Showing posts with label இத்திபாஃ. Show all posts
Showing posts with label இத்திபாஃ. Show all posts

Thursday, March 15, 2012

அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா?

எழுதியவர்: எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்


அல் குர்ஆன், ஸுன்னா இரண்டுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். இவை இரண்டும் அல்லாஹ்விடமிருந்து வந்த வேத வெளிப்பாடு (வஹி)யாகும். இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கும் போது அவற்றுக்கிடையே முரண்பாடிருக்க வாய்ப்பேயில்லை. முரண்பாடு இருப்பதாகத் தோன்றினால் நாம் புரிந்து கொண்டதில்தான் எங்கோ தவறு விட்டிருப்போமே தவிர குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸிலோ எந்தக் குறைபாடும் இருக்காது. இருக்க வாய்ப்பும் இல்லை. இதுதான் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.


சில வழிகெட்ட பிரிவினர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி பல ஹதீஸ்களை மறுத்தனர். இதனை அந்தந்தக் காலத்தில் வாழ்ந்த நல்லறிஞர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அதே நேரம் மறுக்கவும் செய்தனர். நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஆதாரபூர்வமான ஹதீஸை முஃதஸிலாக்கள் எனும் வழிகேடர்கள் மறுத்தனர். நவீன காலத்தில் அபூரய்யா எனும் வழிகேடனும் அவனது சிந்தனையால் தாக்கப்பட்ட சில சிந்தனையாளர்களும் இந்த தவறான வழிமுறையைக் கையாண்டு பல ஹதீஸ்களை மறுத்து வருகின்றனர்.


நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை முஃதஸிலாக்கள் மறுக்கும் போது “நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரைப் பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்” (25:8) என்ற வசனத்தை ஆதாரமாகக் காட்டினர். அநியாயக்காரர்கள்தான் நபி(ஸல்) அவர்களைச் சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறினர். எனவே, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸை ஏற்க முடியாது என்றனர். வழிகேடர்களான முஃதஸிலாக்கள் இப்படிக் கூறினாலும் நல்ல வழி நடந்த நல்லறிஞர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இந்த ஆயத்தும், ஹதீஸும் முரண்படுவதாகத் தென்படவும் இல்லை. “அவர்களின் உள்ளங்கள் பொடுபோக்காக இருக்கின்றன. “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லையல்லவா? நீங்கள் பார்த்துக் கொண்டே சூனியத்திடம் செல்கிறீர்களா?” என்று அநியாயம் செய்தோர், தமக்குள் இரகசியமாகப் பேசிக்கொண்டனர். (21:3)


இங்கே அநியாயங்கள் நபி(ஸல்) அவர்களை உங்களைப் போன்ற மனிதர் என்று கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான். நபி(ஸல்) அவர்கள் எம்மைப் போன்ற மனிதர்தான் என்பதைக் குர்ஆன் பல இடங்களில் உறுதி செய்கின்றது. “நான் உங்களைப் போன்ற மனிதன்தான். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியான உங்கள் இரட்சகன் ஒருவனே என்று எனக்கு (வஹி) அறிவிக்கப்படுகிறது என (நபியே) நீர் கூறுவீராக". (18:110)


“நான் உங்களைப் போன்ற மனிதர்தான். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியான உங்கள் இரட்சகன் ஒரே ஒருவன்தான் என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது என (நபியே!) நீர் கூறுவீராக!” (41:6)


அநியாயக்காரர்கள் நபி(ஸல்) அவர்களை மனிதர் என்று கூறினார்கள் என்பதற்காக நபி(ஸல்) அவர்களை மனிதன் என்று கூறும் அனைவரும் அநியாயக்காரர்களாகிவிடுவார்களா? இந்தக் காபிர்கள் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து மனிதர் என்று கூறிய கூற்று சரியானது. ஆனால் அவரது தூதுத்துவத்தை மறுப்பதற்காகவே இப்படிக் கூறினர். எனவே தண்டிக்கப்படுகின்றனர். இது போன்ற வசன அமைப்புக்களைக் குர்ஆனில் பல இடங்களில் காணலாம்.


மக்கத்து இணைவைப்பாளர்களில் சிலர் கழா கத்ரை தமது இணை வைப்புக்குச் சாதகமான ஆயுதமாகப் பயன்படுத்தினர். அல்லாஹ் நாடியிருந்தால் நாம் இணைவைத்திருக்க மாட்டோம். ஹலாலானவற்றை ஹராமாக்கியிருக்கமாட்டோம் என்று கூறினர். அவர்கள் கூறிய கூற்று சரியானதே! அல்லாஹ் நாடியிருந்தால் இணைவைத்திருக்க மாட்டார்கள். எனினும் இந்த வார்த்தையைத் தவறான நோக்கத்தில் அவர்கள் பயன்படுத்தியதால் அவர்களைக் குர்ஆன் பொய்யர்கள் என்கின்றது.


“அல்லாஹ் நாடியிருந்தால் நாமோ, நமது மூதாதையர்களோ இணைவைத்திருக்கமாட்டோம். (ஆகுமான) எதையும் விலக்கியிருக்கவும் மாட்டோம்” என்று இணைவைத்தோர் கூறுவர். இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தோரும் நமது தண்டனையை சுவைக்கின்ற வரை பொய்ப்பித்துக் கொண்டேயிருந்தனர். “உங்களிடம் ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா? (இருந்தால்) அதை எமக்கு வெளிப்படுத்துங்கள். நீங்கள் வெறும் யூகத்தையே பின்பற்றுகின்றீர்கள். நீங்கள் கற்பனை செய்வோரேயன்றி வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (6:148) நபி(ஸல்) அவர்கள் குறித்து அந்த அநியாயக்காரர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று சொன்னார்கள். இதன் மூலம் நபி(ஸல்) அவர்களது தூதுத்துவத்தை முழுமையாக நிராகரித்து சூனியம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டதனால் உளறிய உளறலாக அவர்களது போதனையைச் சித்தரிக்க முற்படுகின்றனர்.


அவர்களது அந்தக் கூற்றுக்கும் ஹதீஸ் சொல்லும் செய்திக்கும் சம்பந்தமே இல்லை. எனவேதான் புஹாரி, முஸ்லிம் போன்ற பெரும் பெரும் மேதைகளுக்கெல்லாம் இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகத் தென்படவில்லை. ஒரு ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவது போல் தென்பட்டால் அவற்றுக்கிடையே இணக்கம் காண வேண்டும். இணக்கம் காண முடியாவிட்டால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளன. இரண்டையும் நான் நம்புகின்றேன் என்று ஈமான் கொள்ள வேண்டும். இவற்றுக்கிடையே முரண்பாடு இல்லை. இருந்தாலும் நான் புரிந்து கொண்டதில்தான் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது என்று எண்ணி மௌனம் காக்க வேண்டும். இந்த உண்மையைத் தெளிவாக விளக்குவதற்காக நாம் குர்ஆனிலிருந்து சுமார் 10 உதாரணங்களை உங்கள் முன் வைக்கின்றோம். ஏனெனில் குர்ஆனில் எந்த முரண்பாடும் இல்லை என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை.


“இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்தித்துணர வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் அவர்கள் இதில் அதிகமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்” (4:82)


குர்ஆனில் சில வசனங்கள் மற்றும் சில வசனங்களுடன் முரண்படுவது போல் தென்படலாம். ஆனால் அதில் எந்த முரண்பாடும் இருக்காது. இருக்கவும் முடியாது. முரண்படுவதாகத் தோன்றினாலும் புரிந்து கொண்டதில்தான் தவறு ஏற்பட்டிருக்கும். எமக்கு முரண்பாட்டைக் களைய முடியாவிட்டாலும் இரண்டும் உண்மை என்று ஈமான் கொள்ள வேண்டும். குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுக்கும் இந்தப் போக்கு ஆபத்தானதாகும். இந்த சிந்தனை முற்றிப் போனால் ஈற்றில் இதே அணுகுமுறையில் குர்ஆனையும் அணுகி குர்ஆனையும் நிராகரிக்கும் அல்லது முழுமையாக நம்பாத நிலை ஏற்படும். பெரிய சிந்தனைச் சிக்கலில் மூழ்க நேரிடும். (நஊதுபில்லாஹ்) இன்று தவ்ஹீத் வட்டாரத்தில் பாமர மக்கள் கூட இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது. அந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று வாய் கூசாமல் கூறிவருகின்றனர்.


முரண்பாடுகளைக் களைந்து இணக்கம் காண்பதென்பது துறைசார்ந்த அறிஞர்களுக்கே உரிய பணியாகும். இந்த சிந்தனையைப் பரப்புகின்றவர்கள் அளவுகோளைக் கூறிவிட்டோம் அதற்குப் பின்னர் நீங்கள் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் எனப் பாமர மக்களது கரங்களில் இந்தத் தவறான அளவு கோளைக் கொடுத்தவர்கள் நீச்சல் தெரியாதவனை ஆழ் கடலில் தள்ளிய துரோகத்தைச் செய்துள்ளனர். இது கரையேற முடியாத கடல் போன்ற ஆழமான அம்சம் என்பதைப் பாமரர்களும் புரிந்து கொள்ள இந்தப் பத்து உதாரணங்களும் உதவும் என்று நம்புகின்றேன். 01. மறுமையில் காபிருக்கு பார்வை உண்டா? “மறுமை நாளில் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் தமது முகங்களால் (நடந்து வருபவர்களாகவும் அவர்களை) நாம் ஒன்று சேர்ப்போம்” (17:97) இந்த வசனம் வழிகேடர்கள் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள் என்பதை உறுதி செய்கின்றது.


