Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Saturday, July 14, 2012

சுகபோகங்களி​ல் திளைக்கவில்​லை... (மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்)

உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா? அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா?
 
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்'' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார். நூல் : புகாரி 5386, 5415

கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 6456

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள்'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள். இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991

அனைத்து மனிதர்களிடமும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் படுத்துக் கொள்ளும் பாய் முக்கியமானதாகும். பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள். ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பாய் தான். அது பாயாக மட்டுமின்றி பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலையில் இருந்துள்ளது.

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகலில் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 730, 5862

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால் மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன.தலைப் பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன்.'ஏன் அழுகிறீர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்'இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?' எனக் கேட்டார்கள்.

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த உமர் பின் கத்தாப்(ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 4913

இது போன்ற அற்பமான தலையணையும் கூட போதுமான அளவில் இருந்ததா என்றால் அதுவுமில்லை.

இப்னு அப்பாஸ் என்பவரின் சிறிய தாயாரை நபிகள் நாயகம் (ஸல்) மணந்திருந்தார்கள். இப்னு அப்பாஸ் சிறுவராக இருந்ததால் அடிக்கடி தனது சிறிய தாயார் வீட்டில் தங்கி விடுவார். அப்போது நடந்த நிகழ்ச்சியை அவரே கூறுகிறார்.

'நான் எனது சின்னம்மா வீட்டில் ஓர் இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாக்கிலும், நபிகள் நாயகமும், எனது சின்னம்மாவும் தலையணையின் நீள வாக்கிலும் படுத்துக் கொண்டோம்' என்று அவர் கூறுகிறார். நூல் : புகாரி 183, 992, 1198, 4572

கூளம் நிரப்பப்பட்ட இந்தச் சாதாரண தலையணை கூட அவர்களிடம் ஒன்றே ஒன்று தான் இருந்துள்ளது. அதனால் தான் நீளமான பகுதியில் நபிகள் நாயகமும், அவர்களின் மனைவியும் தலை வைத்துக் கொள்ள இப்னு அப்பாஸ் அகலப் பகுதியில் தலை வைத்துப் படுத்திருக்கிறார்.
 
அதிக மதிப்பில்லாத அற்பமான தலையணை கூட ஒன்றே ஒன்று தான் அவர்களிடம் இருந்தது என்ற இந்தச் செய்தி பதவியைப் பயன்படுத்தி எந்தச் சொகுசையும் நபிகள் நாயகம் அனுபவிக்கவில்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.
 
வலிமை மிக்க வல்லரசின் அதிபர் வாழ்ந்த இந்த வாழ்க்கையை மிக மிக ஏழ்மை நிலையில் இருப்பவர் கூட வாழ முடியுமா?

Tuesday, July 10, 2012

பாலுணர்வை குறைக்கும் உணவுகள்: நிபுணர்கள் தகவல்!

[மட்டன், சிக்கன் போன்ற உணவுகளை உண்ட உடன் பெருஞ்சீரகத்தில் செய்த மிட்டாய்களை சாப்பிடுவது நல்லதல்ல. ஆல்கஹால் குடிப்பதால் போதைதான் அதிகமாகுமே தவிர பாலுணர்வு சக்தி குறைந்து விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.]

ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும்.

சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குறைந்து ஆண்மையும் குறையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேசமயம் அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவுகளால் இச்சையை ஒரளவாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம். என்கின்றனர் நிபுணர்கள்.

சோயா பால்
பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் "டோஃபு". சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. அதேபோல் வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளை குறைக்கும்.

பெருஞ்சீரகம்
மட்டன், சிக்கன் போன்ற உணவுகளை உண்ட உடன் பெருஞ்சீரகத்தில் செய்த மிட்டாய்களை சாப்பிடுவது நல்லதல்ல.

மட்டன், சிக்கன் போன்ற உணவுகளை உண்ட உடன் சிலர் பெருஞ்சீரகத்தில் செய்த மிட்டாய்களை சாப்பிடுவார்கள். இனிப்பு சோம்புவை அதிகம் சாப்பிடுவார்கள். இதுவும் பாலுணர்வு சக்தியை குறைக்குமாம். ஆண்களின் டெஸ்டோஸ்ட்ரோன் அளவை குறைக்கும் சக்தி சோம்புக்கு உண்டு என்கின்றனர் நிபுணர்கள்.

கான்ஃப்ளேக்ஸ்

தினசரி கான்ஃப்ளேக்ஸ் சாப்பிட்டால் அது நேரடி பாதிப்பை ஏற்படுத்துமாம். இது ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் சுரப்பினை குறைத்து விடும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். கான்ஃப்ளேக்ஸ் உணவை அறிமுகப்படுத்திய கெல்லாக் இது ஆண்களின் பாலுணர்வு சக்தியை குறைக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் இது சிறந்த டயட் உணவு என்றும் அதீத பாலியல் உணர்வை கட்டுப்படுத்தக்கூடிய உணவு என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜங்க் ஃபுட்
பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட ஜங்க் ஃபுட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் இளைஞர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
ஆல்கஹால்

ஆல்கஹால் குடிப்பதால் போதைதான் அதிகமாகுமே தவிர பாலுணர்வு சக்தி குறைந்து விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ஆல்கஹால் குடிப்பதன் மூலம் ஏற்படும் பின்விளைவினால் அதிக தலைவலி, தலைசுத்தல், எரிச்சல் போன்றவைகளினால் காதல் உணர்வுகள் ஏற்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

கொத்தமல்லி, புதினா இலைகள் அதிகம் சேர்த்துக்கொள்வதால் டெஸ்ட்டோஸ்ட்ரன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதாம். ஆனால் குறைந்த அளவு இவைகளை சேர்த்துக்கொள்வதால் எந்த தவறும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை ரிப்போர்ட்!

No Fertile Men 50 Years As Sperm Counts Slide Aid0174இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் சில காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
குறைபாட்டிற்கு காரணம்

விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.

விந்தணு வீழ்ச்சி

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90 களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கைக்கு எதிரான நிலை

தாமதமான திருமணங்களும் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதும் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள் என்கிறார் மருத்துவர் மல்பானி. ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் விந்தணுக்கள் குறைகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் அவர், விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதே.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

தூக்கக்குறையாடு ஆண்மையை பாதிக்கும்

ஐந்து மணிநேரத்திற்கு குறைவாக உறங்கும் ஆண்களுக்கு ஆண்மையை தூண்டும் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு வாரம் தூக்கம் கெட்டாலே இந்த பாதிப்பை உணரலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்களின் பாலுணர்வை ஊக்குவிப்பதில் 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' என்னும் ஹார்மோனிற்கு முக்கிய பங்கு உண்டு. இந்த ஹார்மோன் குறிப்பிட்ட அளவு சுரந்தால் மட்டுமே ஆண்களுக்கு உற்சாகம், ஏற்படும். பாலுணர்வில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும். ஆனால் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் இளைஞர்களுக்கு அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் சுரப்பு குறைந்துவிடும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சிகாகோ பல்கலைக் கழகம் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த சராசரியாக 24 வயது கொண்ட 10 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், ஒல்லியான தேகத்துடனும், பலவித உடல் பரிசோதனைகளும், உளவியல் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். அதன் பிறகு இவர்கள் மூன்று நாட்களுக்கு இரவில் 10 மணி நேரம் வரை தூங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் எட்டு நாட்களுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்க அனுமதிக்கப்பட்டனர்.

ஆய்வின் ஒவ்வொரு நாளின்போதும், 24 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு 15 முதல் 30 நிமிடங்களுக்கும் அவர்களது ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தபட்டது. இதில் குறைவாக தூங்கியதற்கு பின்னர் இவர்களது 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' அளவு குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த டெஸ்டோஸ்டெரோன் சுரக்கும் அளவுக்கும், ஆண்களின் சக்தி குறைவு, விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற்றும் சோர்வடைதல் ஆகியவற்றுக்குமிடையே தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் உடல் பலம், தசைகள் மற்றும் எலும்பு வலுவடைதல் ஆகியவற்றிலும் இந்த 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ஈவ் வான் என்ற மருத்துவ துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
மேலும், உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு குறைவதற்கும், டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைதலுக்கும் தொடர்பு உள்ளது. இதேபோல் தூக்கமின்மை நிச்சயம் பாலியல் உணர்வை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு முடிவு இரவில் அதிகநேரம் கண்விழித்து இருக்கும் நமது இளைய தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

அதிகமா ஜங்க் புட் சாப்பிடுவது ஆண்மைக்கு ஆபத்து

பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட ஜங்க் புட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் இளைஞர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்லும் இளைய தலைமுறையினர், வீட்டில் இருந்து உணவை எடுத்துச்செல்வது வழக்கம். ஆனால் இன்றைக்கு பாஸ்ட் புட், ஜங்க் புட் உணவுக்கடைகள் காளன் போல முளைத்துவிட்டன. அங்கு சென்று பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதே இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. இதனால் நிறைய இளைஞர்களுக்கு ஆண்மைக்குறைவும், மலட்டுத்தன்மையும் ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுகிறது.

குறையும் உயிரணுக்கள்

இதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழகம், ஸ்பெயினின் முர்சியா பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவில் ஊட்டச்சத்து உணவை சாப்பிட்டு வந்த 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைவிட ஜங்க் புட் எனப்படும் நொறுக்கு தீனி, சாட் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நொறுக்கு தீனி, சாட் வகைகளை தொடாத இளைஞர்களைவிட அவற்றை சாப்பிடும் இளைஞர்களில் உயிரணுக்கள் சரியாக இருந்தவர்களுக்கும் இத்தகைய பிரச்னை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான உடல் எடை, உடற்பயிற்சி பழக்கத்துடன் இருந்தவர்களிடமும் இது ஏற்பட்டது தெரிந்தது.
இதே விசயத்தில் ஜப்பானில் 215 இளைஞர்களிடம் நடந்த சோதனைகளில் இது நிரூபணமானது.

டிரான்ஸ் பேட் கொழுப்பு

தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால் இந்த நொறுக்கு தீனி, சாட் வகைகளில் அவை கூடுதலாக இருப்பது இளைஞர்களிடம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Saturday, July 7, 2012

தெய்வீகத் துகளை(God particle)’ கண்டுபிடித்துவிட்டதாக ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!

Higgs-Bosonஜெனீவா: விஞ்ஞான உலகம் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பிரபஞ்சரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் ‘தெய்வீக அணுத்துகளை (Godparticle)’ கண்டுபிடித்துள்ளதாக ஸேர்ன் (CERN – The EuropeanOrganisation for Nuclear Research) ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

அணு இயற்பியலின் புதிய ஆய்வு முடிவுகளை குறித்து விவாதிக்கும் சர்வதேச மாநாட்டிற்கு ICHEP (International conference for high energy Physics) முன்னோடியாக நடந்த சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டுபிடித்தவற்றைக் குறித்து அறிவித்தனர்.

தாங்கள் தேடிக்கொண்டிருந்த ‘ஹிக்ஸ் போஸான்’ துகள்தாம் கண்டுபிடித்தது என்பது விஞ்ஞானிகளின் ஆரம்பக்கட்ட முடிவாகும்.

Big Bang எனப்படும் பெருவெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் உருவானது என்கிறது இக்கோட்பாடு.

பெருவெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும்(mass) இல்லை.

ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்புகொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.

இந்த கோட்பாட்டின்படி இந்த பிரபஞ்சம் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத்துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன.

ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத துகள்தாம் ஹிக்ஸ் போஸான். இதனை கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டால் அனைத்து கோட்பாடுகளும் தகர்ந்துவிடும்.

இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின.

பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்த மாபெரும் வட்டச் சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.

அணுத்துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத்துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.

ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத்துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே.

பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத்தான் CERN நடத்தியது.

இதற்காகத்தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணு துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.

ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ்(GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.

CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

நோபல் பரிசுப் பெற்ற விஞ்ஞானியான லியோன் மார்க்ஸ் லெடர்மன்(leon marx lederman) ஹிக்ஸ் போஸானுக்கு ‘தெய்வீகத் துகள்(god particle)’ என பெயரிட்டார்.

அறிவியல் உலகில் புரியாத புதிராக திகழ்ந்ததால் அவர் இப்பெயரை சூட்டினார். தனது புத்தகத்தில் லெடர்மன் ஹிக்ஸ் போஸானை ‘தெய்வீகத் துகள்’ என அழைக்கிறார். அணு இயற்பியல் விஞ்ஞானத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாக ஹிக்ஸ் போஸானின் கண்டுபிடிப்பு கருதப்படுகிறது.

பிரபஞ்சத்தைக் குறித்த ஸ்டாண்டர்ட் மாடல் கோட்பாட்டின் பல வெற்றிடங்களை நிரப்ப ஹிக்ஸ் போஸானைக் குறித்த இனி வரும் நாட்களில் நடத்தப்படும் ஆய்வுகள் உதவும் என கருதப்படுகிறது

- Thoothu online/http://www.thenee.com/html/050712-4.html

Sunday, July 1, 2012

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-01)

எழுதியவர்: மௌலவி அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி

மரணத்தின் பின்னால் மனிதர்களாகிய நாம் இரு இல்லங்களை சந்திக்கவிருக்கின்றோம். ஒன்று சுவனம், மற்றது நரகம். நரகத்தை பாவங்கள் செய்து மிக எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம் ஆனால், சுவனம் இலகுவாகப் பெற முடியாத சொத்து. அதற்காகப் பல தியாகங்கள் செய்தாக வேண்டும். சிரமங்கள் பல மேற்கொள்ள வேண்டும்.

“உங்களில் போராளிகள், சகிப்புத்தன்மை உடையோர் யார் என்பதை அறியாது சுவனத்தில் (எளிதாக) பிரவேசிக்கலாம் என நினைக்கின்றீர்களா? (ஆலுஇம்ரான். 142) என்ற இறை மறை வசனம் சுவனத்தின் பாதைக்கு வழியமைத்துக் கொடுத்த ஆரம்பகால மக்களின் தியாகத்தை வேண்டி நிற்கின்றது. மாத்திரமின்றி அதனை இலகுவாக அடையவும் முடியாது எனவும் அறிவிக்கின்றது.

சுவனத்திற்காக ஆசை வைப்போம்
சுவனத்தை ஒரு முஃமின் ஆசை வைப்பதுடன், அதை அல்லாஹ்விடமும் வேண்டி நிற்கவேண்டும். நபிமார்கள், போராளிகள், நல்லடியார்கள் வசிக்கும் அந்த சுவனத்தில் கால் பதிக்க வேண்டுமே என்ற எண்ணம் ஒரு முஃமினிடம் காணப்படல் வேண்டும்.
இன்பம் நிறைந்த சுவனத்தின் வாரிசுக்காரர்களில் ஒருவராகவும் என்னை ஆக்கிடுவாயாக! (அஷ்ஷுஃரா. வசனம்: 85) என தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
என் இரட்சகனே! சுவனத்தில் எனக்கென்று ஒரு மாளிகை அமைத்திடு, ஃபிர்அவ்ன், அவனது (கொடுமையான) நடவடிக்கையில் இருந்து என்னைக் காத்திடு என்று அன்னை ஆசியா (ரழி) அவர்கள் பிரார்த்தனை செய்து பெற்றுக் கொண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! நான் இந்தப்போரில் கொல்லப்பட்டால் நீங்கள் வாக்களிக்கின்ற சுவனம்! வானங்கள், பூமியை விட விசாலமானதா ? என உமைர் பின் ஹுமாம் (ரழி) அவர்கள் பத்ர் போரில் கேட்டு தனது கையில் இருந்த பேரீத்தம் கனிகளை வீசி எறிந்து விட்டு களத்தில் குதித்து ஷஹீதாகிய செய்திகளையும் அவை போன்ற நூற்றுக்கணக்கான செய்திகளையும் கவனித்தால் நமது எட்டுக்களும் சுவனத்தில் என்றாவது ஒரு நாள் வைக்கப்பட வேண்டுமே என்ற பேரார்வம் நம்மில் மேலிடுகின்றது.

