Monday, December 31, 2012

புது வருடமும், முஸ்லிம்களும்!

எழுதியவர்:

newyear
 
வரும் திங்கட் கிழமை இரவு 12 மணியுடன் 2012 நிறைவடைந்து 2013-01-01 புது வருடம் பிறக்கின்றது.
 
புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?
 
தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப் பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்று கவலைப்பட்டு, அதைப் பின்னோக்கிப் பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக் கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே உண்மையான புத்திசாலியாக இருக்க முடியும். இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரிய எழுச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்திய ஹிஜ்ரத் எனும் வரலாற்று சிறப்பு மிகு பயணத்தை வைத்துத்தான் இஸ்லாமிய காலண்டர் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் துவக்கத்தில் ஏற்படாத புத்துணர்வும், எழுச்சியும் ஜனவரி முதல் திகதி இஸ்லாமிய உள்ளங்களுக்கு ஏற்படுகின்றது என்றால் இந்த அறியாமையை எங்கு போய் சொல்வது?
அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ

‘அஞ்ஞான காலத்துத் தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வை விட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?’ (அல்மாயிதா 5:50).
அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தராத அனைத்தும் அறியாமை (ஜாஹிலிய்யத்) என்பதை இந்த வசனம் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
 
அல்லாஹ்வின் தூதர் நமக்குக் காட்டிய வழி எது?.
‘அறியாமை கால மக்களிடம் வருடத்தில் இரு நாட்கள் கொண்டாடி மகிழ்வதற்காக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் மதினாவுக் ஹிஜ்ரத் செய்து வந்தபோது, நீங்கள் வருடத்தில் விளையாடி மகிழும் இந்த இரு நாட்களை விட சிறந்த இரு நாட்களை அதற்குப் பகரமாக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்றான். அவைகள்: “நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள்” என குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், நூல்: நஸாஈ).
 
ஹாபிஃழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த நபி மொழியை விளக்கும்போது, ‘நிராகரிப்பாளர்களின் பெருநாட்களை கொண்டாடுவதும், அவர்களுக்கு ஒப்பாகுவதும் வெறுப்பான ஒரு விடயம் எனக் குறிப்பிடுகின்றார்கள்’.
 
அல்லாஹ்வின் தூதர் தனது உம்மத்துக்கு கொண்டாடி மகிழ்வறத்கு வழிகாட்டிய இரு பெருநாட்களும் எவை? என்பதை மிகத் தெளிவாக இந்த ஹதீஸ் கூறிக் கொண்டிருக்கின்றது. இதை விட்டு விட்டு வேறு வழிகளைத் தேடுவது அறியாமையிலும், வழிகேட்டிலும் தவிர வேறு எதில்தான் கொண்டு போய் சேர்க்கும் என்பதை இவர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா?
ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தை, முஹர்ரம் முதல் நாளை கொண்டாடுவதை கூடாது பித்அத் வழிகேடு என்று சொல்கின்றோம். அல்லாஹ்வின் தூதரிடம் அதற்கு எந்த முன்மாதிரியும் இல்லை என்கின்றோம். ஆனால் கிறிஸ்தவர்கள், ஏனைய சமூகங்கள் கொண்டாடும் ஜனவரி முதல் திகதியை கொண்டாடுகின்றோம். இது எவ்வளவு பெரிய முரண்பாடு, வழிகேடு என்பதை ஏன் நாம் சிந்திக்க மறுக்கின்றோம்?.
 
புது வருடம் பிறந்து விட்டது என்று அன்றைய இரவில் எத்தனை எத்தனை அனாச்சாரங்கள், விபச்சாரம், மதுபானம், இசை, ஆடல் பாடல்கள் இவைகள் ஒரு புறம், பட்டாசு வெடிகள் என்று பல கோடிக் கணக்கான ரூபாய்கள் வாரி இறைக்ககப்படுவது மறுபுறம். இவைகளுக்காக முஸ்லிம் நாடுகள் வாரி இறைக்கும் பணம் பல மிலியன்கள் என்பது இன்னும் வேதனையான விடயம். உலகின் பல பாகங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி, தங்க இடமின்றி வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றனர். எந்தப் பயனும் இன்றி வீண் விரயம் செய்யப்படும் இந்த கோடிகளை அவைகளுக்கு பயன்படுத்தப்படுமென்றால் அந்த மக்கள் எவ்வளவு நிம்மதி அடைவர்?
 
இன்னும் பல மூட நம்பிக்கைகள் இந்நாளில் பரவி இருப்பதையம் பார்க்க முடியும்: கடன் வாங்குவதோ, கொடுப்பதோ கிடையாது! ஏனேனில் அன்றைய நாளில் கடன் வாங்கினாலோ, கொடுத்தாலோ அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை தான் இதற்குக் காரணம். இது தெளிவான மூட நம்பிக்கை இல்லையா? இது ஒரு உதாரணம் மாத்திரம் தான். இது போன்று எண்ணற்ற மூட நம்பிக்கைகள் அந்நாளில் பரவிக்கிடக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் தனது வாழ்நாளில் எச்சரித்த ஒரு விடயத்தை இவர்கள் உண்மைப் படுத்தும் வேதனையான ஒரு நிலையைத் தான் இங்கு பார்க்க முடிகின்றது:
 
‘நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறைகளை சானுக்கு சான், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குள் புகுந்து விட்டால் அவர்களைத் தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா குறிப்பீடுகின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, வேறு யாரை? என்று அல்லாஹ்வின் தூதர் திருப்பிக் கேட்டார்கள்’. அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) அவர்கள், புஹாரி).
 
பலர் இந் நாளில் உதயத்துடன் புது வருடம் பிறந்து விட்டது (Happy New Year) என்று வாழ்த்துக்கள் தெரிவிப்பதையும், ஏனையவர்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம், குறுஞ் செய்திகள் மூலம் ஈமெயில்கள் மூலம் வாழ்த்து தெரிவிப்பதையும் பரவலாக பார்க்க முடிகின்றது. ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் இந்த அறியாமைகளில், வழிகேடுகளில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாகவே இருப்பான். இன்னும் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்.
 
‘எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவுத்).
 
இது எவ்வளவு கடும் எச்சரிக்கை, இதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலடச்சியமாக இருக்க முடியும்?
 
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அனுமதி கேட்டபோது நபியவர்கள் அவ்விடத்தில் அறியாமைக் காலத்தில் ஏதும் சிலைகள் வணங்கப்பட்டனவா? அதற்கு இல்லை என்று சொன்னார்கள். அறியாமை கால பெருநாட்கள் ஏதும் அவ்விடத்தில் கொண்டாடப்பட்டனவா? என்று கேட்டார்கள் அதற்கும் இல்லை என்று சொன்னார்கள். அப்படியென்றால் உனது நேர்ச்சையை நிறைவேற்றும்’ என்று கூறினார்கள். (அபூதாவுத்).
 
அல்லாஹ்வுக்காக நிறைவேற்றும் ஒரு நேர்ச்சை, அது நிறைவேற்றப்படும் இடத்தில் கூட பிற மதத்தவர்களுக்கு ஒப்பாகி விடக்கூடாது என்பதில் எந்தளவு அல்லாஹ்வின் தூதர் கண்டிப்பாக இருந்தார்கள் என்று பாருங்கள்.
 
அல்லாஹ்வுக்காக நாம் நிறைவேற்றும் பல வணக்கங்களில், நடைமுறை வாழக்கை தொடர்பான விடயங்களில் யூதர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் நமக்கு பணித்திருக்கின்றார்கள். சூரியன் உதிக்கும், மறையும் நேரங்களில் சுன்னத்தான தொழுகைகள தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் தடை விதித்தார்கள். காரணம் அந்நேரத்தில் இறை நிராகரிப்பாளர்கள் தங்கள் கடவுள்களை வணங்கும் நேரம் என்பதற்காக (இந்த செய்தி முஸ்லிமில் பதிவாகியுள்ளது).
 
இவைகளை நாம் எடுத்துச் சொல்லும்போது சிலர் இது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது இது இஸ்லாத்தைப் பற்றித் தவறான ஒரு தோற்றத்தையே பிற மதத்தவரிடம் ஏற்படுத்தும் என்று கூற ஆரம்பித்து விடுகின்றனர். இது இவர்களின் வெறும் ஒரு வீணாண கற்பனையைத் தவிர வேறு இல்லை. அல்லாஹ் தனது தூதரைப் பற்றி கூறும்போது
 
‘மேலும், (நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’. (68:4).
 
என்று போற்றுகிறான். அவரை விட அழகிய முறையில் இந்த உலகிற்கு நற்பண்புகளை போதித்தவர் வேறு எவரும் இருக்க முடியாது. அவர்கள் பிற மதத்தவர்களுடன் நடந்து கொள்ளும்போது எந்த உயரிய வழி முறைகளைக் கடைபிடித்தார்களோ அது தான் நமக்கு மிகச்சிறந்த முன் மாதிரி. அதல்லாத வேறு ஒரு முன்மாதிரி நமக்குக் கிடையாது.
 