மார்க்கப் போதனைகளை புறக்கணித்தவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவார்கள் என்பதைப் பின்வரும் வசனம் உறுதி செய்கின்றது. இந் வசனங்களைப் பார்கும் போது காபிர்கள், வழிகேடர்கள், வேத போதனையைப் புறக்கணித்தவர்கள், குருடர்களாக எழுப்பப்படுவார்கள் என்பது உறுதியாகின்றது. ஆனால், மற்றும் பல வசனங்கள் மறுமையில் காபிர்கள் பார்ப்பார்கள் என்று கூறுகின்றது. “குற்றவாளிகள் நரகத்தைப் பார்த்து, “நிச்சயமாக தாம் இதில் விழக்கூடியவர்களே என்பதை அறிந்து கொள்வர். அதை விட்டும் தப்பித்துக்கொள்ளும் எந்த இடத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.” (18:53)


குற்றவாளிகள் நரகத்தைப் பார்ப்பார்கள் என இந்த வசனம் கூறுகின்றது. “மேலும், பதிவேடு (அவர்கள் முன்) வைக்கப்படும். அதில் உள்ளவற்றினால் அஞ்சியவர்களாக குற்றவாளிகளை நீர் காண்பீர். இன்னும் அவர்கள், “எமக்கு ஏற்பட்ட கேடே! இப்பதிவேட்டிற்கு என்ன ஆனது! (எங்கள் செயல்களில்) சிறியதையோ, பெரியதையோ அது பதிவு செய்யாமல் விட்டு வைக்கவில்லையே! என்று கூறுவர். மேலும், தாம் செய்தவற்றை தம் முன்னால் கண்டு கொள்வர். இன்னும் உமது இரட்சகன் எவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.” (18:49) குற்றவாளிகள் தமது பதிவேட்டைப் பார்ப்பர் என்பதை இந்த வசனம் உறுதி செய்கின்றது.


குற்றவாளிகள் நரகத்தைக் கண்டது மட்டுமன்றி மறுமையில் அவர்கள் பார்ப்பார்கள், கேட்பார்கள், பேசுவார்கள் என்பதைப் பின்வரும் வசனம் எடுத்துக்காட்டுகின்றது. “குற்றவாளிகள் தமது இரட்சகன் முன்னிலையில் தலை குனிந்தவர்களாய் நிற்பதை நீர் பார்ப்பீரானால், “எங்கள் இரட்சகனே! நாங்கள் பார்த்துவிட்டோம். நாங்கள் செவிசாய்த்துவிட்டோம். நீ எங்களை (உலகிற்கு) மீட்டிவிடு (அவ்வாறு செய்தால்) நாங்கள் நல்லறம் புரிவோம். நிச்சயமாக நாம் உறுதியாக நம்பிக்கை கொள்வோம்” (என்று அவர்கள் கூறுவதை நீர் காண்பீர்.)” (32:12) இங்கே குற்றவாளிகளே பார்த்தோம்ளூ கேட்டோம் என்று கூறுகின்றனர். எனவே அவர்கள் பார்த்தார்கள்ளூ கேட்டார்கள்; பேசினார்கள். ஆனால், ஆரம்பத்தில் கூறிய (17:97) ஆம் வசனம் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் எழுப்பப்படுவர் என்று கூறுகின்றது. இரண்டும் நேருக்கு நேர் முரண்படுவதாகத் தென்படுகின்றது. “அவர்கள் நம்மிடம் வரும் நாளில் எவ்வளவோ தெளிவாகக் கேட்பார்கள்! எவ்வளவோ தெளிவாகப் பார்ப்பார்கள்! ஆனால், இன்றைய தினம் அநியாயக்;காரர்கள் மிகத் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கின்றனர்.” (19:38) இந்த வசனம் மறுமை நாளில் அவர்கள் தெளிவாகப் பார்ப்பார்கள், தெளிவாகக் கேட்பார்கள் என்று கூறுகின்றது. அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள் என்ற வசனத்தை மறுப்பது போன்று இவ்வசனம் அமைந்துள்ளது.


(நஊதுபில்லாஹ்) இப்போது நாம் என்ன செய்வது? இரண்டில் ஒன்றை மறுத்து மற்றதை ஏற்பதா? அல்லது முரண்படுகின்றது என்று கூறி இரண்டையும் மறுப்பதா? அல்லது இரண்டுக்கும் இணக்கம் கண்டு இரண்டையும் ஏற்பதா? என்று கேட்டால் மூன்றாவதாகக் கூறியதுதான் சரியான முடிவாக இருக்கும். ஒரு வேளை இரண்டையும் இணைத்து எம்மால் இணக்கம் காண முடியாவிட்டால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தது. இரண்டும் அல்லாஹ்வின் வார்த்தை என்று நான் ஈமான் கொள்கின்றேன் என்று கூறி நம்ப வேண்டும்.


இந்த அடிப்பiயில் இந்த இரண்டு கருத்துக்களையும் தரும் வசனங்களையும் சில அறிஞர்கள் பின்வருமாறு இணக்கம் காண முயல்கின்றனர்.

1. அவர்கள் எழுப்பப்படும் போது குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் எழுப்பப்படுவர். பின்னர் அவர்களுக்கு அல்லாஹ் பார்வையையும், பேச்சையும் செவிப்புலனையும் கொடுப்பான். அப்போதுதான் நரகத்தைப் பார்த்து அஞ்சி கத்திக் கதறி அவர்கள் முழுமையாக வேதனையை அனுபவிக்க முடியும். இது அருள் அல்ல தண்டனையை முழுமையாக அடைவதற்கான வழியாகும். அவர்கள் குருடர்களாக இருப்பார்கள் என்பது ஒரு சந்தர்ப்பம். பார்ப்பார்கள், பேசுவார்கள் என்பது வேறொரு சந்தர்ப்பம். எனவே, முரண் இல்லை என்ற அடிப்படையில் அறிஞர் அபூஹய்யான்(ரஹ்) போன்றவர்கள் விளக்க மளிக்கின்றார்கள்.

2. அவர்கள் தமக்கு மகிழ்வளிக்கும் எதையும் காணவும் மாட்டார்கள். கேட்கவும் மாட்டார்கள்! தமக்குப் பயனளிக்கும் எதையும் பேசவும் மாட்டார்கள்! உலகத்தில் இருக்கும் போது சத்தியத்தைப் பார்க்காமலும், கேட்காமலும், பேசாமலும் இருந்தது போல் மறுமையில் இப்படி இருப்பர். சத்தியத்தைக் காணாதவர்கள் குருடர்களாகவும், சத்தியத்தைக் கேட்காதவர்கள் செவிடர்களாகவும், கூறப்படுவதுண்டு ஒன்று இருந்தும் அதன் மூலம் பயன்பெறாமல் இருப்பது இல்லாமல் அவை இருப்பதற்கு சமமானதாகும். இந்த அடிப்படையில் அவர்கள் குருடர்கள், ஊமையகள், செவிடர்கள் என்று கூறப்படுவதாக இப்னு அப்பாஸ்(ரழி), ஹஸன் அல் ஆலூஸி(ரஹ்) போன்றோர் கூறுகின்றனர்.

3. மற்றும் சிலர் இதனை வேறொரு கோணத்தில் பார்க்கின்றனர். நரகவாதிகள் நரகத்திற்குப் போன பின்னரும் பேசுவர். அப்போது அல்லாஹ் அவர்களைப் பேசாமல் தடுத்துவிடுவான். “அதிலேயே நீங்கள் சிறுமையடைந்து விடுங்கள், என்னுடன் பேசாதீர்கள் (என்று கூறுவான்.)” (23:108 “அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருந்ததின் காரணமாக (எமது) விதி அவர்கள் மீது நிகழ்ந்துவிடும். எனவே, அவர்கள் பேசமாட்டார்கள்.” (27:85) அல்லாஹ்வின் ஏற்பாடு இருக்கும் வரை பார்ப்பர்ளூ பேசுவர்ளூ கேட்பர். அல்லாஹ்வின் தடை வந்த பின்னர் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் மாறிவிடுவர்.


இந்த வசனங்களை ஒருவர் சாதாரணமாகப் பார்க்கும் போது நேருக்கு நேர் முரண்படுவது போன்று தோன்றலாம். ஆனால் முரண்பாடு இல்லை என்பதை அறிய ஆழமான ஆய்வுப் பார்வை தேவைப் படுகின்றது. இதனால் பாமரர்கள் புரிந்து கொண்டு ஆழமறியாமல் காலை விடும் ஆபத்தான வேலையை விட்டும் ஒதுங்கிக் கொள்வது அவரவர் அவரவரது ஈமானையும் மார்க்கத்தையும் பாதுகாக்கப் பெரிதும் உதவும்.


02. மறுமையில் விசாரிக்கப்படுவார்களா? “எவர்களுக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ, அவர்களை நிச்சயமாக நாம் விசாரிப்போம். மேலும், அத்தூதர்களையும் நாம் விசாரிப்போம்.” (7:6) இந்த வசனம் தூதர்களும், தூதர்கள் அனுப்பப்பட்ட சமூகங்களும் அதாவது அனைத்து மனிதர்களும் விசாரிக்கப்படுவார்கள் என்று கூறுகின்றது. “உமது இரட்சகன் மீது சத்தியமாக, அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அவர்கள் அனைவரையும் நாம் விசாரணை செய்வோம்”(15:92-93) இந்த வசனத்தில் அனைவரும் விசாரிக்கப்படுவர் என்று சத்தியம் செய்து கூறப்படுகின்றது. “மேலும், அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள். நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் (என்று கூறப்படும்.)” (37:24) “அவன் அவர்களை அழைக்கும் நாளில், “தூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் அளித்தீர்கள்?” எனக் கேட்பான்.” (28:65) இந்த வசனங்கள் அனைத்தும் மறுமையில் கேள்வி கணக்கு, விசாரனை இருக்கின்றது என்று கூறுகின்றது.