சுவனம் நமக்காகவே படைக்கப்பட்டுள்ளது
சுவனம் முஃமின்களின் இறுதியான தங்குமிடமாகும். அது இறை விசுவாசிகளான நமக்காகத்தான் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் நுழைய நமக்கு உரிமை உண்டு. ஆனால் அதன் தகுதிகளுடன், அதற்குத் தகுதி பெற்ற மக்களாக நாம் மாற முயற்சி செய்ய வேண்டும். எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்லறங்களும் புரிந்தார்களோ அவர்களுக்கு பிர்தௌஸ் எனும் சுவனச் சோலைகள் விருந்தாக (பேருபகாரமாக) உண்டு. அவர்கள் அதைவிட்டும் நகர்த்தப்படமாட்டார்கள். அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். (அல்கஹ்ப்: வசனம்: 107,108).

மனம் விரும்பும் இன்பங்கள் நிறைந்த அந்தச் சுவனம் அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ளது என்பதை அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நமக்கு நூற்றுக்கணக்கான இடங்களில் உணர்த்தியுள்ளார்கள்.

“நான் சுவனத்தில் நுழைந்தபோது ஒரு அழகான மாளிகையைக் கண்டேன்”. (புகாரி),

“சுவனத்துக் கனிகள் என் முன் காட்டப்பட்டது அதைப் பறிப்பதற்காகவே (தொழுகையில் இருந்தவாறு) முன்னோக்கிச் சென்றேன். (புகாரி, முஸ்லிம்).

“பிலாலே! உமது பாதணிகளின் ஓசைகளை சுவனத்தில் செவியுற்றேன். நீர் இஸ்லாத்தில் இணைந்த பின்னால் என்ன விரும்பத்தக்க அமல்கள் செய்தாய் என்று எனக்கு அறிவிப்பீராக! (புகாரி, முஸ்லிம்).

“நீங்கள் காணாத பலதை நான் காண்கின்றேன் “நான் கண்டதை நீங்கள் கண்டால் அதிகமதிகம் அழுவீர்கள், சிறியளவே சிரிப்பீர்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எதைக் கண்டீர்கள் என ஸஹாபாக்கள் கேட்க, “நான் சுவனத்தையும், நரகத்தையும் கண்டேன்” எனக் கூறினார்கள் (புகாரி).

இவ்வாறு நூற்றுக்கணக்கான சான்றுகள் சுவர்க்கம் படைக்கப்பட்டிருப்பதை அறிவித்துக் கொண்டிருக்கின்றபோது அது மறுமையில்தான் படைக்கப்படும் என்று வாதிடுவது அறிவுடைமையாகாது. அவ்வாறு வாதிடுபவர்களின் வாதம் சரி என்பது வடிட்டிய தக்லீத் (கண்மூடித்தனமாகும்).

சுவனம் இப்போது படைக்கப்படுவது வீண் இல்லையா? என்று ஆரம்ப காலத்தில் முஃதஸிலாக்கள் கேட்டார்கள். அவர்களின் நாவில் சிலர் இப்போது பேசுகின்றார்கள். இத்தகையோரின் கருத்தைக் கேட்ட பலர் அவர்களது நாவில் சிலர் இப்போது சவாரி செய்கிறார்கள்.

“நிச்சயமாக எனது இரட்சனை நான் நம்பி விட்டேன். எனவே நீங்கள் எனக்கு செவிசாயுங்கள் என்றார். (அவரிடம்) நீ சுவனத்தில் நுழைந்துவிடு என்று கூறப்பட்டது. என் இரட்சகன் என்னை மன்னித்து, சங்கைமிக்கவர்களில் ஒருவனாக என்னை ஆக்கியது பற்றி எனது சமுதாயம் அறிய வேண்டுமே என்றார் (யாஸீன், வசனம்: 25-27)

நல்லவர்களான நிலையில் எவரது உயிர்களை வானவர்கள் கைப்பற்றுகின்றார்களோ அவர்களிடம் உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் செய்தவற்றிக்காக சுவனத்தில் நுழையுங்கள் (என்று கூறுவார்கள்). (அந்நஹ்ல், வசனம்: 40-41).
சுவனம் இனித்தான் படைக்கப்படும் என்றால் அதில் நுழையுமாறு எவ்வாறு கூற முடியும்! அல்லாஹ்வின் வானவர்கள் இல்லாத ஒன்றில் நுழையுமாறு கூறுவார்களா? இந்த சாதாரண அறிவுகூட இல்லாமல் சிலர் புலம்புவதை சிலர் வேதமாக்கிக் கொள்கின்றனர்.

சுவனத்தின் அமைவிடம்
சுவனம் வானலோக்கத்தில் இருப்பதை உறுதி செய்கின்ற பல சான்றுகள் அல்குர்ஆனிலும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் காணக் கிடைக்கின்றன.
وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى (13) عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى (14) عِنْدَهَا جَنَّةُ الْمَأْوَى
[النجم : 13]
(முஹம்மதாகிய) அவர், அவரை (ஜிப்ரீலை மிஃராஜின்போது) ஸித்ரத்துல் முன்தஹாவில் நிச்சயமாகக் கண்டார். அந்த இடத்தில்தான் ஜன்னத்துல் மஃவா இருக்கின்றது. (அந்நஜ்ம். 13-15).

அபூஸலமா என்ற நபித்தோழர் மரணித்த போது (إن الروح إذا قبض تبعه البصر (مسلم) உயிர் (ரூஹ்) கைப்பற்றப்பட்டால் பார்வை அதனை மேல் நோக்கும் என்று கூறினார்கள் . (முஸ்லிம்). உயிர்கள் கைப்பற்றப்பட்டதும் அல்லாஹ்வின் ஆசிர்வாதத்தை, அல்லது சாபத்தைப் பெற வானலோகத்தை நோக்கி உயிர்கள் உயர்த்தப்படுகின்றது.
மற்றொரு சந்தர்ப்பத்தில், இறை நிராகரிப்பாளனின் உயிர் பற்றிக் குறிப்பிட்டபோது, ஒட்டகம் ஊசியின் துவாரத்தில் நுழையும்வரை அவர்கள் சுவனத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என்ற அல்குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

அங்கு சுவனம் என்று குறிப்பிடுவது ஆதம் நபி (அலை) அவர்கள் குடியிருந்த, வானத்தில் உள்ள அந்த சுவனத்தைத்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சுவனம் பல படித்தரங்களைக் கொண்டதாகும்
மனிதர்களில் அதிகம் அமல் செய்பவர்கள் இருக்கின்றார்கள். குறைவாக அமல் செய்பவர்களும் இருக்கின்றார்கள். அதைக் கவனத்தில் கொண்டே அல்லாஹ்வின் சுவனமும் பல படித்தரங்களைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ آمَنَ بِاللَّهِ وَرَسُولِهِ وَأَقَامَ الصَّلَاةَ وَصَامَ رَمَضَانَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ هَاجَرَ فِي سَبِيلِ اللَّهِ أَوْ جَلَسَ فِي أَرْضِهِ الَّتِي وُلِدَ فِيهَا قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَلَا نُنَبِّئُ النَّاسَ بِذَلِكَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِهِ كُلُّ دَرَجَتَيْنِ مَا بَيْنَهُمَا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الْفِرْدَوْسَ فَإِنَّهُ أَوْسَطُ الْجَنَّةِ وَأَعْلَى الْجَنَّةِ وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ
(متفق عليه)

யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் யார் நம்பி, தொழுகையையும் நிலைநாட்டி, ரமளான் (மாத) நோன்பையும் நோற்கின்றாரோ அவரை சுவனத்தில் நுழைவிப்பது அல்லாஹ்வின் மீதுள்ள கடமையாகும். அவர் ஹிஜ்ரத் செய்தாலோ, அல்லது அவர் பிறந்த ஊரில் வாழ்ந்தாலோ (மரணித்தாலோ) எதுவானாலும் சரியே! என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! இதை மக்களுக்கு நாம் அறிவிக்கட்டுமா? எனக் கேட்டனர். நிச்சயமாக சுவனத்தில் நூறு படித்தரங்கள் (வகுப்புக்கள்) உள்ளன. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்களுக்காக அதனை அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ளான். அவற்றில் இரு படித்தரங்களுக்கும் இடையில் உள்ள அளவு வானம், பூமி ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட அளவாகும். நீங்கள் அல்லாஹ்விடம் வேண்டுகின்றபோது “அல்பிர்தௌஸ்” என்ற சுவனத்தை வேண்டுங்கள். அது சுவனத்தில் மத்தியும், சுவனத்தில் உயர்வானதுமாகும். அதன் மேல் அர்ரஹ்மானின் அர்ஷ் இருக்கின்றது. அதிலிருந்து சுவனத்தின் நதிகள் பெருக்கெடுக்கின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் ஏழு வானங்களையும் கடந்து சென்றபோது கண்ட அற்புத நிகழ்வை எடுத்துக் கூறும் குர்ஆனின் வசனமும், பிர்தௌஸ் என்ற சுவனம் அல்லாஹ்வின் அமைவிடமான அர்ஷின் முகட்டில் முட்டிக் கொண்டிருப்பது போன்ற செய்தியும் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் வானத்தில்தான் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அப்படி அறிந்த பின்னர் சுவர்க்கம் வானத்தில் இல்லை என சிலர் உளருவதை நம்புவது அறிவுடமையாகுமா ?

சுவனத்தின் நில அமைப்பு
(அரையும், குறையுமாக ஷைத்தானின் துணையுடன் செய்திகளை அறிவிக்கின்ற) இப்னு ஷைய்யாத் என்பவன் சுவர்க்கத்து மண்ணின் நிறம் பற்றியும், அதன் தன்மை பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் வினவியபோது ” தூய்மையான, வெண்ணிற கஸ்தூரி” போன்றது என அவனுக்கு பதில் கூறினார்கள் (முஸ்லிம், திர்மிதி, முஸ்னத் அஹ்மத்).
இதன் மூலம் சுவனத்தின் மண்ணின் நிறம் தூய்மையான வெண்ணிற மண் என அறியலாம்.

புகாரியில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில்: மிஃராஜின் போது “சுவனத்தில் நான் பிரவேசித்தேன் அங்கு மணல் குவியலைப்போன்ற முத்துக்கள் இருந்தன, அதன் மண் கஸ்தூரியினால் இருந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). அப்படியானால் அதன் நில அமைப்பு வெண்ணிறமான கஸ்தூரியை ஒத்ததாக இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.

சுவனத்தின் காவலர்கள்
நரகத்தின் பிரதான காவலர் “மாலிக்” அவர்கள் என்றும், அத்துடன் பத்தொன்பது பேர்கள் காணப்படுவார்கள் என்றும் குர்ஆனிலும், ஹதீஸிலும் வந்ததை வைத்து விளங்க முடிகின்றது. சுவனத்தின் காவலர், காவலர்கள் பற்றி குர்ஆனும், ஹதீஸும் குறிப்பிடுவதைப் பார்க்கின்றபோது அவர்களின் எண்ணிக்கை பற்றி அல்லாஹ்வே அறிவான்.
சுவனத்தின் காவலரது பெயர் “ரிழ்வான்” என்பதைத் நாம் தேடிப் பார்த்தவரை ஆதாரபூர்வமான செய்திகளில் காணமுடியவில்லை. சுவனம் பற்றி வர்ணிக்கப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட, அல்லது பலவீனமான செய்திகளில் ரிழ்வானே! என்று அழைத்து வரும் செய்திகளைக் காணமுடிகின்றது.

“பழாயிலுல் அவ்காத்”; “கன்ஸுல் உம்மால்” “அல்இலலுல் முதனாஹியா” ” தன்ஸீஹுஷ் ஷரீஅத்தில் மர்பூஆ| போன்ற நூல்களில் “ரிழ்வான்” என்ற பெயருடன் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களில், பலவீனமான செய்திகளில் ஒன்றாக இடம் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. அப்படி இருப்பதாக ஸஹீஹான ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுபவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம் இன்ஷா அல்லாஹ்.

அப்படியானால் மாலிக் என்ற பெயர் போன்று சுவனக் காவலாளியின் பெயர் என்னதான் என்று நீங்கள் கேட்கலாம். خازن الجنة ஃ خزنة الجنة சுவனத்தின் காவலாளி- காவலாளிகள் என்று ஆதாரபூர்வமான செய்திகளில் காணமுடிகின்றது. ( الله أعلم)
தமது இரட்சகனை அஞ்சி வாழ்ந்தோர் சுவனத்தின் பக்கம் கூட்டம், கூட்டமாகக் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் அங்கு வந்ததும் அதன் காவலர்கள் “உங்கள் மீது (ஸலாம்) சாந்தி உண்டாகட்டும். நல்லவர்களாக வாழ்ந்தீர்கள். எனவே அதில் நுழைந்து நிரந்தமாக தங்குங்கள். என்று வரும் வசனத்தில் அதன் காவலர்கள் என இடம் பெற்றுள்ளதைப் பார்க்கின்றோம். (அஸ்ஸுமர்.73).

மறுமை நாளில் சுவனத்தின் வாயிலுக்கு நான் வந்து, (அதை) திறக்குமாறு வேண்டுவேன். அதன் காவலர் நீ யார் எனக் கேட்பார், நான் முஹம்மத் என்று கூறுவேன். உடனே அவர் உம்மைக் கொண்டே பணிக்கப்பட்டுள்ளேன். உமக்கு முன்னர் யாருக்கும் திறந்து விடமாட்டேன் என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்). இங்கும் ( خازنஹாஸின்) காவலர் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

சுவனத்தின் பிரதான நுழைவாயிலின் விசாலம்
உலகில் எந்த ஒரு இல்லத்திற்கும் பிரதான நுழைவாயிலும், அந்த இல்லத்திற்குரிய பிற வாயில்கள் என்றும் இரு அமைப்பிலான வாயில்கள் இல்லாமல் இருப்பதில்லை. சுவனத்தின் பிரதான நுழைவாயில் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

நான் எனது உம்மத்திற்காக சிபாரிசு வேண்டுகின்றபோது முஹம்மதே உமது தலையை உயர்த்தி கேள்விக் கணக்கில்லாதவர்களை சுவனத்தின் வலது பக்க வாயில்களால் அனுப்புங்கள் என்று கூறப்படும். எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நிச்சயமாக சுவனத்தின் இரு பிரதான வாயில்களுக்கும் இடைப்பட்ட தூர அளவு மக்காவுக்கும் ஹிம்யருக்கும் (யமனில் ஒரு நகரம்) இடைப்பட்ட அல்லது மக்காவுக்கும், புஸராவுக்கும் (டமஷ்கஸில் உள்ள ஒரு நகரம்) இடைப்பட்ட தூர அளவாகும். (புகாரி, முஸ்லிம்).