கிறிஸ்மஸை, ஜனவரி முதல் திகதியை, ஏனைய மதத்தவர்களின் பண்டிகைகளைக் கொண்டாடியதன் மூலம், அல்லது அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தன் மூலம்தான் அல்லாஹ்வின் தூதர் மத நல்லிணக்கத்தை கடைபிடித்தார்கள் என்று இவர்கள் சொல்ல வருகின்றார்களா? அதற்கு துளியும் அன்னாரது வாழ்வில் ஆதாரம் இல்லை. மாறாக எந்த வகையிலும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்படக் கூடாது என்பதில் தான் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் கடைபிடித்த அந்த உயரிய வரையறைகள் மிகத் தெளிவாக சுன்னாவில் பதிவாகியுள்ளன. (அதை வேண்டுமானால் அல்லாஹ்வின் தூதர் பிற மதத்தவர்களுடன் எவ்வளவு பண்பாக நடந்துகொண்டார்கள் என்பதை தனிக் கட்டுரையாக விளக்கலாம்). ஆனால் நாம் இங்கு குறிப்பிடும் வரம்புகளை முரண்படாமல் நீங்கள் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
 
நம்மிடம் ஒரு ஹிந்து நண்பரோ, பௌத்த நண்பரோ விருந்துக்கு வருகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள்! அவரது உணவு சைவம்தான் என்பதை அறிந்து அதற்கேற்ப உணவைத் தயாரித்து அதைப் பரிமாறுகின்றோம். இது போன்று நமது நிலைகளையும், கொள்கை கோட்பாடுகளையும் அவர்களுக்கு கூறியிருப்போமென்றால் அவர்கள் நிச்சயமாக நம்முடன் அதற்கேற்பத்தான் நடந்து கொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் சில விடயங்களில் அவ்வாறு தான் நம்முடன் நடந்து கொள்கின்றார்கள் என்பதும் இதற்கு மிகப் பெரிய ஆதாரம். ஆனால் நாம் விட்ட தவறென்ன? நமது கொள்கை கோட்பாடுகளை சரியாக அவர்களுக்கு புரிய வைக்காததே. இதை உணராமல் நம்மில் சிலர் இஸ்லாத்தின் மீது குறை காண்பது அறிவீனமாகும்.
 
இறுதியாக அல்குர்ஆனின் ஒரு வசனத்தை உங்களுக்கு நினைவு கூறி நிறைவு செய்கின்றேன்:

وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَنْ يُرْضُوهُ إِنْ كَانُوا مُؤْمِنِينَ

‘அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான்.’ (9: 62).
 
தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி

Monday, December 17, 2012

Alcohol and Muslims

 

By Alyssa

Note: The word alcohol is derived from the Arabic word al-kohl, which means fermented grains, fruits, or sugars that form an intoxicating beverage when fermented. Khamr or khamrah is the word used in the Qur'an to denote a fermented beverage that intoxicates a person when he/she drinks it. It is sometimes translated as "wine."
Khamr in Early Muslim History


Pre-Islamic Arabs had harsh lives and felt that alcohol was an indispensable way to cope with their problems. Among the troubles that the Arab people had before Islam were: tribal warfare, excessive pride and competition, prostitution, insecurity, broken homes, and female infanticide. Women were treated as slaves, and children were deprived of affection, while men were expected to be tough and competitive. These were all factors that compelled people to drink.

Sale of alcohol was so common that the name for merchant, tajir, became synonymous with the seller of khamr. Khamr shops and bars were open 24 hours a day.

The first Qur'anic verse (chronologically) to deal with alcohol was revealed in Mecca before the hijra:

"And from the fruit of the date-palm and the vine ye get out wholesome drink and food: behold in this also is a Sign for those who are wise." (16:67)

After this verse, some Muslims started to wonder about the correctness of taking khamr.Revealed in Madinah a few years later, was this verse:

"They ask thee concerning wine and gambling, say: "In them is great sin, and some profit, for men; but the sin is greater than the profit..."(2:219)

Most Muslims continued to drink but some began to abstain or reduce their intake. Certain Muslims had been abstinent even in the pre-Islamic days, most notably, Uthman Ibn Affan, who later was the third Khalifa. Uthman said, "Al-khamr 'robs' the mind totally; and I have not yet seen anything which when entirely 'robbed' or curtailed will come back in its original intact form!"

Recent studies have shown that drinking alcohol can in fact cause permanent damage to memory and learning ability.

The third mention of alcohol by Allah (SWT) in the Qur'an occurred as follows:

"O ye who believe! Approach not prayers with a mind befogged, until ye can understand all that ye say, ..." (4:43)

Now there was a great difficulty in being drunk, since a Muslim has to pray five times a day. The Prophet (SAW) is reported to have said, "Prayer is the pillar of religion. The one who performs it has erected religion and the one who abandons it has ruined (his) religion." Since the prayers are spread throughout the day, it is difficult if not impossible, for a good Muslim to ever get drunk.

If a Muslim failed to appear at the mosque in those days, his friends would think he was ill. He would then feel guilty that really, it was just his drunkenness that prevented him from coming. The religious brotherhood of Muslims helped encourage abstinence from alcohol in those days. It is still true today, that Muslims help each other be strong in resisting such temptations. The Muslim who falls away from the rest of the community becomes like a lost sheep among wolves, and risks being engulfed by sinful ways.

Since there were no drugs in those days to help ease the pain of withdrawal symptoms, alcoholic Muslims began to slowly reduce their intake. Honey was given to these alcoholics to help them restore vitamins to their bodies and ease the detoxification process. These two techniques (slow withdrawal and honey) have been shown in recent times to be effective and helpful in treating alcoholics.

During this period of weaning from alcohol, khamr sellers also began looking for a new means of livelihood.

"...The devil wants only to cast among you enmity and hatred by means of strong drink and games of chance and to turn you from remembering Allah and from prayer. Will you then desist." (5:90-91)

These verses are the ones that declared total prohibition of alcohol to the Muslims. After this verse was revealed, the Muslim citizens of Madinah immediately began to spill their stocks of wine into the sand and streets; so that the wine ran through the streets of Madinah. Individuals who up till that moment were enjoying guiltlessly a glass of wine, quickly emptied their cups on the ground and spit out the alcohol from their mouths. They rushed to make ablutions in order to purify themselves.

Muslim Values Make Alcohol Unnecessary

Islam instilled family values and gave security to the people. Thus, with Islam, there is no longer a "need" to drink in order to relieve unhappiness and stress by slipping into a fantasy world. One American convert to Islam, who used to drink before in her pre-Muslim days, comments, "I think that being Muslim has made me face up to a lot of things, which is painful, but by working them out I feel much less need to run away from my problems, and alcohol is basically the best way to run away from problems."

The fear of God helps Muslims keep away from not only alcohol, but all other evils prohibited by the Qur'an, such as adultery, abuse of wives and children, and gambling. Peer pressure (brotherhood) also helps Muslims abstain from these sins.

Attempts to abolish alcohol in America (during the Prohibition period) and drugs (the "War on Drugs") were not successful, because the factors that cause people in America to drink and use drugs have not been eliminated.

What compels people to drink? A variety of factors, including people whose jobs bring them into contact with alcohol, or who find themselves in social settings where alcohol is available or even "pushed" on them. Also, being able to afford the luxury of spending money on alcohol and having the leisure time to drink it, as well as being beguiled by ads which allure a person to think that drinking alcohol is a way to have a good time, or appear sexy, rich, powerful and cosmopolitan. Finally, the example of other drinkers, usually friends or family can lure a person into thinking that it is okay to drink. Alcoholics (people addicted to excessive drinking of alcohol) tend to want immediate gratification and are addicted to this-worldly pleasure. They don't tend to care about the long term consequences.

Sellers of khamr in Madinah were given ample warning that they should find another trade, so the change away from an alcohol-laden economy was gradual and not disruptive. Today in America, much of the economy revolves around the alcohol industry. The government, for example, collects a hefty sum of money from taxes on alcohol. Do you think that the U.S. government today could be serious about wanting to get rid of alcohol? Companies which produce alcohol continue to spend grandly on ads and TV commercials, and then donate a portion of their profit to "help" some of the people whose lives have been ruined by consumption of their product.

A practicing Muslim will not touch alcohol out of fear of God. Those who do usually feel much guilt on breaking a Qur'anic injunction. Many drinkers will cease this activity during Ramadan. Sometimes, excessive drinkers find themselves so changed by the experience of Hajj (pilgrimage) that they never drink again.