ஆனால் பின்வரும் வசனங்கள் இதற்கு மாற்றமாக அமைந்திருப்பது போன்று தோன்றுகின்றது (நஊதுபில்லாஹ்). “வலிமைமிக்க அரசனிடம் உண்மையான இருப்பிடத்தில் இருப்பார்கள்.” (55:39) முரண்படுவது போல் தோன்றுவதை இங்கே குறித்த முரண்பாட்டை நீக்குவதற்காக தெளிவு பெறுவதற்காக) என அடைப்புக் குறி போடப்பட்டுள்ளது. அடைப்புக்குறி போட விரும்பாதவர்கள் மனிதனிடமும், ஜின்னிடமும் அவனது குற்றம் குறித்து விசாரிக்கத் தேவை இருக்காது என மொழியாக்கம் செய்துள்ளனர்.


“குற்றவாளிகள் தங்களது பாவங்கள் குறித்து (தெளிவு பெறுவதற்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்.” (28:78) இந்த வசனம் குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள் என்று கூறுகின்றது. அனைவரும் விசாரிக்கப்படுவார்கள் என்றும் மனிதனோ, ஜின்னோ விசாரிக்கப்படமாட்டார்கள் என்றும் குர்ஆனே கூறுகின்றது. மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டுமே நேருக்கு நேர் முரண்படுவதாகவே தோன்றும். ஆனால் இரண்டுக்குமிடையில் முரண்பாடு இல்லை என்பதுதான் உண்மையாகும். நாம் உடன்பாடு கண்டாலும், காணாவிட்டாலும் கூட இரண்டுக்குமிடையில் முரண்பாடு இல்லை என்பதும் இரண்டும் இறை வார்த்தைதான் என்பதும் நூற்றுக்கு நூறு உண்மையாகும்.


இந்த இருவித கருத்தைத் தரும் வசனங்களுக்குமிடையில் பின்வருமாறு இஸ்லாமிய அறிஞர்கள் இணக்கம் காண முனைந்துள்ளனர்.

1. கேள்விகள் இரண்டு வகைப்படும். ஒன்று, தகவலை அறியச் செய்வதற்காகவும், செய்திகளைச் சொல்வதற்காகவும் கேட்கப்படும் கேள்வி. இந்தக் கேள்வி குற்றவாளிகளிடம் கேட்கப்படமாட்டாது. அடுத்து கேட்பதன் மூலம் கேட்கப்படுபவர்களைக் கேவலப்படுத்தும் கேள்வி. இது குற்றவாளிகளிடம் கேட்கப்படும் என்று கூறப்படும் வகையைச் சார்ந்த கேள்வியாகும். குற்றவாளிகளிடம் கேட்கப்படுவதாகக் கூறப்படும் கேள்விகளை அவதானித்தால் இந்த உண்மையை அறியலாம்.


“மேலும், அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள். நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் (என்று கூறப்படும்.)” (37:24-55) “இது சூனியமா? அல்லது நீங்கள் பார்க்க முடியாதவர்களா?” (52:15)


“நிராகரித்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்தின் பால் இழுத்துக்கொண்டு வரப்படுவர். அவர்கள் அங்கு வந்தவுடன் அதன் வாயில்கள் திறக்கப்படும். “உங்களது இரட்சகனின் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டி, உங்களது இந்நாளின் சந்திப்பை உங்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” என அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பர். அ(தற்க)வர்கள், “ஆம். (வந்தனர்) எனக் கூறுவர். எனினும் வேதனையின் வாக்கு நிராகரிப்பாளர்கள் மீது உறுதியாகிவிட்டது.” (39:71)


“அது கோபத்தால் வெடித்துவிடப் பார்க்கின்றது. அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், “உங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா?” என அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள்.” (67:8)


இந்தக் கேள்விகள் தகவல் பெறுவதற்காகக் கேட்கப்படும் கேள்விகள் அல்ல. இவை கேட்கப்படுபவர்களை இழிவுபடுத்துவதற்காகக் கேட்கப்படும் கேள்விகளாகும்.


நபிமார்களும் விசாரிக்கப்படுவதாக குர்ஆன் கூறுகின்றது. இது தகவல் பெறுவதற்கோ, கேட்கப்படுபவரை இழிவு படுத்துவதற்காகவோ கேட்கப்படமாட்டாது. இது அவருடன் சம்பந்தப்பட்ட சமூகத்தில் உள்ள கெட்டவர்களை இழிவு படுத்துவதற்காகவே கேட்கப்படும் கேள்வியாகும். உதாரணமாக, உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தைகள் என்ன குற்றத்திற்காக நீங்கள் கொல்லப்பட்டீர்கள் என்று விசாரிக்கப்படுவர். (81:9) இது அவர்களுக்கு எதிரான விசாரணை அல்ல. இது அவர்களைக் கொன்ற அவர்களது பெற்றோர்களை இழிவுபடுத்தக் கேட்கப்படும் கேள்வியாகும். இந்த அடிப்படையில் நபிமார்களும் பின்வருமாறு விசாரிக்கப்படுகின்றனர்.


“தூதர்களை அல்லாஹ் ஒன்று சேர்க்கும் நாளில் “நீங்கள் என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?” என்று கேட்பான். அ(தற்க)வர்கள், “எங்களுக்கு எவ்வித அறிவும் இல்லை. நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன்” எனக் கூறுவார்கள்.” (5:109) எனவே, கேள்வி உண்டு என்பது அவர்களை இழிவுபடுத்தும் கேள்வி உண்டு என்கின்றது. கேள்வி இல்லையென்பது தகவல் பெறுவதற்காக எந்தக் கேள்வியும் கேட்க வேண்டிய தேவை இருக்காது என்பது குறித்துப் பேசுகின்றது. இரண்டும் வெவ்வேறு விடயம் பற்றி உண்டு, இல்லை என்று பேசுவதால் இரண்டுக்குமிடையில் முரண்பாடு இல்லை. நபிமார்களிடம் கேட்கப்படும் கேள்வி அவர்களுடன் சம்பந்தப்பட்ட சமூகத்திலிருந்த கெட்டவர்களை இழிவுபடுத்துவதற்கான கேள்வியாகும்.


2. மற்றும் சிலர் இதனை இப்படி விளக்குகின்றனர். மறுமையில் பல கட்ட நிகழ்வுகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றில் விசாரிக்கப்படுவர், சிலவற்றில் விசாரிக்கப்படமாட்டார். எனவே, இதில் முரண்பாடு இல்லை என்று கூறுகின்றனர்.


03. கேள்வி உண்டு என்று கூறப்படுவது அடிப்படையான அம்சங்கள் தொடர்பானவை. கேள்வி இல்லையென்று கூறப்படுவது மேலோட்டமான சாதாரணமான அம்சங்களுடன் தொடர்புபட்டவை என்று மற்றும் சில அறிஞர்கள் பிரித்து நோக்குகின்றனர். இவ்வாறு நோக்கும் போது முரண்பாடு நீங்கிவிடுவதைக் காணலாம். இந்த இணக்கம் காணும் வழியை ஒருவர் அடைந்தாலும், அடையாவிட்டாலும் குர்ஆனின் வசனத்தை மறுக்க முடியாது! இவ்வாறே குர்ஆனுக்கு ஸஹீஹான ஹதீஸ் முரண்படுவது போல் தென்பட்டாலும் இணக்கம் காண முயல வேண்டும் முடியாவிட்டால் இரண்டுமே வஹி என்பதால் இரண்டையும் ஏற்கின்றேன் என ஈமான் கொள்ள வேண்டும். இந்த ஆக்கத்தில் முரண்பாடு போல் தோன்றும் ஆனால் முரண்பாடு இல்லாத சுமார் பத்து அம்சங்களை குர்ஆனிலிருந்து முன்வைப்பதாக நான் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன்.


இஸ்லாமிய அறிஞர்கள் இது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட தகவல்களை முன்வைத்துள்ளனர். இது ஆழம் காண முடியாத கடல் போன்ற ஓர் அம்சம். சாதாரண பொது மக்கள் தமக்கு அறிவோ, ஆற்றலோ, விபரமோ இல்லாத இது போன்ற அம்சங்கள் விடயத்தில் நிதானமான போக்கைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இவற்றைக் கூறுகின்றேன். மற்றும் சில உதாரணங்கள் தொடர்ந்து வரும்…இன்ஷா அல்லாஹ்!

Monday, July 19, 2010

மதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

- எம். றிஸ்கான் முஸ்தீன் ஸலபி
1) நபியவர்களிடம் பிராத்தித்தல் அல்லது தனது கஷ்டத்தை போக்குமாறு, தனது தேவையை நிறைவு செய்து தருமாறு உதவி தேடி வேண்டுதல் வைத்தல் ஆகிய அனைத்தும் அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்கப்பட வேண்டியவைகளாகும்। காரணம் பிரார்த்தனை எமது மார்க்கத்தில் ஒரு வணக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நபியவர்களே பின்வருமாறு கூறினார்கள் ‘ துஆ (பிரார்த்தனை) அது ஒரு வணக்கமாகும்.’ அபூதாவூத், திர்மிதி.

எனவே வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்யப்பட வேண்டியதாகும்। இது அல்லாஹ்வுக்குக் கொடுக்கக் கூடிய உரிமை. இதனை யாராவது மற்றவர்களுக்கு கொடுத்து விடுவாரேயானால் அவர் அல்லாஹ்வின் உரிமையில் கை வைத்தவர் ஆகிவிடுவார். அதே வேலை இவ்வாறு அல்லாஹ் அல்லாதவரை அழைத்து பிராத்திக்கும்போது (அது நபியாக இருந்தாலும்) அல்லாஹ்வோடு நபியை இணையாக்கி விட்டோம் என்ற அல்லாஹ் மன்னிக்காத ஷிர்க் என்ற பாவத்தை செய்தவர்களாக கணிக்கப்பட்டு விடுவோம்.

