Showing posts with label குர்ஆன். Show all posts
Showing posts with label குர்ஆன். Show all posts

Monday, August 5, 2013

குர்ஆன் ஓத கற்றுக்கொள்ள உதவும் மிகச்சிறந்த மென்பொருள்

குரான் ஓத தெரியாதவர்களுக்கு சிறந்த ஆன் லைன் மென் பொருள் கூட தமிழ் மொழியாக்கம் அனைவரும் பயன் பெறுங்கள்

http://www.houseofquran.com/qsys/quranteacher1.html
 
-SMB Sulthan

Saturday, December 15, 2012

குர்ஆனில் முரண்பாடுகளா?

                                                                                 ஆக்கம் : இப்னு குறைஷ்
நம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக!

இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. உலகில் தோன்றிய மதங்கள், கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களில் பெரும்பாலானவை தன் மீது ஏவப்பட்ட கேள்விக் கணைகளுக்கு விடை இல்லாமல் காலத்தால் நிலைபெறாமல் போனதையும், பல மதங்கள் மனிதவாழ்க்கை தத்துவங்களையும் அறிவியல் கோட்பாடுகளையும் வென்றெடுக்க முடியாமல் தவிப்பதையும், இன்னும் அதன் கொள்கைகள் மனிதக் கரங்களால் மாசுபடுத்தப் பட்டுள்ளதையும் நாம் அறிவோம். ஆனால் இத்தகைய அவலங்கள் அனைத்தையும் வென்றுநிற்கும் ஒரே மார்க்கமாக என்றும் திகழ்கிறது இஸ்லாம். ஏனெனில் இஸ்லாம் - ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் இசைவானதாக இவ்வுலகைப் படைத்த இறைவனால் அமைக்கப்பட்ட ஓர் உன்னத வாழ்க்கை நெறியாகும். அத்தகையை நெறிமுறைகளின் தொகுப்பே திருக்குர்ஆன். 14 நூற்றாண்டுகளாக திருமறை குர்ஆன்; தன்மீது ஏவப்படும் சவால்களுக்கு ஆணித்தரமான விடைகளை இவ்வுலகிற்கு அளித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய சவால்களில் ஒன்று 'குர்ஆன் வசனங்களில் முரண்பாடுகள்' என்ற சொத்தைவாதமும் ஆகும்.

திருமறை குர்ஆனின் ஒரேயொரு வசனம்கூட மனிதவாழ்க்கைக்கு பொருத்தமானதாக இல்லை என்றோ அல்லது அதில் ஒன்றோடொன்று முரண்படுகிறது என்றோ எக்காலத்திலும் நிரூபித்திட இயலாது. ஏனெனில் திருக்குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்டது. அல்லாஹ் தான் அருளிய திருமறையைப் பற்றி திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்

அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன் 4 : 82)

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். (திருக்குர்ஆன் 2 : 23)

எனவே ஒருவர் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றோடொன்று முரண்படுகிறது என்று கூறுவதும், திருக்குர்ஆன் இறைவேதமா என்று சந்தேகிப்பதும் அவரது அறியாமையைத்தான் காட்டுகிறது.
2;:253 VS 2:285 – முரண்பாடு எங்கே இருக்கிறது?
திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமாகிய சூரத்துல் பகராவின் 253 மற்றும் 285 வது வசனங்கள் ஒன்டோடொன்று மோதுவதாக கிருத்துவ ஊடகங்கள் முதல் மேற்கத்திய சிந்தனைவாதிகள் (?), நாத்திகம் பேசுபவர்கள் உட்பட தான் எந்த மதத்தில் உள்ளோம் என்பதைக்கூட அறியாதவர்கள், தங்கள் கொள்கையை வெளியே சொல்ல முடியாதவர்கள் வரை தவறாக சித்தரிக்கப்படுகிறது. அந்த இருவசனங்களும் பின்வருமாறு

அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;. அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்;. அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்;. அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்;. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான
்.(திருக்குர்ஆன் 2 : 253)

(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்'' என்று கூறுகிறார்கள். (திருக்குர்ஆன் 2 : 285)

இவ்விரு வசனங்களும் முரண்படுகிறது என்பவர்கள் அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம் என்று 2:253ல் கூறியிருக்க 2:285 வது வசனமோ ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை என்றல்லவா கூறுகிறது என்று விவாதம் செய்கிறார்கள்.

முதலில் வசனம் 2:253 ன் அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம் என்பதின் பொருள் என்ன என்பதை முதலில் கவனிக்கவேண்டும். அதன் பிறகு அதில் நாம் என்ற வார்த்தை யாரைக் குறிக்கிறது என்பதையும் ஆய்வு செய்யவேண்டும்.

அதுபோல வசனம் 2:285 ன் ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை என்பதின் பொருள் என்ன என்பதை அறிந்து விட்டு பிறகு அதில் நாம் என்ற வார்த்தை யாரைக் குறிக்கிறது என்பதையும் ஆய்வு செய்யதாலே இரு வசனங்களிலும் எந்த முரண்பாடும் இல்லை என்பதை மிகத் தௌ;ளத் தெளிவாக விளங்கலாம்.

திருமறையின் வசனம் 2:253 கூறும் மேன்மை, பதவி என்றால் என்ன?

ஒவ்வொரு நபிமார்களுக்கும்; அல்லாஹ் சில மேன்மைகளைக் கொடுத்திருந்தான். அதாவது சில நபிமார்களுக்கு பிறர் ஆச்சரியப்படும் வகையில் பற்பல அற்புதங்களைக் கொடுத்தும், சில நபிமார்களுக்கு பிரமாண்டமான ஆட்சி அதிகாரங்களைக் கொடுத்தும், சில நபிமார்களுக்கு அவர்களைப் பின்பற்றியோரின் எண்ணிக்கையாலும், சில நபிமார்களை அதிசய பிறப்பு மூலமும், சில நபிமார்களுக்கு நீண்ட ஆயுட்காலத்தைக் கொடுத்தும் மேன்மையாக்கினான்.