In a true Islamic State, a person is not likely to ever reach the point of physical dependence on alcohol. Friends, family and neighbors will not just look away while a person destroys himself and his family. Muslims are supposed to be very involved in correcting wrongs that they see. Islam is a very community-oriented faith. There is no place for an individual to do what he wants to do, if it hurts others. And by hurting yourself through drinking, you inadvertently hurt others.

Too much guilt about drinking alcohol can make a person feel so bad that he or she drinks just to smother the guilt. To balance feelings of guilt, Muslims need to remember the mercy and forgiveness of Allah.

"And those who, having done something to be ashamed of, or wronged their own souls, earnestly bring Allah to mind, and ask for forgiveness for their sins, --- and who can forgive sins except Allah? --- and are never obstinate in persisting knowingly in (the wrong) they have done." (3:135)

Modern methods of curing alcoholics have not been very successful; many will regress to drinking again. Among the new methods of "treating" alcoholics is injecting the drinker with a drug like apomorphine, which makes the victim feel sick and vomit as soon as the drink is taken. This is done repeatedly over several weeks so that the drinker learns to associate drinking with nausea and vomiting. Temporary paralysis via scoline injection and electric shocks are other techniques Western doctors use to try to get heavy drinkers to quit.

What Alcohol Does

You may have heard that drinking wine in moderation (1 to 2 glasses a day), is beneficial in helping to reduce heart failure. Even if this is true, the harm from alcohol outweighs the good, so it should be avoided (verse 2:219 of Qur'an). If you want to help your heart, there are better ways to do it, like exercising and eating less saturated fat and cholesterol.

Alcohol acts on the CNS (Central Nervous System). Drinkers have more accidents (automotive, and in general) due to decreased ability to function while under the influence of alcohol. Long term alcohol abuse can lead to: hepatitis, pancreatitis, gastrointestinal bleeding, ulcers, heart disease, dementia, cardio-myopathy, vitamin deficiencies, and cirrhosis of the liver.

Cirrhosis of the liver can occur when a person drinks every day. Women who drink two or more drinks a day, and men who drink 4 drinks a day, are at risk for developing cirrhosis. A "drink" equals 1.5 ounces of 80-proof liquor, 5 ounces of wine or 12 ounces of beer. The liver gets used to a steady supply of alcohol, and chooses alcohol as its main source of fuel, leaving fatty acids(the preferred fuel of choice in a healthy liver) to collect in the tissues of the liver, which cuts off the blood supply to the organ. Liver cells begin to die and scar tissue is formed, deforming the liver. At the acute stage, the person will experience high blood pressure, an accumulation of fluids in the abdomen, vimoting of blood, hepititis and possibly liver cancer.

CAT scans of the head show that heavy, long-term consumption of alcohol can cause the brain to shrink. Alcohol irritates the stomach and interferes with absorption of vitamins, minerals and other nutrients. It can contribute to obesity due to its high calorie content. The liver is damaged when alcohol causes accumulation of fatty deposits, which eventually leads to cirrhosis of the liver. High blood pressure and alcohol abuse often go together.

Recent research shows that the corpus callosum (the part of the brain that connects its left and right hemispheres) is smaller in alcoholics. Also it has been demonstrated that female alcoholics sustain even greater brain damage than men.

Risk of osteoporosis (weakened bone tissue) increases for female drinkers. There is also support in medical research to show an association between alcohol consumption and breast cancer risk. In addition, women who become drunk are more likely to be victims of rape and other violent crimes, while drunk men are more likely to be the cause of violent crimes.

Drinking alcohol during pregnancy can lead to birth defects in the baby. In fetal alcohol syndrome, the child will often display signs of mental retardation, and have closely set eyes, a small nasal bridge, epicanthal eye folds, heart valve lesions, microcephaly, small teeth and poor tooth enamel, limited joint movement and an inability to pay attention.

There is great wisdom in the prohibition of drinking alcohol!

Note: Any numbered references (i.e., "2:155") refer to chapter and verse in the Qur'an.

References:

"Islam and Alcoholism" by M.B. Badri, Dr. Scheuler's Home Medical Advisor, Compton's Interactive Encyclopedia, CNN, Medical Correspondent Jeff Levin, "The Wellness Encyclopedia" (UC @ Berkeley), "A Meta-Analysis of Alcohol Consumption in Relation to Risk of Breast Cancer," JAMA Vol. 260, #5, �World Medicine� by Tom Monte, et al, and the National Council for Alcoholism (212) 206-6770
Thanks :islamcan.com

Engr.Sulthan

Saturday, December 15, 2012

த டாவின்ஸி கோட் - நொருங்கியக் கனவுகள்

ARAGO - BLOOD LINE - ROSE LINE
Hides beneath the rose. The Holy Grail 'neath ancient Rosline waits,
Adorned in the masters' loving art, she lies. The Blade and Chalice guarding o'er her gates,
S H E R E S T S A T L A S T B E N E A T H S T A R R Y S K I E S
கடந்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவ்ன் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நாவல்தான் த டாவின்சி கோட். 44 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்த புத்தகம் 80 மில்லின் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அந்த நாவலை கருப்பொருளாகக் கொண்டு இயேசு கிருஸ்துவுக்கும் மகதலேனா மரியாள் என்ற மேரி மெக்டலினுக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் உண்டும் என்று புனைந்து, கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த நாவலின் பெயராலேயே திரைப்படம் தயாரித்து வெளியிட்டனர். கிருஸ்தவக் கோட்பாட்டை தரைமட்டமாக்கும் இந்த ஹாலிவுட் திரைப்படத்திற்கு உலகெங்கிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் உயிராக மதிக்கும் சங்கைக்குரிய இறைதூதர் நபி ஈஸா (அலை) அவர்களை த டாவின்சி கோட் திரைப்படம் அவமரியாதை செய்திருப்பதை அறிந்து உலக முஸ்லிம்கள் தங்களின் கண்டனக்குரலை ஆழமாக பதிவுசெய்தனர்.
பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வழக்கம்போல இத்திரைப்படம் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுவிட்ட நிலையில் உலகமக்களும் தங்கள் சொந்த வேலைப்பளுவில் டாவின்சி கோடை தற்போது மறந்துவிட்டனர்.
இப்படத்தின் தாயாரிப்பாளர்கள், இயக்குளர்கள் என்று (Ron Howard – Director, Brian Grazer – Producer, John Calley – Producer, Dan Brown - Executive Producer, Book Author, Todd Hallowell - Executive Producer, Second) அனைவரும் இல்லுமனாட்டிகளின் கைப்பாவையாக செயல்பட்டு அவர்களது திட்டத்தை கனகச்சிதமாக நிறைவேற்றினர். நமது இக்கட்டுரையின் நோக்கம் டாவின்சி கோட் படத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டுள்ள இலுமனாட்டி ஷைத்தானியக் கூட்டத்தின் திட்டங்களை வெளிக்கொண்டு வருவதே! ஹாலிவுட் திரைப்படம் உள்ளிட்ட மீடியாக்கள் மூலம் இந்த இல்லுமனாட்டி கும்பல்கள் எப்படியெல்லாம் தங்கள் சூழ்ச்சிகளை நிரைவேற்றுகின்றனர் என்பதை இவ்வாக்கத்தை இறுதிவரை படித்தால் புரியும்.

இந்த டாவின்சி கோட் ஹாலிவுட் திரைப்படத்தின் மூலம் 3 முக்கிய விஷயங்கள் பதிவு செய்யப்பட்டன. அவைகள் பின்வருமாறு

1.இயேசுவிற்கும் மகதலேனா மரியாள் என்ற மேரி மெக்டலினுக்கும் திருமணமானது. அந்த திருமணத்தின் மூலம் இயேசுவிற்கு குழந்தையும் பிறந்தது. உலகப்புகழ்பெற்ற ஓவியர் லியொ நார்டோ டாவின்ஸி, தான் வரைந்த இயேசுவின் இறுதி இராப்போசனம் என்ற ஓவியத்தின் மூலம் இச்சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே இயேசுவும் மேரிமெக்டலினும் கணவர் மனைவியர்தான்.
2.மிரோவிஞ்ஜியன் என்பது இயேசுவின் இரத்தபந்தம். மேரிமெக்டலின் மூலம் தொடர்ந்த அந்த இரத்தபந்தத்தில் பிறந்த இறுதி நபர் ஃபிரான்ச் நாட்டில் உள்ளார். எனவே இயேசுவின் சந்ததி என்னும் சங்கிலித்தொடரும், இது சம்பந்தமான உண்மைகளும் கடந்த 2000 வருடங்களாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
3.இத்திரைக்கதையின் மூலம் இவ்வுலகில் தோன்றிய மதங்கள் அனைத்தும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவையே என்று சொல்லாமல் சொன்ன அதே வேளையில் ஷைத்தானை வணங்குபோன்ற காட்சிகள், எகிப்த்திய பரமிடுகளிலுள்ள ஷைத்தானிய சித்திரங்கள் மற்றும் இல்லுமனாட்டிகள் தங்கள் லூசிஃபர் கடவுளை சித்தரிப்பதற்காக வரைந்து தள்ளியுள்ள ஓவியங்கள் என்று அனைத்தையும் இப்படத்தில் பதிவுசெய்தனர்.

... அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் இறை நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களே தவிர வேறில்லை. எனினும் அவர்கள் இதை உணர்ந்து கொள்ளவில்லை. (2:9)

யார் இவ்வேத உண்மைகளை நிராகரிக்கிறார்களோ, இன்னும் நிராகரிக்கும் காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும். (2:161)

இதில் முதல் விஷயத்திற்கு வருவோம். இயேசுவிற்கு திருமணம் முடிந்தது என்ற விபரத்தை இயேசு சொன்னாரா? அல்லது மேரி மெக்டலினாவது சொன்னாரா? இத்தகவலைக் கூறும் இயேசுவின் உண்மையான சுவிசேஷம் எங்கே? அல்லது இயேசுவிற்குப் பிறகு இயற்றப்பட்ட பைபிளிலாவது இச்சம்பவம் பற்றி குறிப்பேதும் உண்டா? என்றெல்லாம் பலர் கேட்டு முடித்துவிட்டனர். இதில் நாம் சொல்வது என்ன வென்றால், அணுவின் திரணை உலகிற்குச் சொன்ன ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளையே இந்த இலுமனாட்டிகள் தங்கள் வலையில் வீழ்த்தி அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த போது, இந்த லியொ நார்டோ டாவின்ஸி என்ற ஓவியர் எம்மாத்திரம்? ஒருவேளை இயேசுவின் இறுதி இராப்போசனப் படத்தில் மேரிமெக்டலின் உருவத்தை மறைமுகமாக வரைந்துவிடு இல்லாவிட்டால் உன் கையை வெட்டிவிடுவோம் என்று அவரை இக்கொலைகார இல்லுமனாட்டிகள் மிரட்டியிருப்பார்கள். அல்லது லியொ நார்டோ டாவின்ஸியே இந்த ஷைத்தானை வணங்கும் லூசிஃபர் கூட்டத்தைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம். டாவின்சி கோட் மூலம் இந்த உண்மையை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் அவ்வளவுதான்.

இயேசுவும் மேரிமெக்டலினும் கணவர் மனைவியர் என்ற பொய்யை இவர்கள் எத்தனை ஹாலிவுட் படங்களை வெளியிட்டுக் காட்டினாலும் உலகமக்கள் நம்பத் தயாரில்லை என்பதை இவர்களே விளங்கிக் கொண்டார்கள். இயேசுவைக் கடவுளாகக் கருதும் கிருஸ்தவர்களே இக்கூற்றை நிராகரித்துவிட்டபடியால் டாவின்ஸி கோட் திரைப்படம் மூலம் இவர்கள் பரப்பப நினைத்த இவர்களின் முதற்கனவு தவிடுபொடியானது.

நபியே! இன்னும், சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும் என்று கூறுவீராக. (17:81)
இரண்டாவதாக மிரோவிஞ்ஜியன் இரத்தபந்தம் என்பது இயேசுவின் இரத்தபந்தம் என்று இத்திரைப்படம் மூலம் சொல்லப்பட்டுள்ளது. நாம் ஆய்வு செய்த வரையில் மிரோவிஞ்ஜியன் வம்சவழி இயேசுவிற்கு முந்திய காலத்தில் வாழ்ந்த யூதர்களின் வம்சவழியாகவோ அல்லது இரண்டாம் ரம்ஈஸஸ் என்று அழைக்கப்பட்ட கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் சந்ததியாகவோ இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மிரோவிஞ்ஜியன் இரத்த பந்தம் என்பது ஏசுவின் வம்சவழியினர் என்றால் மிரோவிஞ்ஜியன் இனம் சம்பந்தப்பட்ட ஆவனங்களில் இயேசுவுடைய கொள்கை கோட்பாடுகள், அவர் சம்பந்தப்பட்ட வரலாறுகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் கிருஸ்தவர்கள் நம்புவது போல இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றாவது சித்திரங்கள் இருக்கவேண்டும். ஆனால் மிரோவிஞ்சியன் வம்சவழி ஆவனங்களில் பிரமிடுகளும், ஃபிர்ஆவ்ன் காலத்தில் கடவுளாக வணங்கப்பட்ட சிலைகளும், அன்றைய இஸ்ரவேலர்களின் பழக்கத்தில் இருந்த நாணயங்களுமே காட்டப்படுகின்றன.

எது எப்படி இருந்தாலும் பாதுகாக்கப்பட்ட உண்மை இறைவேதமாம் திருமறை குர்ஆனின் போதனைபடி சங்கைக்குரிய இறைத்தூதர் இயேசு என்ற நபி ஈஸா (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைபடி தந்தை இல்லாமல் பிறந்தார்களே தவிர எந்த ஆணுடைய இரத்தக்கலப்பினாலும் அவர்கள் உருவாகவில்லை. மேலும் அவர்கள் மேரி மெக்டலினைத் திருமணம் செய்தார்கள் என்ற தகவலை திருமறை குர்ஆனோ, அல்லாஹ்வின் இறதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களோ கூறவில்லை என்பதால் முஸ்லிம்களாகிய நாம் இவ்விஷயத்தில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இந்த மிரோவிஞ்ஜியன் இரத்தபந்தம் பற்றி இஸ்லாமிய வரலாற்று அறிஞர்கள் ஆய்வு செய்தால் இதில் பொதிந்துள்ள பல மர்மங்கள் மேலும் வெளிச்சத்திற்கு வரலாம்.
ஒரு விவாதத்திற்காக நாம் த டாவின்சி கோட் திரைப்படம் சொல்வது போன்றே மிரோவிஞ்ஜியன் என்பது இயேசுவின் இரத்தபந்தம் என்றே வைத்துக்கொள்வோம், நாம் கேட்பது என்னவென்றால் 2000 ஆண்டுகளாக இயேசுவின் இரத்தபந்தத்தையே பாதுகாக்கத் தெரிந்த மிரோவிஞ்ஜியன் குடும்பத்தினருக்கு, இயேசுவிற்கு கடவுள் வழங்கிய உண்மை சுவிசேஷத்தை பாதுகாக்கத் தெரியாமல் போய்விட்டதா? இயேசுவிற்கு பின்னர் தோன்றிய பவுலும் அவரது வகையறாக்களும் எழுதித்தள்ளிய விஷயங்களை புனித வேதமாக உலக கிருஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இயேசுவிற்கு கர்த்தர் நேரடியாக வழங்கிய சுவிசேஷமான இன்ஜீல் வேதத்தை பாதுகாத்து அதை இவ்வுலகிற்கு வழங்கியிருந்தால் எவ்வளவு பிரயோஜனமாக இருந்திருக்கும்? இயேசுபிரானின் நேரடிக்கட்டளைகளை பின்பற்றுவது நன்மையைத்தருமா? அல்லது இயேசுவிற்கு பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டதை பின்பற்றுவது நன்மையைத் தருமா? இயேசுபிரானின் நேரடிக்கட்டளைகளை பின்பற்றுவது இயேசுவின் அன்பைப் பெற்றுத்தருமா?, அல்லது இரத்தபந்தம் புண்ணாக்குபந்தம் என்று கதையளந்து இயேசுவின் கட்டளைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு அவர் எச்சரித்த லூசிஃபர் சாத்தானையே கடவுளாக வணங்குவது இயேசுவின் அன்பைப் பெற்றுத்தருமா? என்பதை இந்த இல்லுமனாட்டி போலி மிரோவிஞ்ஜியன்கள் சற்று சிந்திப்பார்களாக. இவர்கள் எங்கே இயேசுவின் சுவிசேஷத்தை பாதுகாத்திருப்பார்கள், இயேசுவிற்கு வழங்கப்பட்ட சுவிசேஷத்தில் கலப்படம் செய்து அதை ஒழித்துக்கட்டும் வேளையில் வேண்டுமென்றால் இவர்களின் முன்னோர்கள் இறங்கியிருப்பார்கள் என்று எண்ணுகிறீர்களா? அதுவும் சரிதான்.