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் ஹதீஸ்களில் நாற்பது ஆண்டுகள் நடை தூர அளவு என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் எவ்வளவு விசாலமானது என்பதை அறிந்து கொள்ள முடியும். அதன் வழியாக மக்கள் நெருக்கிக் கொண்டு போகும் ஒரு நேரமும் வரும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..

Sunday, June 17, 2012

நீங்கள் இறந்த பின் உங்கள் டிஜிடல் சொத்துக்கள்…

இறந்தவர்களின் ஒன்லைன் கணக்குகளை பாதுகாக்கும் புதிய முறை…
290832_300ஒருவர் இறந்ததன் பின்னர் குறித்த நபருக்கு உரிய சொத்துக்கள் நெருங்கிய உறவினர்களுக்கு சொந்தமாகி விடுகின்றன. முன்பு போன்றல்லது இன்று நிலையான சொத்துக்களுடன் டிஜிடல் சொத்துக்களும் காணப்படுகின்றன. ஃபேஸ்புக் கணக்கு, டிவிட்டர் கணக்கு, ஃப்லிகர் போடோ ஷேரிங் கணக்கு தமது இனையத் தளம் என ஏராலமான டிஜிடல் சொத்துக்களை அடுக்கிக்கிச் செல்லலாம்.

ஒரு நபரின் மரணத்தின் பின்னர் இவற்றின் நிலை என்ன? அவற்றை அவ்வாரே விட்டு விடுவதா? அல்லது தொடர்ந்து கொண்டு நடாத்துவதா..?

இது பற்றி சிந்தித்த பிரித்தானியாவின் கேம்பிரிஜ் நகரைச் சேர்ந்த மைக்ரோசொப்ட் இன் ஆய்வு அலுவலரான “ரிச்சட் பேன்க்ஸ்” புதிய ஒரு கருத்தை கூறினார். இறந்த ஒரு நபரின் நினைவுகள் மற்றும் பெருமதி வாய்ந்த செயற்பாடுகள் பின்னால் வரக்கூடிய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பாதுகாக்கும் வழிமுறைகளின் சாத்தியங்களை கண்டறிய அவர் டிஜிட்டல் மெமரீஸ் (Digital Memories) எனும் பெயரில் செயற் திட்டம் (Project) ஒன்றை நிறுவியுள்ளர்.

இந்த செயல் திட்டம் பல கட்டங்களை கொண்ட ஒன்றாகும். இதில் ஒரு முறை யாதெனில் “டிஜிடல் மெமரி பொக்ஸ்” எனும் ஒரு விசேட டெப்லட் கணினி ஒன்றை உருவாக்கி அதில் தேவையான ஒன்லைன் கணக்கை முழுமையாக பிரதி எடுக்க முடுயுமாக அமைப்பதோடு, பின்னர் அதன் மூலம் கணக்குகளின் தகவல்களை பார்க்கவும் முடிகிறது.
Banksஎவ்வாறாயினும் தனது மரணத்தின் பின்னர் டிஜிடல் நினைவுகளை பகிர்வதாயின், தனது பாஸ்வேர்ட் களை உறவினர்களுக்கு வழங்க வேண்டும். என்றாலும் இவ்வாரல்லத சந்தர்ப்பங்களில் மேற்கொள முடியுமான சில நடவடிக்கைகளையும் இந்த Digital Memories திட்டம் முன்வைக்கிறது.

அவர்கள் கூறுவதாவது ஒவ்வொறு ஒன்லைன் கணக்கு திறக்கப்படும் போதும் ஒரு உயில் முன்வைக்கப்படல் வேண்டும் என்பதாகும். இதன் மூலம் தனக்கு விருப்பமான நபருக்கு தனது கணக்கின் தகவல்களை வழங்க வழி செய்ய முடியும் என்பது இவர்கள் கூறும் வழிமுறையாகும். குறித்த நபர் இறந்த பின்னர் உறவினர்கள் மூலம் குறித்த நிறுவனங்களுக்கு அறிவித்து, பின்னர் கணக்குகளின் தகவல்களை உரவினர்கள் பயன்படுத்த முடிவதாகும். இதன் மூலம் இறந்த நபரின் நினைவுகளை மீட்ட வாய்ப்பு ஏற்படுகிறது.

இவ்வாறு பெறப்படும் தரவுகளை Digital Box களில் சேமிப்பதோடு ஒன்லைன் சேவையொன்றின் மூலமும் பன்படுத்த முடியும். இறந்த நபர்களின் நினைவுகளின் வைப்பிடமாக இந்த இனைய சேவையை நிறுவ இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதில் நுழைந்து தமது இறந்த இறவின் பெயரை கொடுத்து சேர்ச் செய்வதன் மூலம், அவர் உயிருடன் இருக்கும் போது சேகரித்த டிஜிடல் நினைவுகளை மீட்டமுடிகிறது.

Thursday, May 31, 2012

டீன் ஏஜ்!!

டீன் ஏஜ் என்று சொல்லப்படும் பருவத்தில் நுழையும் குழந்தைகளிடம், பெற்றோர் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. என் குழந்தைகளிடம் நான் மிகச் சிறிய வயதிலேயே என்னை அவர்கள் ஃப்ரெண்டாக நினைத்துக் கொள்ளச் சொன்னேன். பலனையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்! – சமயத்தில் என்னைப் பேரைச் சொல்லிக் கூப்பிடுவார்கள் – கேட்டால், நீ என் ஃப்ரெண்ட் தானே என்று பதிலும் வரும்!!

நான் இங்கு சொல்ல வந்தது என் குடும்பக் கதையை அல்ல! எனக்குத் தெரிந்த குடும்பத்துப் பெண்ணின் கதை! அந்தப் பெண் மேல்நிலைப் படிப்பு முடிக்கும் வரை உள்ளூரிலேயே படித்தாள். கல்லூரி செல்வதற்கு பேருந்தில் 30 நிமிடம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கல்லூரியில் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறாள் என்றே எண்ணிக் கொண்டிருந்தனர் அனைவரும். 3 வருடங்களில் பட்டப்படிப்பு முடிந்த சமயம், பட்டம் வாங்குவதற்கு கான்வகேஷனுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்ற விளம்பரத்தைக் கண்டு, அவள் ஏன் இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்று அவள் உறவினர் கேட்ட போது தான், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையானது.

முதலில் தான் விண்ணப்பம் செய்ததாகச் சொன்னாள். பின் மாற்றிப் பேசினாள். அவளது பரீட்சை நுழைவு எண்ணை வாங்கி, பல்கலைக்கழக வலைத்தளத்தில் பார்த்த போது, அவள் பரீட்சையே எழுதியிருக்கவில்லை! மேலும் இரண்டாம் வருடத்தில் ஒரு பேப்பர் அரியர்ஸ்! காரணம் என்னவென்று யூகித்து விட்டீர்களா? கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் கிடைத்த கூடா நட்பும், அதன் மூலம் அறிமுகமான இண்டர்நெட் சாட்டிங்கும் தான்! இதில் சாட்டிங்கில் கிடைத்த ஒரு பையனுடன் காதலாம்! கல்லூரிக்குப் போகாமல் இந்த இரண்டு வேலைகளையும் ‘ஒழுங்காக’ச் செய்ததில், மூன்றாம் வருடம் அட்டெண்டன்ஸ் போதாததால் பரிட்சைகள் எழுத இயலவில்லை! பெற்றோர் பார்க்கக் கூடாதென்று இரண்டாம் வருட மதிப்பெண் பட்டியலில் இருந்து எல்லாவற்றையும் கிழித்துப் போட்டிருக்கிறாள்! அவர்கள் இருந்த அபார்ட்மெண்டில் மாலை தபால்கள் வீட்டுக்கு எடுத்து வருவது அவள் வேலை; அதனால், கல்லூரியிலிருந்து வந்த கடிதங்கள் அத்தனையையும் அவளே அழித்தும் விட்டாள்! பெற்றோருக்கே தெரியாமல் இன்னொரு கைப்பேசி வைத்திருந்தாள் – அந்தக் காதலனின் பரிசு! அவளது மின்னஞ்சல் முகவரி, மற்ற விவரங்கள் வாங்கி எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டனர் பெற்றோர். மின்னஞ்சலின் பாஸ்வேர்ட் அந்தக் காதலனுக்கும் தெரியுமாம்!! தகவலை எப்படியெல்லாம் பகிர்ந்து கொள்கின்றனர்! டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்!
பெற்றோருடைய நிலைமையை நினைத்துப் பாருங்கள். ஒருவழியாக காதலுக்கும் இன்ஃபாச்சுவேஷனுக்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிய வைத்து, வாழ்க்கையை விளையாட்டாக எண்ணக் கூடாதென்ற பாடத்தையும் அவளுக்குத் தெரிய வைத்தனர். பின்னர் அந்தப் பெண் திருந்தி, ஒழுங்காகத் தன் படிப்பை முடித்தாள்! என்ன கேட்கிறீர்கள் – காதலன் என்ன ஆனான் என்றா? மின்னஞ்சலில் பாஸ்வேர்ட் மாறியவுடன் அவன் அலர்ட் ஆகிவிட்டான்! இவள் பெற்றோருக்குத் தெரிந்து விட்டது எனத் தெரிந்ததும் அவன் ஜூட்! செல்ஃபோனை அவனிடமே திருப்பித் தந்தாகி விட்டது! அந்தக் கால திரைப்பட பாணியில் சொல்ல வேண்டுமானால், முள்ளில் விழ இருந்த சேலையை சேதாரமில்லாமல் காப்பாற்றியாகி விட்டது!
இங்கே பெண் வலையில் வீழ்ந்தாள் – ஆனால், பெண்களும் இப்போது ஆண் பிள்ளைகளை ஏமாற்றுகிறார்கள். குழந்தை ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, தம் குழந்தைகளைச் சரியான வாழ்க்கைப் பாதையில் செலுத்துவது பெற்றோரின் கடனே. மாறி வரும் காலத்தோடு மாற வேண்டியது பெற்றோரும் தான். அவர்கள் தம் குழந்தைகளோடு ‘க்வாலிட்டி டைம்’ செலவழிக்க வேண்டும். அவர்கள் அன்றாட வாழ்வில் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள், என்னென்ன விஷயங்களில் சந்தோஷப்பட்டார்கள் (அவை பெரியவர்களுக்கு எவ்வளவு சின்னதாகத் தெரிந்தாலும் சரி) என்று தினம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்! குட் டச், பேட் டச் சொல்லித் தருவதோடு மட்டுமன்றி, காதலுக்கும் இன்ஃபாச்சுவேஷனுக்கும் வித்தியாசத்தையும் சொல்ல வேண்டும்!

இந்த விடலைப் பருவம் தான், ‘என் அப்பா/அம்மா மாதிரி உண்டா?’ என்று குழந்தைகள் அதிசயித்து பார்த்ததிலிருந்து, ‘என் அப்பா/அம்மாவிற்கு ஒன்றும் தெரியாது’ என்று நினைக்க ஆரம்பிக்கும் பருவம்! எதை எடுத்தாலும் எதிர்த்துப் பேச ஆரம்பிக்கும் பருவம்! இந்தப் பருவத்தை பெற்றோரும் தாண்டி வந்ததினால், விவேகத்துடன், விடலைக் குழந்தைகளை அரவணைத்துச் செல்ல வேண்டும்.

கணிணி மூலம் அறிவைப் பெருக்கிக் கொள்ளும் இக்காலத்தில், குழந்தைகளை கணிணியைத் தொடாமல் தவிர்க்கக் கூடாது/ முடியாது; இதற்கு வேண்டாத சில வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சாஃப்ட்வேரைப் பயன்படுத்தலாம். முக்கியமாக, பெற்றோர் தம் குழந்தைகள் பார்க்கக்கூடாத வலைத்தளங்களைத் தாமும் பார்க்காமல் இருக்க வேண்டும்!!

ஃபேஸ்புக் – மூலம் பள்ளி மாணவ மாணவிகள் நண்பர்கள் ஆகும் கலாச்சாரமும் பெருகி வருகிறது. நான் படித்த ஒரு செய்தியில், ஒரு பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள் முகப்புத்தகத்தில் தம் தலைமையாசிரியரைக் குறித்துக் கிண்டல் செய்து செய்திகள் வெளியிட்டதில் இருந்து, அந்தப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியருக்கும் மாரல் ஸயின்ஸ் ஆசிரியருக்கும் இன்னொரு வேலையும் சேர்ந்து விட்டது…. – மாற்றுப் பெயரில் தானும் இவர்களுடன் சேர்ந்து, இந்தக் குழந்தைகள் எழுதுவதைக் கண்காணிக்கும் பணி!! தங்கள் அலுவலக வேலைக்காக கணிணி கற்றுக் கொள்ளும் பெற்றோர், தம் குழந்தைகளின் முகப்புத்தக நண்பரும் ஆகலாமே!

நேரமின்மை என்பது ஒரு மாயை – விரும்பிய வேலைகளுக்கு எப்படியாவது நேரம் ஒதுக்குகிறோம் அல்லவா.. – - குழந்தைகள் வளரும் பருவத்தில் சிறிது நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கி, அவர்களை நேர்வழியில் அவனியில் முந்தியிருப்பச் செய்தால், பெற்றோருக்கு வயதான காலத்தில் அவர்கள் அசை போட அருமையான நினைவுகளும் இருக்கும், அந்தச் சமயம் வளர்ந்து பெரியவர்களான அவர்கள் குழந்தைகளும், ‘என் அப்பா/அம்மா ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங் – அவர்கள் என்னை வளர்த்த மாதிரி தான் நான் உங்களிடம் நடக்க முயற்சி செய்கிறேன்’ என்று தம் மக்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்!!

மிடில் கிளாஸ் மாதவி

ஆறாவது அறிவை வெல்லும் ரோபோக்கள்

     













மனிதன் குரங்கில் இருந்து தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உலவிக் கொண்டிருக்கிறது. ஆனால் மனிதன் விலங்கில் இருந்து மேம்பட்டவன் என்பது மட்டும் உண்மை. பகுத்தறியும் அறிவாகிய ஆறாவது அறிவு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. இதனைக் கொண்டு நல்லது, கெட்டதை ஆராயும் தன்மையை மனிதன் பெற்றிருக்கிறான். அறிவியலின் மகத்துவத்தை உணர்ந்து கொண்ட பின்பு தனது வாழ்க்கையை எளிமையாக்க எத்தனையோ கருவிகளைக் கண்டுபிடித்தான். இப்போது உலகில் உள்ள மற்ற உயிரினங்களை அடக்கி ஆள்வது மட்டுமல்லாமல், வேறு கிரகத்தை ஆக்கிரமிக்கும் பணிக்கும் ராக்கெட்டுகளையும் செயற்கை கோள்களையும் விண்வெளிக்கு அனுப்பி வருகிறான். இதற்கெல்லாம் ஆறாவது அறிவு என்கிற வரப்பிரசாதம் தான் காரணம்.