உதாரணமாக நபி மூஸா (அலை) அவர்களுக்கு இறைவனளித்த அற்புதங்களைக் கவனியுங்கள்.

அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
(திருக்குர்ஆன் 7 : 107)

மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
(திருக்குர்ஆன் 7:108)

அப்பொழுது நாம் ''மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்'' என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.
(திருக்குர்ஆன் 7:117)

மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு ''உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!'' என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன..
(திருக்குர்ஆன் 7:180)

''உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்'' என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். அவ்வாறு அடித்ததும் கடல் பிளந்தது (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
(திருக்குர்ஆன் 26:63)

இவ்வாறு பற்பல அற்புதங்களை அல்லாஹ் பல்வேறு நபிமார்களுக்கும் பல விதத்திலும் வழங்கியிருந்தான். நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளை மற்றும் அனுமதியின் படி சந்திரனை பிளந்தார்கள், நபி ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளை மற்றும் அனுமதியின் படி பிறவிக்குருடையும், வெண்குஷ்ட நோயையும் குணப்படுத்தினார்கள் என்றெல்லாம் திருமறை குர்ஆன் கூறுகிறது
–(பார்க்க திருக்குர்ஆன் 3:49)

ஆட்சி அதிகாரத்தைப் பொருத்த வரையில் நபி ஸூலைமான் (அலை) அவர்களைப் போன்று இறைவன் வேறு எவருக்கும் வழங்கியதில்லை என்பதற்கு உதாரணமாக

(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).
(திருக்குர்ஆன் 34:12)

அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. ''தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே'' (என்று கூறினோம்).
(திருக்குர்ஆன் 34 : 13)

இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம். இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்;.
(திருக்குர்ஆன் 21 : 81,82)

நபி ஆதம் (அலை) அவர்களையும் நபி நூஹ் (அலை) அவர்களையும் அல்லாஹ் 900 வருடங்களுக்கும் மேல் இவ்வுலகில் வாழச்செய்தான். அத்தகைய நீண்டதொரு வாழ்வை பிற நபிமார்களுக்கு அல்லாஹ் கொடுக்கவில்லை. நபி ஈஸா (அலை) அவர்களை எந்த தந்தையும் இல்லாமல் அல்லாஹ் அதிசயமாகப் பிறக்கவைத்தான். அவர்களை தொட்டில் பருவத்திலேயே பேசவும் வைத்தான். நபி ஆதம் (அலை) அவர்களுக்கோ தாயும் இல்லை தந்தையும் இல்லை. இத்தகைய அதிசயமான பிறப்பை மற்ற நபிமார்களுக்கு அல்லாஹ் வழங்கவில்லை.

ஒருநபிக்குக் கொடுத்த அற்புதத்தைப் போல் மற்றொரு நபிக்கு அல்லாஹ் ஏன் கொடுக்கவில்லை? என்று சிந்திப்பது அறிவுடமையாகாது. ஏனெனில் ஒருவருக்கு அற்புதங்களை கொடுப்பதும் அவரை மேன்மை படுத்துவதும் இறைவனின் விருப்பமாகும். இறைவனின் சுய விருப்பத்தில் அவனால் படைக்கப்பட்ட மற்றவர்கள் எதிர் கேள்வி கேட்கும் அளவுக்கு இறைவன் பலஹுனமானவன் அல்ல.

நபி மூஸா (அலை) அவர்கள் மாயாஜால மந்திரதந்திரங்கள் நிறைந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். அந்த மக்கள் அவ்வாறான நம்பிக்கையை மிகப் பிரம்மாண்டமாக நம்பியிருந்தார்கள். அக்கால மக்கள் அவ்வாறு மந்திரங்கள் புரிபவர்களை கடவுள் அளவிற்கு போற்றினார்கள். அம்மக்கள் எவற்றை பிரம்மாண்டம் என நம்பினார்களோ அவற்றை ஒன்றுமில்லை என்று உடைத்தெரிவதற்கு இத்தகைய அற்புதங்களை நபி மூஸா (அலை) அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டியதாயிற்று. இருப்பினும் இவ்வுலகைப் படைத்த அல்லாஹ்தான் வணங்குவதற்கு தகுதியுள்ளவன் என்பதை நபி மூஸா (அலை) அவர்கள் உட்பட மற்ற அனைத்து நபிமார்களும் மக்கள்முன் தங்களின் சத்தியப் பிரச்சாரத்தினால்தான் நிரூபித்தார்கள்.

நபி ஈஸா (அலை) அவர்கள் 'நாங்கள் தான் இவ்வுலகில் சிறந்த மருத்துவ வல்லுனர்கள்' என்று மார்தட்டிய மருத்துவர்கள் நிறைந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். அம்மருத்துவர்களுக்கு கண்சிகிச்சையும், குஷ்டநோயைக் குணப்படுத்துவதும் பெரும் சவாலாக இருந்தது. எனவே அல்லாஹ் மருத்துவ ரீதியான அற்புதத்தை நபி ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கினான்.

நபி முஹம்மது (ஸல்) அவர்களோ 'நாங்கள் தான் இவ்வுலகில் தலைசிறந்த கவிஞர்கள்' என்று பெருமை பாரட்டிக்கொண்ட கவிஞர்கள் நிறைந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். எனவே அல்லாஹ் தன் கட்டளைகளை தலைசிறந்த கவிஞர்கள் அனைவரையும் திக்குமுக்காடச் செய்து, உலகின் அனைத்து கவிநடைகளையும் விஞ்சும் அளவுக்கு, அரபி மொழியில் மிகவும் தரம்வாய்ந்த உயர்ந்த நடையில் எழுதப் படிக்கத் தெரியாத நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கினான். பிறகு திருக்குர்ஆன் 17:88 வது வசனத்தின் மூலம் ''இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது'' என்று (நபியே) நீர் கூறும் என்று சவால் விடுகிறான்.