மக்களே! இயேசு, இரத்தபந்தம், மிரோவிஞ்ஜியன் வம்சம் என்பதெல்லாம் இவர்களின் குறிக்கோளில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்கும். இல்லுமனாட்டிகளைப் பொருத்தவரையில் லூசிஃபர்தான் மம்மி மற்றவைகள் அனைத்தும் டம்மிகளே!. ஆம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இல்லுமனாட்டிகளின் அடிவருடிகள் கோடைகால ஆன்மீகச் சடங்கு என்ற பெயரால் லூசிஃபர் ஷைத்தானை வெளிப்படையாகவே வணங்கியதையும், ஷைத்தானுடைய பெயரால் மந்திரங்கள் புரிவதற்கு குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பதுபோல திரைப்படங்களில் காட்டப்படுவதையும் கீழுள்ள வீடியோக்கள் மூலம் பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்னும் சொல்லப்போனால் இயேசுவின் இரத்தபந்தத்தைப் பாதுகாப்பதிலாவது இவர்கள் உண்மையாளர்களாக இருந்தார்களா என்றால் அதுவுமில்லை. ஃபிரான்ஸ் நாட்டின் ஸ்பென்சர் ராஜபரம்பரையில் பிறந்த இளவரசி டயானாவை இயேசுவின் இரத்த பந்தத்தில் இறுதியாக தோன்றியவள், மிரோவிஞ்ஜியன் இனத்தில் இயோசுவின் புனித இரத்தத்தை பாதுகாக்கும் புனிதக்கிண்ணம் என்றுதானே டயானாவை இளவரசர் சார்லஸூக்கு மணமுடித்து வைத்தனர். பிறகு ஏன் இவர்களாகவே டயானாவின் கதையை முடித்தார்கள்? (பார்க்க). இயேசுவின் இரத்தபந்தம் உலகமுடிவு நாள்வரை பாதுகாக்கப்படவேண்டும் என்றல்லவா இவர்கள் எண்ணியிருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் அல்லவா இவர்கள் இறங்கியிருக்க வேண்டும். மிரோவிஞ்ஜியன் வம்சம் பல்கிப் பொருக வேண்டுமெனில் இளவரசி டயானா பல குழந்தைகளைப் பெற்று அவளின் வம்சம் இவ்வுலமுழுவதும் பரவவேண்டும் என்று நினைப்பார்களா அல்லது அவளையே கொலை செய்வார்களா? சற்று யோசித்துப்பாருங்கள். எனவே இளவரசி டயானாவை படுகொலை செய்ததற்குப் பின்னர் இவர்களின் சுயரூபம் மேற்கத்திய சமூகத்திற்கே தெரிந்துவிட்டது. இந்நிலையில 2000 வருடங்களாக இயேசுவின் இரத்த வழியை பாதுகாத்து வருகிறோம் என்ற இவர்களின் பொய்யையும் எத்தனை ஹாலிவுட் திரைப்படம் எடுத்து வெளியிட்டாலும் உலகம் நம்புவதற்குத் தயாரில்லை என்பதை உலகமக்கள் இத்திரைப்படத்திற்கெதிரான தங்கள் எதிர்ப்புகளை பிரதிபலித்ததின் மூலம் டாவின்ஸி கோட் திரைப்படத்தால் இவர்கள் நிறைவேற்ற நினைத்த இரண்டாவது திட்டமும் நொருங்கிப்போனது.

நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம் அதனால், சத்தியம் அசத்தியத்தின் சிரசைச் சிதறடித்துவிடுகிறது. பின்னர் அசத்தியம் அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் கற்பனையாக இட்டுக்கட்டி வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.
(21:18)

இவர்களின் மூன்றாவது திட்டமான மீடியாக்களில் தங்கள் லூசிஃபர் கடவுளை அறிமுகப்படுத்தி, ஷைத்தானிய, ஃபிர்அவ்னிய சித்திரங்களை பிரபலப்படுத்துவதாகும்.


மேற்காணும் இத்தகைய படங்களை நாம் அன்றாடம் பயன்படுத்தும் வணிகப் பொருட்கள், அழகு சாதனங்கள், ஆடைகள் போன்றவற்றில் பார்வையிடலாம். குறிப்பாக குழந்தைகளின் ஆடைகள் மற்றும் அவர்களின் விளையாட்டு சாதனங்களிலும், கார்ட்டூன்கள் மற்றும் வீடியோகேம்களில் வரும் கதாபாத்திரங்களிலும் இப்படங்களைக் காணலாம். மேலும் பிரமிடுகளைப் பிரதிபலிப்பது போன்று அடுக்கமாடி கட்டிடங்கள் பல கட்டப்படுவதையும், பல கட்டிடங்களின் உள்ளரங்கு அலங்காரங்களில் இத்தகைய படங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் பரவலாகக் காணலாம்.

இன்னும் சொல்லப்போனால் இந்த சித்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட பல ஹாலிவுட் திரைப்படக் காட்சிகளில் ஒருசிலவற்றை இங்கு தந்துள்ளோம், பதிவிறக்கம் செய்து பார்த்து விழிப்படையுங்கள்.


மேற்காணும் மூன்றாவது திட்டத்தில் இலுமனாட்டிகள் தற்போதைக்கு வெற்றி பெற்றிருப்பது போல தோன்றினாலும் உலக மக்கள் விரைவில் விழிப்படைந்து இதிலும் பெரும் தோல்வியைத்தான் தழுவ இருக்கிறார்கள் - இன்ஷா அல்லாஹ். இதை எப்படி சொல்கிறோமென்றால் இந்த இல்லுமனாட்டி ஷைத்தானியக் கூட்டத்தின் சதித்திட்டங்களை தோலுரிக்கும் கட்டுரைகளை நமது இணையதளத்தின் மூலம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ். சில நாட்களாக வெளிவரும் இந்த கட்டுரைகளுக்கு ஐம்பதாயிரத்திற்கும் (50,000) மேற்பட்ட ஹிட்ஸூகள் பதிவாகியுள்ளது. நாம் எதிர்பார்த்த அளவைவிட பல ஆயிரக்கணக்கானோர் இப்பதிவுளை பார்த்து படித்து பயனடைந்துள்ளனர். மேலும் பலர் தங்களின் மனநிறைவான கருத்துக்களை நமக்கு எழுதிய வண்ணம் உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ் அனைத்து புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!. மிகக் குறைந்தளவு ஆற்றல் கொண்ட ஒற்றுமை இணையக் குழுவினராலேயே இந்த இலுமனாட்டி ஷைத்தான்களை இவ்வளவு தூரம் அடையாளம் காட்டமுடிகிறது என்றால், ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் விழிப்படைந்து இவர்களின் சூழ்ச்சிக்கெதிராக கிளம்பினால் என்ன ஆகும் என்பதை சிந்தித்துப் பார்க்கிறோம், அந்த காலம் வெகுதூரத்தில் இல்லை.

இவர்களின் மூன்றாவது திட்டத்தின் மற்றொரு பகுதியான மதங்கள் அனைத்தும் மனிதனால் இயற்றப்பட்டவையே என்ற கற்பனையை நிலை நாட்டுவதிலும் பெரும் தோல்வியைத்தான் தழுவியுள்ளார்கள். இத்திரைப்படம் வெளியிடப்பட்டு 4 வருடங்கள் உருண்டோடிய நிலையிலும், இஸ்லாத்திற் கெதிரான இந்த இலுமனாட்டி ஷைத்தான்களின் பொய்ப் பிரச்சாரங்களையும் வெற்றிகொண்டு இவ்வுலகில் இன்றும் வேகமாகப் பரவும் மார்க்கம் இஸ்லாம் என்ற உண்மை மேற்கண்ட இவர்களின் கனவுகளை தவிடுபொடியாக்குகிறது. இவர்களின் ஆதிக்கம் முழுஅளவில் இருக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் கூட நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இஸ்லாம் அசுர வேகத்தில் பரவிவருவதை வைத்து இஸ்லாம் உண்மையான இறைமார்க்கம்தான் என்பதை இவர்களும் நம்பித்தான் ஆகவேண்டிய என்ற கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
நிச்சயமாக தீனுல் இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமாகும். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் இதுதான் உண்மையான மார்க்கம் என்னும் அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக இதற்கு மாறுபட்டனர்;. எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய கணக்கைத் துரிதமாக முடிப்பான். (3:19)

இன்னும் இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் அது ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அத்தகையவர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (3:85)

நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் மரணத்தற்குப் பின்னும் மீள வைக்கிறான். அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன் மிக்க அன்புடையவன். அவனே அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன். தான் விரும்பியவற்றைச் செய்கிறவன். (85 :12-16)

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.

1. இளமையில் கல்வி

இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.

2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்

நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்

குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.

4. உறுதியாக இருத்தல்

பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.

அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.

5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.

உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.

மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.

தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.

6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்

குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.

அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!

7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்

தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.

8. மன்னித்து விடுங்கள்

குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.

9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்

நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.

10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்

சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.

இறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.

அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.

இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்

உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.

இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.

இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

12. கீழ்ப்படிதல்

பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!

தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!

முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.

இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.

மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

நன்றி : தமிழ் இஸ்லாம்

குர்ஆனில் முரண்பாடுகளா?

                                                                                 ஆக்கம் : இப்னு குறைஷ்
நம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக!

இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. உலகில் தோன்றிய மதங்கள், கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களில் பெரும்பாலானவை தன் மீது ஏவப்பட்ட கேள்விக் கணைகளுக்கு விடை இல்லாமல் காலத்தால் நிலைபெறாமல் போனதையும், பல மதங்கள் மனிதவாழ்க்கை தத்துவங்களையும் அறிவியல் கோட்பாடுகளையும் வென்றெடுக்க முடியாமல் தவிப்பதையும், இன்னும் அதன் கொள்கைகள் மனிதக் கரங்களால் மாசுபடுத்தப் பட்டுள்ளதையும் நாம் அறிவோம். ஆனால் இத்தகைய அவலங்கள் அனைத்தையும் வென்றுநிற்கும் ஒரே மார்க்கமாக என்றும் திகழ்கிறது இஸ்லாம். ஏனெனில் இஸ்லாம் - ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் இசைவானதாக இவ்வுலகைப் படைத்த இறைவனால் அமைக்கப்பட்ட ஓர் உன்னத வாழ்க்கை நெறியாகும். அத்தகையை நெறிமுறைகளின் தொகுப்பே திருக்குர்ஆன். 14 நூற்றாண்டுகளாக திருமறை குர்ஆன்; தன்மீது ஏவப்படும் சவால்களுக்கு ஆணித்தரமான விடைகளை இவ்வுலகிற்கு அளித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய சவால்களில் ஒன்று 'குர்ஆன் வசனங்களில் முரண்பாடுகள்' என்ற சொத்தைவாதமும் ஆகும்.

திருமறை குர்ஆனின் ஒரேயொரு வசனம்கூட மனிதவாழ்க்கைக்கு பொருத்தமானதாக இல்லை என்றோ அல்லது அதில் ஒன்றோடொன்று முரண்படுகிறது என்றோ எக்காலத்திலும் நிரூபித்திட இயலாது. ஏனெனில் திருக்குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்டது. அல்லாஹ் தான் அருளிய திருமறையைப் பற்றி திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்

அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன் 4 : 82)

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். (திருக்குர்ஆன் 2 : 23)

எனவே ஒருவர் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றோடொன்று முரண்படுகிறது என்று கூறுவதும், திருக்குர்ஆன் இறைவேதமா என்று சந்தேகிப்பதும் அவரது அறியாமையைத்தான் காட்டுகிறது.
2;:253 VS 2:285 – முரண்பாடு எங்கே இருக்கிறது?
திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமாகிய சூரத்துல் பகராவின் 253 மற்றும் 285 வது வசனங்கள் ஒன்டோடொன்று மோதுவதாக கிருத்துவ ஊடகங்கள் முதல் மேற்கத்திய சிந்தனைவாதிகள் (?), நாத்திகம் பேசுபவர்கள் உட்பட தான் எந்த மதத்தில் உள்ளோம் என்பதைக்கூட அறியாதவர்கள், தங்கள் கொள்கையை வெளியே சொல்ல முடியாதவர்கள் வரை தவறாக சித்தரிக்கப்படுகிறது. அந்த இருவசனங்களும் பின்வருமாறு

அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;. அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்;. அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்;. அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்;. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான
்.(திருக்குர்ஆன் 2 : 253)

(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்'' என்று கூறுகிறார்கள். (திருக்குர்ஆன் 2 : 285)

இவ்விரு வசனங்களும் முரண்படுகிறது என்பவர்கள் அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம் என்று 2:253ல் கூறியிருக்க 2:285 வது வசனமோ ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை என்றல்லவா கூறுகிறது என்று விவாதம் செய்கிறார்கள்.

முதலில் வசனம் 2:253 ன் அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம் என்பதின் பொருள் என்ன என்பதை முதலில் கவனிக்கவேண்டும். அதன் பிறகு அதில் நாம் என்ற வார்த்தை யாரைக் குறிக்கிறது என்பதையும் ஆய்வு செய்யவேண்டும்.

அதுபோல வசனம் 2:285 ன் ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை என்பதின் பொருள் என்ன என்பதை அறிந்து விட்டு பிறகு அதில் நாம் என்ற வார்த்தை யாரைக் குறிக்கிறது என்பதையும் ஆய்வு செய்யதாலே இரு வசனங்களிலும் எந்த முரண்பாடும் இல்லை என்பதை மிகத் தௌ;ளத் தெளிவாக விளங்கலாம்.

திருமறையின் வசனம் 2:253 கூறும் மேன்மை, பதவி என்றால் என்ன?

ஒவ்வொரு நபிமார்களுக்கும்; அல்லாஹ் சில மேன்மைகளைக் கொடுத்திருந்தான். அதாவது சில நபிமார்களுக்கு பிறர் ஆச்சரியப்படும் வகையில் பற்பல அற்புதங்களைக் கொடுத்தும், சில நபிமார்களுக்கு பிரமாண்டமான ஆட்சி அதிகாரங்களைக் கொடுத்தும், சில நபிமார்களுக்கு அவர்களைப் பின்பற்றியோரின் எண்ணிக்கையாலும், சில நபிமார்களை அதிசய பிறப்பு மூலமும், சில நபிமார்களுக்கு நீண்ட ஆயுட்காலத்தைக் கொடுத்தும் மேன்மையாக்கினான்.

உதாரணமாக நபி மூஸா (அலை) அவர்களுக்கு இறைவனளித்த அற்புதங்களைக் கவனியுங்கள்.

அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
(திருக்குர்ஆன் 7 : 107)

மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
(திருக்குர்ஆன் 7:108)

அப்பொழுது நாம் ''மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்'' என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.
(திருக்குர்ஆன் 7:117)

மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு ''உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!'' என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன..
(திருக்குர்ஆன் 7:180)

''உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்'' என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். அவ்வாறு அடித்ததும் கடல் பிளந்தது (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
(திருக்குர்ஆன் 26:63)

இவ்வாறு பற்பல அற்புதங்களை அல்லாஹ் பல்வேறு நபிமார்களுக்கும் பல விதத்திலும் வழங்கியிருந்தான். நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளை மற்றும் அனுமதியின் படி சந்திரனை பிளந்தார்கள், நபி ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளை மற்றும் அனுமதியின் படி பிறவிக்குருடையும், வெண்குஷ்ட நோயையும் குணப்படுத்தினார்கள் என்றெல்லாம் திருமறை குர்ஆன் கூறுகிறது
–(பார்க்க திருக்குர்ஆன் 3:49)

ஆட்சி அதிகாரத்தைப் பொருத்த வரையில் நபி ஸூலைமான் (அலை) அவர்களைப் போன்று இறைவன் வேறு எவருக்கும் வழங்கியதில்லை என்பதற்கு உதாரணமாக

(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).
(திருக்குர்ஆன் 34:12)

அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. ''தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே'' (என்று கூறினோம்).
(திருக்குர்ஆன் 34 : 13)

இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம். இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்;.
(திருக்குர்ஆன் 21 : 81,82)

நபி ஆதம் (அலை) அவர்களையும் நபி நூஹ் (அலை) அவர்களையும் அல்லாஹ் 900 வருடங்களுக்கும் மேல் இவ்வுலகில் வாழச்செய்தான். அத்தகைய நீண்டதொரு வாழ்வை பிற நபிமார்களுக்கு அல்லாஹ் கொடுக்கவில்லை. நபி ஈஸா (அலை) அவர்களை எந்த தந்தையும் இல்லாமல் அல்லாஹ் அதிசயமாகப் பிறக்கவைத்தான். அவர்களை தொட்டில் பருவத்திலேயே பேசவும் வைத்தான். நபி ஆதம் (அலை) அவர்களுக்கோ தாயும் இல்லை தந்தையும் இல்லை. இத்தகைய அதிசயமான பிறப்பை மற்ற நபிமார்களுக்கு அல்லாஹ் வழங்கவில்லை.

ஒருநபிக்குக் கொடுத்த அற்புதத்தைப் போல் மற்றொரு நபிக்கு அல்லாஹ் ஏன் கொடுக்கவில்லை? என்று சிந்திப்பது அறிவுடமையாகாது. ஏனெனில் ஒருவருக்கு அற்புதங்களை கொடுப்பதும் அவரை மேன்மை படுத்துவதும் இறைவனின் விருப்பமாகும். இறைவனின் சுய விருப்பத்தில் அவனால் படைக்கப்பட்ட மற்றவர்கள் எதிர் கேள்வி கேட்கும் அளவுக்கு இறைவன் பலஹுனமானவன் அல்ல.