உயிரனங்களில் மேலான அறிவைப்பெற்றிருக்கும் மனிதன், இயற்கையின், கடவுளின் பிரதிநிதியாக வர்ணிக்கப்படுகிறான். எல்லா வேதங்களிலும் மனிதனை உயர்ந்த ஒப்பற்ற படைப்பு எனவும், அவனுடைய அறிவே இயற்கையின் படைப்புகளையும், உண்மைகளையும் அறியக்கூடியதாய் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. என்றாலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் நிறைந்த இன்றைய மனித நாகரீகம் ஒரு பக்கம் நன்மையைத் தந்து கொண்டிருக்க மறுபக்கம் அச்சுறுத்துகின்றது. காரணம் நாடுகளுக்கிடையே, இனங்களுக்கிடையே போர், தீவிரவாதம், குற்றம், களவு என்று மனித பாதிப்புகளின் எல்லை நீண்டுக் கொண்டே செல்கிறது. இதற்கும் அறிவியல் துணை புரிகிறது என்பதை மறுக்க முடியாது.

இது மட்டுமல்லாமல் இயற்கையும் மனித இனத்தை அவ்வப் போது ஒரு கை பார்த்துவிடுகிறது. பூகம்பம், சூறாவளி, புயல், மழை என்று அவ்வப்போது வந்து மக்களின் வாழ்க்கை சுழற்சியை ஒரு முறை ஆட்டிப் பார்க்கிறது. இயற்கையின் கொதிப்பை அடக்கவும் மனிதன் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி வருகிறான். இதற்காக சில இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை படையெடுப்பை முன் அறிவிக்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதே போல் இயற்கையின் மற்ற ஆபத்துகளை தடுக்கவும் அறிவியல் ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுகள் வெற்றி பெற்றால் மனிதன் இயற்கையை வெல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

ஆனாலும் மேற்கண்டவைகளிலிருந்து (போர், தீவிரவாதம், குற்றம் களவு, இயற்கைப் பேரழிவு) தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழலில் இன்றைய மனிதன் இருக்கின்றான். இதற்கான ஆய்வில் உருவானதுதான் நாம் இப்பொழுது பார்க்கப்போகும் ரோபோக்கள். கண், காது, மூக்கு மற்றும் கை, காலுடன் நடமாட்டம் உள்ள இயந்திர ரோபோக்கள் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணிகளுக்கான ரோபோ:

ராணுவ நடவடிக்கைகளில், இது போன்ற ரோபோக்களின் செயல்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மறைந்திருக்கும் பொருட்களை கண்டிபிடித்தல், வெடிகுண்டுகளை செயலிழக்கச்செய்தல், பதுங்கியிருக்கும் தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகளை ஆராய்தல் என பலதரப்பட்ட ராணுவ மற்றும் புலனாய்வுத்துறைகளில் இவ்வகை ரோபோக்கள் ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகின்றது.














ஆனால், இவ்வகை ரோபோக்கள் முழுவதுமாக தங்களின் பணிகளை செய்கிறதா? என்றால், இல்லை என்றுதான் கூறமுடியும். காரணம், ரோபோக்களின் வடிவமைப்புகள், மற்றும் செயல்பாடுகளில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றே கூறமுடியும்.

உதாரணமாக, ஆப்கனில், தாலிபான் பதுங்கி வசிக்கும், மலைக்குகைப் பகுதிகளில் இவ்வகை ரோபோ அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த ரோபோவின் பாதையில் ஏணிகளை வைத்து அந்த ரோபோவை கீழே விழச்செய்துவிட்டனர் தாலிபான்கள். ஏணிப்படிகளுக்கிடையே உள்ள இடைவெளியில் இந்த ரோபோ கீழே விழ நேரிட்டது.

இந்த அதிநவீன ரோபோக்கள் செல்லும் பொழுது, இடையில் ஏற்படும் தடைகளில், சுவர்களில் முட்டி மோதிக்கொண்டு நின்று விடுகின்றன, மேலும், தரைவழியாக செல்லும் ரோபோக்கள், குப்பைகள், பாலிதீன் பைகள் போன்றவைகளில் சிக்குண்டு நகர முடியாமல் நின்று விடுகின்றன, பள்ளங்களில் விழுந்து விடுகின்றன. பறந்து செல்லக்கூடிய ரோபோக்கள், இடையில் உள்ள மின்கம்பம், விளம்பரப்பலகை போன்றவைகளில் மோதிவிடுகின்றன.

ரோபோக்களின் இதுபோன்ற செயல்கள் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்றே கூறலாம். இதனின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, சுவர்களில். கூரைகளில் செங்குத்தாக ஏறக்கூடிய ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வில் வெற்றியும் கண்டுள்ளனர் விஞ்ஞானிகள்.தேசிய தர மற்றும் தொழில்நுட்ப கழகம், கெய்தஸ்பர்க், மாரிலாண்டில் இந்த சோதனையினை மேற்கொண்டனர். ஆனால் இதில் பங்கேற்ற 16 ரோபோக்களில் 8 ரோபோக்கள் சரியான இலக்கை சென்றடைந்து தகவல்களை அனுப்பவில்லை. இதற்கான காரணம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அனைத்து ரோபோக்களையும் சோதனையில் ஈடுபடுத்தியதால், அதனுடைய ரேடியோ அலைகளில் ஏற்பட்ட இடையுறுகளின் காரணமாக இந்த சோதனை முழுமையாக வெற்றிபெறவில்லை என்று ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த குறையினை சரிசெய்ய இன்னும் முழுமூச்சாக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் தனித்தனியாக ஒவ்வொரு ரோபோக்களின் செயல்பாடுகளை ஆராயும் பணியில் இறங்க தீர்மானித்துள்ளனர்.

ஈராக்கில் அவ்வப்போது குண்டுகள் வெடித்து பலநூறு உயிர்கள் பலியாகின்றன. இதனால் ஈராக்கிற்கு இந்த ரோபோக்கள் அனுப்பப்பட்டது. சந்தேகம் உள்ள பல இடங்களில் ஆய்வு கொண்ட நவீன ரோபோக்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளை கண்டிபிடித்தது. உடனடியாக வெடிகுண்டுகள் அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இவ்வகை ரோபோக்கள் காப்பாற்றியிருக்கின்றன என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.















இவ்வகை ரோபோக்கள், வீட்டுவேலைகளை கவனிக்கும் ரோபோக்கள் போன்றோ, மக்களை வரவேற்கும் ரோபோக்கள் போன்றோ அல்ல. வரக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே அறிவிக்கக்கூடிய திறன் பெற்ற அதிநவீன ரோபோக்கள் ஆகும். இந்த ரோபோக்கள் பல உருவங்களில் உருவாக்கப்படுகின்றது. இடம், சூழல், சுற்றுப்புற அமைப்பு போன்றவைகளுக்கு ஏற்றவாறு இதன் உருவங்கள் வடிவமைக்கப்படுகின்றன. போலீஸ் வேட்டை நாய்கள் எப்படி மோப்பம் பிடித்து குற்றங்களை கண்டிபிடிக்க உதவுகின்றனவோ, அந்த அளவிற்கு ரோபோக்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, என்று ஆராய்ய்சியாளர் ஜேஹேப் கூறுகின்றார்.

சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட காத்ரினா, ரீட்டா போன்ற புயல் சூறாவளி இடிபாடுகளில் சிக்கித்தவித்த மனிதர்களை கண்டுபிடிக்க உதவியதில் மோப்ப நாய்களின் பங்கு மிகச்சிறப்பானது. அதே போன்ற பங்களிப்பினை ரோபோக்களும் செய்ய வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு. அதற்கான காலமும் வெகு தொலைவில் இருக்காது என்பதும் ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை.

பெட்டி ரோபோ

மனிதன் மற்றும் நாய் போன்ற உயிரினங்கள் புக முடியாத இடங்களில் கூட பாம்பு வடிவிலான ரோபோக்கள் அனுப்பப்படுகின்றன. இந்த ரோபோவின் தலையில் கேமரா பொருத்தப்பட்டு அதன் மூலம் புகைப்படங்கள், மற்றும் தகவல்களை பெறப்படுகிறது. இதில் எங்களுக்கு முழுமையான வெற்றி கிடைத்தது என்று சார்லஸ் என்கிற விஞ்ஞானி கூறுகிறார். தற்பொழுது ஈராக்கில், வாகனங்களை நிறுத்தி சோதனைச் செய்யும்பொழுது, வெடிகுண்டுகள் இயக்கப்பட்டு அதன் மூலம் பல உயிர் சேதங்கள் ஏற்படுவதை நாம் அறிவோம். இந்த உயிர்சேதத்தை தடுப்பதற்காக ஈராக் மட்டுமல்லாமல், மற்ற நாடுகளிலும் இது போன்ற சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை சோதனை செய்வதற்கும் பெட்டி வகை ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.



















இவ்வகை ரோபோக்கள் காரினை நிறுத்தி தன்னிடம் உள்ள கண்டுபிடிக்கும் கருவி மூலம், காரின் உள்ளே இருக்கும் பொருள்களை கண்டுபிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை அனுப்புகின்றன. மேலும் நாடுகளுக்கிடையேயான எல்லைகள், ராணுவத்தின் ரகசிய இடங்கள் போன்றவைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆளே இல்லாமல் இந்த ரோபோக்கள் இயக்கப்பட்டு, இதன் மூலம் செய்திகளை உரிய இடத்தில் பெறுகின்றனர். இந்த வகை ரோபோக்களில் உள்ள குறைபாடுகளை களைந்து, இன்னும் உத்வேகமான ரோபோக்களை உருவாக்கும் முயற்சி ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு கணினி புரட்சியாக, தனி நபர் ரோபோவினையும் விஞ்ஞானிகள் உருவாக்கிக்கொண்டுள்ளனர்.

தனி நபர் ரோபோ

இவ்வகை ரோபோக்கள் மனிதர்களுக்கு உடல் ரீதியாக உதவும், உறவாடும் என்று கூறுகின்றார் ஹென்றிக் கிரிஸ்டன் என்கிற ரோபோ ஆராய்ச்சியாளர். இவர் அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா தொழில் நுட்ப கழகத்தைச் சேர்ந்தவராவார். வீட்டைச் சுத்தம் செய்தல், நீச்சல் குளங்களை சுத்தம் செய்தல், காபி தயார் செய்தல் போன்ற செயல்களோடு, குறிப்பிட்ட நேரத்தில் ஒரு அதிகாரியை ஆயத்தப் படுத்துவது, சொல்வதை புரிந்து கொண்டு அதனை கணினியில் பதிவு செய்தல், வயதானவர்களை கைப்பிடித்து அழைத்துச்செல்லுதல், இதோடு மட்டுமில்லாமல், கிமி மூலமாக சில விஷயங்களுக்கு ஆலோசனைகளை கூறுதல் போன்ற செயல்களையும் இந்த தனி நபர் ரோபோ செய்யும்.

திரைப்படங்களில் மனிதர்களைப் போலவே செயல்படக்கூடிய ரோபோக்களைக் காண்பிக்கின்றனர். ஆனால் அவைகள் எல்லாம் எதிர்கால கற்பனைகளேயொழிய, அது போன்ற ரோபோக்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்று கூறும் கிரிஸ்டன், அது போன்ற ரோபோக்களை உருவாக்க எல்லாவிதமான ஆய்வுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறுகிறார். இந்த புதிய வகை ரோபோக்கள், இயந்திரம் போல இல்லாமல், மிகவும் இயல்பாக மனித தன்மைகள் கொண்டதாகவும் புத்தி கூர்மையுடனும் இருக்கவேண்டும் என்று தான் விரும்புவதாகவும், இதற்காக ரோபோ விஞ்ஞானிகள் பாடுபடுவதாகவும் ஜேம்ஸ் காண்டர்ஸன் என்ற தென்வீர் காமா-2 என்ற மென்பொருள் பல்கலைக்கழக அதிகாரி கூறுகிறார். இன்றைய நவீன விஞ்ஞான இயந்திர உலகத்திற்கு ரோபோக்கள் அவசியம்தான்! அவை நாம் எதிர்பார்ப்பது போல் கற்பனையில் ஹாலிவுட் திரைப்படங்களில் காண்பிக்கப்படுவது போல் உருவாகுமா? அதற்கு ரோபோ விஞ்ஞானிகள் தங்களை தயார் படுத்திக்கொண்டுள்ளனரா? என்று கேட்கும் கிரிஸ்டன், இன்னும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கனவுகள், கற்பனைகள் நிஜமாகும் என்கிறார்! பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தொடரும்...

எம்.ஜே.எம்.இக்பால்
நன்றி: http://www.chittarkottai.com/mjmiqbal/adisayam45.htm

Wednesday, May 30, 2012

After 12th STD என்ன படிக்கலாம்?

வேலைகள் பல்வேறு துறைகளில் உள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவரிகள் முதலில் அந்தத்துறைகளை கண்டுகொள்ள வேண்டும். அந்தத்துறை பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க வேண்டும். சேகரித்த தகவல்கள் சரியானது தானா? ஏன தகுந்த கல்வியாளரிகளிடம் அல்லது கல்வி வல்லுனர்களிடம் கலந்துரையாடி தெரிந்துகொள்ள வேண்டும். தனக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்த பின்பு அதற்குத் தகுந்த படிப்பில் சேர முயற்சி செய்வதே சிறந்த செயலாகும்.http://speedsays.blogspot.in

வேலைகள் வழங்கும் பல்வேறு துறைகள் விவரம்..http://speedsays.blogspot.in

1. விண்வெளி பொறியியல் (Aerospace Engineering)
 2. வங்கி மற்றும் காப்பீடு (Banking and Insurance)
 3. பயோ டெக்னாலஜி (Bio Technology)
 4. பி-பார்ம் (B – Pharmacy.)
 5. பி.பி.ஓ இன்டஸ்ட்ரி (BPO   Industry.)
 6. கணினி மற்றும் மென்பொருள் (Computer / Software).
 7. நிகழ்ச்சி மேலாண்மை (Event Management)
 8. பேசன் மேனேஜ்மென்ட் (Fashion Management).
 9. மனித உரிமைகள் (Human Rights.)
 10. விருந்தோம்பல் மேலாண்மை (Hospitality Management.)
 11. உடல்நலம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் (Health Care/ Medical Tech.,)
 12. தகவல்துறைத் தொழில்நுட்பம் (Information Technology.)
 13. தொழிற்ச்சாலை உறவுகள் (Industrial Relations)
 14. பன்னாட்டு வாணிபம் (International Trade.)
 15. மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம் (Management/Business Administration.)
 16. ஊடகம் மற்றும் இதழியல் (Media / Journalism.)
 17. பொருள் மேலாண்மை (Material Management.)
 18. உற்பத்தி மேலாண்மை (Production Management)
 19. பணியாளர் மேலாண்மை (Personnel Management.)
 20. கிராம மேலாண்மை (Rural Management.)
 21. போக்குவரத்து மற்றும் சுற்றுலா (Travel / Tourism.)
 22. சில்லறை வியாபார மேலாண்மை (Retail Management.)
 23. செலவு மற்றும் மேலாண்மை கணக்குப்பதிவு (Cost and Management Accountancy)
 24. மண்ணியல் (Geology.)
 25. தோட்டக்கலை (Horticulture.)
 26. விளம்பர மேலாண்மை (Advertising Management).