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த காலஅளவு 63 ஆண்டுகள் மட்டுமே. இந்த 63 ஆண்டுகளில் தமது 40 வது வயதில்தான் அல்லாஹ்வினால் இறைதூதராக அறிவிக்கப்படுகிறார்கள். நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகளாகத்தான் இவ்வுலகில் பிரச்சாரம் செய்தார்கள். அவர்கள் பிரச்சாரம் செய்த அன்று முதல் இவ்வுலகம் முடியும் நாள்வரை நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை பின்பற்றியோரைக் கணக்கிட்டால் 900 வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்த நபி ஆதம் (அலை) அவர்களையும், நபி நூஹ் (அலை) அவர்களையும் பின்பற்றியவர்களைவிட எண்ணிக்கையால் பல்லாயிரக்கணக்கான மடங்குகள் அதிகமாகும். இவ்வாறு நபிமார்களில் அதிகமான மக்களால் பின்பற்றபட்டவர் என்ற சிறப்பையும் அல்லாஹ் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கொடுத்துள்ளான்.

எனவே இவ்வகையான அற்புதங்களை வைத்தும், பிரமாண்டமான ஆட்சி அதிகாரங்களைக் கொண்டும், அவர்களைப் பின்பற்றியோரின் எண்ணிக்கையாலும், சில நபிமார்களை அதிசய பிறப்பு மூலமும் வேறுபடுகிறார்களே தவிர அல்லாஹ் நபிமார்களில் குறிப்பிட்ட ஒருவரை தாழ்ந்தவர் என்றோ அல்லது மற்றவரை உயர்ந்தவர் என்றோ பாகுபாடாகக் கூறிடவில்லை. நபி மூஸா (அலை) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களைப் போன்று மற்ற நபிமார்களுக்கு அல்லாஹ் வழங்கவில்லை. அவ்வாறு ஏன் வழங்கவில்லை என்று முரண்டுபிடிப்பவர்களை நோக்கி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய மார்க்கம் அவர்களிடம் வந்த போது, ''மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை'' என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்களின் மூதாதையர்கள் நிராகரிக்க வில்லையா?
(திருக்குர்ஆன் 28:48)
இப்போது 2:253 வது வசனத்தை படியுங்கள்
அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;.....

அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம் என்பதில் நாம் என்ற வார்த்தை அல்லாஹ்வைக் குறிக்கிறது. அல்லாஹ்தான் நபிமார்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் பலவகையான மேன்மைகளைக் கொடுத்து அவர்களில் சிலரைவிட சிலரை மேன்மையாக்கி இருக்கின்றான் என்பது தெளிவாகிறது. அவ்வாறான மேன்மைகளைக் கொடுத்தது மனிதர்களாகிய நாம் அவர்களை பிரித்து வேற்றுமை பாராட்டுவதற்காக அல்ல மாறாக அதிலிருந்து படிப்பினை பெருவதற்காகத்தான் என்பதையும் விளங்கமுடிகிறது.

இதே வசனத்தின் (2:253) பிந்திய பகுதியில், ''அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்;. அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்;. அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்;. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்'' என்றும் கூறுகிறான்.
திருமறையின் வசனம் 2:285 கூறுவது என்ன?
(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்'' என்று கூறுகிறார்கள். (திருக்குர்ஆன் 2 : 285)

1. இதன் விளக்கமாவது, இறைதூதராகிய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனிடமிருந்து அவர்களுக்கு அருளப்பெற்ற திருக்குர்ஆனை இறைவனின் வார்த்தைகள் என்றும் அவைகள் அனைத்தும் உண்மையென்றும் நம்புகிறார்கள்.

2. மேலும் அல்லாஹ்வை மட்டும் கடவுளாகவும் நபி முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் இறுதித்தூதராகவும் ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வின் கட்டளையாகிய குர்ஆனையும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றும் (முஃமின்கள் எனப்படும்) இறைநம்பிக்கையாளர்களும் திருமறைக் குர்ஆனையும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் உண்மையென்று நம்புகிறார்கள்.

3. ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்'' என்று கூறுகிறார்கள் என்று அல்லாஹ் நபி முஹம்மது (ஸல்) அவர்களைப்பற்றியும் இறை நம்பிக்கையாளர்களைப் பற்றியும் இவ்வசனத்தில் சான்றிதழ் அளிக்கிறான்.

ஆகவே வசனம் 2:285 ன் ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை என்பதில் நாம் என்ற வார்த்தை முஸ்லிம்களைக் குறிக்கிறது. என்று கூறுகிறார்கள் என்ற வார்த்தையும் முஸ்லிம்கள் இவ்வாறு கூறுவதாகக் தெளிவுபடுத்துகிறது.


''அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(திருக்குர்ஆன் 3:84) என்று மற்றொரு வசனத்தின் வாயிலாக அல்லாஹ் இவ்வாறு முஸ்லிம்களுக்கு கட்டளையும் இடுகிறான்.

எனவே மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று வழியுருத்தும் இஸ்லாமிய மார்க்கத்தில், இறைதூதர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமை இல்லை என்று முஸ்லிம்கள் கூறுவதை இறைவன் தெளிவுபடுத்தும் விஷயத்தில், இறைதூதர்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரித்து வேறுபடுத்திடக்கூடாது என்ற இறைவன் கட்டளை இருக்கும்பொழுது மேற்கண்ட இருவசனங்கள் (2:253 – 2:285) முரண்படுவதாகக் கருதுவதுதான் முரண்பாடே தவிர திருக்குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை.

அதிமேதாவித் தனத்தின் உச்சகட்டம்.

இவ்வுலகின் ஒட்டுமொத்த பகுத்தறிவையும் முழுகுத்தகைக்கு எடுத்துள்ளதுபோல் தங்களை பகுத்தறிவாளர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துச் சொல்பவர்களை நோக்கி 'நம்பிக்கைகள் எல்லாம் உண்மையாகாது' என்றும் 'எதையும் கண்களால் பார்த்து அதை தொட்டு, அறிந்து, பிறகு நம்புவதே உண்மை' என்று கூறுவதையும் பார்க்கிறோம்.