நபி மூஸா (அலை) அவர்கள் மாயாஜால மந்திரதந்திரங்கள் நிறைந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். அந்த மக்கள் அவ்வாறான நம்பிக்கையை மிகப் பிரம்மாண்டமாக நம்பியிருந்தார்கள். அக்கால மக்கள் அவ்வாறு மந்திரங்கள் புரிபவர்களை கடவுள் அளவிற்கு போற்றினார்கள். அம்மக்கள் எவற்றை பிரம்மாண்டம் என நம்பினார்களோ அவற்றை ஒன்றுமில்லை என்று உடைத்தெரிவதற்கு இத்தகைய அற்புதங்களை நபி மூஸா (அலை) அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டியதாயிற்று. இருப்பினும் இவ்வுலகைப் படைத்த அல்லாஹ்தான் வணங்குவதற்கு தகுதியுள்ளவன் என்பதை நபி மூஸா (அலை) அவர்கள் உட்பட மற்ற அனைத்து நபிமார்களும் மக்கள்முன் தங்களின் சத்தியப் பிரச்சாரத்தினால்தான் நிரூபித்தார்கள்.

நபி ஈஸா (அலை) அவர்கள் 'நாங்கள் தான் இவ்வுலகில் சிறந்த மருத்துவ வல்லுனர்கள்' என்று மார்தட்டிய மருத்துவர்கள் நிறைந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். அம்மருத்துவர்களுக்கு கண்சிகிச்சையும், குஷ்டநோயைக் குணப்படுத்துவதும் பெரும் சவாலாக இருந்தது. எனவே அல்லாஹ் மருத்துவ ரீதியான அற்புதத்தை நபி ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கினான்.

நபி முஹம்மது (ஸல்) அவர்களோ 'நாங்கள் தான் இவ்வுலகில் தலைசிறந்த கவிஞர்கள்' என்று பெருமை பாரட்டிக்கொண்ட கவிஞர்கள் நிறைந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். எனவே அல்லாஹ் தன் கட்டளைகளை தலைசிறந்த கவிஞர்கள் அனைவரையும் திக்குமுக்காடச் செய்து, உலகின் அனைத்து கவிநடைகளையும் விஞ்சும் அளவுக்கு, அரபி மொழியில் மிகவும் தரம்வாய்ந்த உயர்ந்த நடையில் எழுதப் படிக்கத் தெரியாத நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கினான். பிறகு திருக்குர்ஆன் 17:88 வது வசனத்தின் மூலம் ''இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது'' என்று (நபியே) நீர் கூறும் என்று சவால் விடுகிறான்.

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த காலஅளவு 63 ஆண்டுகள் மட்டுமே. இந்த 63 ஆண்டுகளில் தமது 40 வது வயதில்தான் அல்லாஹ்வினால் இறைதூதராக அறிவிக்கப்படுகிறார்கள். நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகளாகத்தான் இவ்வுலகில் பிரச்சாரம் செய்தார்கள். அவர்கள் பிரச்சாரம் செய்த அன்று முதல் இவ்வுலகம் முடியும் நாள்வரை நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை பின்பற்றியோரைக் கணக்கிட்டால் 900 வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்த நபி ஆதம் (அலை) அவர்களையும், நபி நூஹ் (அலை) அவர்களையும் பின்பற்றியவர்களைவிட எண்ணிக்கையால் பல்லாயிரக்கணக்கான மடங்குகள் அதிகமாகும். இவ்வாறு நபிமார்களில் அதிகமான மக்களால் பின்பற்றபட்டவர் என்ற சிறப்பையும் அல்லாஹ் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கொடுத்துள்ளான்.

எனவே இவ்வகையான அற்புதங்களை வைத்தும், பிரமாண்டமான ஆட்சி அதிகாரங்களைக் கொண்டும், அவர்களைப் பின்பற்றியோரின் எண்ணிக்கையாலும், சில நபிமார்களை அதிசய பிறப்பு மூலமும் வேறுபடுகிறார்களே தவிர அல்லாஹ் நபிமார்களில் குறிப்பிட்ட ஒருவரை தாழ்ந்தவர் என்றோ அல்லது மற்றவரை உயர்ந்தவர் என்றோ பாகுபாடாகக் கூறிடவில்லை. நபி மூஸா (அலை) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களைப் போன்று மற்ற நபிமார்களுக்கு அல்லாஹ் வழங்கவில்லை. அவ்வாறு ஏன் வழங்கவில்லை என்று முரண்டுபிடிப்பவர்களை நோக்கி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய மார்க்கம் அவர்களிடம் வந்த போது, ''மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை'' என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்களின் மூதாதையர்கள் நிராகரிக்க வில்லையா?
(திருக்குர்ஆன் 28:48)
இப்போது 2:253 வது வசனத்தை படியுங்கள்
அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;.....

அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம் என்பதில் நாம் என்ற வார்த்தை அல்லாஹ்வைக் குறிக்கிறது. அல்லாஹ்தான் நபிமார்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் பலவகையான மேன்மைகளைக் கொடுத்து அவர்களில் சிலரைவிட சிலரை மேன்மையாக்கி இருக்கின்றான் என்பது தெளிவாகிறது. அவ்வாறான மேன்மைகளைக் கொடுத்தது மனிதர்களாகிய நாம் அவர்களை பிரித்து வேற்றுமை பாராட்டுவதற்காக அல்ல மாறாக அதிலிருந்து படிப்பினை பெருவதற்காகத்தான் என்பதையும் விளங்கமுடிகிறது.

இதே வசனத்தின் (2:253) பிந்திய பகுதியில், ''அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்;. அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்;. அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்;. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்'' என்றும் கூறுகிறான்.
திருமறையின் வசனம் 2:285 கூறுவது என்ன?
(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்'' என்று கூறுகிறார்கள். (திருக்குர்ஆன் 2 : 285)

1. இதன் விளக்கமாவது, இறைதூதராகிய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனிடமிருந்து அவர்களுக்கு அருளப்பெற்ற திருக்குர்ஆனை இறைவனின் வார்த்தைகள் என்றும் அவைகள் அனைத்தும் உண்மையென்றும் நம்புகிறார்கள்.

2. மேலும் அல்லாஹ்வை மட்டும் கடவுளாகவும் நபி முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் இறுதித்தூதராகவும் ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வின் கட்டளையாகிய குர்ஆனையும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றும் (முஃமின்கள் எனப்படும்) இறைநம்பிக்கையாளர்களும் திருமறைக் குர்ஆனையும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் உண்மையென்று நம்புகிறார்கள்.

3. ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்'' என்று கூறுகிறார்கள் என்று அல்லாஹ் நபி முஹம்மது (ஸல்) அவர்களைப்பற்றியும் இறை நம்பிக்கையாளர்களைப் பற்றியும் இவ்வசனத்தில் சான்றிதழ் அளிக்கிறான்.

ஆகவே வசனம் 2:285 ன் ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை என்பதில் நாம் என்ற வார்த்தை முஸ்லிம்களைக் குறிக்கிறது. என்று கூறுகிறார்கள் என்ற வார்த்தையும் முஸ்லிம்கள் இவ்வாறு கூறுவதாகக் தெளிவுபடுத்துகிறது.


''அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(திருக்குர்ஆன் 3:84) என்று மற்றொரு வசனத்தின் வாயிலாக அல்லாஹ் இவ்வாறு முஸ்லிம்களுக்கு கட்டளையும் இடுகிறான்.

எனவே மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று வழியுருத்தும் இஸ்லாமிய மார்க்கத்தில், இறைதூதர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமை இல்லை என்று முஸ்லிம்கள் கூறுவதை இறைவன் தெளிவுபடுத்தும் விஷயத்தில், இறைதூதர்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரித்து வேறுபடுத்திடக்கூடாது என்ற இறைவன் கட்டளை இருக்கும்பொழுது மேற்கண்ட இருவசனங்கள் (2:253 – 2:285) முரண்படுவதாகக் கருதுவதுதான் முரண்பாடே தவிர திருக்குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை.

அதிமேதாவித் தனத்தின் உச்சகட்டம்.

இவ்வுலகின் ஒட்டுமொத்த பகுத்தறிவையும் முழுகுத்தகைக்கு எடுத்துள்ளதுபோல் தங்களை பகுத்தறிவாளர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துச் சொல்பவர்களை நோக்கி 'நம்பிக்கைகள் எல்லாம் உண்மையாகாது' என்றும் 'எதையும் கண்களால் பார்த்து அதை தொட்டு, அறிந்து, பிறகு நம்புவதே உண்மை' என்று கூறுவதையும் பார்க்கிறோம்.

இவ்வாறு கூறுபவர்களை நோக்கி பலவகையான கேள்விகள் நமக்கு எழுகின்றன. உதாரணமாக நாம் நம் பெற்றோர்களை நம்முடைய பெற்றோர்கள் என நம்பிக்கையின் அடிப்படையில்தான் நம்புகிறோம். இவ்விஷயத்தில் நாம் நம்மைத்தவிர்த்து பிறரை நம்பவேண்டும் அல்லது பிற யதார்த்த முடிவுகளை நம்பவேண்டும். நாம் இந்த உண்மையை அவர்களிடம் கூறினால் நாங்கள் டி.என்.ஏ (னுNயு) பரிசோதனைமூலம் அறிந்து கொள்வோம் என்ற பதில் வருகிறது.

