Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, November 19, 2012

கழுகுத் தாண்டவம்!

கழுகுத் தாண்டவம்!

கொடூர நெஞ்சுடையோரின்
கேர ராக்கெட்டுகள்
கொஞ்சி விளையாடும்
பிஞ்சு உயிகளை 
கோரமாய் தாண்டவமாடிற்று!

சிரிப்பில் கூட 
கிஞ்சிற்றும் கபடம் அறியா
புதிய மலர்களை
இரத்த மழையா 
தொப்பாக்க வேண்டும்!

சிரித்து விளையாடும்
வைர முத்துக்களை
முத்தமிடவேனும் இடமின்றி
துளைத்திருந்தது 
இஸ்ரேலிய ரவைகள்!

எளில் கொஞ்சும் அக்ஸாவில்
கொஞ்சி விளையாடவேணும்
பிஞ்சு மலர்களை விடா
இஸ்ரேலிய கழுகுத் தாண்டவம்!

மனிதத் தோற்றத்தில்
வேட்டை மிருகங்களின் அராஜகம்
காவுகொண்டன - ஈமானியம் தோய்ந்த
இளசு உயிர்களைடா?!

ஏனிந்த இரத்த வேட்டை
எதற்கிந்த கபோதி ரகளை!?

கொள்கை, கோற்பாடு
நெறி, நேர்மை என
வாய்கிழிய மேடைபோடும்
மேற்கத்தேயக் குரல்கள் எங்கே?!

பதாதைகளும், சுலோகங்களும்
பக்குவமாய் ஒதுங்கிக் கொள்ள!
பரபரப்பாய் எழுதித்தள்ளும்
பஞ்சவர்ணப் பத்திரிக்களும்
ஓய்வெடுக்கச் சென்றுவிட்டன!

முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும்
இழிவுபடுத்த மட்டும்
முன்டியடித்துக் கொள்ளும்
மீடியாக்கள் - பலஸ்தீன மண்ணில்
உறையாமல் ஓடிக் கொண்டிருக்கும்
பிஞ்சு இரத்தத்தை 
கண்டுகொள்ளவேயில்லை!
                                      (19.11.12)
 
கொடூர நெஞ்சுடையோரின்
கோர ராக்கெட்டுகள்
கொஞ்சி விளையாடும்
பிஞ்சு உயிகளை
கோரமாய் தாண்டவமாடிற்று!

 சிரிப்பில் கூட
கிஞ்சிற்றும் கபடம் அறியா
புதிய மலர்களை
இரத்த மழையா
தொப்பாக்க வேண்டும்!

சிரித்து விளையாடும்
வைர முத்துக்களை
முத்தமிடவேனும் இடமின்றி
துளைத்திருந்தது
இஸ்ரேலிய ரவைகள்!

எளில் கொஞ்சும் அக்ஸாவில்
கொஞ்சி விளையாடவேணும்
பிஞ்சு மலர்களை விடா
இஸ்ரேலிய கழுகுத் தாண்டவம்!

மனிதத் தோற்றத்தில்
வேட்டை மிருகங்களின் அராஜகம்
காவுகொண்டன - ஈமானியம் தோய்ந்த
இளசு உயிர்களைடா?!

ஏனிந்த இரத்த வேட்டை
எதற்கிந்த கபோதி ரகளை!?

கொள்கை, கோற்பாடு
நெறி, நேர்மை என
வாய்கிழிய மேடைபோடும்
மேற்கத்தேயக் குரல்கள் எங்கே?!

பதாதைகளும், சுலோகங்களும்
பக்குவமாய் ஒதுங்கிக் கொள்ள!
பரபரப்பாய் எழுதித்தள்ளும்
பஞ்சவர்ணப் பத்திரிக்களும்
ஓய்வெடுக்கச் சென்றுவிட்டன!

முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும்
இழிவுபடுத்த மட்டும்
முன்டியடித்துக் கொள்ளும்
மீடியாக்கள் - பலஸ்தீன மண்ணில்
உறையாமல் ஓடிக் கொண்டிருக்கும்
பிஞ்சு இரத்தத்தை
கண்டுகொள்ளவேயில்லை!
 

Sunday, November 18, 2012

Love your Masjid

 
by Amanah Khalid (UK)
A shining light for all to see,
A symbol of truth through eternity.
A place of worship for divinity,
A symbol of strength to the community.
 