இவ்வாறு கூறுபவர்களை நோக்கி பலவகையான கேள்விகள் நமக்கு எழுகின்றன. உதாரணமாக நாம் நம் பெற்றோர்களை நம்முடைய பெற்றோர்கள் என நம்பிக்கையின் அடிப்படையில்தான் நம்புகிறோம். இவ்விஷயத்தில் நாம் நம்மைத்தவிர்த்து பிறரை நம்பவேண்டும் அல்லது பிற யதார்த்த முடிவுகளை நம்பவேண்டும். நாம் இந்த உண்மையை அவர்களிடம் கூறினால் நாங்கள் டி.என்.ஏ (னுNயு) பரிசோதனைமூலம் அறிந்து கொள்வோம் என்ற பதில் வருகிறது.

நாங்கள் டி.என்.ஏ (DNA) பரிசோதனைமூலம் அறிந்து கொள்வோம் என்று வாதிப்பது அவர்களின் அறியாமையைத்தான்; காட்டுகிறது. இவ்வாறு கூறுபவர்கள் தங்கள் பெற்றோர்களை டி.என்.ஏ (DNA) பரிசோதனை மூலம்தான் அறிந்துகொண்டார்களா?. அப்படி டி.என்.ஏ (DNA) பரிசோதனைமூலம் அறிந்துகொள்ளவதாக இருந்தாலும் பரிசோதனையின் முடிவுகளை யதார்த்தமாக உண்மை என்று நம்பித்தான் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். இதைத்தான் நாம் நம்மைத்தவிர்த்து பிறரை நம்பவேண்டும் அல்லது பிற யதார்த்த முடிவுகளை நம்பவேண்டும் என்று கூறுகிறோம்.

'எதையும் கண்களால் பார்த்து அதை தொட்டு அறிந்து பிறகு நம்புவதே உண்மை' என்று கூறுபவர்களிடம், நீங்கள் சுவாசிக்கும் காற்றை எங்களுக்கு காட்டுங்கள், உங்களுக்கு அறிவு இருப்பதாக நம்பும் நீங்கள் அந்த அறிவை எங்களுக்கும் கொஞ்சம் காட்டுங்கள், உங்களுக்கு மூளை இருப்பதாகக் கருதும் நீங்கள் உங்களுக்கு மூளை இருக்கிறது என்பதை இவ்வுலகிற்கு நிரூபிக்கும் வண்ணம் எங்களின் கைகளுக்குத் தாருங்கள் இம்மூன்றை மட்டும் முதலில் எங்களிடம் கொண்டு வாருங்கள். அவைகளை நாங்கள் எங்கள் கண்களால் பார்த்து அவைகளை தொட்டு அறிந்து பிறகு நீங்கள் சுவாசிக்கின்றீர்கள், உங்களுக்கு அறிவு இருக்கிறது, உங்களுக்கு மூளையும் கூட இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம் என்று நாமும் விவாதித்தால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?.

எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான். எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்
. (திருக்குர்ஆன் 3:89,90,91)

எனவே 'நாங்கள் பகுத்திவாளர்கள்' எனக் கூறிக்கொள்பவர்களே இத்தகைய நிலையை விட்டுவிட்டு நீங்கள் திருக்குர்ஆனை திறந்த மனதுடன் ஆய்வு செய்யுங்கள். இஸ்லாம் எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பச் சொல்லவில்லை. [உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட அறிவியல் உண்மைகளில் 80 சதவீதம் உண்மைகள் 100 சதவீதம் சரியானதுதான் என்று கண்டறியப் பட்டுள்ளதாக வைத்துக்கொண்டால், எஞ்சியிருப்பது 20 சதவீத உண்மைகள்தான். அறிவியலில் ஒரு குறிப்பிட்ட உண்மையை பற்றிய விபரம் உடனடியாக கண்டறியப் படுவதில்லை. ஏனெனில் ஒரு உண்மையை உடனடியாக அது உண்மை என்று ஒப்புக் கொள்ளும் அளவிற்கோ அல்லது உடனடியாக அது பொய் என்று ஒதுக்கித் தள்ளும் அளவிற்கோ அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை.