நபியவர்கள் கூட எங்களைப் போன்று சாதாரணமாக தனது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டிருக்கின்றார்கள்। பொதுவாக கப்ரிலே அடங்கப்பட்டிருக்கின்ற யாரிடமும் எமது தேவையை முன்வைக்க முடியாது. நபியவர்கள் கப்ரிலே ‘பர்ஸஹ்’ (திரையிடப்பட்ட வாழ்கையில்) இருக்கின்றார்கள். இவ்வாழ்கை எவ்வாறு இருக்கும் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரியும். இந்த ‘பர்ஸஹ்’; உலக வாழ்க்கைகும் நாம் அனைவரும் எழுப்படும் மறுமை வாழ்க்கைக்கும் இடைப்பட்ட ஒரு வித்தியாசமான வாழ்க்கையாகும்.

எனவே உயிரோடு நபியவர்கள் இருக்கும் போது ஸஹாபாக்கள் நபியவர்களிடம் சென்று யா ரஸுலுல்லாஹ் எனக்காக அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள் என்று கேட்டதை ஆதாரமாக கொண்டு நாமும் எமது தேவையை நபியவர்களிடம் சென்று கேட்க்க முடியாது। காரணம் இப்பொழுது நபியவர்கள் இருக்கும் வாழ்க்கையை நாம் யாருமே அறியமாட்டோம். அதே வேலை பிரார்த்தனை என்ற வணக்கத்தை அல்லாஹ் அல்லாதவரிடம் செய்ய முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதே வேலை மதீனாவில் இருக்கூடிய சில இடங்களை மக்கள் தாமாகவோ அல்லது தமது உலமாக்கள் மூலமாகவோ இது பாத்திமா (ரழி)யின் கபுரு, இது அலி (ரழி) யின் கப்ர், இது இன்ன ஸஹாபியின் கப்ர் என்று நினைத்துக் கொண்டு அந்த இடங்களுக்குச் சென்று அவர்களிடம் தமது தேவைகளை கடிதங்களில் எழுதி கட்டி வைப்பதும் அல்லது துனிகளில் வைத்து கட்டி வைப்பதையும் காண்கின்றோம்।

(மொழி பெயர்ப்பாளனின் அனுபவம்: 2009ம் ஆண்டு ஹஜ்ஜின் போது ‘ஹன்தக்’ பிரதேசத்தில் ஹாஜிகளுக்கு மொழிபெயர்பாலனாக கடமையாற்றிய போது அல்லாஹ்வை மறந்து ஸஹாபாக்களிடம் தமது தேவைகளான நோய், காதல் பிளவு போன்றவற்றை முறையிட்டு எழுதியிருந்த கடிதங்களை கண்கூடாக பார்க்கக் கிடைத்தது।) எனவே இது மிகப் பெரும் ஷிர்க் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

2) நபியவர்களின் கப்ர் இருக்கும் இடத்திற்கு செல்லும் போது இரண்டு கைகளையும் நெஞ்சிலே வைத்து தொழுகையில் நிற்பது போன்று நிற்பது கூடாது। அல்லாஹ்வின் முன்னிலையில் மாத்திரம் தான் இவ்வாரு சிறுமையாக பணிவை வெளிக்காட்டி தொழுகையில் நிற்க வேண்டும். நபியவர்களுடைய தோழர்கள் நபியவர்களுடைய கப்ரை தரிசிக்க வரும் போது இவ்வாறு இரு கைகளையும் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு வரவில்லை. இச்செயலின் மூலம் நன்மை கிடைக்கும் என்றால் ஸஹாபாக்கள் நிச்சயமாக செய்திருப்பர். எனவே நாமும் இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

3) நபியவர்களது கப்ரை சூழவுள்ள சுவரை அல்லது ஜன்னல்களை தடவுதல் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு செயலாகும்। இவ்வாரான ஒரு வழிகாட்டலை நபியவர்கள் எமக்கு போதிக்கவில்லை. அதே வேலை எமக்கு முன்னிருந்தவர்கள் கூட இவ்வாறு தொட்டு முகர்ந்து கொள்ளவில்லை. மாறாக இது எம்மை ஷிர்க் எனும் இணைவைத்தலுக்கு அழைத்துச் சென்று விடும். இவ்வாறு செய்யக் கூடியவர்கள் நபியவர்கள் மீதுள்ள அன்பினால் நான் இவ்வாறு செய்கின்றேன் எனலாம். ஆனால் நபியவர்கள் மீதுள்ள அன்பு ஒவ்வொரு முஸ்லிமினதும் உள்ளத்தில் இருக்க வேண்டும். தனது பிள்ளைகள், பெற்றோரை விடவும் நபியவர்களை அன்பு வைக்க வேண்டும். ஆனால் அந்த அன்பை இவ்வாறு சுவரை, ஜன்னலை தொட்டு முகர்ந்து வெளிப்படுத்த முடியாது. அன்பை ஒரு முஸ்லிம் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்றால் நபியவர்களை முழுமையாக பின்பற்றுவதன் மூலம் தான் அல்லாஹ்வின் அன்பைக் கூட பெறமுடிகின்றது.அல்லாஹ் இதனை பின்வருமாறு கூறுகின்றான்.

(நபியே!) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும் அல்ல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்। (ஆல இம்ரான்-31)

நபியவர்களை நல்ல முறையில் பின்பற்றுவதன் மூலமாகத்தான் அவர்களது அன்பையும் அல்லாஹ்வின் அன்பையும் பெறமுடிகின்றது என்பதை மேற்படி வசனத்தின் மூலம் விளங்கலாம்। நபியவர்களின் மீது அன்பு வைத்தலைப் பற்றி பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன. ‘யார் ஒருவர் தனது தந்தை, பெற்றோர், பிள்ளைகள் மற்றும் உலக மக்கள் அனைவரையும் விடவும் என்னை நேசிக்காதவரை முஃமினாக மாட்டார்.’ புகாரி, முஸ்லிம்.இதை விட ஒருபடி மேலேரி உமர் (ரழி) அவர்களுக்கு தனது உயிரை விட என்னை நேசிக்க வேண்டும் என்று நபியவர்கள் வழிகாட்டினார்கள். புகாரி.

காரணம் நாம் இன்று முஸ்லிமாக இருக்கின்றோம் என்றால் அதற்கு நபியவர்களைக் கொண்டுதான் அந்த பாக்கியத்தை அல்லாஹ் எமக்கு வழங்கியுள்ளான்। உலகில் இருக்கக்கூடிய மார்க்கங்களில் உண்மையான மார்க்கத்தை பின்பற்றுவது மிகப் பெறும் அருட்கொடையாகும். எனவே இந்த அருட்கொடையை நபியவர்களின் மூலமாக பெற்ற நாம் அவர்கள் காட்டித்தந்த மார்க்கத்தை தூயவடிவில் பின்பற்ற வேண்டும். எமது இபாதத்துக்களை அவர் சொல்லித்தந்த அமைப்பிலே மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் நபியை நேசிப்பவராக முடியும். ஒருவரை நேசிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு அவருக்கு மாறு செய்யும் போது அது அவர் மீது வைத்துள்ள உண்மையான நேசமாக முடியாது. அவரை ஏமாற்றுவதாகத் தான் இருக்க முடியும்.

இஸ்லாத்திலே எந்த ஒரு செயலும் நல்ல அமல் என்ற அந்தஸ்தை அடைய வேண்டும் என்றால் மேலும் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றால் அதற்கு இரு நிபந்தனைகள் இருக்கின்றன।

1) செய்யக் கூடிய செயல் அல்லாஹ்வுக்காக மட்டும் என்ற தூய எண்ணம் (இஹ்லாஸ்)2) குறித்த செயல் நபியவர்கள் காட்டித்தந்த அடிப்படையில் எந்த கூட்டல் குறைத்தலும் இல்லாமல் செய்தல் (முதாபஆ)

இவை இரண்டில் ஏதாவது ஒன்றில் குறை ஏற்படும் போது குறித்த செயலை எவ்வளவு பிரயத்தனங்களுக்கு மத்தியில் செய்திருந்தாலும் அதற்கு அல்லாஹ்விடத்திலே எந்த பெருமதியும் இல்லாது போய்விடும்।

ஆல இம்ரான் அத்தியாயத்தின் 31ம் வசனமாகிய
(நபியே!) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்।

இவ்வசனத்தை சில அறிஞர்கள் சோதனையான வசனம் என்கிறார்கள்। இமாம் ஹஸனுல் பஸரி அவர்கள் குறிப்பிடும் போது ‘சிலர் தான் அல்லாஹ்வை விரும்புவதாக சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அல்லாஹ் அவர்களை இவ்வசனத்தின் மூலம் சோதிக்கின்றான்.’

இமாம் இப்னு கஸீர் அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது ‘நபியவர்களின் வழியை பின்பற்றாது அல்லாஹ்வை விரும்புகின்றோம் என வாதிடுவோருக்கு இந்த கண்ணியமான வசனம் தீர்ப்பளிக்கின்றது। நபியவர்கள் கொண்டு வந்த அந்த உண்மையான மார்க்கத்தை தனது எல்லா சொல், செயலும் பின்பற்றாத வரை இவ்வாதம் பொய்பிக்கப்படுகின்றது. புகாரியிலே பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸிலே நபியவர்கள் கூறும்போது (யார் எமது விடயத்திலே (மார்க்கத்தில்) எமது அனுமதி இல்லாமல் ஒரு செயலை செய்கின்றாரோ அது நிராகரிக்கப்படும்.)