மாணவரிகள் தங்களின் உயர்நிலைக் கல்வியை தேர்வுசெய்ய உதவும் வகையில் உயர்நிலைக் கல்வி பல வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
  • கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயரி படிப்புகள்.
  • இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயர் படிப்புகள்.
  • பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல, செயலாளரிபயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயரி படிப்புகள்..http://speedsays.blogspot.in
  • உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவருக்கும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய பாடங்கள்:
  • போட்டித் தேர்வுகள்
இவை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்

I கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயரி படிப்புகள்.
இந்தப் பிரிவை
1) நுழைவுத் தேரிவுகள்
2) பட்டபப்டிப்புகள்
3) டிப்ளமோ படிப்புகள்
4) சான்றிதழ் படிப்புகள்

என 4 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
1) நுழைவுத் தேர்வுகள்.http://speedsays.blogspot.in
1. ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் (ஐ.ஐ.டி) (IIT)
 2. ஆல் இந்தியா என்ஜினியரிங் எக்ஸாமினேசன் (AIEE)
 3. ஐ.ஐ.டி. இந்திய தகவல்துறைத் தொழில்நுட்பத்திறன் நுழைவுத் தேர்வு
 4. கம்பைண்டு என்ட்ரன்ஸ் என்ஸாமினேசன் (நேவிகேசன் கோர்ஸ்)
 5. இந்திய மாநிலங்களில் நடத்தப்படும் பலவிதமான நுழைவுத்தேர்வுகள்
 6. என்.ஐ.டி. நுழைவுத்தேர்வு ( நேஷ்னல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி)
 7. பி.டெக். இன்டெஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு
 8. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு
 9. சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசசுச் இன்ஸ்ட்டியூட் (பி.டெக் எலக்ட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி)

2) பட்டபடிப்புகள் பி.இ.பி.டெக். படிப்பகள்
1. வான்ஊர்திப் பொறியியல் (Aeronautical  Engineering)
 2. கட்டிடக்கலை (Architecture)
 3. தான்னியங்கிப் பொறியியல் (Automobile Engineering)
 4. பயோ இன்பரிமேட்டிக்ஸ் (Bio – Informatics)
 5. பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேசன் என்ஜினியரிங் (Bio – Medical Instrumentation        Engineering)
 6. பயோ டெக்னாலஜி (Bio Technology)
 7. கட்டிடக்கலைப் பொறியியல் (Civil engineering)
 8. வேதிப் பொறியியல் (Chemical Engineering)
 9. தீயணைப்பு பொறியியல் (Fire Engineering)
 10. கணினி அறிவியல் பொறியியல் (Computer Science Engineering)
 11. கம்ட்டரி சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் (Computer Software & Hardware)
 12. மின்னியல் மற்றும் மின்னனு வேதியியல் (Electrical and Electroics Chemical)
 13. மின்னியல் மற்றும் தகவல்தொடர்பு (Electronics and Communication)
 14. மின்னியல் மற்றும் கருவியியல் (Electronics and Instrumentation)
 15. தொழிற்ச்சாலைப் பொறியியல் (Industrial Engineering)
 16. சுற்றுப்புற பொறியியல் புவித்தகவல்கள் (Environment Engineering – Geo – Informatics)
 17. தகவல்துறைத் தொழில்நுட்பம் (Information Technology)
 18. கருவியியல் பொறியியல் (Instrumentation Engineering)
 19. தோல்ப்பொருள் தொழில்நுட்பம் (Leather Technology)
 20. உற்பத்திப் பொறியியல் (ManufacturingEngineering)
 21. மெரைன் இன்ஜினியங் (Marine Engineering)
 22. மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics)
 23. மெட்டலர்ஜிக்கல் என்ஜினியரிங் (Mettallurgical Engineering)
 24. சுரங்கப் பொறியியல் (Mining Engineering)
 25. எரிபொருள் வேதிப்பொறியில் (Petro – Chemical Technology)
 26. பாலிமர் என்ஜினியரிங் (Polymer Engineering)
 27. உற்பத்திப் பொறியியல் (Production Engineering)
 28. அச்சுப்பொறியியல் (Printing Technology)
 29. ரப்பர் டெக்னாலஜி (Rubber Technology)
 30. டெக்ஸ்டைல் என்ஜினியரிங் (Textile Engineering)

3) டிப்ளமோ படிப்புகள்.http://speedsays.blogspot.in
1. கட்டிடப் பொறியியல்
 2. மின்சாரப் பொறியியல்
 3. மின்னணுப் பொறியியல்
 4. எந்திரவியல் பொறியியல்
 5. உற்பத்திப் பொறியியல்
 6. வேளாண்மைப் பொறியியல்
 7. கணினி அறிவியல் பொறியியல்
 8. மின்னணு மற்றும் தொலைத்தொடரிபு
 9. கட்டிக்கலை மற்றும் கிராமப்புற பொறியியல்
 10. வேதிப்பொறியியல்
 11. தோல்ப்பொருள் தொழில்நுட்பம்
 12. வேதித்தொழில்நுட்பம்
 13. பாலிமர் தொழில்நுட்பம்
 14. பல்ப் பேப்பர் தொழில்நுட்பம்
 15. மென்;பொருள் தொழில்நுட்பம்
 16. மீன்வளத் தொழில்நுட்பம்
 17. கைத்தறி; தொழில்நுட்பம்
 18. அச்சுத்தொழில்நுட்பம்
 19. பிளாஸ்டிக் டெக்னாலஜி
 20. சரிக்கரைத் தொழில்நுட்பம்
 21. டெக்ஸ்டைல் டெக்னாலஜி
 22. கணினித் தொழில்நுட்பம்
 23. கார்மெண்ட் டெக்னாலஜி
 24. மரத் தொழில்நுட்பம்
 25. வனத்துறைத் தொழில்நுட்பம்
 26. காலணிகள்த் தொழில்நுட்பம்
 27. போர்மேன் டெக்னாலஜி
 28. ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை உருவாக்குதல்
 29. ரெப்ரிஜ்ரேசன் மற்றம் ஏலீ; கப்டி`னிங்
 30. விற்பனைத் துறை
 31. காஸ்மெட்டாலஜி

4) சான்றிதழ் படிப்புகள் http://speedsays.blogspot.in
1. பிளாக்ஸ்மித்
 2. தச்சுத்தொழில்
 3. மோல்டர்
 4. பெயிண்டர்
 5. `டீட் மெட்டல் ஒலீ;க்கர்
 6. கட்டடம் கட்டுபவர்
 7. பேட்டரின் மேக்கர்
 8. மெக்கானிக் டீசல்
 9. பிளம்பர்
 10. மெக்கானிக் கிரெய்ண்டர்
 11. மெக்கானிக் மோட்டார்
 12. கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் உருவாக்கல்
 13. வெல்டரி கேஸ் மற்றும் மின்சாரம்
 14. மெக்கானிக் மோட்டார் வாகனங்கள்
 15. ஒயர்மேன்
 16. டர்னர்
 17; மெக்கானிஸ்ட்
 18. பிட்டசு
 19. எலக்ட்ரோ பிளேட்டர்
 20. ஒயர்லெஸ் ஆப்பரேட்டர்
 21. சர்வேயர்
 22. இன்ட்ரூமென்ட் மெக்கானிக்
 23. எலக்ட்ரீ சியன்
 24. மெக்கானிக் ரெப்ரிஜ்ரே`ன் மற்றும் ஏர் கண்டிசனிங்
 25. கருவி வடிவமைப்பாளர்
 26. டிராட்ஸ்மேன் சிவில்
 27. டிராட்ஸ்மேன் மெக்கானிக்
 28. மெக்கானிக் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி
 29. மெக்கானிக் ஜெனரல்
 30. பிழைத்திருத்தல்
 31. சுருக்கெழுத்து ஆங்கிலம்
 32. ஹேண்ட் ஒயரிங் ஆப் பேண்சி அண்ட் பர்னிஸ்சிங் பேப்ரிக்ஸ்
 33. எம்பர்யாடரி அன்ட் டெய்லரிங்
 34. கட்டிங் அண்ட் டெய்லரிங்
 35. காலணிகள் உருவாக்குதல்
 36. சூட்கேஸ் மற்றும் லெதர் பொருள் உற்பத்தி

II இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.

இந்த பிரிவை http://speedsays.blogspot.in
1) மருத்துவ நுழைவுத்தேர்வுகள்
 2) மருத்துவம் பட்டப்படிப்பு ஃடிப்ளமோஃ சான்றிதழ் தகுதி
 3) வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்
 4) உயிரியல் அறிவியல் மற்றம் துணைப்பாடம்
 5) மனை அறிவியல்
 6) பொதுப்பாடங்கள்

 என 6 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

1) மருத்துவ நுழைவுத்தேர்வு
1. ஆர்ம்டு போர்ஸஸ் மெடிக்கல் காலேஜ் – பூனே
 2. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் – உ.பி
 3. ஆல் இந்தியா பிரிமெடிக்கல் ஃ பிரிடெண்டல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் கண்டெக்டட் பை சென்ட்ரல் போர்டு ஆப் செகரட்ரி எஜூகேசன்
 4. ஜவஹர்லால் மருத்துவம் மற்றும் ஆய்வுப்பிரிவின் பட்டமேற்படிப்புக்கான நிறுவனம் – புதுச்சேரி
 5. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் – உ.பி
 6. கிரிஸ்ட்டியன் மருத்துவக் கல்லூரி – வெள்ளுர்
 7. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் – (புதுடெல்லி)
மருத்துவம் – பட்டப்படிப்பு = டிப்ளமோ / சான்றிதழ் தகுதி

பட்டப்படிப்புக்கான மருத்துவ பாடங்கள் http://speedsays.blogspot.in
 1. எம்.பி.பி.எஸ்.
 2. பி.டி.எஸ்.
 3. பி.ஹெச்.எம்.எஸ்
 4. பி.ஏ.எம்.எஸ்
 5. பி.எஸ்.எம்.எஸ்
 6. பி.பார்ம்
 7. பி.பி.டி.
 8. பி.எஸ்.சி (நர்சிங்)
 9. பி.ஒ.டி.

மருத்துவப்பாடங்கள் = டிப்ளமோ / சான்றிதழ்த்தகுதி
1. மருத்துவத் தொழில்நுட்பம்
 2. லெப்ரோசி இன்ஸ்பெக்டர் கோர்ஸ்
 3. லேப் டெக்னீசியன்
 4. இ.சி.ஜி டெக்னீசியன்
 5. டெண்டல் மெகனிக்
 6. ஆண்தால்மிக் அசிஸ்டெண்ட் கோர்ஸ்
 7. ஹெல்த் வொர்க்கரி டிரெய்னிங்
 8. கோர்ஸ் இன் ஆண்டோமெட்ரி
 9. ஆர்தோபிஸ்ட் கோர்ஸ்
 10. மெடிக்கல் ரேடியேசன் டெக்னாலஜி
 11. டிப்ளமோ இன் டயாலிசிஸ்
 12. மருத்துவமனை நிர்வாகத்தில் டிப்ளமோ
 13. மருத்துவ நுன்னுயிறியல்
 14. டிப்ளமோ இன் புரோஸ்தெடிக்ஸ் அன்ட் ஆர்தோட்டிக்ஸ்
 15. பெரிபுயூசன் டெக்னாலஜி
 16. பிசியோதெரபி
 17. ஸ்பீச் தெரபி
 18. நர்சிங்

வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்

1. வேளாண்மை அறிவியல் பி.எஸ்.சி. அக்ரி
 2. பால்ப்பொருள் அறிவியல் பி.எஸ்.சி (டி.டி)
 3. கால்நடை அறிவியல் பி.வி.எஸ். ஏ. ஹெச்
உயிரியல் அறிவியல் மற்றம் துணைப்பாடம்
1. விலங்கியல் – பி.எஸ்.சி
 2. மீன்வளம் – பி.எஸ்.சி
 3. எம்.எஸ்.சி. மரெயின் சயின்ஸ் மற்றும் உயிரியல்
 4. எம்.எஸ்.சி. மரெயின் பயோடெக்
 5. அக்குவாடிக் பயோலஜி மற்றும் மீன்வளம் எம்.எஸ்.சி
 6. நுன்னுயிரியல் – பி.எஸ்.சி எம்.எஸ்.சி

மனை அறிவியல்

1. மனை மேலாண்மை
 2. உணவு மற்றும் ஊட்டச்சத்து
 3. குழந்தை வளர்ச்சி
 4. ஆடை மற்றும் டெக்ஸ்டைல்ஸ்
 5. உணவு சேவை மேலாண்மை
 6. டெக்ஸ்டைல்ஸ் வடிவமைப்பு
 7. டெக்ஸ்டைல்ஸ் கிராண்ட்
 8. உணவுத்தொழில்நுட்பம்
 9. மனித ஊட்டச்சத்து
 10. உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து
 11. உணவு உற்பத்தி
 12. பயண்பாடு மற்றும் கழிவுப்பொருள் மறுசுழற்சி

பொதுப்பாடம்

1. இயற்பியல்
 2. வேதியியல்
 3. தாவரவியல்
 4. விலங்கியல்
 5. பயன்பாட்டு புள்ளியல்
 6. பயன்பாட்டு கணிதம்

III பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.