இவ்வாறு மனித குலம் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவைக் கொண்டு - அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் இதுவரை அறிவியல் ரீதியாக சரி காணப்படாத 20 சதவீத வசனங்களில் - ஒரு சதவீத வசனம் கூட சரியானது அல்ல என்பதை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது. அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் என்பது சதவீதம் உண்மைகள் - 100 சதவீதம் சரியானதுதான் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் - எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் சரியானது அல்ல என்று அறிவியல் ரீதியாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே தர்க்க ரீதி விதியின்படி குர்ஆன் சொன்ன அறிவியல் உண்மைகளில் எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் - சரியானதாகவே இருக்க வேண்டும். மறுமை வாழ்க்கைப் பற்றி அருள்மறை சொல்லும் வசனங்கள் யாவும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத 20 சதவீத உண்மைகளுக்குள் அடங்கியுள்ளது. எனவே தர்க்க ரீதியாக இம்மை மறுமை வாழ்க்கை பற்றிய முஸ்லிம்களின் நம்பிக்கை சரியானதுதான் என்ற முடிவிற்கு வருவீர்கள்.
Quote By Dr. Zakir Naik]
முஸ்லிம்களின் கவனத்திற்கு...
திருமறை குர்ஆனின் அறைகூவலின் அடைப்படையில் திருக்குர்ஆன் வசனங்கள் முரண்படுவதாக எவராலும் நிரூபித்திட இயலாது என்பதை திட்டவட்டமாக அறிந்துள்ள நாம் அவ்வாறு திருக்குர்ஆன் வசனங்கள் முரண்படுவதாகக் கூறுபவர்களின் விவாதங்களை மிகக் கவனமாக ஆய்வு செய்யவும் கடமைப்பட்டுள்ளோம். யூத கிருத்துவ ஊடகங்கள் இஸ்லாத்திந்கு எதிரான போக்கில் தங்களை முழுமூச்சுடன் ஈடுபடுத்தி செயல்படுகின்றன. இன்றைய இன்டெர்நெட் உலகில் இஸ்லாத்திற்கு எதிராக இணையதளங்கள் மூலம் முழுஅளவிலான தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தைப்பற்றிய தவறான தகவல்களை அதில் பிரசுரிப்பதோடு மட்டுமல்லாது குர்ஆன் நபிமொழிகளில் அடித்தல் திருத்தல்களையும் இடைச்சொருகள்களையும் ஏற்படுத்தி இஸ்லாம் தவறானவற்றை போதிப்பதாக அறிவிக்கின்றனர். அதற்கோர் சிறந்த உதாரணம்தான் திருக்குர்ஆனின் சூரத்துல் பகராவின் 253 மற்றும் 285 வது வசனங்கள் ஒன்டோடொன்று மோதுகிறது என்ற பிரச்சாரம். இந்த இருவசனங்களைப் பற்றி இஸ்லாமிய உலகால் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புகள் பின்வருமாறு...
From YUSUFALI Translation (2:253): Those messengers We endowed with gifts, some above others: To one of them Allah spoke; others He raised to degrees (of honour); to Jesus the son of Mary We gave clear (Signs), and strengthened him with the holy spirit. If Allah had so willed, succeeding generations would not have fought among each other, after clear (Signs) had come to them, but they (chose) to wrangle, some believing and others rejecting. If Allah had so willed, they would not have fought each other; but Allah Fulfilleth His plan.
From PICKTHAL Translation (2:253): Of those messengers, some of whom We have caused to excel others, and of whom there are some unto whom Allah spake, while some of them He exalted (above others) in degree; and We gave Jesus, son of Mary, clear proofs (of Allah's Sovereignty) and We supported him with the holy Spirit. And if Allah had so wiled it, those who followed after them would not have fought one with another after the clear proofs had come unto them. But they differed, some of them believing and some disbelieving. And if Allah had so willed it, they would not have fought one with another; but Allah doeth what He will.
From YUSUFALI Translation (2:285): The Messenger believeth in what hath been revealed to him from his Lord, as do the men of faith. Each one (of them) believeth in Allah, His angels, His books, and His messengers. "We make no distinction (they say) between one and another of His messengers." And they say: "We hear, and we obey: (We seek) Thy forgiveness, our Lord, and to Thee is the end of all journeys."
From PICKTHAL Translation (2:285): The messenger believeth in that which hath been revealed unto him from his Lord and (so do) believers. Each one believeth in Allah and His angels and His scriptures and His messengers - We make no distinction between any of His messengers - and they say: We hear, and we obey. (Grant us) Thy forgiveness, our Lord. Unto Thee is the journeying.
மேலே கோடிட்டுக் காட்டியுள்ளபடி 285 வது வசனத்தை புரிந்து படிப்பவர்களுக்கு 253 வசனம் முரண்பாடாகத் தெரியாது. இவ்வசனத்தை முரண்பாடாகக் கூறவேண்டும் என்ற சிந்தனையில் We make no distinction between any of His messengers என்பதை குழப்பவாதிகளால் பிரித்துக்காட்டி எவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுகிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
Mislead Translation from Anti-Islamic Websites: The messenger believeth in that which hath been revealed unto him from his Lord and (so do) believers. Each one believeth in Allah and His angels and His scriptures and His messengers - We make no distinction between any of His messengers - and they say: We hear, and we obey. (Grant us) Thy forgiveness, our Lord. Unto Thee is the journeying.
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும் அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.
(திருக்குர்ஆன் 2:79,168,169)

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
(திருக்குர்ஆன் 3:139)

 
அல்லாஹ் மிக்க விளங்கியவன்.
 

விந்தை நபியின் விண்வெளிப்பயணம்

விஞ்ஞானம் விழித்திடும்முன்
விந்தை நபியின் விண்வெளிப்பயணம்
                                                                                                                    ஆக்கம் : இப்னு சாஹிபா
இறைமொழியும் நபிமொழியும்
தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகவும் பரிசுத்தமானவன். (மஸ்ஐpதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால் நாம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக உமது இரட்சகனாகிய அவனே செவியேற்கிறவன் பார்க்கிறவன்.
(
அல்குர்ஆன் 17:1)

நான் மக்காவில் (என்னுடைய வீட்டில்) இருக்கும் போது என்னுடைய வீட்டின் முகடு திறக்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதன்வழியாக இறங்கி என் நெஞ்சைப் பிளந்து ஜம்ஜம் தண்ணீரால் அதைக் கழுவினார்கள். ஈமானும் அறிவும் நிரம்பிய ஒரு தங்கப்பாத்திரத்தைக் கொண்டு வந்து (அதிலுள்ள ஈமானையும், அறிவையும்) என் உள்ளத்தில் வைத்து பின்பு மூடிவிட்டார்கள். (புகாரி)
நீண்ட அறிவிப்பும், நிறைந்த நன்மைகளும்
'புராக்' என்னிடத்தில் கொண்டு வரப்பட்டது. - அது நீளமான வெள்ளை நிறமுள்ளது. (அதன் உயரம்) கழுதையை விட உயரமானதும் கோவேறு கழுதையை விட சிறியதுமான ஒரு மிருகமாகும், அதனுடைய பார்வை படும் தூரத்திற்கு அது காலடி எடுத்து வைக்கும் - பைத்துல் முகத்தஸ் வரைக்கும் அதில் நான் ஏறிச்சென்றேன். நபிமார்கள் (ஏறிச்செல்லும்) வாகனங்களைக் கட்டும் கதவின் துவாரத்தில் அதைக் கட்டிவிட்டு பள்ளிக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுதேன். (தொழுது முடிந்ததும்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் மது உள்ள பாத்திரத்தையும் பாலுள்ள பாத்திரத்தையும் என்னிடம் கொண்டு வந்து (அவ்விரண்டில் ஒன்றை) தேர்ந்தெடுக்கும்படி கூறினார்கள். நான் பாலுள்ள பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தேன், இயற்கையை (இஸ்லாத்தையும் உறுதிப்பாட்டையும்) தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என ஜிப்ரீல் (அலை) அவர்கள் (எனக்கு) கூறினார்கள்.