எனவே தான் மேற்படி வசனத்திற்கு விளக்கம் கூறும் சிலர் ‘நாம் ஒன்றை விரும்புவதை விட நம்மை (எவர் விரும்புகின்றாரோ அவரை) விரும்புவது முக்கியமாகும்’ எனவே அல்லாஹ்வை நாம் விரும்புகின்றோம் என வாதிடுவதை விட்டு விட்டு அல்லாஹ் எம்மை விரும்புவதற்கு காரணமாக இருக்கும் நபியவர்களை பின்பற்றுதல் எம்மில் வந்தாக வேண்டும்’ என்றார்।

நபியவர்களது கப்ரைச் சூழவுள்ள சுவர்களை தொட்டு முகர்வதைப் பற்றி இமாம் நவவி அவர்கள் கூறும் போது ‘ இது மார்க்கத்திற்கு முறனான கண்டிக்கத்தக்க செயலாகும்’ என தனது புத்தகமாகிய (அல்மஜ்மூஃ) இல் குறிப்பிடுகின்றார்।

நபியவர்கள் கூறினார்கள் ‘ யார் எமது மார்க்கத்தில் புதிதாக ஒரு கருமத்தை ஏற்படுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்படும்।’ புகாரி.

அதே வேலை அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் மற்றும் ஒரு அறிவிப்பில் ‘ எனது கப்ரை பெருநாள் (கொண்டாடும் இடம்) போன்று ஆக்கி விடாதீர்கள்। என் மீது ஸலவாத்து சொல்லுங்கள் உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் என்னை வந்தடையும்.’ அபூதாவூத்.

இமாம் அல் புலைல் இப்னு இயால் (ரஹ்) இவ்ஹதீஸுக்கு விளக்கம் கூறும் போது ‘நேர் வழியை சொற்ப எண்ணிக்கையினர் பின்பற்றினாலும் அது உனக்கு தீங்கு தராது நீ நேர் வழியை பின்பற்று। அழிவின் பக்கம் (வழிகேட்டில்) பெரும்பான்மையினரான மக்கள் இருந்த போதிலும் வழிகேட்டை பின்பற்றுவதை விட்டும் உன்னை எச்சரிக்கின்றேன்’ என்றார்.

அறியாமையுடன் கப்ரைத் தொடுவது, முத்தமிடுவது என்பன பரக்கத்தை தந்துவிடாது। இச்செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கவையாகும். மேலும் பரக்கத்து என்பது மார்க்கத்திற்கு உடன்பாடான விடயங்களில் தான் இருக்க முடியும். சத்தியத்திற்கு மாற்றமாக செயற்பட்டு விட்டு பரக்கத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இதனை எந்த ஒரு பகுத்தறிவாளனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

4) நபியவர்களின் கப்ரைச் சுற்றி வலம் வருதல் தடை செய்யப்பட்டதாகும்
இச்செயல் மிகவும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது। காரணம் அல்லாஹ் அவனது முதலாவது ஆலயமாகிய கஃபாவை மாத்திரம் தான் வலம் வருவதை (தவாப்) மார்க்கமாக்கியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான், பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி நகம் வெட்டி குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை ‘தவாஃபும்’ செய்ய வேண்டும்। (அல் ஹஜ்-29)

இஸ்லாத்தில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற அமல்களை உலகின் எப்பகுதியில் இருந்தாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம்। ஆனால் இந்த தவாப் எனும் வணக்கத்தை மக்கா நகருக்கு செல்லாமல் நிறைவேற்ற முடியாது.

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் போது ‘அல்லாஹ்வின் ஆலயமாகிய (கஃபாவைத்) தவிர பைத்துல் முகத்தஸிற்கு அருகில் உள்ள குப்பதுஸ் ஸஹ்ராவையோ அல்லது நபியவர்களது கப்ரையோ, அரபா மலையில் இருக்கும் அந்த அடையாளத்தையோ தவாப் செய்யமுடியாது என்பதில் முஸ்லிம் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தில் உள்ளனர்।’ என்கிறார்.

5) நபியவர்களது கப்ருக்கு அருகில் சத்ததை உயர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது
நபியவர்கள் உயிரோடு இருக்கும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுக்கத்தை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்।

முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள், மேலும் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல் அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள்। (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இருதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் -அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு. (ஹுஜ்ராத்-2,3)

இதிலிருந்து நபியவர்கள் உயிரோடு இருக்கும் போதும், மரணித்த பின்னரும் கண்ணியத்துக்குரியவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்।

6) பள்ளிக்கு வெளியிலோ, பள்ளிக்கு உள்ளேயோ தூரத்தில் இருந்த போதிலும் நபியவர்களது கப்ரை முன்னோக்கித்தான் அவர்கள் மீது ஸலாம் சொல்லியாக வேண்டும் என எண்ணுவது தவறு:

இது தொடர்பாக நூலாசிரியரின் ஆசான் ஆகிய அஷ்ஷெய்க் பின் பாஸ் (ரஹ்) கூறும் போது இச்செயல் ஒரு தூய்மையான நிலையில் இருந்து மிதமிஞ்சிய நிலைக்கு இட்டுச்செல்லும் என்கின்றார்।

அதே வேலை சில மக்கள் மதீனாவுக்கு வரும்போது அதிகமான மக்களின் ஸலாத்தை எத்திவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்றார்கள்। இச்செயலை அங்கிகரிக்கூடிய வகையில் எந்த ஒரு ஆதாரத்தையும் நபிவழியில் காணமுடியாது. இவ்வாறு யாரிடமாவது மக்கள் வந்து எனது ஸலாத்தை நபியவர்களுக்கு எத்திவையுங்கள் என்று கூறினால் அதற்கு கீழ்கண்டவாறு பதில் கூறலாம்.

‘நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகம் ஸலவாத்தும், ஸலாமும் கூறுங்கள்। உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் அது மலக்குகளின் மூலமாக நபியவர்களுக்கு எத்திவைக்கப்படும் என்று கூறி அவ்வாறு சொல்லுபவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் ‘நிச்சயமாக மலக்குகள் பறந்து கொண்டிருக்கின்றனர் எனது உம்மத்தினரின் ஸலாத்தை அவர்கள் எனக்கு எத்திவைப்பர்.’ நஸாயீலே பதியப்பட்ட நம்பகமான ஹதீஸாகும்.

மற்றும் ஒரு அறிவிப்பிலே ‘உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள்। எனது கப்ரை பெருநாள் கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது நீங்கள் ஸலவாத்து சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத்து எனக்கு எத்திவைக்கப்படும்.’ அபூதாவூத்

அதே வேலை ஹஜ், உம்ராவுக்கும் மதீனா ஸியாரவுக்கும் சம்மந்தம் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மதீனாவுக்கு வராமலே ஹஜ்ஜை முடித்துவிட்டு அல்லது உம்ராவை முடித்து விட்டு தனது ஊருக்கு திரும்பினால் கூட எந்தப் பிழையும் கிடையாது. அதே வேலை மதீனாவை ஸியாரத்<http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d> செய்ய நேரடியாக இங்கு வந்து ஹஜ், உம்ரா செய்யாமல் திரும்பினால் கூட அதற்குறிய நன்மை கிடைத்து விடும்।

ஆனால் ஹஜ், உம்ரா செய்பவர் நபியவர்களின் கப்ரை ஸியாரத்<http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d> செய்துதான் ஆக வேண்டும் என்பதற்கு சில ஹதீஸ்களை ஆதாரமாக கூறுவார்கள் ‘ யார் ஹஜ் செய்து விட்டு என்னை ஸியாரத்<http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d> செய்யவில்லையோ அவர் என்னை நோவினை செய்துவிட்டார்.’ மேலும் ‘நான் மரணித்த பின் யார் என்னை ஸியாரத்<http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d> செய்கின்றாரோ அவர் நான் உயிரோடு இருக்கும் போது ஸியாரத்<http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d> செய்ததற்கு சமனாகும்।’ மற்றும் ஒரு செய்தியில் ‘ யார் என்னையும் எனது தந்தை இப்ராஹீமையும் ஒரே வருடத்தில் தரிசிக்கின்றாரோ அல்லாஹ்விடம் அவருக்கு சுவர்க்கத்தை பெற்றுக் கொடுக்க உத்தரவாதம் அளிக்கின்றேன்.’ மேலும் ‘யார் எனது கப்ரை தரிசிக்கின்றாரோ அவருக்கு எனது பரிந்துரை கடமையாகி விட்டது.’

மேற்குறிப்பிட்ட எல்லா செய்திகளும் ஆதாரபூர்மற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகும் என்பதனை மிகப்பெரும் அறிஞர்களான தாரகுத்னி, உகைலி, பைஹக்கி, இப்னு தைமிய்யா, இப்னு ஹஜர் (ரஹ்) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்।

அதே வேலை சூரா நிஸாவின் 64-ம் வசனமாகிய பின்வரும் வசனத்தை ஆதாரமாக காட்டுகின்றனர்।

‘அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை। ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக் கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.’

இந்த வசனம் அநியாயம் செய்த ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து பாவமன்னிப்பு தேடுவதை குறிக்கவில்லை மாறாக நபியவர்கள் உயிரோடு இருக்கும் போது முனாபிகீன்கள் அவர்களிடம் வருவதை குறித்து நிற்கின்றது। காரணம் நபித்தோழர்கள் யாருமே நபியவர்களது கப்ருக்கு பாவமன்னிப்பு தேடி வந்தது கிடையாது.

உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் வரட்சி ஏற்பட்டபோது நபியவர்களின் கப்ருக்குச் செல்லாமல் அப்பாஸ் (ரழி) அவர்களை முன்னிருத்தி துஆச் செய்தார்கள். ‘யா அல்லாஹ் நாம் முன்னர் வரட்சி ஏற்பட்டபோது நபியர்களைக் கொண்டு பிராத்தித்தோம். அப்போது நீ எமக்கு நீர் புகட்டினாய். இப்போது நமது நபியின் சிறிய தந்தையைக் கொண்டு உன்னிடம் பிராத்திக்கின்றோம். நீ எமக்கு நீர் புகட்டுவாயாக’ இந்த துஆவை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் அம்மக்களுக்கு மழையை இறக்கினான். ஆதாரம்: புகாரி.
உண்மையிலேயே நபியவர்களின் மரணத்திற்கு பின் அவர்களிடம் சென்று பிராத்திக்க முடியுமாக இருந்தால் உமர் (ரழி) அவர்கள் அதை செய்திருப்பார்கள்। அதே போன்று புகாரியிலே பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு அறிவிப்பிலே ஆயிஷா (ரழி) ஒருமுறை தலைவழி ஏற்பட்ட போது நபியவர்களிடம் முறையிட ‘ நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் நான் உனக்காக பாவமன்னிப்பு தேடுவேன், மேலும் உனக்காக பிரார்திப்பேன்.’ ஆயிஷா (ரழி) இதைக் கேட்ட பின் நபியவர்களுக்கு முன் நானும் மரணிக்க வேண்டாமா? என்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்) புகாரி

நபியவர்களது துஆ அவர்களது மரணத்திற்கு பின்னரும் கிடைக்கும் என்றிருந்தால் நபியவர்கள்’ நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்’ எனச் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது।

உதவி தேடும் நோக்கம் இல்லாமல் பொது மையவாடிகளை தரிசிப்பதை பற்றி ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன। ‘ கப்ருகளை தரிசியுங்கள், நிச்சயமாக அது மறுமையை நினைவு படுத்தும்.’ என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். முஸ்லிம்.

என்றாலும் மையவாடியிலே நீண்ட நேரம் நின்றுகொண்டிருக்கக் கூடாது. அடிக்கடி ஸியாரத்<http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d> செய்யவும் கூடாது. காரணம் இச்செயல் அளவு கடந்த செயற்பாடுகளுக்கு இட்டுச்செல்லும்.
அவ்வாறே நபியவர்கள் மீது அதிகமாக ஸலவாத்து சொல்லுவதன் சிறப்பு நிறையவே கூறப்பட்டுள்ளன। இது நபியவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது. உம்மத்தினரின் கப்ருகளுக்கு அடிக்கடி செல்லுவதற்கு இதனை ஆதாரமாக கொள்ளக் கூடாது. நபியவர்களுக்கு ஸலவாத்து சொல்லும்போது அது மலக்குகள் வயிலாக எத்திவைக்கப்படும் என்கின்ற ஹதீஸ்களை நாம் ஆரம்பத்திலே அறிந்து கொண்டோம்.

அதே வேலை பகீஃ மற்றும் உஹத் ஷுஹதாக்களை ஸியாரத்<து">http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d>து செய்வது மார்க்க வரம்புக்குள் இருத்தல் வேண்டும்। மார்க்க வரம்பு மீறப்படுகின்ற போது அது பித்அத்தான செயலாகி விடும்.

கப்ருகளை தரிசிப்பது எந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதன் பிரயோசனங்கள் என்ன (உயிரோடு இருப்போருக்கும், மரணித்தவருக்கும்) என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் எமக்கு சுட்டிக் காட்டிள்ளார்கள்.
உயிரோடு இருக்கும் மனிதர் (தரிசிக்கப் போகின்றவர்) மூன்று பிரயோசனங்கள் அடைந்து கொள்வார்।

1) மரணத்தை ஞாபகப்படுத்திகின்றார்। நல்ல செயல்களைச் செய்து மரணத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளமுடிகின்றது. இதனை நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் ‘கப்ருகளை தரிசியுங்கள் அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும்’ முஸ்லிம்.

2) இச்செயல் நபியவர்களின் ஸுன்னாவாக இருப்பதால் இதற்கு நன்மை பதியப்படும்।

3) மரணித்த முஸ்லிம்களுக்காக துஆச் செய்வதன் மூலம் அவர்களுக்கு நன்மை செய்ததாகி விடும்.
அதே வேலை மரணித்தவர் கப்ருகள் தரிசிக்கப்படுகின்ற போது உயிரோடு இருப்பவரின் பிரார்த்தனையை பெற்றுக் கொள்கின்றார்। இது மரணித்தவர் பெரும் பிரயோசனமாகும். ஏனெனின் மரணித்தோர் உயிரோடு இருப்போரின் துஆவின் மூலம் நன்மை அடைகின்றார்.

நபியவர்கள் காட்டித்தந்த அமைப்பிலே கப்ருகளில் இருப்போருக்காக நாம் பிராத்திக்க வேண்டும்। புரைதத் இப்னு ஹுஸைப் (ரழி) அறிவிக்கும் ஹதிஸில் நபியவர்கள் கப்ருகளுக்குச் சென்றால் பின்வரும் துஆவை ஒதக்கூடியவாக இருந்தார்கள் ‘முஃமின்களிலும், முஸ்லிம்களிலும் கப்ருகளில் இருக்க கூடியவர்களே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். மேலும் நிச்சியமாக நாங்களும் உங்களை சந்திக்க இருக்கின்றோம். எங்களுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடத்திலே மன்னிப்பை வேண்டுகின்றோம்.’ முஸ்லிம்.

கப்ருகளை தரிசிப்பது ஆண்களைப் பொருத்தவரையில் விரும்பத்தக்க ஒரு செயலாகும்। ஆனால் பெண்களைப் பொருத்தவரை அறிஞர்களுக்கு மத்தியிலே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. ஒருபிரிவினர் இதனை தடைசெய்கின்றனர். மற்றும் சிலர் இச்செயலை அனுமதிக்கின்றனர். என்றாலும் இவ்விரண்டு கருத்துக்களிலும் பெண்களுக்கு கப்ருகளை தரிசிப்பதை தடைசெய்யக்கூடிய கருத்து மிகவும் வழுவானது. காரணம் நபியவர்கள் கூறினார்கள் ‘கப்ருகளை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபிக்கட்டும்.’ திர்மிதியிலே பதியப்பட்ட ஆதாரபூர்வமான ஹதீஸாகும்.

பெண்களுக்கு ஸியாரத்<தை">http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d>தை அனுமதிப்பவர்கள் கூறுவது போன்று அடிக்கடி ஸியாரத் செய்யக் கூடிய பெண்ணுக்குத்தான் அல்லாஹ்வின் சாபம் என சொல்ல முடியாது। கீழ்வரும் அல்குர்ஆனிய வசனத்திலும் அதிகமான அநியாயம் செய்பவன் என்று பொருள் கொள்ள முடியாது.

‘உமது இறைவன் அடியார்கள் மீது அனியாயம் செய்பவனாக இல்லை’ (சூரா புஸ்ஸிலத்-46)

எனவே பொதுவாகவே ஸியாரத் செய்யும் பெண்ணுக்குத் தான் அல்லாஹ்வின் சாபம் இருக்கின்றது என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்। மேலும் பெண்கள் பலகீனமானவர்கள் என்பதாலும் அவ்வாரே அழுவது, ஒப்பாரி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதனாலும் கப்ருகளை சியாரத் செய்வது தடைசெய்யப்ட்டுள்ளது எனலாம்.

அவ்வாரே பெண்கள் இதனை விட்டுவிட்டாலும் ஒரு விரும்பத்தக்க விடயத்தை விட்டாதாகவே கருதப்படுமே தவிர கடமையான செயலை விட்டதாகி விடாது। ஆனால் கப்ருகளை தரிசிக்கின்ற போது அல்லாஹ்வின் சாபத்திற்கு சொந்தக்காரியாகின்றாள்.

பித்அத்தான தரிசிப்பை பொறுத்தவரையில் இஸ்லாம் ஆகுமாக்காத செயல்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்। கப்ருகளில் அடங்கப்பட்டிருப்பவரிடம் பிரார்த்தனை செய்வது, அவர்களிடம் உதவி தேடுவது, தமது தேவைதளை நிறைவேற்றுமாறு வேண்டுவது போன்ற பல இஸ்லாத்திற்கு முரணான விடயங்களை உதாரணத்திற்கு கூறலாம். பித்அத்தான தரிசிப்பின் மூலம் கப்ருகளிலே உள்ளவர்கள் பிரயோசனப்படப் போவதில்லை. அதே வேலை தரிசிக்கச் சென்றவரும் எந்த வித பிரயோசனங்களும் இல்லாமல் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டு குறித்த இடத்தை விட்டு திரும்பிவர நேரிடும்.

இது தொடர்பாக அஷ்ஷெக் பின் பாஸ் (ரஹ்) அவர்கள் கூறும் போது ‘மேற்படி அடங்கப்பட்டவர்களிடம் உதவி தேடி தரிசிக்கச் செல்வது பித்அத்தான காரியமாகும்। அதே வேலை இஸ்லாம் இதனை தடை செய்துள்ளது. எமக்கு முன்னிருந்தவர்கள் யாருமே இவ்வாறு செய்தது கிடையாது. மாறாக நபியவர்கள் கூறியது போன்று ‘கப்ருகளை ஸியாரத்து செய்யுங்கள் மேலும் கெட்ட வார்த்தைகளை சொல்லாதீர்கள்’ முஸ்னத் அஹமத், முஅத்தா மாலிக்

எனவே இச்செயல் பித்அத்தாக இருந்த போதிலும் சில செயல்கள் பித்அத் என்ற அந்தஸ்திலும் மற்றும் சில செயல்கள் ஷிர்க் என்ற நிலையிலும் உள்ளன. அதே வேலை கப்ருகளிடம் சென்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது பித்அத்தான செயலாகுவதுடன், கப்ருகளில் உள்ளோரிடம் எமது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திப்பது, உதவி தேடுவது இணைவைப்பாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களையும், இந்த மதீனாவிலே வாழக்கூடியவர்களையும், இங்கு தரிசிக்க வருபவர்களையும் பொருந்திக் கொண்டு புகழப்படக்கூடிய நல்ல முடிவை இவ்வுலகிலும், மறுமையிலும் தந்தருள்வானாக! இந்த கண்ணியமான பூமியிலே வசிக்கக்கூடிய பாக்கியத்தையும், நல்ல பண்பாடுகளையும் தந்தருள்வானாக! நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

நன்றி: ‘பல்லுல் மதீனா’ அஷ்ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல்-அப்பாத்

Sunday, May 23, 2010

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-1)

எழுதியவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

பல திக்குகளில் இருந்தும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம் உம்மத்துக்கும் சவால்கள் அம்பாக பாய்ந்துவரும் காலமிது. வேட்டைப் பொருளை நோக்கி வேட்டை மிருகங்கள் வேகமாகப் பாய்வது போல் பாயவும் முஸ்லிம் உம்மத்தைக் கடித்து குதறிப்போடவும் எதிரிகள் தருணம் பார்த்திருக்கும் நேரமிது.