1. சாட்டர்டு அக்கவுண்டன்சி
 2. வங்கியியல்
 3. சட்டப்படிப்பு – பி.எல்
 4. மேலாண்மை – பி.பி.ஏ
 5. பொருளாதாரம் – பி.ஏ
 6. வணிகவியல்
 7. டீச்சிங்
 8. உலக அறிவியல்
 9. உளவியல்
 10. வரலாறு
 11. புவியியல்
 12. ஆங்கிலம்
 13. மொழி
 14. இசை
 15. நிதி
 16. ஊடகம்
 17. தகவல் தொடர்பு
 18. காஸ்ட்அக்கவுண்டன்சி

IV உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்கள்:

1. உடற்கல்வி
 2. சட்டப்படிப்பு
 3. ஏவியேசன் – விமானப்பணிண்பெண்
 4. பாஸ்மெட்டாலஜி
 5. பேஷன் டெக்னாலஜி
 6. காப்பீடு
 7. கடல்சாரபடிப்பு
 8. போக்குவரத்து மற்றும் சுற்றுலா
 9. புகைப்படம் பற்றிய படிப்பு
 10. கலை/பயன்பாட்டுக் கலை
 11. நகை வடிவமைப்பு
 12. பேஷன் மாடலிங்
 14. இதழியல் மற்றும் அச்சு ஊடகம்
 15. பிலிம் மற்றும் பிராட்காஸ்டிங் (டி.வி/ரேடியோ)
 16. கலையரங்கம் மற்றும் நடிப்பு
 17. விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு
 18. நடிப்பு
 19. ஆடியோ மற்றும் வீடியோ உற்பத்தி
 20 சின்மாட்மோகிராபி
 21. இயக்கம்
 22. டைரக்சன் சுரரி பிளே ரைட்டிங்
 23. வீடியோகிராபி
 24. பிலிம் எடிட்டிங்
 25. நாடகக்கலை
 26. பிலிம் டைரக்டிங்
 27. சினிமா நடிப்பு
 28. ஆடியோகிராபி மற்றும் எடிட்டிங்
 29. பிலிம் எடிட்டிங்
 30. படத் தயாரிப்பு
 31. பிலிம் பிராசசிங்
 32. பிலிம் ஸ்டடிஸ்
 33. கலையரங்கம் மற்றும் டி.வி. தொழில்நுட்பம்
 34. பிரிஹேன்ட் அணிமே`ன்
 35. பப்டமென்டல் அன்ட் ஆடியோ விசூவல் எஜூகேசன்
 36. மோசன் பிக்சரி போட்டோகிராபி
 37. நிகழ்ச்சி மேலாண்மை
 38. விசூவல் கம்யூனிகேசன்
 39. புத்தக பதிப்பு
 40. அரசியல் அறிவியல்
 41. குற்றவியல்
 42. விக்டிமாலஜி
 43. நடனம்
 44. ஜெம்மாலஜி
 45. தொழிற்ச்சாலை வடிவமைப்பு
 46. பூமி பற்றிய அறிவியல்
 47. நகரத் திட்டமிடல்
 48. மண்ணியல்
 49. சமூகவியல்

V போட்டித் தேர்வுகள் http://speedsays.blogspot.in

புடிப்பை முடித்த பின்னர் போட்டித்தேர்வுகள் எழுதுவதன்மூலம் பலருக்கு வேலைகள் எளிதில் கிடைக்கும். தகுதியான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்பலவகையான போட்டித்தேர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டித்தேர்வுகளை:
1. அறிவியல் மற்றும் கணிதப்பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள்.
2. வணிகவியல் பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள் என இருவகையாகப் பிரிக்கலாம்.

1.அறிவியல் மற்றும் கணிதம் பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள்:

1. பொறியியல்த்துறைத் தேர்வுகள்
 2. வங்கித் தேர்வுகள்
 3. இந்திய வனத்துறைத் தேர்வகள்
 4. மண்ணியல்த்துறைத் தேர்வுகள்
 5. கம்பைண்டு மருத்துவத்துறை தேர்வுகள்
 6. இந்திய பொருளாதாரம் புள்ளியல் துறை தேர்வுகள்
 7. சிவில் சரிவீஸஸ் தேர்வு
 8. எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகள்
 9. ரெயில்வே வேலைவாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள்

2. வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்

1. சிவில் சரிவீஸஸ் தேர்வுகள்
 2. வருமானத்துறைத் தேரிவகள்
 3. எஃசைஸ் மற்றும் வருமானவரித்துறைத் தேர்வுகள்
 4. இந்திய பொருளாதாரத்துறைத்தேர்வு
 5. இந்திய ராணுவம் விமானத்துறைத் தேர்வு
 6. இந்திய புள்ளியல்துறைத் தேர்வு
 7. கம்பைன்டு டிபன்ஸ் சர்வீஸஸ்

வேலைவாய்ப்பு பற்றிய பட்டியல் இத்துடன் முடியவில்லை இது ஒரு முன்னோட்டம் தான் ஒவ்வொரு நபரும் தனது ஆளுமைத்தன்மைக்கு தகுந்தத் துறையைத் தேர்வு செய்து திட்டமிட வேண்டும். ஒரு தொழிலைத் தேர்வுசெய்வது வாழ்க்கைத் தொழில் செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு வேலையைப் பெறுவது அந்த வேலையில் வளர்வது, வாழ்க்கைத்தொழிலை மாற்றுவது, ஓய்வு பெறுவது என வாழ்நாள் முழுவதும் வரும் செயல்கள் ஆகும். வாழ்க்கையின் இலக்கு நிர்ணயம் செய்வது முதல் வாழ்க்கைத்தொழில்மாற்றம் செய்வதுவரை பல வகைகளில் “வாழ்க்கைத்தொழில் திட்டமிடல்” உதவும். வாழ்க்கைத்தொழிலை ஒருவர்சரியாக திட்டமிடுவது மூலம் ஒருவர் தனது வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெறலாம்.

தற்போதைய வாழ்க்கைத்தொழில் ஒரு தொடர் செயல்பாடாக கருதப்படுகின்றது. ஏனெனில் வேலையைப் பெறுவது மட்டும் அல்லாமல், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், வாழ்க்கைத்தொழிலை மாற்றுதல், ஓய்வு பெரும் வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கிஉள்ளது. குறிப்பிட்ட சில இடைவெளிகளில் வாழ்க்கையில்தொழில் வளரிச்சியினை பற்றி திட்டமிடல் நல்ல பயனளிக்கும் அதுவே வெற்றிகரமான
 வாழ்க்கைகு வழிவகுக்கும். http://speedsays.blogspot.in

- Dr.எஸ். நாராயணராஜன் M.B.A. Ph.D., (நெல்லை கவிநேசன்) ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர்
நன்றி:-தினத்தந்தி

Sunday, May 27, 2012

குழந்தைகளைப் பாதுகாப்போம்!

ஒரு காலத்தில் ஒரு டஜன் பிள்ளைகளைப் பெற்று ஒரு கவலையும் இல்லாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஒன்றோ இரண்டோ குழந்தைகளை வைத்துக் கொண்டு நமது பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது! காரணம் சமூகத்தில் நிலவுகின்ற அச்சுறுத்தும் நிகழ்வுகள்.

“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்பதெல்லாம் பழைய மொழிகளாகிவிட்டன. இன்று பிள்ளைகளெல்லாம் கிரில் கேட்டுகளுக்கு உள்ளே கிரிமினல்களைப் போல அடைபட்டுக் கிடக்க வேண்டிய சூழல்.

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக நிகழும் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தகைய அச்சுறுத்தல்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க பெற்றோர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது! குழந்தைகளின் உடல் நலம் குறித்த பாதுகாப்பு உணர்வுகள் இன்னொரு பக்கம் பெற்றோர் முன்னால் வந்து நிற்கின்றன.

வீட்டுக்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும் குழந்தைகளுக்கு ஆபத்துகள் காத்திருக்கின்றன. அது மனிதர்கள், விலங்குகள், அஃறிணைகள் என எந்த வடிவத்திலும் வரலாம்!

குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ?
வீட்டுக்கு வெளியே
வெளியே போகும் முன்
குழந்தைகளுடன் வெளியே போகிறீர்களா? ஒரு நிமிடம் நில்லுங்கள். அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்பதே நமது விருப்பம். திருடர்களும், அசம்பாவிதங்களும் நம்மிடம் சொல்லிக் கொண்டு வருவதில்லை. எனவே வீட்டை விட்டுக் கிளம்பும் போதே உங்கள் குழந்தைகளிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.

வீட்டை விட்டுக் கிளம்பும் போது, உங்கள் மொபைல் கேமராவை எடுத்து உங்கள் குழந்தைகளைப் போட்டோ எடுங்கள். ஒருவேளை உங்கள் குழந்தை எங்கேனும் தவறிப் போனால் கண்டுபிடிக்க பேருதவியாய் இருக்கும். “ஒரு மாதிரி பிங்க் கலந்த வயலெட் கலர்ல ஒரு பிராக் மாதிரி கவுன்..“ என்றெல்லாம் பதட்டத்தில் உளறுவதை இந்த படம் தடுக்கும்.

படத்தைக் காமித்து “இதான் குழந்தை…“ என விசாரிக்க உதவியாய் இருக்கும். தொழில் நுட்பம் இன்றைக்கு வெகுவாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அவற்றை குழந்தைகள் பாதுகாப்புக்காய் பயன்படுத்துவதற்கு இது ஒரு சின்ன உதாரணம் !
அதே போல ஒரு வேளை தவறினால் எந்த இடத்தில் சந்தித்துக் கொள்வது ? என்பதைச் சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக பெரிய பார்க்கள், விழாக்கள், ஷாப்பிங் மால்களில் இது உதவும்.

ஒருவேளை தவறினால் உதவி கேட்பது யாரிடம் என்பதைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக காவலரிடம் உதவி கேட்கவேண்டுமெனில், உடையை மட்டும் சொல்லாமல் “பேட்ஜ்” அணிந்திருப்பார், இந்த “லோகோ” உடையில் இருக்கும் என்பன போன்ற விஷயங்களையும் சேர்த்தே சொல்லிக் கொடுங்கள் !

எங்கே இருக்காங்க குழந்தைகள் ?
உங்க குழந்தைங்க விளையாடப் போவதிலோ, நண்பர்களுடன் வெளியே போவதிலோ தவறில்லை. ஆனால் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் ? யாருடன் இருக்கிறார்கள் போன்ற விஷயங்களையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உதாரணமாக, “படத்துக்கு போறேன்” என்று உங்கள் பையன் சொன்னால், யாருடன் செல்கிறான். எங்கே செல்கிறான். எப்போ காட்சி துவங்கும், எப்போ முடியும் என அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

“வெளியே போறேன்னு சொன்னான், எங்கே போனான், யார் கூட போனான்னு தெரியலையே” என புலம்பும் நிலையை வைத்துக் கொள்ளாதீர்கள். பக்கத்து தெருவுக்குப் போனால் கூட சொல்லி விட்டுப் போகும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

கொஞ்சம் பெரிய பிள்ளைகளெனில் அவர்களுடன் செல் போன் தொடர்பில் இருங்கள். அவர்கள் பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாய் தோன்றினால் கவனத்தை அதிகப்படுத்துங்கள்.

கடைவீதிகளில்..
கடைவீதிக்குப் போகும் போது குழந்தையைக் கூட்டிக் கொண்டு போனால் முதல் கவனம் குழந்தையின் மீது இருக்கட்டும். அழகான புடவையைப் பார்த்து குழந்தையை விட்டு விடாதீர்கள். பெற்றோரின் கவனம் சிதறும் நேரம் பார்த்து குழந்தையை யாரேனும் கடத்தில் செல்லும் வாய்ப்பு உண்டு.

யாரேனும் உங்கள் குழந்தையை உற்றுக் கவனிப்பதாய் தோன்றினால், அவர்களிடம் போய் சும்மா பேசுங்கள். முடிந்தால் உங்கள் செல்போன் கேமராவில் அவரை படம் எடுங்கள். நீங்கள் அவரைக் கவனித்தீர்கள், அவருடன் பேசினீர்கள் என்றாலே ‘அடையாளம் தெரிந்து விட்டது’ என அந்த நபர் விலகி விடுவார்.

“குழந்தை ரொம்ப கியூட் அதான் பாத்தேன்” என யாரேனும் சொன்னால், “நன்றி” என ஸ்நேகமாய் ஒரு புன்னகையைக் கொடுத்து விட்டு நடையைக் கட்டுங்கள். அவருடன் அமர்ந்து உங்கள் குழந்தையின் சாதனைகளையெல்லாம் பட்டியல் போடவேண்டாம் !

உங்கள் குழந்தையை யாராவது நெருங்குகிறார்கள், பேசுகிறார்களெனில் உடனே அந்த இடத்திற்குச் செல்லுங்கள். அந்த நபரைப் பற்றிய விவரங்களை கேளுங்கள்.

காரில் போகும்போது
“காரில் ஏறினதும் நீ பண்ண வேண்டிய முதல் வேலை என்ன ?”

“சீட் பெல்ட் போடறது மம்மி…”

நாலு நாள் இந்த உரையாடல் நீங்கள் காரில் ஏறியதும் நடந்தால், ஐந்தாவது நாளில் இருந்து குழந்தை தானாகவே சீட் பெல்ட் போடப் பழகிவிடும். அப்புறம் ஒருவேளை நீங்கள் சீட் பெல்ட் போடாவிட்டால் உங்களிடம் அதே கேள்வியை குழந்தையே கேட்கும் !

சீட் பெல்ட் போடுவது கார் பயணத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அது பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குப் போனாலும் சரி, தூரத்தில் இருக்கும் சொந்த ஊருக்குப் போனாலும் சரி. அலட்சியம் வேண்டாம்.

என்னதான் காரில் ஏர்பேக் போன்ற வசதிகள் இருந்தாலும் சீட் பெல்ட் போடாமல் பயணித்தால் பாதிப்பு பயங்கரமாக இருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். குழந்தை மீது அக்கறை இருக்கிறதா, சீட் பெல்ட் போடப் பழக்குங்கள்.
குழந்தையோடு பேசுகிறீர்களா ?
உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு முதல் தேவை என்ன தெரியுமா? உங்களிடம் உங்கள் குழந்தை பாதுகாப்பை உணர்வது தான். “என்ன பிரச்சினைன்னாலும் அம்மா பாத்துப்பாங்க, அப்பா பாத்துப்பாங்க” எனும் ஆழமான நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

அதுக்கு முதல் தேவை குழந்தைங்க கூட போதுமான அளவு நேரம் செலவிடறது! குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கு ? அவர்களுடைய நாள் எப்படிப் போச்சு? அவர்கள் என்ன பண்ணினாங்க? போன்ற எல்லா விஷயங்களையும் அன்புடன் கேட்டறியுங்கள். அவர்களுக்கு ஒரு நல்ல ஆறுதல் தோளாக இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பதின் வயதுப் பிள்ளைகளிடமெல்லாம் அதிக நேரம் உரையாடலில் செலவிடுங்கள். அவர்களுடைய வழிகளைச் செம்மைப் படுத்தவும், அச்சுறுத்தல்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும் உங்கள் உரையாடல் உதவ வேண்டும். அவர்களுடைய பயங்கள், கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.

“ஐயோ இதெல்லாம் நான் எப்படி அம்மா கிட்டே சொல்வது” என குழந்தை நினைக்கக் கூடாது. “எதுவா இருந்தாலும் மம்மி கிட்டே சொல்வேன்” என குழந்தை நினைக்குமளவுக்கு இயல்பாகப் பழகுங்கள்.

பள்ளி செல்லும் போது !…
பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகள் நடந்து போகிறதென வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு சிறிது நாட்கள் நீங்களும் கூடவே நடந்து செல்லுங்கள். சாலையில் எப்படி நடப்பது, எங்கெங்கே கவனமாக இருப்பது போன்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள். எந்த இடம் பாதுகாப்பானது, யாரிடம் உதவி கேட்கலாம் போன்ற விஷயங்களையும் அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

ஒருவேளை பொது வாகனங்களில் பயணிக்கும் குழந்தையெனில் பஸ் ஸ்டான்ட் க்கு போய் குழந்தைக்கு எந்த பஸ், எங்கே ஏறுவது, எங்கே இறங்குவது, எப்படி ஏறி இறங்குவது போன்ற விஷயங்களை பழக்குங்கள். பஸ்பயணத்தில் அச்சுறுத்தலெனில் ஓட்டுநரை அணுக குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள்.

பயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் போன்றவையெல்லாம் குழந்தைகள் அறிந்து வைத்திருப்பது அவசியமானது !

தெரியாத நபர் “லிஃப்ட்” கொடுத்தால் மறுக்கப் பழக்குங்கள். ஒவ்வொரு முறையும் உங்களிடம் அனுமதி வாங்கச் சொல்லுங்கள் !