ஆதி பிதாவும் ஆரம்ப வானமும்

பின்பு என்னை வானத்தின் பக்கம் அழைத்துச்சென்று (முதல்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (தட்டுபவர்) யார்? எனக் கேட்கப்பட்டது. ஜிப்ரீல் எனக் கூறினார்கள். உங்களிடம் இருப்பவர் யார்? எனக் கேட்கப்பட்டது. முஹம்மது எனக்கூறினார்கள். அவருக்கு வானத்தின் பக்கம் ஏறி வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதா? என (அம்மலக்கு) கேட்டார். ஆம் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அப்போது எங்களுக்கு வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்தே ஆதம் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி நல்லதை கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

இரண்டாம் வானமும் இறைத்தூதர் இருவரும்

பின்பு இரண்டாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (இரண்டாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது இரண்டாவது வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே என் பெரியம்மாவின் (தாயின் சகோதரி) இரு மக்களாகிய மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களையும், ஸகரிய்யா (அலை) அவர்களின் மகன் யஹ்யா (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவ்விருவரும் எனக்கு வாழ்த்துக் கூறி நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

மூன்றாம் வானமும் அழகு நபிச் சிகரமும்

பின்பு மூன்றாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (மூன்றாம்;) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது மூன்றாவது வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே யூசுஃப் (அலை) அவர்களை பார்த்தேன் அவருக்கு அழகின் அரைவாசி கொடுக்கப்பட்டிருந்தது. அவர் எனக்கு வாழ்த்துக் கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

நான்காம் வானமும் இத்ரீஸ் (அலை)

பின்பு நான்காவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (நான்காம்;;) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது நான்காவது வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே இத்ரீஸ் (அலை) அவர்களை பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஐந்தாம் வானமும் ஹாரூன் (அலை)

பின்பு ஐந்தாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (ஐந்தாம்;;;) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது ஐந்தாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே ஹாரூன் (அலை) அவர்களை பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஆறாம்; வானமும் மூஸா (அலை)

பின்பு ஆறாம்; வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (ஆறாம்;;;;) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது ஆறாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே மூஸா (அலை) அவர்களை பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஏழாம்; வானமும் இப்ராஹீம்(அலை)

பின்பு ஏழாம்; வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (ஏழாம்;;;) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது ஏழாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே இப்ராஹீம்(அலை) அவர்கள் தன் முதுகை பைத்துல் மஃமூரின் பக்கம் சாய்த்தவர்களாக வைத்திருப்பதை நான் பார்த்தேன். அதில் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் மலக்குகள் நுழைகின்றார்கள் அவர்கள் மீண்டும அங்கே வருவதில்லை.
சித்ரத்துல் முன்தஹா
பின்பு சித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்திற்க்கு என்னைக் கொண்டு சென்றார்கள், அந்த (மரத்தின்) இலைகள் யானையின் காதுகளைப் போன்றும் அதனுடைய பழங்கள் பெரும் குடமுட்டிகளைப் போன்றும் இருந்தது. அல்லாஹ்வின் அருள் அதனைச் சூழ்ந்திருந்த காரணத்தினால் அதன் நிறமே மாறியிருந்தது. அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் அதன் அழகை வர்ணிக்கமுடியாது.

இறைச்தூதுச் செய்தியும் கண்குளிர்ச்சித் தொழுகையும்.

அல்லாஹ் எனக்கு வஹி அறிவிக்க நாடியதையெல்லாம் வஹீ அறிவித்து ஒவ்வொரு நாளும் எனக்கு ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான்.
ஐம்பதிலிருந்து ஐந்து வரை
(அதன்பிறகு) மூஸா (அலை) அவர்கள் இருக்கும் (வானம்) வரை நான் இறங்கி வந்தேன். உமது உம்மத்துக்கு உமது இறைவன் எதனைக் கடமையாக்கினான்? என் மூஸா (அலை) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். ஐம்பது நேரத்தொழுகையை என நான் கூறினேன். இதை உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள். நானும் எனது உம்மத்தவர்களைச் சோதித்துவிட்டேன். ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச் சென்று இதனைக் குறைத்து வாருங்கள் எனக் கூறினார்கள். நான் என் இரட்சகனிடம் திரும்பிச் சென்று என் இரட்சகனே! தொழுகையின் எண்ணிக்கையை என் உம்மத்துக்குக் குறைத்து விடுவாயாக என நான் கேட்டேன். ஐந்து நேரத் தொழுகையாக அல்லாஹ் குறைத்தான். மூஸா (அலை) அவர்களிடம் நான் மீண்டும் வந்து ஐந்து நேரத்தொழுகையை அல்லாஹ் குறைத்து விட்டான் எனக் கூறினேன். இதையும் உமது உம்மத்தவர்கள் சுமக்க மாட்டார்கள் ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச் சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். முஹம்மதே! ஒரு நாளைக்கு ஐந்து நேரத் தொழுகைகள் தொழவேண்டும், ஒரு நேரத்தொழுகைக்கு பத்து நேரத் தொழுகை தொழுத நன்மைகள் கிடைக்கும். ஐந்து தொழுகைக்கும் ஐம்பது தொழுகையின் நன்மை கிடைக்கும் என அல்லாஹ் (எனக்கு) சொல்லும் வரை உயர்ந்தவனாகிய எனது இரட்சகனுக்கும் மூஸா (அலை) அவர்களுக்கும் மத்தியில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். யார் ஒரு நன்மையான காரியத்தை செய்ய நினைத்து அதை செய்யவில்லையென்றால் அவருக்கு ஒரு நன்மையும், யார் அதைச் செய்கின்றாரோ அவருக்கு பத்து நன்மைகளும் கிடைக்கும், யார் ஒரு பாவம் செய்ய நினைத்து அதை செய்யவில்லையென்றால் அவர் குற்றம் செய்ததாக எழுதப்படமாட்டாது, யார் அதைச் செய்கின்றாரோ அவருக்கு ஒரு குற்றம் மாத்திரமே எழுதப்படும். மூஸா (அலை) அவர்கள் (இருக்கும் வானம்) வரை நான் இறங்கி வந்து நடந்ததைக் கூறினேன். உமது இரட்சகனிடம் திரும்பிச் சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். என் இரட்சகனிடம் மீண்டும திரும்பிச் செல்வதற்கு நான் ;வெட்கப்படுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்)
நபியவர்கள் விண் வெளிக்கு சென்றது நபித்துவத்திற்க்கு ஒரு பெரும் அத்தாட்சி
விண்ணை முட்டிடும் விஞ்ஞான முன்னேற்றங்களை இன்றைய அறிவியல் எட்டினாலும் வானத்தை எட்டிப்பார்க்க முடிந்ததே தவிர தொட்டுப்பார்க்க முடியவில்லை. ஆனால் விஞ்ஞானத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாத காலத்தில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருளால் இரவின் ஒரு சிறு பகுதியில் ஏழு வானங்களையும் கடந்து சென்று வந்தது அவர்கள் இறைத்தூதர் என்பதற்க்கு மிகப்பெரும் அத்தாட்சியாகும்.
ஆதாரமற்ற செய்திகளும் சேதாரமற்ற சன்மார்க்கமும்
அன்புள்ள சகோதர சகோதரிகளே!

