவும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
 
பௌத்த மதப் போதனைகளோடு இவ்வாறு பரப்பப்படும் தீய கருத்துக்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு பெரும் அச்சுருத்தலாக அமைந்துள்ளமையை இஸ்லாமியர்கள் அனைவரும் உணரவேண்டும். மறைந்திருப்பவை விஷப் பற்கள் அகற்றப்பட்ட பாம்புகள் அல்ல. எந் நேரத்திலும் வெடித்து, தீயாய்ப் பரவி, எரித்து விடக் கூடிய எரிமலைகள். எப்பொழுதும் அவை வெடிக்கலாம். இலங்கையின் சிங்கள இனவாதிகள் சிலரால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்கள், இன்னுமொரு சிறுபான்மை இனமான தமிழின மக்களுடனான யுத்தத்துக்கு எவ்வாறு வழிகோலியது என்பதனை கடந்த காலங்களில் மிகவும் அதிகமாகக் காண முடிந்தது. அவ்வாறான நிலைமை முஸ்லிம் மக்களுக்கும் வரக் கூடும். முஸ்லிம்கள் எப்பொழுதும் அந்நிய மதத்தவரோடு ஒற்றுமையோடு இருப்பதனாலும், சிறு சிறு கலவரங்களின் போது விட்டுக் கொடுத்து நடந்து, பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலமுமே இவ்வாறான பெரிய கலவரங்களை ஆரம்பத்திலேயே அடக்கி விடக் கூடியதாக இருக்கும். எனவே இஸ்லாமியர்கள் எல்லோரும் கூர்மையான அவதானத்துடனும், சமூக நல்லுறவுடனும், ஒற்றுமையுடனும், இறை நம்பிக்கையுடனும் இருப்பதன் மூலம் மாத்திரமே இவ்வாறான சக்திகளைத் தோற்கடிக்க முடியும் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
- எம். ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

"Bodu Bala Sena, unholy and fake"

(Mirror) - The Bodu Bala Sena is attempting to portray Haram as Halal and Halal as Haram, Senior lecturer of the Sri Jayawardenapura University, Ven. Dambara Amila Thero says. Speaking yesterday (17) at a meeting aimed for national unity, the Thero likened this situation to a person catching a snake by the tail, instead of by the neck.

Noting that the Bodu Bala Sena was unholy and fake, Ven. Dambara Amila Thero said that they would last for another few months only.
 
However, speaking at a Bodu Bala Sena meeting in Kandy yesterday (17), the secretary said that it was wrong to portray the Bodu Bala Sena as an unholy organization.

அழிப்பதற்கு நேரம் பார்க்கிறா​ர்கள்?