இக்கட்டான இக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக, சண்டைகளாகப் பூதாகரமாக விஸ்வரூபமெடுத்துள்ளது ஆச்சரியமானதும் கவலைக்குரியதுமானதொரு நிகழ்வாகும்.


அந்நியன் எம்மை அழிக்கக் காத்திருக்க அதை எதிர்கொள்ளத் தயாராவதை விட்டு விட்டு எமக்கு நாமாக படுகுழி தோண்டிக் கொண்டிருக்கின்றோம். இந்தத் துர்ப்பாக்கிய நிலை நீங்கவேண்டும். கருத்து வேறுபாடுகளைக் களையும் வழிமுறையை குறித்தும், அதைக் கையாளும் விதம் குறித்தும், களைய முடியாத கருத்து வேறுபாடுகள் விடயத்தில் பிரிவினையாகவும் பிளவாகவும் மாறாத விதத்தில் செயற்படுவதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இவ்வாக்கம் எழுந்தது.


வேண்டாம் கருத்து வேறுபாடுமுஸ்லிம் உம்மத்துக்குள் கருத்து வேறுபாடுகள் வளர்க்கப்பட்டமைக்கு அடிப்படையான பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் அவற்றை தெளிவுபடுத்திவிட்டு கண்ணியத்துக்குரிய நான்கு இமாம்கள், மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு எழ நியாயமான காரணங்கள் பல இருந்தன. அவற்றை நோக்கலாம்.

(1) கருத்து வேறுபாட்டை பொதுவாகவே ஆகுமானது என சித்தரிக்க சிலர் முற்பட்டனர். தம்மிடம் உள்ள தவறான கருத்துக்களைத் திருத்திக் கொள்ளும் எண்ணம் இல்லாதவர்கள் இதையே பெரும் சாட்டாக வைத்து வேறுபாடுகளை நியாயப்படுத்தி வந்தனர்.


“எனது உம்மத்தில் உள்ள மார்க்க அறிஞர்கள் கருத்து முரண்பாடு கொள்வது எனது உம்மத்திற்கு அருளாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என கருத்து வேறுபாட்டின் வளர்ச்சிக்கு நல்ல பங்காற்றியுள்ளனர்.


அறிஞர் அல்பானி(ரஹ்) அவர்கள் இது அறிவிப்பாளர் தொடர் அற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தி எனக் குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறே இப்னு ஹஸ்ம்(ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பின் கருத்து, “உமது இரட்சகன் அருள் புரிந்தோரைத் தவிர ஏனையோர் கருத்து முரண்பட்டோராகவே நீடித்திருப்பர். (11:118-119) என்ற குர்ஆன் வசனத்தின் கருத்துக்கு முரணாக அமைந்திருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

“இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்” (3:103)

“நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்”(2:176)

“இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும்” (8:46)

என்ற வசனங்களும் மற்றும் பல ஆயத்துக்களும் கருத்து வேறுபாட்டைக் கண்டிப்பதால், கருத்து ஒருமைப்பாடே ரஹ்மத்தாகும். எனவே, கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு ஒருமுகப்பட்ட நிலை தோன்றுவதே சிறந்ததாகும்.

மத்ஹபு, இயக்க வெறி சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் கால்பதித்து ஆளமாக வேரூன்ற தாம் சார்ந்த அமைப்பின் கொள்கைகளில் முரட்டுப் பிடிவாதம் காட்டுவதும் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாகும்.


மத்ஹபு”வாதிகள் தமது இமாமின் தீர்ப்பைப் பற்றிப் பிடிப்பதில் ஒற்றைக் காலில் நிற்கின்றனர். இதற்கு சில சான்றுகள் கீழே தருகின்றோம்.


கர்கி என்பவர் கூறுகின்றார்: “எமது இமாமின் கூற்றுக்கு மாற்றமாக குர்ஆனோ, ஹதீஸோ இருக்குமென்றால், ஒன்றில் அவை மாற்றப்பட்டவையாக இருக்க வேண்டும். அல்லது அவற்றுக்கு எம் இமாமின் கூற்றிற்கேட்ப “தஃவீல்” விளக்கம் கொடுக்கப்படும்” (பிக்ஹுஸ் ஸுன்னா).


மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற நான் தயாரித்து வைத்துள்ள முஹம்மதின் மார்க்கமும் அபூஹனீபாவுடைய மத்ஹபை நான் நம்புவதும் எனக்குப் போதுமாகும். (துர்ருல் முக்தார்).

அவரது மாணவர்களிடமும் அவரைப் பின்பற்றியவர்களிடமும் அவரது காலம் முதல் இன்று வரை ஞானத்தை அல்லாஹ் ஒப்படைத்து விட்டான். முடிவில் அவரது மத்ஹபின் அடிப்படையில் ஈஸா(அலை) அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள். (துர்ருல் முக்தார், பா-1 பக்-52).


ஞானத்தையே நாம் குத்தகையெடுத்து விட்டோம். வேறுபாட்டுக்கு அதில் பங்கில்லை என்று எண்ணுபவர்கள் ஒவ்வொருவரும் தாம் சார்ந்த மத்ஹபின் அடிப்படையிலேயே தீர்வு இருக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர். இந்நிலை தவறானதாகும். தன் கருத்தில் தவறு இருக்குமென்றோ, பிறர் கருத்தில் “சரி” இருக்கலாம் என்றோ, நம்பாதவர்கள் எப்படி சமரசம் செய்ய முன்வருவார்கள்?


நான்கு மத்ஹபுக்காரரிடம் இருந்த இமாம்கள் மீதுள்ள முரட்டு பக்தி தான் கருத்து வேறுபாடுகளுக்கு அடிப்படைக் காரணமாகும்.


இமாம்கள் பார்வையில் “நான் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசினேன் என்பதை அறியாதவர் எனது பேச்சைக் கொண்டு “பத்வா” வழங்குவது ஹறாமாகும். நாங்களும் மனிதர்கள், இன்று ஒன்றைக் கூறி விட்டு, நாளை அதிலிருந்து நாம் மீண்டு விடலாம் என்றும் ஹதீஸ் ஸஹீஹ் என்றாகி விட்டால், அதுவே எனது மத்ஹபு” என்றும் இமாம் அபூஹனீபா (றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


இவ்வாறே, இமாம் மாலிக் (றஹ்) அவர்கள் “நானும் சரியாகவும், பிழையாகவும் கூறக்கூடிய மனிதனே! எனது கருத்தைக் கவனமாக அவதானியுங்கள். அதில் குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் உடன்பட்டு வரக்கூடியதை ஏற்றுக்கொள்ளுங்கள். உடன்படாதவற்றை விட்டு விடுங்கள்” என்று கூறியுள்ளார்கள்.


“ஒரு விடயம் சுன்னா என்பது தெளிவான பின்னர், அதை எவருடைய கூற்றுக்காகவும் விட்டு விடுவது “ஹலால்” ஆகாது என்ற விடயத்தில் முஸ்லிம்கள் ஏகோபித்த முடிவில் இருக்கின்றனர்” என இமாம் ஷாபிஈ (றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


இது குறித்து இமாம் அஹ்மதிப்னு ஹன்பல் (றஹ்) அவர்கள் கூறும் போது, “நீங்கள் என்னைக் கண்மூடிப் பின்பற்றாதீர்கள். அவ்வாறே (இமாம்களான) மாலிக்கையோ, ஷாபியீயையோ, தவ்ரீயையோ கண்மூடிப் பின்பற்றாதீர்கள். அவர்கள் எங்கிருந்து எடுத்தார்களோ அங்கிருந்தே நீங்களும் எடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறே “நபி(ஸல்) அவர்களின் ஹதீஸை ரத்து செய்தவன் அழிவின் விளிம்பில் இருக்கின்றான்” என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.


நான்கு இமாம்களும் தமது கூற்றுக்கு மாற்றமாக ஹதீஸ் இருந்தால், தமது கூற்றை விட்டுவிட வேண்டும் என்பதில் ஏகோபித்த நிலையில் உள்ளனர். ஆனால், “மத்ஹப்” வெறி கொண்ட சிலர் இமாம்களின் இந்நிலைப் பாட்டுக்கு மாற்றமாக சுன்னாவை ஒதுக்கி விட்டு இமாம்களின் கூற்றில் தங்கி நிற்க முற்படுகின்றனர். கருத்து வேறுபாடுகள் நீங்காது நீடித்து நிலவ இது அடிப்படைக் காரணமாக உள்ளது.


தமது கூற்றில் தவறு இருக்கும் போது அல்லது பலவீனம் இருக்கும் போது அதை விட்டு விடுவோம் என்பதே இமாம்களின் தீர்ப்பாகும். இதை செயல் படுத்தாமல் இமாமின் கூற்றை இஸ்லாத்தை விட உயர்வாக மதிப்பது பெரும் குற்றமாகும். இவ்வாறே இயக்க வெறி கொண்டவர்கள் தமது இயக்க நிலைப்பாட்டிலும் தனி நபர்கள் மீது மோகம் கொண்டவர்கள் குறித்த நபரின் கருத்திலேயே நிற்க முற்படுகின்றனர்.