இதுவரைக்கும் இஸ்ரா-மிஹ்ராஜ் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீது கூறும் செய்திகளைப் படித்தீர்கள். இஸ்ரா என்பது இரவில் பிரயாணம் செய்தல் என்பதாகும். அதாவது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் முகத்துசுக்கு புராக்கில் சென்ற பிரயாணத்திற்க்கு சொல்லப்படும் மிஃராஐ; என்பது எழு வானங்களை கடந்து சென்றதற்கு சொல்லப்படும். இஸ்ரா என்பது குர்ஆனில் கூறப்பட்டிருக்கின்றது, மிஃராஜ் என்பது ஹதீதில் கூறப்பட்டிருக்கிறது. இவ்விரண்டும் குர்ஆன் ஹதீதின் மூலம் கூறப்பட்ட செய்தி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அது எந்த மாதம் எத்தனையாம் தேதி நிகழ்ந்தது என்பது பற்றி குர்ஆனிலோ ஹதீதிலோ கூறப்படவில்லை. அது எப்போது நிகழ்ந்தது என்பது பற்றி அறிஞர்கள் பல கருத்துக் கணிப்புகளைக் கூறுகின்றார்கள். அவைகள் பின்வருமாறு.

1. நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த வருடம் (இதை தப்ரி இமாம் கூறுகின்றார்கள்.
2. நபித்துவம் கிடைத்து ஐந்து வருடத்திற்க்கு பின் (இதை நவவி, தப்ரி இமாம்கள் கூறுகின்றார்கள்).
3. நபித்துவம் கிடைத்து பத்து ஆண்டுகளுக்குப் பின் ரஜப் மாதம் பிறை 27ல் (இதை அல்லாமா மன்சூர் பூரி அவர்கள் கூறுகின்றார்கள்).
4. நபித்துவம் கிடைத்து 12ம் ஆண்டு ரமழான் மாதத்தில் (ஹிஜ்ரத் செல்வதற்க்கு 16 மாதங்களுக்கு முன்).
5. நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் (ஹிஜ்ரத் செல்வதற்க்கு 14 மாதங்களுக்கு முன்).
6. நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தில் (ஹிஜ்ரத் செல்வதற்க்கு ஒரு ஆண்டுக்கு முன்).

இஸ்ரா, மிஹ்ராஜ் என்பது எப்போது நடந்தது என்பது பற்றி அறிஞர்கள் தற்போது கூறிய கருத்துக்கள் ஒரு கணிப்பே தவிர எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் சொல்லப்பட்டதல்ல. இஸ்ரா, மிஹ்ராஜ் நடந்த நாள் எப்போது என்று நாம் அறிந்திருந்தாலும் கூட அந்த நாளை சிறப்புக்குரிய நாளாக அல்லது சிறப்புக்குரிய மாதமாக கருதுவதாக இருந்தால் அது அல்லாஹ்வின் மூலமாக அல்லது நபி (ஸல்) அவர்கள் மூலமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும், நபி (ஸல்) அவர்கள் இஸ்ரா, மிஃராஜ் சென்று வந்ததர்க்கு பிறகு குறைந்தது பத்து ஆண்டாவது உயிருடன் வாழ்ந்திருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு தடவையாவது மிஃராஜூக்கு விழா நடத்தியதாக அல்லது அந்த நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதியதாக நாம் பார்க்கவே முடியாது. நபி (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்று எப்படி நம்மிடம் மார்க்கமாக முடியும்? இன்று முஸ்லிம்களில் பலர் ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜ் இரவாக எண்ணி அந்த இரவில் அமல்கள் செய்தால் மற்ற நாட்களில் கிடைக்கும் நன்மைகளை விட அதிக நன்மைகள் கிடைக்கும் என நினைத்து தொழுகை, குர்ஆன் ஓதுவது, உம்ரா, நோன்பு, தர்மம் போன்ற அமல்களை அதிகம் செய்கின்றார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட உணவுகளை சமைத்து தர்மமும் செய்கின்றார்கள். இப்படிச்செய்வது இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கிய பித்அத் என்னும் பெரும்பாவமாகும்.

யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றைப் புதிதாக ஆரம்பிக்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில்:-
யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றைச் செய்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(முஸ்லிம்)

நமது ஒவ்வொரு வணக்கமும் ஏற்றுக்கொள்ளப்படுவதள்கு இரண்டு நிபந்தனைகள் அவசியம்.