குழந்தைகள் பயணிக்கையில் எப்போதும் ஒன்றிரண்டு பேராய் நடப்பது, பஸ்ஸில் பயணிப்பது பாதுகாப்பானது. தனியே எங்கே செல்வதாக இருந்தாலும் உங்களுக்குத் தகவல் தெரிய வேண்டும் என்பது பால பாடம்.

வாகனங்கள் எச்சரிக்கை !
வாகனங்கள் குழந்தைகளின் மிகப்பெரிய எதிரிகள். அதுவும் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் பத்து மடங்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இரண்டு விதமான ஆபத்துகள் வாகன விஷயத்தில் உண்டு.

ஒன்று விபத்து.
நிறுத்தப் பட்டிருக்கும் வாகனங்களின் பின்னாலோ, பக்கவாட்டிலோ குழந்தைகள் போகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக வாகன டயரின் அருகே நின்று பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் வரும் சாலையில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.

இரண்டாவது கடத்தல்!
குழந்தைகள் கடத்துபவர்கள் வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளை வசீகரிக்கும் விதமாக சாக்லேட், பொம்மை போன்ற ஏதாவது பொருளைக் காட்டி அவர்கள் காரின் அருகே வந்ததும் சுருட்டிக் கொண்டு பறந்து விடுவது அவர்களுடைய பாப்புலர் திட்டம்.

தெரியாத நபர் இருக்கும் காரின் அருகே எக்காரணம் கொண்டும் போகவேண்டாம் என குழந்தைகளைப் பழக்குங்கள் !

போன் நம்பர் தெரியுமா ?
உங்க போன் நம்பர் உங்க குழந்தைக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் முதலில் அதைச் சொல்லிக் கொடுங்கள். குட்டிப் பிள்ளைகள் கூட ஒரு போன் நம்பரை எளிதில் கற்றுக் கொள்வார்கள். பள்ளி செல்லத் துவங்கிவிட்டால், வீட்டு விலாசத்தையும் கூடவே சொல்லிக் கொடுங்கள்.

பலரும் செய்யும் தப்புகளில் ஒன்று தங்கள் முழுப் பெயரைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்காதது தான். உன்னோட அப்பா பேரென்ன என கேட்டால் “ராஜூ” என்று குழந்தை சொல்வதை விட “சுப்ரமணிய ராஜூ” என சொல்வது அதிக பயன் தரும். அப்பா, அம்மாவின் முழுப் பெயரை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சில முக்கிய அடையாளங்களையும் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். அவ்வப்போது வீட்டில் விளையாட்டாக குழந்தையிடம் திருடன் போலீஸ் விளையாட்டை விளையாடி போன் நம்பர், விலாசம் எல்லாம் கேட்டு பழக்கப்படுத்துங்கள்.

விளையாட்டாய் பழகும் விஷயங்கள் குழந்தையின் மனதில் எளிதில் பதியும் என்பது குழந்தை உளவியல் !

கையில் நம்பர்
குழந்தைகளின் கையில் போன் நம்பரை எளிதில் அழியாத பேனாவைக் கொண்டு எழுதி வைக்கலாம். வெளியிடங்களில் ஒருவேளை குழந்தை தவறிப் போனால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் என்பது சிலருடைய கருத்து. குறிப்பாக பேசத் தெரியாத குழந்தைகள் விஷயத்தில் இது ரொம்ப பயன் தரும். ஒரு வேளை குழந்தை பதட்டத்தில் எண்ணை மறந்து விட்டால் கூட இது உதவும் !

வெளியூரில் போய் ஏதாவது ஹோட்டலில் தங்குகிறீர்களெனில் அந்த ஹோட்டலின் பிஸினஸ் கார்ட்/விசிடிங் கார்ட் நான்கைந்து எடுத்து குழந்தையின் பாக்கெட்களில் போட்டு வைப்பது நல்லது. தவறிப்போனால் ஹோட்டல் பெயரும், தொடர்பு எண்களும் அவர்களிடம் இருக்கும் !

கைகளில் அழகிய அகலமான ரப்பர் பேன்ட் ஒன்றைப் போட்டு அதில் பெயரும் தொலைபேசி எண்ணும் எழுதி வைப்பது கூட நல்ல யோசனையே.

ஷாப்பிங், தீம்பார்க் போன்ற இடங்களுக்குப் போனால், எக்காரணம் கொண்டும் அந்த இடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என சொல்லுங்கள். வெளியே வந்தால் ஆபத்து அதிகமேயன்றி குறைவில்லை! குழந்தை குட்டிகளுடன் நிற்கும் ஏதேனும் அம்மாக்களிடம் சென்று உதவி கேட்பது ரொம்ப நல்ல விஷயம் என்பதையும் சொல்லிக் கொடுங்கள் !

உடல் நலம் கவனம்
பொது இடங்களுக்குப் போகும் போது குழந்தைகளின் உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். தண்ணீர் விளையாட்டெனில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணி மணிகள் கைவசம் இருக்கட்டும். வெயில் எனில் குடை தொப்பி போன்றவை நிச்சயம் தேவை.

தண்ணீர் எப்போதும் கையில் இருக்கட்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது சுற்றுலா, ஷாப்பிங், பார்க் போன்ற இடங்களில் ரொம்ப அவசியம். உடலில் தண்ணீர் பற்றாக்குறை நிலை வந்தால் சோர்வும், நோய்களும் வந்து விடும்.
குழந்தைகள் பெரும்பாலும் “தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்பதில்லை. எனவே பெரியவர்கள் தான் அதைக் கவனித்து அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

நல்ல வசதியான செருப்பை அணிவது அவசியம். சிம்பிளாக காலை உறுத்தாத செருப்புகள் சிறப்பானவை. அதே போல நல்ல வசதியான ஆடைகள் அணிவியுங்கள். ஸ்டைலாக இருப்பதை விட வசதியாக இருப்பதே அதிக மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் என்பது மனதில் இருக்கட்டும் !
வீட்டுக்கு உள்ளே
குழந்தை தனியாய் இருக்கிறதா ?
வீட்டில் குழந்தையைத் தனியே விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையெனில் பாதுகாப்பு விஷயங்களில் அதிக கவனம் எடுத்து சொல்லிக் கொடுங்கள்.

முக்கியமாக வீட்டுக் கதவுகளையெல்லாம் பத்திரமாகப் பூட்டி வைக்கச் சொல்லுங்கள். யாரேனும் வந்துக் கதவைத் தட்டினால் என்ன செய்ய வேண்டும்? தெரியாத நபர் எனில் என்ன செய்ய வேண்டும் போன்றவற்றையெல்லா தெளிவாகச் சொல்லுங்கள்.

வீட்டில் போன் அடித்தால் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக வீட்டில் குழந்தை தனியே இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது!. “நீங்க யாரு, டாடி கிட்டே என்ன சொல்லணும்..” என கேட்க குழந்தைகளைப் பழக்குங்கள்.

வீட்டுக்குப் போன் செய்து அடிக்கடி விசாரித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்னொரு முக்கியமான விஷயம், வீட்டில் குழந்தைகள் தனியே இருந்தால் அவர்கள் தண்ணீர், மின்சாரம், நெருப்பு போன்ற ஆபத்துகள் கூட நேரலாம். எனவே அது குறித்த பாதுகாப்பு அம்சங்களையும் சொல்லிக் கொடுங்கள் !

பக்கத்து வீடுகள்
உங்கள் பக்கத்து வீட்டு நபர்களின் வீடுகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். எந்தெந்த வீடுகள் பாதுகாப்பானவை. எவையெல்லாம் உங்கள் குழந்தை நம்பிக்கையுடன் செல்லலாம் என்பதை குழந்தைகளுக்கு விளக்குங்கள்.

தெரியாத வீடுகளுக்கு குழந்தைகள் செல்ல அனுமதிக்க வேண்டாம். தெரிந்த நபர்களின் வீடுகளுக்குக் கூட நீங்கள் கூடவே சென்று பழக்கப் படுத்துவதே நல்லது. நபர்கள் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள் என்பதற்காக வீடு பாதுகாப்பாய் இருக்க வேண்டுமென்பதில்லை. அங்கே கவனிக்கப் படாத கிணறு இருக்கலாம், ஆபத்தான மாடி இருக்கலாம், அல்லது வேறு ஏதேனும் ஆபத்து ஒளிந்திருக்கலாம். எனவே நீங்கள் அந்த வீடுகளைப் பார்த்திருப்பது நல்லது !

பக்கத்து வீடுகளுக்குச் சென்றால் கூட, குழந்தை அந்த வீட்டை அடைந்து விட்டதா என்பதை போனில் விசாரித்து அறியுங்கள். அந்த வீட்டை விட்டுக் கிளம்பும் போதும் உங்களுக்குத் தகவல் சொல்லச் சொல்லுங்கள்.

நெருப்போடு கவனம் தேவை
தீ தொடர்பான ஆபத்துகள் குழந்தைகளுக்கு வருவதை பத்திரிகைகள் அவ்வப்போது துயரத்துடன் பதிவு செய்கின்றன. குழந்தைகளுக்கு நெருப்பு குறித்த ஆபத்துகளும், எச்சரிக்கை உணர்வுகளும் தெரிந்திருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம்.

தீப்பெட்டி, லைட்டர் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு வேளை வீட்டில் தீ பிடித்தால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என சொல்லிக் கொடுங்கள். குழந்தைகள் பெரும்பாலும் வீட்டில் எங்கேயாவது ஒளிந்து கொள்ளவே முயலும் என்பது உளவியல் பாடம் !

உடையில் தீ பிடித்தால் ஓடக்கூடாது! தண்ணீர் ஊற்றவேண்டும், இல்லையேல் தரையில் புரளவேண்டும்! எரிந்து கொண்டிருக்கும் வீட்டுக்குள் எக்காரணம் கொண்டும் நுழையக் கூடாது, அப்போது மின் உபகரணங்கள் எதையும் தொடக் கூடாது. இப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுன்கள்.

சுவாரஸ்யமாய் சீரியல் பார்த்துக் கொண்டே, “மூணு விசில் வந்துச்சுன்னு நெனைக்கிறேன். பாப்பா அந்த அடுப்பை அணைச்சு வை” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். சிரமம் பார்க்காமல் அத்தகைய வேலைகளை நீங்களே செய்யுங்கள். சமையலறை, கியாஸ் பக்கத்தில் குழந்தைகளை அனுமதிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது !

கொசு, பூச்சி மருந்துகள் !
வீட்டில் கொசு, பூச்சி, கரப்பான் போன்றவையெல்லாம் வராமல் இருப்பதற்காக நீங்கள் வாங்கி அடிப்பீர்களே ஹிட் போன்ற சமாச்சாரங்கள், அவை குழந்தைகளுக்கு ரொம்பவே டேஞ்சர் என்பது தெரியுமா ? பலருக்கும் தெரியாத விஷயங்களில் இதுவும் ஒன்று !

இத்தகைய ஸ்ப்ரேயை குழந்தைகள் தெரியாமல் முகத்தில் அடித்து உள்ளிழுத்தால் அவர்களுடைய மூளை நேரடியாகவே பாதிக்கப்படும். சுய நினைவு இல்லாமல் விழுந்து விடுவார்கள். எவ்வளவு சுவாசிக்கிறார்கள் என்பதற்கு ஏற்ப இந்த பாதிப்பு அதிகமாகும்.

எனவே ஹிட் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளின் கண்களுக்கே எட்டாத இடத்தில் வைத்து விடுங்கள். அதே போல பாத்ரூம் கிளீனிங் பொருட்கள், பாத்திரம் கழுவும் பொருட்கள் போன்றவற்றையும் தூரமாகவே வையுங்கள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் கெமிகல் பொருட்கள், நச்சுப் பொருட்கள் போன்ற சர்வ சங்கதிகளும் குழந்தைகளால் எடுக்க முடியாத இடத்தில் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம் !

விளையாட்டுப் பொருட்களில் கவனம்
குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களிலும் கவனம் தேவை. ரொம்பச் சின்னக் குழந்தைகளுக்கு சின்னச் சின்ன பாகங்கள் உடைய விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கக் கூடாது. குழந்தைகள் அவற்றை வாயில் போட்டு ஆபத்தை விலைக்கு வாங்கி விடலாம். அந்தந்த வயதினருக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்களையே வாங்குங்கள் !

அதே போல தரம் குறைந்த விஷத் தன்மையுடைய பெயிண்டிங், மாலை போன்றவற்றை குழந்தைகளுக்கு வாங்கித் தராதீர்கள். அது அவர்களுக்கு அலர்ஜி போன்ற நோய்களைத் தந்து விடும்.

விளையாட்டுப் பொருட்கள் உடைந்து சுக்கு நூறானபின்னும் அதை ஒரு கோணியில் கட்டி வீட்டிலேயே வைத்திருக்கும் தவறைச் செய்யாதீர்கள். உடைந்த பொம்மைகளையும், விளையாட்டுப் பொருட்களையும் தூரப் போடுங்கள்.

குழந்தைகள் விளையாடும் இடத்தில் கூட அவர்களுக்குக் காயம் தரக்கூடிய கூர்மையான பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்றிவிடுங்கள். குழந்தைகளுக்கு அருகில் இருக்கும் பொருட்கள் மீதான கவனத்தை விட, விளையாட்டே பிரதானமாய் தெரியும். எனவே அவை ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

மின் உபகரணங்களில் கவனம்
குழந்தைகள் மின் உபகரணங்களைப் பயன்படுத்தும் போது ரொம்பவே கவனம் தேவை. என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக் கூடாது ? என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். அடிக்கடி அவற்றை குழந்தைகளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருங்கள். குறிப்பாக பிளக் பாயின்ட் போன்றவற்றுக்கு ஒரு கவர் வாங்கி மாட்டுங்கள் !

வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் அவன், ஃபிரிட்ஜ் போன்றவற்றையெல்லாம் குழந்தைகள் கையாள விடாதீர்கள். மின் பொருட்களில் எப்போதுமே ஆபத்து ஒளிந்திருக்கும். எனவே வெகு சில ஆபத்தற்ற மின் உபகரணங்களைத் தவிர வேறு எதையும் குழந்தைகள் தொட அனுமதிக்காதீர்கள்.

மின்சாரத்தில் இருக்கின்ற ஆபத்துகளைக் குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே சொல்லிப் புரிய வைக்கலாம். லைட்டும், சுவிட்சும் விளையாட்டுப் பொருட்களல்ல என்பது அவர்களுக்கு மழலை வயதிலேயே புரிய வேண்டியது அவசியம்.
வீட்டுப் பொருட்களில் கவனம்
நமது வீடு குழந்தைக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டியது நமது கடமை. குறிப்பாக மாடிப் படிகள், பால்கனி, மொட்டை மாடி போன்ற இடங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். பாதுகாப்பு இல்லை என தோன்றினால் கிரில், கதவு, வலை என தேவையானவற்றைப் போட்டு பாதுகாப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

ஷேவிங் செட் போன்றவற்றை பத்திரமாய் வைத்திருப்பது, அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை பாதுகாப்பாய் வைப்பது, குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்வது என வீட்டுப் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும்.