The place to unite and prayer together,
Rush too quickly regardless of weather.
I’m too busy to go.. Say this never,
Venture often to and at least endeavour.
 
Its doors are open, people go inside,
For all are welcome and in peace reside.
No raised voices of anger for you to collide,
Good etiquette and Manners you must abide.
 
Our beloved Mosque and second home,
A place were one will never feel alone.
Hear the Azan echo throughout its dome,
Love in our eyes we could never disown.
 
However, to your Mosque when did you go last?
Do you go yearly only to open fast?
Is it just a place you often pass?
A place you once went, but a place of the past?
 
Our Mosques are standing half empty,
No longer a place of plenty,
Yet it’s ours for free, no charge for entry,
An issue we should approach firm but gently.
 
Strength in Islam, we find in each other,
Simply through meeting a new sister or brother.
More then we know we need one another,
Just as a child seeks love from the mother.
 
The Mosque is the perfect place to meet,
And invite new Muslims to our holy retreat.
Don't gather and chat lowly on the street,
Come into the Mosque make your obligation complete.
 
Lead by example; take your family by the hand,
Guide them to the straight path of the Promised Land.
Perform Salat at Mosque follow Allah’s command,
Show the world our faith is glorious and grand.
 
Go to Mosque and be amongst those who care,
Go to Mosque and your knowledge share.
Go to Mosque and learn from others there,

And Inshallah make it full, I’ll see you there!....

Wednesday, June 6, 2012

மலராத மொட்டுக்கள்!


இரத்தக் கறைபடிந்த
நறைத்த சிங்கமொன்று
சிறியா தேசத்தை
வேட்டையாடும்
அகோரக் காட்சி!
 
உலுத்துப் போன
கதிரையின் கால்களை
மனிதக் குருதியூற்றி
ஸ்திரப்படுத்த
அமெரிக்கத் தொனியில்
ஆயுதப் பூஜை!
 
அகோரத் தாண்டவத்தின்
அராஜகத்தை
தாங்கமுடியா உயிர்கள் மட்டும்
தம் கூடுகளை விட்டும்
விரண்டோடிக் கொண்டிருந்தன!
 
தேகத்தைப் போல்
தம் தேசத்தையும் விட்டு
விடைபெரும் உயிரை
மனிதங்கள் மட்டும்
கண்ணீரில் குளிப்பாட்டி
வழியனுப்பிவைத்த
வரலாறு மறக்காத
சோகவடுக்கள்!!
 
வடித்த கண்ணீரும்
வடிந்த இரத்தமும்
புதிய தலைமுறையின்
வேர்களில் தஞ்சம் புக
கிளைவிரித்து வளரும்
நாளைய புருஷர்களின்
குருதியில் அமைதியை
நிலைநாட்டி நீடூடிகாலம்
'சாந்தி' ஊர்வலம் நடத்தட்டும்!
 
யுத்தம் கால்பதித்த
நாள் முதல்
மரண ஓலம் எழுப்பிய சத்தம்
அத்தேசத்தின்
பல சகாப்தங்களுக்கு
ஒலித்துக் கொண்டேயிருக்கும்!
 
பால்வடியும் பச்சிளம்
மலர்களில் மரணப்பயம்!
 
காகிதப் பூக்கள்
என்றெண்ணியா
அவர்களை - ரவைகள்
துளையிட்டுப்பார்த்தன!?
 
கிஞ்சிற்றும்
நெஞ்சமிருந்தால்
அதில் சொட்டேனம்
மனிதமிருந்தால்
மலராமலே வாடிப்போன
பிஞ்சு மொட்டுக்கள்
எத்தனை ரம்யத்தோடு
மலர்ந்திருக்கும்!
 
'சிறியா' நந்தவனப் பூக்கள்
இதழ்விரிக்கு முன்னே
இதழிதழாய்
உதிர்ந்து போன - அந்நாட்கள்
இரத்த வரிகளால் எழுதப்படட்டும்
இனியும் எழுதப்படாமலிருக்க!
 
               - அபூ அரீஜ்  (06.05.12)

Sunday, June 3, 2012

இரட்டைக் கிளவியான இன்பதுன்பம்!


கிசுகிசு வெனப்பேசி-பின்
கலகலவெனச் சிரித்தாய்!
சலசலவென வார்த்தைகாய்
மளமளவெனச் சொறிந்தாய்!

என்று என்னுள்ளதுதோடு நானே கதைத்துக் கொள்கிறேன் என்னுள் தொலைந்து போன நாட்களை நினைந்து.