1. அல்லாஹ்வுக்காக அந்த வணக்கம் செய்யப்படவேண்டும்.
2. நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி செய்யப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகளின்படி ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜின் இரவாக கொண்டாடுவது தவறானதாகும். காரணம் அது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த ஒரு வணக்கம் அல்ல. ஆகவே! ரஜப் மாதத்தின் 27ம் நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதாமல் மற்ற சாதாரண நாட்களைப்போன்றே கருத வேண்டும்.
படிப்பினை தரும் தொழுகை
மிஃராஜ் மூலமாக தொழுகை மிக முக்கியமான வணக்கம் என்பதை நாம் தெரிந்து அதை சரிவர நிறைவேற்ற வேண்டும். அதாவது அல்லாஹ் எல்லா வணக்கங்களையும் நபி (ஸல்) அவர்கள் பூமியில் இருக்கும்போது வஹீ மூலமாக கடமையாக்கினான். ஆனால் தொழுகையை ஏழு வானங்களுக்கும் மேல் தன் நபியை அழைத்து அங்கே ஐம்பது நேரத் தொழுகையாக கடமையாக்கி பின்பு அதை ஐந்தாக குறைத்து இந்த ஐந்திற்க்கும் ஐம்பது நேரத் தொழுகையின் நன்மைகளை வாரி வழங்கி நம்மீது கருணை காட்டியிருக்கின்றான். இந்த ஐந்து நேரத் தொழுகைகளைச் சரிவர நிறைவேற்றும் மக்கள் மிகவும் குறைவானவர்களே. ஆகவே ஐங்காலத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி பித்அத்துக்கள், தடுக்கப்பட்டவைகள் போன்ற எல்லாத் தவறுகளையும் தவிர்ந்து நடந்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் முற்றாகக் கட்டுப்பட்டு ஈருலக வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக.

Saturday, November 3, 2012

ශුද්ධවූ අල්කුර්ආනයෙහි සිංහල පරිවර්තනය (mp3) වශයෙන්

අස්සලාමු අලෙයිකුම්

ශුද්ධවූ අල්කුර්ආනයෙහි සිංහල පරිවර්තනය (mp3) වශයෙන්

මෙය සෙයිලාන් මුස්ලිම් තරුණ සංවිධානයෙහි තවත් යෝධ පියවරක්.

Best Regards
yayuthumaga team

கண்டுபிடிக்கப்பட்ட ஏடு...(வரு முன் உரைத்த இஸ்லாம்)

PJ
'அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்' என்று நீர் நினைக்கிறீரா? சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது 'எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!' என்றனர். எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம். திருக்குர்ஆன் 18:9,10,11
 
இந்த வசனத்தில் குகையில் தங்கியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் ஏட்டுக்குரியவர்கள் (சுவடிக்கு உரியவர்கள்) என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
 
ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. 'அந்த ஏடு' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.
 
அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே 'அந்த ஏட்டுக்குரியவர்கள்' என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் 'அந்த ஏடு' என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.
 
அது என்ன சுவடி? அது என்ன ஏடு? என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் சமீப காலங்களில் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.
 
'சாவுக்கடல் சாசனச் சுருள்கள்' என்ற தலைப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி.யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளி பரப்பப்பட்டது. அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது.
 
இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அதன் விபரங்கள்:
 
1947-ம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப்பகுதி கும்ரான்' மலைப்பகுதி என்று அழைக்கப்படுகிறது.
 
ஆட்டுக் குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது, மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப்பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும், மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
 
அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னரின் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.

ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.
 
கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்.
 
இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப்பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும், முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.
 
அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், 'அந்தச் சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப்பட்டு அவை ஆராயப்பட வேண்டும்' என்று விண்ணப்பித்தார்.
 
ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள், 'அது தனியார் சொத்து' என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர். கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.
 
இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான்' மலைப் பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.
 
1952-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்து விட்டன. பதினைந்தாயிரம் ஙஹய்ன்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ள் (கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாகத் தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.
 
கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்தச் சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளைக் குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்புச் செய்து வந்தது.
 
பல கிறித்தவ அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்டபோதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.
 
இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்தச் சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன. இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.
 
தோல் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை ஙண்ஸ்ரீழ்ர்ச்ண்ப்ம் (நுண்ணிய படச்சுருள்) எடுத்தார்கள்.
 
அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
 
1990-ம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப்பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்.
 
இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணிய போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.

அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்குமூலம் அளிக்கின்றார். இத்தனை காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.
 
மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவியைக் கொண்டு அந்தச் சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய 100 ஙஹய்ன்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ள் (கையெழுத்துப் பிரதி)களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.
 
அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.
 
மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும், ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
 
அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும், அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகின்றது.
 
கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச் சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கிறித்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.
 
இந்தச் சடங்குகளுக்கும், ஏசுவின் பிரச்சாரத்திற்கும், கொள்கைக் கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் 'பவுல்' என்பவரால் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை.
 
மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப்படும் அனைத்துக் கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானவை. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலை முறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.
 
மேற்கண்டவாறு அறிஞர் ஐஸ்மேன் கூறி வரும் போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, ஒற் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம்ள் ணன்ழ்ஹய்' அது குர்ஆனை உறுதிப்படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப்பட்டு மறு காட்சி காட்டப்படுகின்றது.

இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞர் பேசும் போது, ஒற் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம்ள் ஒள்ப்ஹம்' அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப்படுகின்றது.
 
ஆகவே இந்தச் சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும், இஸ்லாத்தையும் உண்மைப்படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதைப் பார்வையாளர்கள் அறிய முடியவில்லை.
 
அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.
 
ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்ஜீல் எனும் வேதத்தை வழங்கியதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம்.
 
ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.
 
பைபிளின் பல இடங்களில் 'ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை இயேசு பிரசங்கித்தார்' என்று கூறப்பட்டுள்ளது. எந்த இறை வேதத்தை மறைத்தார்களோ அதைத் தான் இயேசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.

'குர்ஆனை ஒத்திருக்கின்றது' என்பது தான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.
 
இஞ்ஜீல் எனும் வேதத்தைத் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.
 
அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.
 
மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.