எழுதியவர்:- எம்.எஸ். எம். இம்தியாஸ் யூசுப்
 
இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான இனவாத மதவாத பிரச்சாரப் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாம் இருக்கிறோம்.
· முஸ்லிம்களின் வரலாறுகளை திரிபுபடுத்துதல்
· மத ரீதியான சுதந்திரங்களை அடக்குதல்.
· இஸ்லாமிய கலாச்சர விழுமியங்களைப் பேணுவதைத் தவிர்க்கச் செய்தல்.
· முஸ்லிம்களால் ஏற்படும் தவறுகளை பெரிதுபடுத்தி ஒடுக்குதல்.
· ஹிஜாப் ஆடைமுறையினை விமர்சனப் படுத்துதல்.
· சிங்கள, பௌத்த கலாசாரத்திற்கு மட்டுமே முன்னுரிமை வழங்குதல்.
· முஸ்லிம் தனியர் சட்டங்களை நீக்குதல்.
போன்ற பல்வேறு திட்டங்களுடன் இந்த இனவாதிகள் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமாகச் செயற்படுகின்றனர்.
“இந்நாட்டு சட்டங்களை ஏற்று இருக்க முடியுமானால் இருங்கள். இல்லையேல் நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று இப்போது பகிரங்கமாகப் பேசத் துவங்கி விட்டார்கள்.
முஸ்லிம்களை எதிரிகளாகவும் தீயவர்களாகவும் சிங்கள மக்களின் மனங்களில் பதிவுசெய்யும் காரியங்களில் இறங்கிவிட்டார்கள். பகிரங்கமாக எதிர்ப்புக் கோஷங்கள் மற்றும் சுலோகங்களை ஏந்திச் சென்று, முஸ்லிம்களை குழப்பி, வன்முறையை உண்டுபண்ண முயற்சிக்கிறார்கள். பௌத்த ஆலயங்களில் நடைப்பெறும் மதரீதியான நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களின் போது முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சாரங்களையும் துண்டுப்பிரசுரங்களையும் வினியோகிக்கிறார்கள். சிஹ்கள சிறுவர் பாடசாலைகளில் முஸ்லிம்கடைகளை புறக்கணிக்குமாறு போதிக்கிறார்கள். முஸ்லிம்களின் வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களின் சுவர்களில் தகாதவார்த்தைகள் எழுதி குறிப்பாக பன்றியின் உருவங்களை வரைந்து அதற்கு பக்கத்தில் ஹலால் என எழுதிவிட்டுச் செல்கிறார்கள்.இவ்வாறாக பல்வேறு முறைகளில் தங்கள் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவர்கள் எதிர்பார்த்த குழப்பங்கள் ஏற்படவில்லை என்பது இவர்களுக்கு பெரிய ஏமாற்றம். எனவே கடுமையான சொற்பிர யோகங்கள் காரசாரமான வார்த்தைகள் என்பவற்றைப் பயன்படுத்தி தூற்றுகிறார்கள்.
குர்ஆனுடைய சில வசனங்களை வாசித்து தப்பான விளக்கங்கள் கொடுக்கிறார்கள். காபிர்களை கண்ட இடத்தில் கொல்லுமாறு குர்ஆன் ஏவுகிறது என கூறி பயங்கரவாத மாரக்கமாக இஸ்லாத்தை காண்பிக்கிறார்கள்.
நிச்சயமாக இவர்களுக்குப் பின்புலமாக அரச சார்பு உதவிகள் உண்டு என்பது இப்போது நாட்டுக்கு தெளிவாகிவிட்டது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்து மதவாதிகள் மேற்கொண்ட அதே பிரச்சர முனைப்பையும் செயற்பாட்டினையும் இங்கேயும் இவர்கள் மேற்கொள் கிறார்கள். சிவசேனா அமைப்பை விட நாம் பிரபல்யமடைந்து விட்டோம் என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசேர தேரர் கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது.
அண்மையில் பர்மிய முஸ்லிம்கள் சுமார் 20,000 முஸ்லிம்கள் அநியாயமாக படுகொலை செய்யப்படுவதற்கும் இதுபோன்ற பிரச்சினைகளே காரணமாக அமைந்தன. பர்மாவும் பௌத்த நாடு என்பது இங்கே குறிப் பிடத்தக்கது.
தற்போது ஜெனீவா பிரச்சினை முடிவுறும் வரை தற்காலிகமாக முஸ்லிம்களுக்கு எதிரான இப்போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. ஹலால் பிரச்சினையைக் காட்டி உலமா சபையை தாக்குதலுக்கு உட்படுத்தி முஸ்லிம்களை எதிர்கொள்ளவே திட்டமிட்டுள்ளார்கள் என்பது நன்கு தெளிவாகியுள்ளது.
12வருடங்களாக அரசாங்கத்தின் அனுமதியுடன் நடைப்முறைப்படுத்பட்டு வந்த ஹலால் விவகாரத்தை ஒரு பிரச்சனையாக மாற்றி சிங்கள வர்த்தகர்களின் செல்வத்தை சுரண்டுவதாக கூறி ஹலாலை நிறுத்த வேண்டும் என்றார்கள். ஆனால் சிங்கள வர்த்தக அமைப்பு இதனை ஆதரிக்கவில்லை. ஹலாலை நிறுத்;தினால் பெரும் நட்டம் ஏற்படுவதாக இப்போது தான் இந்த வரத்தகர்கள் குறிப்பிடுகிறார்கள் . மூன்று மாதத்திற்கு முன்பே இதனை அவர்கள் குறிப்பிட்டிருந்தால் சிங்கள மக்கள் உண்மையை விளங்கியிருப்பார்கள். தற்போது உலமாசபை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபே ராஜபக்ஷ மற்றும் பௌத்த மகா நிகாய தேரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு கடந்த 11.02.2013 அன்று பத்திரிகையாளர் மாநாட்டில் தங்களது முடிவுகளை பின்வருமாறு அறிவித்தார்கள்.
“வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக ஹலால் சான்றிதழை இலவசமாக வழங்குவதென்றும் உள்நாட்டுக்கு வேண்டுமானால் ஹலால் குறியீடு பதித்து கொள்ளலாம்” என்றும் சுமுக முடிவு காணப்பட்டது. இந்த முடிவினை மூன்று நிகாய பௌத்த தேர்களும் வரவேற்றதுடன் ஜம்மியதுல் உலமா சபைக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் பேராசிரியரி பெல்லன்வில விமலரத்ன தேரர் குறிப்பிட்டதுடன் இந்த முடிவு பல கலந்துரையாடலில் எட்டப்பட்ட முடிவு என்றும் இது ஒருசாராருக்கு வெற்றியென்றும் மற்ற சாராருக்கு தோழ்வி யென்பதுமல்ல மாறாக நர்டுக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். அத்துடன் பொதுபல சேனாவின் வற்புறுத்தலின் போரில் எடுத்தமுடிவா இது என் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது பொதுபல சேனா ஹலால் பிரச்சனையை கிளப்பியதற்கு நன்றி தெரிவிப்பதுட்ன் பொதுபல சேனா என்பது முற்றுமுழுதான பௌத்த நிகாய அல்ல என்றும் குறிப்பிட்டார்.
“இந்த முடிவு தேசத்தின் நலனுக்காக விட்டுக் கொடக்கப்பட்ட முடிவு” என ஜம்மியதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நாட்டின் சுதந்திரத்திற்காகவும் நாட்டின் இறைமையை பாதுகதாக்க நாடு பிளவுபடுவதை தடுப்பதற்காகவும் முஸ்லிம்கள் செய்த தியாகங்களுடன் இந்த தியாகமும் இப்போது வரலாறாக மாறியுள்ளது.
ஹலால் முஸ்லிம்களின் மார்க்க உரிமை. அதனை உலமா சபை முற்றாக விட்டுக் கொடுக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. ஹலாலை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் முஸ்லிம்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த முடிவினையும் இனவாத மதவாத அமைப்புகள் ஏற்க மறுத்துவிட்டனர். ஆரம்பத்தில் வெளிநாடுகளுக்கு மட்டும் ஹலால் சான்றிதழை வழங்கலாம் என கோரியவர்கள் தற்போது அத்தகைய சுமுகமான முடிவு வந்த போது அதனை ஏற்கமாட்டோம். முற்றிலுமாக நீக்கிக் கொள்ள வேண்டும் என கோருவது விஷமத்தனமான போக்கேயன்றி வேறில்லை. அதுமட்டுமன்றி முஸ்லிம்களுக்கெதிரான போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்கள்.
எனவே முஸ்லிம்கள் இனவாதிகளின் பிரச்சாரங்களுக்கு பலியாகாமல் அவசரப் படாமல் நிதானமாக பொறுமையுடன் காரியமாற்ற வேண்டும். ஈமானிய உணர்வுகளை மேம்படுத்திக் கொண்டு, அல்லாஹ்விடம் கையேந்தி பாவமன்னிப்புக் கோரி, பிரார்த்திக்கவும் வேண்டும். எங்களது நல்லொழுக்கமும் நம்பிக்கையும் நாணயமும்தான் எமக்கு எதிராக வரக் கூடிய பிரச்சாரங்களை முறியடிக்கக் கூடியதாகவும் பெரும் பான்மை மக்களின் நல்லுள்ளங்களை வெற்றிகொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.
இனிவரும் காலங்களில் சிங்களப் பாடசாலைகளில் எமது பிள்ளைகளை அனுமதிப் பதும் பிரச்சினைகளாகலாம். அவர்களுடைய கலாசாரங்களுக்கு உட்படுத்தப்படுவதும் பிரச்சினைகளாகலாம். எனவே முஸ்லிம் பாடசாலைகளில் முன்னேற்றங்களில் நாம் கவனம் செலுத்துவதோடு தனியார் வகுப்புக்கள் முஸ்லிம் பகுதிகளில நடாத்துவதற்கான வழிகளைப்பற்றி ஆராயவேண்டும்.
எமது வாலிபர்களை (ஆண்-பெண்) பண் படுத்தும் வழிகளை சிந்திக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் அத்தியவசியமன்றி கடைகளுக்கு அல்லது சந்தைகளுக்கு போவதையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும். ஊர் மட்டங்களிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகி கள் மற்றும் ஜமாஅத்களுக்கிடையில் சமூக நலன் கருதி ஒன்றுபட்டு பொது விடயங்களில் செயலாற்ற வேண்டும். எங்களது குத்பா மிம்பர்களை ஆக்கபூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம் வியாபாரிகள் அல்லாஹ்வுக்குப் பயந்து நீதமாகவும் அன்பாகவும் நடந்து கொள்வதுடன், குறைந்தளவுக்கேனும் (நட்டம் போகாத வகையில்) நல்ல பொருட்களை விற்பனை செய்து, எம்மை விட்டும் கைநழுவும் வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.