திருதிருவென முழித்தேன்-கண்கள்
பலபலவென மிளிர
கதகதவென என்னுள் தீயொன்று
திபுதிபுவென சுட்டெரித்ததுவே!

கடந்துவிட்ட கருப்பு நாட்களை நினைத்த போது இன்னும் சூடாகவே இருக்கின்றது ஆற மறுத்த அந்த வடுக்கள்!

தரதரவென இழுத்தெறிந்த கொடுமை!
ஜலஜலவென இதயம் நொந்தொழுக
மசமசப்பாய் மனமும் உவப்பிழந்ததுவே!

நாட்டமின்மை எப்போதும் தானாக உருவாவதில்லை, தொடர் சறுக்களில் ஊனப்பட்டது மனசுதான் கால்களல்ல!

தளதளவென்ற வனப்பு நாட்களில்
வலவலவென்று பேசியன-இன்று
கறகறவென்றென் தொண்டைக்குள்
வரவர-சிவந்ததோ கண்கள்தான்!

கடந்துவிட்ட நாட்களை; அறுந்துவிட்ட பட்டத்தைப் போல் என்னாவிட்டால் இப்படித்தான் எண்ணிக் கொண்டே இருக்க வேண்டிவரும் எஞ்சிய நாட்களையும்!

                                      - அபூ அரீஜ்  (03.06.12)              

Sunday, December 12, 2010

மழலைச் செல்வங்கள்


குழந்தைச் செல்வங்கள் - அவர்கள்
குழுகுழுவென இதயத்தை நனைக்கும்
மழலைச் செல்வங்கள்!

கலகலவெனப் பேசி - மனசுகளை
பளபளவெனப் பூசும் கலைஞர்கள்!

குழந்தையின் அழுகை - ஒரு
இசையற்ற காவியம் - அது
இதயத்தைத் துளைத்து
கல்லையும் உருகச் செய்யும்!

குருகுருவென ஓடியாடி விளையாடும்
சிட்டுக் குருவிச் செல்வங்கள் - அவர்கள்
மனக்காயத்தின் தழும்புகளைக் கூட
புன்சிரிப்பின் பூரிப்பில் மாறச்செய்பவர்கள்!
- அபூ அரீஜ்

Wednesday, December 8, 2010

'மெத்தக் கூர்மை மழுமொட்டை'



அனாச்சாரங்களைச் சுமந்து வரும்
மேற்கத்தேயப் புயல் - இன்று
மனித இதயங்களை ஆபாசத்தால் நனைத்துவிட்டதால்
துவட்ட முடியாமல் தடுமாறுகின்றது இளைய சமூகம்!

ஆபாச அழுக்குகளில் சருக்கி விழுந்தோர் ஏறாலம்
போதனை ஊற்றுக்களில் கூட - அவர்களை
சலவை செய்ய சானாக்கிய மற்ற நிலை!

ஆடைக்காய் அலைந்து ஆலைகள் பல கண்டு
கோடைகளில் கூட ஆடைகளகற்ற பலகியோர் - இன்று
குத்தூசியாய்க் குத்தும் குளிர்காலத்தில் கூட
ஆடைகளகற்றி அலையும் மானிடர் பாரீர்!!

மேலெலுந்து செல்லும் மேற்கத்தேய ஆசானே!
'மெத்தக் கூர்மை மழுமொட்டை' என்பதைப் போல்
எல்லை கடந்த எழுச்சிதான் - உன்னை
எளிலற்ற பன்பாட்டின் ஏழ்மைக்குத் தள்ளியதோ?!

மனிதன் வளம் பெற - அங்கே
மனிதமன்றோ செழிக்க வேண்டும்
பாவம் அந்தோ மனதர்காள்!
போலியாய்ப் புனையப்படும் பகட்டுக்குள்
புரையோடிவிட்டது அவர்கள் எதிர்காலம்!

கிஞ்சிற்றும் வெற்கமில்லா தோரனையில்
கிழடுகள் கூட அரவணைக்கும்
கிழிந்த பன்பாடொன்றை - அவர்கள்
எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்!

மனிதத்தைத் தொலைத்துவிட்டு
மடமையை மட்டும் அறுவடைசெய்யும்
மட்டரகக் கலாச்சாரம் - மேற்கத்தேய
சித்தாந்தத்தில் செதுக்கப்படுகின்றன!