நாங்கள் டி.என்.ஏ (DNA) பரிசோதனைமூலம் அறிந்து கொள்வோம் என்று வாதிப்பது அவர்களின் அறியாமையைத்தான்; காட்டுகிறது. இவ்வாறு கூறுபவர்கள் தங்கள் பெற்றோர்களை டி.என்.ஏ (DNA) பரிசோதனை மூலம்தான் அறிந்துகொண்டார்களா?. அப்படி டி.என்.ஏ (DNA) பரிசோதனைமூலம் அறிந்துகொள்ளவதாக இருந்தாலும் பரிசோதனையின் முடிவுகளை யதார்த்தமாக உண்மை என்று நம்பித்தான் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். இதைத்தான் நாம் நம்மைத்தவிர்த்து பிறரை நம்பவேண்டும் அல்லது பிற யதார்த்த முடிவுகளை நம்பவேண்டும் என்று கூறுகிறோம்.

'எதையும் கண்களால் பார்த்து அதை தொட்டு அறிந்து பிறகு நம்புவதே உண்மை' என்று கூறுபவர்களிடம், நீங்கள் சுவாசிக்கும் காற்றை எங்களுக்கு காட்டுங்கள், உங்களுக்கு அறிவு இருப்பதாக நம்பும் நீங்கள் அந்த அறிவை எங்களுக்கும் கொஞ்சம் காட்டுங்கள், உங்களுக்கு மூளை இருப்பதாகக் கருதும் நீங்கள் உங்களுக்கு மூளை இருக்கிறது என்பதை இவ்வுலகிற்கு நிரூபிக்கும் வண்ணம் எங்களின் கைகளுக்குத் தாருங்கள் இம்மூன்றை மட்டும் முதலில் எங்களிடம் கொண்டு வாருங்கள். அவைகளை நாங்கள் எங்கள் கண்களால் பார்த்து அவைகளை தொட்டு அறிந்து பிறகு நீங்கள் சுவாசிக்கின்றீர்கள், உங்களுக்கு அறிவு இருக்கிறது, உங்களுக்கு மூளையும் கூட இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம் என்று நாமும் விவாதித்தால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?.

எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான். எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்
. (திருக்குர்ஆன் 3:89,90,91)

எனவே 'நாங்கள் பகுத்திவாளர்கள்' எனக் கூறிக்கொள்பவர்களே இத்தகைய நிலையை விட்டுவிட்டு நீங்கள் திருக்குர்ஆனை திறந்த மனதுடன் ஆய்வு செய்யுங்கள். இஸ்லாம் எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பச் சொல்லவில்லை. [உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட அறிவியல் உண்மைகளில் 80 சதவீதம் உண்மைகள் 100 சதவீதம் சரியானதுதான் என்று கண்டறியப் பட்டுள்ளதாக வைத்துக்கொண்டால், எஞ்சியிருப்பது 20 சதவீத உண்மைகள்தான். அறிவியலில் ஒரு குறிப்பிட்ட உண்மையை பற்றிய விபரம் உடனடியாக கண்டறியப் படுவதில்லை. ஏனெனில் ஒரு உண்மையை உடனடியாக அது உண்மை என்று ஒப்புக் கொள்ளும் அளவிற்கோ அல்லது உடனடியாக அது பொய் என்று ஒதுக்கித் தள்ளும் அளவிற்கோ அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை.

இவ்வாறு மனித குலம் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவைக் கொண்டு - அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் இதுவரை அறிவியல் ரீதியாக சரி காணப்படாத 20 சதவீத வசனங்களில் - ஒரு சதவீத வசனம் கூட சரியானது அல்ல என்பதை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது. அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் என்பது சதவீதம் உண்மைகள் - 100 சதவீதம் சரியானதுதான் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் - எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் சரியானது அல்ல என்று அறிவியல் ரீதியாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே தர்க்க ரீதி விதியின்படி குர்ஆன் சொன்ன அறிவியல் உண்மைகளில் எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் - சரியானதாகவே இருக்க வேண்டும். மறுமை வாழ்க்கைப் பற்றி அருள்மறை சொல்லும் வசனங்கள் யாவும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத 20 சதவீத உண்மைகளுக்குள் அடங்கியுள்ளது. எனவே தர்க்க ரீதியாக இம்மை மறுமை வாழ்க்கை பற்றிய முஸ்லிம்களின் நம்பிக்கை சரியானதுதான் என்ற முடிவிற்கு வருவீர்கள்.
Quote By Dr. Zakir Naik]
முஸ்லிம்களின் கவனத்திற்கு...
திருமறை குர்ஆனின் அறைகூவலின் அடைப்படையில் திருக்குர்ஆன் வசனங்கள் முரண்படுவதாக எவராலும் நிரூபித்திட இயலாது என்பதை திட்டவட்டமாக அறிந்துள்ள நாம் அவ்வாறு திருக்குர்ஆன் வசனங்கள் முரண்படுவதாகக் கூறுபவர்களின் விவாதங்களை மிகக் கவனமாக ஆய்வு செய்யவும் கடமைப்பட்டுள்ளோம். யூத கிருத்துவ ஊடகங்கள் இஸ்லாத்திந்கு எதிரான போக்கில் தங்களை முழுமூச்சுடன் ஈடுபடுத்தி செயல்படுகின்றன. இன்றைய இன்டெர்நெட் உலகில் இஸ்லாத்திற்கு எதிராக இணையதளங்கள் மூலம் முழுஅளவிலான தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தைப்பற்றிய தவறான தகவல்களை அதில் பிரசுரிப்பதோடு மட்டுமல்லாது குர்ஆன் நபிமொழிகளில் அடித்தல் திருத்தல்களையும் இடைச்சொருகள்களையும் ஏற்படுத்தி இஸ்லாம் தவறானவற்றை போதிப்பதாக அறிவிக்கின்றனர். அதற்கோர் சிறந்த உதாரணம்தான் திருக்குர்ஆனின் சூரத்துல் பகராவின் 253 மற்றும் 285 வது வசனங்கள் ஒன்டோடொன்று மோதுகிறது என்ற பிரச்சாரம். இந்த இருவசனங்களைப் பற்றி இஸ்லாமிய உலகால் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புகள் பின்வருமாறு...
From YUSUFALI Translation (2:253): Those messengers We endowed with gifts, some above others: To one of them Allah spoke; others He raised to degrees (of honour); to Jesus the son of Mary We gave clear (Signs), and strengthened him with the holy spirit. If Allah had so willed, succeeding generations would not have fought among each other, after clear (Signs) had come to them, but they (chose) to wrangle, some believing and others rejecting. If Allah had so willed, they would not have fought each other; but Allah Fulfilleth His plan.
From PICKTHAL Translation (2:253): Of those messengers, some of whom We have caused to excel others, and of whom there are some unto whom Allah spake, while some of them He exalted (above others) in degree; and We gave Jesus, son of Mary, clear proofs (of Allah's Sovereignty) and We supported him with the holy Spirit. And if Allah had so wiled it, those who followed after them would not have fought one with another after the clear proofs had come unto them. But they differed, some of them believing and some disbelieving. And if Allah had so willed it, they would not have fought one with another; but Allah doeth what He will.
From YUSUFALI Translation (2:285): The Messenger believeth in what hath been revealed to him from his Lord, as do the men of faith. Each one (of them) believeth in Allah, His angels, His books, and His messengers. "We make no distinction (they say) between one and another of His messengers." And they say: "We hear, and we obey: (We seek) Thy forgiveness, our Lord, and to Thee is the end of all journeys."
From PICKTHAL Translation (2:285): The messenger believeth in that which hath been revealed unto him from his Lord and (so do) believers. Each one believeth in Allah and His angels and His scriptures and His messengers - We make no distinction between any of His messengers - and they say: We hear, and we obey. (Grant us) Thy forgiveness, our Lord. Unto Thee is the journeying.
மேலே கோடிட்டுக் காட்டியுள்ளபடி 285 வது வசனத்தை புரிந்து படிப்பவர்களுக்கு 253 வசனம் முரண்பாடாகத் தெரியாது. இவ்வசனத்தை முரண்பாடாகக் கூறவேண்டும் என்ற சிந்தனையில் We make no distinction between any of His messengers என்பதை குழப்பவாதிகளால் பிரித்துக்காட்டி எவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுகிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
Mislead Translation from Anti-Islamic Websites: The messenger believeth in that which hath been revealed unto him from his Lord and (so do) believers. Each one believeth in Allah and His angels and His scriptures and His messengers - We make no distinction between any of His messengers - and they say: We hear, and we obey. (Grant us) Thy forgiveness, our Lord. Unto Thee is the journeying.
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும் அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.
(திருக்குர்ஆன் 2:79,168,169)

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
(திருக்குர்ஆன் 3:139)

 
அல்லாஹ் மிக்க விளங்கியவன்.