டிவி, கனமான பொருட்கள், மிக்ஸி, கிரைண்டர் போன்றவை குழந்தை இழுத்துத் தள்ளாத வகையில் இருக்க வேண்டும். ஒரு மேஜை விரிப்பின் முனை கூட கீழே தொங்காமல் இருப்பது நலம். அப்படி இல்லையேல் மேஜை விரிப்பே இல்லாமல் இருப்பது நல்லது !

கத்தி, பிளேடு, அரிவாள் போன்ற விஷயங்களெல்லாம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் ரொம்ப ரொம்ப பாதுகாப்பான இடத்தில் இருக்கட்டும். தவறி விழாத இடத்தில், குழந்தையால் எடுக்க முடியாத இடத்தில் அவற்றை வையுங்கள். மாத்திரைகள், மருந்துகள் போன்ற சமாச்சாரங்களும் டிராக்களில் பூட்டப்பட்டே இருக்கட்டும் !

சின்னச் சின்ன இத்தகைய விஷயங்களில் பெரிய பெரிய ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.
மருந்துகளில் கவனம்
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் விஷயத்தில் பலரும் டாக்டர்களாகி விடுவார்கள். அப்படி ஆகாமல் இருப்பது குழந்தைக்கும், நமக்கும் ரொம்ப நல்லது. சரியான நேரத்தில் டாக்டரிடம் போக வேண்டியதும், அவருடைய அறிவுரைப்படி நடக்க வேண்டியதும் ரொம்ப அவசியம். 50% பெற்றோரும் டாக்டர் சொல்வது பாதி புரியாமல் தான் டாக்டரின் அறையை விட்டு வெளியே வருகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. டாக்டர் சொல்வதை முதலில் தெளிவாய் கேளுங்கள்.

“கடைசி நாள்” அதாவது எக்ஸ்பயரி டேட் என்ன என்பதை கவனமாய் பாருங்கள். கவரிலும், பாட்டிலிலும் ஒரே நாள் இருக்கிறதா என்றும் பாருங்கள். பழைய மருந்துகளை வாங்கவே வாங்காதீர்கள். அது பழையதாகி விட்டது என மருந்து கடைக் காரரிடமும் சொல்லி விடுங்கள். காலாவதியான மருந்துகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் !
மருந்தை எவ்வளவு தடவை கொடுக்க வேண்டும், எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் மருத்துவர் அறிவுரைப்படியே கேளுங்கள். அதிக காய்ச்சலா இருக்கு என ரெண்டு மாத்திரை எக்ஸ்ட்ராவாய்க் கொடுக்காதீர்கள். அது ஆபத்தானது !.

“இந்த மருந்து இல்லை, இதே மாதிரி இன்னொரு மருந்து இருக்கு” என கண்ணி வலை விரிக்கும் மருந்து கடைக்காரர்களிடம் ஏமாற வேண்டாம். நிறைய லாபம் பார்க்க விரும்பும் பலரும் சொல்லும் டயலாக் இது ! எந்த மருந்தை டாக்டர் சொல்கிறாரோ அதையே வாங்குங்கள் !

பழைய மருந்துகளை கொடுப்பது, ஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை இன்னொரு குழந்தைக்கும் கொடுப்பது இப்படியெல்லாம் நீங்களே டாக்டராய் மாறி குழந்தையின் வாழ்வோடு விளையாடாதீங்க !
தண்ணீரில் பாதுகாப்பு
தண்ணீர் இன்னொரு டேஞ்சர் விஷயம். குறிப்பாக சின்னப் பிள்ளைகள் உள்ள இடங்களில் தண்ணீர் ரொம்ப ஆபத்து. குழந்தைகளைத் தனியே எக்காரணம் கொண்டும் நீச்சல் குளம், குளம், குட்டை, ஏரி, கடல் போன்ற எந்த இடத்திலும் விடாதீர்கள். உங்கள் நேரடிப் பாதுகாப்பு நிச்சயம் தேவை.

வீடுகளிலும் ரொம்ப சின்னப் பிள்ளைகள் இருந்தால் கவனம் இரண்டு மடங்கு வேண்டும். பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தால் குழந்தை அதைத் திறக்க முடியாதபடி வையுங்கள். அல்லது அந்த அறையைப் பூட்டியே வையுங்கள். முடிந்தவரை குடம் போன்ற வாய் குறுகலான பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வையுங்கள்.

குழந்தைகள் தண்ணீரில் விளையாட அதிக ஆர்வம் காட்டும். ஆனால் தவழும் பிள்ளைகளுக்கு ஆபத்தை விளைவிக்க ஒரு பக்கெட் தண்ணீரே போதுமானது. எனவே கவனம் அவசியம்.

இணையத்தில் கவனம்
இப்போதெல்லாம் சின்ன வயதிலேயே சிறுவர் சிறுமியர் இன்டர்நெட் விஷயங்களைக் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். இணையம் அவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லித் தரும். அதே நேரத்தில் தேவையற்ற பல விஷயங்களையும் அது கற்றுத் தரும். எனவே குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கவனிப்பது, வரையறுப்பதும் பெற்றோரின் கடமையாகும்.

இணையத்தில் சொந்தப் புகைப்படமோ, குடும்பத்தினரின் புகைப்படமோ அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையான தகவல்களை இணையப் பக்கங்களில் போட்டு வைக்க வேண்டாம். எக்காரணம் கொண்டும் இணைய நண்பர்களை தனியே நேரில் சந்திக்க வேண்டாம் எனும் அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

தவறான இணையப் பக்கங்கள், தேவையற்ற சேட் தளங்கள் போன்றவற்றை அனுமதிக்காமல் இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இணையத்துக்கு என ஒதுக்குங்கள். இரவு நேரத்தில் இணையத்தில் உலவுவதை தடை செய்யுங்கள். இப்போதெல்லாம் குழந்தையின் மனசையும், பாதுகாப்பையும் பலவீனப்படுத்துபவை இணையத்திலேயே உண்டு !
பாலியல் தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்க !
நல்ல தொடுதல் எது ?
சின்ன வயதுப் பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று பாலியல் ரீதியான தொந்தரவுகள். இதை “குட் டச், பேட் டச்” என்பார்கள். நல்ல தொடுதல் எது, மோசமான தொடுதல் எது என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது மிக மிக முக்கியம் !

குழந்தைகளைக் கொஞ்சுவது போல தொடுவது, விளையாட்டு எனும் போர்வையில் வக்கிரம் காட்டுவது இவையெல்லாம் எங்கும் நடக்கும் விஷயங்கள். 72.1 சதவீதம் குழந்தைகள் இதைப்பற்றி யாரிடமும் சொல்வதில்லை. காரணம் பல குழந்தைகளுக்கும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இரண்டாவது காரணம், இந்த தொல்லைகளையெல்லாம் தருவது 90% குழந்தைக்குத் தெரிந்த நபர்களே என்கின்றன புள்ளி விவரங்கள்.

வளரும்போ குழந்தைக்கு எல்லாம் புரியும் என்று விட்டு விடுவது ரொம்பவே ஆபத்தானது. ஒரு குழந்தை மூன்று வயதைத் தாண்டினாலே அதனிடம் மோசமான தொடுதல் பற்றிச் சொல்லிக் கொடுக்கலாம் ! மிக முக்கியமாக ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்குமே இதைச் சொல்லிக் கொடுங்கள் ! ஆபத்து இருவருக்குமே உண்டு !

நோ சொல்வது நல்லது !
யாராய் இருந்தாலும் சரி, புடிக்காத விஷயங்களுக்கு “நோ” சொல்லப் பழக்க வேண்டும். குழந்தைகள் நெருங்கிய சொந்தக்காரர்களிடம் “நோ” சொல்லத் தயங்கும். குறிப்பாக கொஞ்சம் வயதில் பெரியவர்களிடம் அவர்களுடைய தயக்கம் அதிகமாக இருக்கும். அதைப் போக்க வேண்டும். தப்பாக யாரேனும் தொட முயற்சி செய்தால் “தொடாதே..” என அழுத்தமாகவும், சத்தமாகவும் சொல்லப் பழக்க வேண்டும். குழந்தை சத்தமாகச் சொன்னால் அதன் பின்னர் அந்த நபரால் தொந்தரவு எற்படும் வாய்ப்பு ரொம்பக் கம்மி !

குழந்தைகளை நம்புங்க !
குழந்தைங்க சொல்வதை பெற்றோர் முழுமையாய் நம்ப வேண்டும். குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள். அதுவும் பாலியல் விஷயங்களில் இட்டுக் கட்டி எதையும் சொல்லவே மாட்டார்கள். எனவே குழந்தைகள் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். குழந்தை பேசி முடிக்கும் வரை இடை மறிக்காதீர்கள்.

“சே..சே.. அந்தத் தாத்தா அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு… “, “அந்த மாமா ரொம்ப நல்லவரு, அவரைப் பற்றி தப்பா நினைக்காதே” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். குழந்தை அசௌகரியமாய் உணரும் நபர்களிடம் குழந்தையை தனியே இருக்க விடாதீர்கள். அது ரொம்ப முக்கியம்.
குழந்தைகளிடம் கேளுங்க !
குழந்தைகள் கிட்டே நடந்த விஷயங்களையெல்லாம் தினமும் கேக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பள்ளியில் நடந்த விஷயங்களானாலும் சரி. சொந்தக்காரங்க வீட்டில் நடந்த விஷயமானாலும் சரி, எல்லாவற்றையும் கேளுங்கள். உங்கள் கள்ளம் கபடமற்ற மழலைகள் உண்மையைச் சொல்வார்கள்.

ஒருவேளை விரும்பத் தகாத நிகழ்வு நடந்திருந்தால் கூட பதட்டத்தை வெளிக்காட்டாமல் பேசுங்கள். எந்தத் தவறுக்கும் உங்கள் குழந்தை காரணமல்ல என்பது நினைவில் இருக்கட்டும்.

நம்பிக்கையை வளருங்க
எதுன்னாலும் மம்மி கிட்டே தயங்காம சொல்லலாம் எனும் நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் குழந்தையோடு இயல்பான அன்பை வைத்திருக்க வேண்டியது தான். எரிச்சல், கோபம் காட்டும் பெற்றோரிடம் குழந்தைகள் உண்மையை மறைக்கும்.

“மம்மி எனக்கு இந்த அங்கிளைப் புடிக்காது” என்று குழந்தை சொன்னால் அரவணைத்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கை உணர்வு கொள்ளுங்கள். ஏதேனும் சிக்கல் நடந்திருக்கலாம். எனவே குழந்தையின் விருப்பத்தை மதியுங்கள். அந்த நபரைக் கொஞ்சம் கவனியுங்கள் !

குழந்தையை மிரட்டினாங்களா ?
“மம்மி கிட்டே சொல்லாதே..” என்று யாராவது எதையாவது சொன்னார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் தப்பான விஷயங்கள் தான் பெற்றோரின் காதுகளுக்குப் போகக் கூடாது என சில்மிஷவாதிகள் நினைப்பார்கள். அத்தகைய விஷயங்களை நீங்கள் நிச்சயம் அறிய வேண்டும். அது தான் உங்களை எச்சரிக்கையாய் வைத்திருக்க உதவும். உங்கள் குழந்தையைப் பாதுகாக்கவும் அது ரொம்ப அவசியம்.

“உன்னைப் பத்தி அம்மா கிட்டே சொல்லி அடி வாங்கி தருவேன்” போன்ற மிரட்டல்களில் ரொம்ப கவனம் தேவை. தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுகளுக்கு இது காரணமாகிவிடக் கூடும் !

யாராகவும் இருக்கலாம் !
பாலியல் தொந்தரவுகளைத் தருபவர்கள் இளைஞர்களாய் இருப்பார்கள் என்பது ஒரு தப்பான அபிப்பிராயம். வயசு வித்தியாசம், சாதி, மத, பண வித்தியாசம் இல்லாமல் யாருக்குள்ளும் இந்த நரி ஒளிந்திருக்கலாம். எனவே ஆள் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.

குழந்தைக்கு யாராவது கிஃப்ட் வாங்கி குடுத்தாங்களா ? சாக்லேட் வாங்கி குடுத்தாங்களா ? அல்லது ஏதேனும் வாங்கித் தரேன்னு ஆசை காட்டினாங்களா என அறிந்து கொள்ளுங்கள். இவையெல்லாம் சிக்கல்கலுக்கான முன்னுரையாகக் கூட இருக்கலாம்.

குழந்தையின் உடல் மொழி !
குழந்தைக்கு விரும்பத் தகாத சம்பவங்கள் ஏதும் நடந்திருந்தால் குழந்தையின் முகமே சட்டென காட்டிக் கொடுத்துவிடும். அதைக் கவனித்து விசாரிக்க வேண்டியது மட்டுமே பெற்றோர் செய்ய வேண்டிய விஷயம். குழந்தை சோகமாய் இருந்தாலோ, பேசாமல் இருந்தாலோ கவனியுங்க ! குழந்தையின் உடலில் காயம் இருந்தல் உடனே கவனியுங்கள்.

குழந்தைகளை எக்காரணம் கொண்டும் பயமுறுத்தியோ, அதட்டியோ விஷயத்தைக் கேட்காதீர்கள். ரொம்ப ரொம்பப் பொறுமையாய் கேளுங்கள் !
திடீர்ப் பாசம் வருதா ?

குழந்தையிடம் உறவினர்கள் யாராச்சும் திடீரென பாசம் காட்டுகிறார்களா என கவனியுங்கள். குழந்தையை அடிக்கடி கொஞ்சுவது, தனியே மாடிக்கோ, பால்கனிக்கோ, தனிமையான அறைகளுக்கோ கூட்டிப் போவது போன்ற விஷயங்களில் கவனமாய் இருங்கள். குழந்தையைக் கூட்டிக் கொன்டு சினிமா போகிறேன் என்றெல்லாம் சொன்னால் மறுத்து விடுங்கள். பிறர் குழந்தையோடு பழகுவதெல்லாம் உங்கள் பார்வையில் படும் படி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

நோ போட்டோ !
குழந்தையை யாராச்சும் புகைபடம் எடுக்க வந்தால் “வேண்டாம்” என சொல்லப் பழக்குங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் குழந்தையைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம். குழந்தையை யாரேனும் ஆபாசமாய்ப் படம் எடுக்கவும் வாய்ப்பு உண்டு.

அதே போல குழந்தையிடம் ஆபாசப் படங்கள் அடங்கிய புத்தகங்கள் யாராச்சும் காட்டுகிறார்களா போன்றவையும் கவனிக்க வேண்டிய விஷயம். குழந்தைகளின் மனதைக் கறையாக்கி அதில் குளிர்காயும் குறை மனசுக்காரர்களும் உண்டு !

கிராமத்திலும் உண்டு !
இதெல்லாம் நகரத்துச் சமாச்சாரங்கள். கிராமத்துல எதுவுமே கிடையாது என தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கிராமங்களோ நகரமோ எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நிச்சயம் உண்டு.

அதே போல குழந்தை கிட்டே ஒரு தடவை எல்லா எச்சரிகை உணர்வையும் சொல்லியாச்சுன்னும் விட்டுடாதீங்க. அடிக்கடி சொல்லிட்டே இருங்க. குழந்தைகள் மெல்லிய மனசுக்காரர்கள் அவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.
நன்றி : தேவதை, மாத இதழ்.