ஆபாசக் கலைஞன் செதுக்கும் சிற்பங்களுக்கு
சதைவியாபாரிகளின் சந்தைகளில் அமோக வரவேற்பு!
சஞ்சலம் கொண்ட உள்ளங்கள்
சானாக்கியமாய் கொள்வனவு செய்கின்றன!

வலைப் பூக்களின் வராந்தாக்களில்
வகைவகையாய்ப் பூத்திருக்கின்றன
வயது வந்தோர்க்கு மட்டுமாய் - அங்கே
இளசுகளில் எதிர்காலம் திருடப்படுகின்றன!

நாளையைத் தொலைத்து விட்டு
நறைத்த சிந்தனைகளை மட்டும்
மண்டைகளிலேற்றி மனிதங்களை மட்டும்
திருடிக் கொள்ளும் மடமைச் சமூகம்! - அவர்கள்தான்
வாழத்தெறிந்தவர்களாம்!!!
- அபூ அரீஜ்




Monday, April 12, 2010

ஒற்றுமை




உலகத்தாரின் குரல்கள் ஒலிக்கின்றன ஒற்றுமையாய்

நம் குரல்களும் ஒலிக்கின்றன - ஒற்றுமைக்காய்!

சாதித்தவர்கள் அவர்கள் - சருக்கி விழுந்தோர் நாம்தான்!!

பரிதவித்த ஓர் அப்பாவிச் சமூகமாய்

பாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறோம் - நம்மை

படித்த பாமர்களாய் ஆகிவிட்டோம் படிப்படியாக!

என் சமூகத்திற்கு நேர்ந்ததென்ன?

என் சமூகம் ஏன் தற்கொலை செய்யப்பார்க்கின்றதா?!

நானும், நீங்களும் சமூகத்தின் அங்கத்தவர்கள்!!

என் சமூகமே!

உன் எதிர்காலம் செழிக்க உனக்கு வேண்டும் இரு தகமைகள்:

1- இம்மையின் இன்னல்கள் அகல - ஒற்றுமையும்

2- மறுமையின் வளங்கள் செழிக்க - ஏகத்துவமும்.

இவ்விரண்டுக்கும் அர்ப்பணமாகட்டும் எம் எதிர்காலம்

சகோதரர்களே, கைகோர்ப்போம் நம் உருக்குளைந்த ஒற்றுமையை நிலைநாட்ட.

Sunday, March 22, 2009

ஈமானிய ஏக்கம்

ஈமானிய உள்ளங்களின் ஈரக்கனவுகள்
சாமானிய சங்கீதமாய் இசைக்கப்பட வேண்டாம்!
தேனாக இனிக்கும் காலம் தேடி
ஓயாப் பயணம் செல்லுதங்கே!

அஞ்சா நெஞ்சம் அறைந்த வேங்கையாய்
அஞ்ஞானம் அகற்ற புறப்பட்டதங்கே!
விஞ்ஞானம் பேசும் பேர்களுக்கெல்லாம்
மெஞ்ஞானமீந்து சொல்லுதங்கே!

மங்கா ஒளியுமிழும் விளக்குடனே
இருளகற்றி இறைமறை பயின்று
சங்காய் ஊதும் சத்தியத்தை
சாத்வீக சமூகத்திலே விதைத்தவாரல்லோ!

ஈமானிய உள்ளங்களின் ஈரக்கனவுகளை
இதமாய் புரிந்து ஈந்துதவும் மக்கள்தனை
இனிப்பாய் காணும் பொழுதுக்காய்
இமைக்கா கண்ணாய் கிடக்கிரோமய்யா!

Tuesday, February 10, 2009

மெளனங்கள்


முட்டைகளை
ஒத்திருக்கின்றன
மெளனங்கள்.

வெண்மையாலான ஓடு
வெளித்தெரியும்
சமாதானமாகவோ...சம்மதமாகவோ...!

உள்ளிருப்பு
தெரிவதில்லை
உடையும் வரை!

பொறுமை காத்து
பிரசவிக்கச் செய்யலாம்
புதிய பிறப்பை!

எனினும்..
உடைக்கப்பட்டே
உட்கொள்ளப்படுகின்றன
பெரும்பாலும்!

இன்னமும்
உடைக்கப்பட முடியாமலிருக்கும்
ஒற்றை முட்டையில்
உறைந்திருக்கலாம்
ஓர் மகா நிசப்தம்.


Thanks: பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)