குர்ஆனின் பார்வையில் “முஃமீன்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன். நன்கறிபவன்” (49:1)


இவர்கள் அல்லாஹ்வையும் அதன் தூதரையும் விட தமது இமாமை முற்படுத்துகின்றனர்.
“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்” (33:36)


இவர்கள் அல்லாஹ்வினதும், அவன் தூதரினதும் கூற்றுக்கு மாற்று அபிப்பிராயம் கொள்ள தமது இமாமுக்கு அல்லது இயக்கத்திற்கு அதிகாரம் இருப்பதாக நம்புகின்றனர்.


“எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும் (அல்லாஹ்வின்) இத் தூதரை விட்டுப் பிரிந்து, முஃமீன்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்ல விட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம். அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்” (4:115).


இவர்கள் தமது இமாமுக்கு மாற்றமாக உள்ள நபி வழிகளை பின்பற்றாமல் முஃமீன்களின் வழியில் செல்லாமல் தவறான வழியில் செல்கின்றனர்.
“அவரது கட்டளைக்கு மாறு செயவோர் தம்மைத் துன்பம் பிடித்துக்கொள்வதையோ, அல்லது நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்”. (24:63)


இந்த போக்கு இவர்களிடத்தில் நிபாக், பிஸ்க், குப்ர் என்பவற்றை ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கின்றோம்.
ஹதீஸின் பார்வையில் “நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கின்றேன். அவை இரண்டையும் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள்” - அல்குர்ஆன், அஸ்ஸுன்னா என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.


இவர்கள் குர்ஆன்-சுன்னா அல்லாத அதற்கு முரண்பட்ட தமது இமாம்களின் முடிவுகளை மூன்றாவதொரு வழியாக எடுத்து வழிகெட்டுச் செல்கின்றனர்.
ஒரு முறை உமர்(ரலி) அவர்கள் “தவ்றாத்”தின் ஒரு பகுதியை எடுத்து வந்து “யா ரஸுலுல்லாஹ்! இது “தௌறாத்”தின் ஒரு பிரதியாகும்” எனக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மௌனமாக இருக்கவே அதனை வாசிக்க ஆரம்பித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் மாறத் துவங்கியது. இது கண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களைப் பார்த்து “உமரே! உமக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் தூதரின் முகத்தை நீர் பார்க்கவில்லையா?” எனக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் முகத்தைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் கோபத்தில் இருந்தும், அவன் தூதரின் கோபத்தில் இருந்தும் அல்லாஹ்விடமே உதவி தேடுகின்றேன். அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாத்தை தீனாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நான் நபியாகவும் ஏற்றுக்கொண்டேன்” என்றார்கள். அதனைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் “எவன் கையில் முஹம்மதின் உயிர் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக மூஸா இப்போது உங்கள் மத்தியில் தோன்றி நீங்கள் என்னை விட்டு விட்டு மூஸாவைப் பின்பற்றினாலும், வழிகெட்டு விடுவீர்கள். மூஸா உயிரோடு இருந்து எனது நபித்துவத்தையும் எத்தியிருந்தாலும், அவர் என்னைப் பின்பற்றியிருப்பார்” என்றார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) ஆதாரம் : தாரமி 435.


ஒரு நபி இருந்து முஹம்மத் (ஸல்) அவர்களை விட்டு விட்டு, அந்த நபியைப் பின்பற்றினாலும், வழி கெடுவோம் எனின், நபிக்கு மாற்றமாக ஒரு தனி நபரின் தீர்ப்புக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தால், எம் நிலை என்ன எனச் சிந்தித்துப் பாருங்கள்.


எனவே, மத்ஹபு, இயக்க வெறி நீக்கப்பட்டு உண்மை எங்கிருந்து வந்தாலும், ஏற்கும் பக்குவம் ஏற்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முடியாது.


பொறாமை நீக்கம் கருத்து வேறுபாடுகள் எழ பொறாமை அடிப்படைக் காரணமாக இருந்துள்ளது என்பதை அருள்மறை பின்வருமாறு கூறுகின்றது.
“தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக்கொண்டது மிகவும் கெட்டதாகும்.” (2:90)


“(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான். எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்.”(2:213)


“நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இது தான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர். எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்” (3:19).


இயக்கங்களுக்கும் உலமாக்களுக்கு மிடையிலுள்ள பொறாமைக் குணம் தீய கருத்து வேறுபாடுகளை விதைத்து விடுகின்றன. பொது மக்கள் இதற்குப் பலியாகி விடக் கூடாது.


தான் சாராத, அல்லது விரும்பாத இயக்கமோ, மக்களோ மேலோங்கிவிடக் கூடாது என்பதற்காகச் சிலர் பிழையான தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதைக் காணலாம். உதாரணமாக கூட்டு துஆ கூடாது என்பது தெளிவான பின்னரும் இதை ஏற்றுக்கொண்டால், “தவ்ஹீத் ஜமாஅத்” மக்கள் மனதில் இடம் பிடித்துவிடும் என்பதற்காக “பித்அத்”தான இச்செயலில் சில இயக்கவாதிகள் பிடிவாதம் காட்டுவதை உதாரணமாகக் கூறலாம்.


தற்பெருமைசிலரிடம் இப்பண்பு இயல்பாகவே குடிகொண்டிருக்கும். நான் கூறும் அனைத்தும் சரி, அடுத்தவர்கள் கூறும் அனைத்தும் தவறானவை என்ற இறுமாப்பு இருக்கும். இதன் காரணமாக அடுத்தவர்களின் கருத்துக்களுக்கோ, ஆலோசனைகளுக்கோ இவர்கள் காதுகொடுக்க மாட்டார்கள். இதனால், கருத்து வேறுபாடு நீங்குவதற்கு மாற்றமாக அதிகரிப்பதையே காணலாம்.


அடுத்து, கர்வம் கொண்ட சிலர் முரண்பட்ட கருத்துக்களைக் கூறி சமூகத்தில் தம்மை முதன்மைப்படுத்திக்கொள்ள முற்படுவர். அரபியில் “நீ மற்றவர்களுக்குக் முரண்பட்டால் பிரபல்யம் பெறலாம்” என்று கூறுவர். இந்த அடிப்படையில் பிரபல்யத்தை விரும்பும் சிலரும் கருத்து வேறுபாடுகளை விதைத்துக் கொண்டிருக்கின்றனர்.


தப்பெண்ணம்: சிலரின் பார்வை எப்போதும் இருண்டதாகவே இருக்கும். அவர்களின் எண்ணங்கள் தீமையையே சிந்திக்கும். தம்மைத் தவிர அடுத்தவர்களின் நன்மைகள் ஏதும் கூறப்பட்டால், அதைப் பொய்ப்பிப்பர் அல்லது அதற்கு ஏதேனும் உள்நோக்கம் கற்பிப்பர். வெளிப்படையான விடயங்களை விட்டு விட்டு அந்தரங்கம் பற்றியும் எண்ணங்கள் பற்றியும் தீர்ப்புக் கூற முன்வருவர். இதன் காரணத்தினால் அடுத்தவர்களின் கருத்துக்களுக்கு உள்நோக்கம் கற்பித்து தமது கருத்தை முன்வைப்பர். இதனால், முரண்பாடு விளையும். இது ஆபத்தான நிலையாகும். இதனால் கருத்து வேறுபாடு மட்டுமன்றி குரோதமும் உண்டாகும்.


இத்தகைய தவறான அடிப்படைகளால் கருத்து வேறுபாடுகள் விளைவதுடன் அவை முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவையும் பிரச்சினைகளையும் தோற்றுவித்து வருகின்றன. இதேவேளை, கடந்த கால அறிஞர்களுக்கு மத்தியிலும் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. அவை தோற்றம் பெற நியாயமான சில காரணங்கள் இருந்தன. அவற்றையும் நாம் புரிந்துகொள்வதினூடாக கடந்த கால அறிஞர்கள் பற்றிய நல்லெண்ணம் கெடாதிருக்க வழிபிறக்கும். அவற்றையும் சுருக்கமாக நோக்குவோம்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Wednesday, May 19, 2010

அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்!

அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்!

மூலம்: அஷ்ஷெய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்)

தமிழில்: முபாரக் மஸஊத் மதனி

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்:

முதல் அடிப்படை:

அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி வந்துள்ள அல்குர்அன் வசனங்களையும் நபிமொழிகளையும் அணுகும் முறை.

அல்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் பொறுத்தவரை அவை தருகின்ற வெளிப்படையான கருத்திலேயே அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. ஏனெனில் அல்குர்ஆன் அரபி மொழியிலேயே அருளப்பட்டுள்ளது. அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் அரபு மொழியையே பேசினார்கள்.

அல்குர்ஆனும் நபிமொழிகளும் தருகின்ற வெளிப்படையான கருத்துக்களை விட்டுவிட்டு அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுவதாக அமையும். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

‘வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும் இரகசியமானதையும் எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே இறைவன் தடுத்துள்ளான் என (நபியே!) கூறுவீராக!’ (அல்-அஃராப் 7:33) என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேற்கூறப்பட்ட அடிப்படையைப் பின்வரும் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَاء

‘மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்’ (அல்-மாயிதா 5:64)

இந்த வசனத்தில் ‘யதானி‘ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரபு மொழியில் ‘யதானி‘ என்பதன் பொருள் ‘இரு கைகள்‘ என்பதாகும்.

எனவே இவ்வசனத்திலிருந்து அல்லாஹ்வுக்கு ‘இருகைகள்’ இருப்பதாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றமாக ‘கை’ என்பதற்கு ‘சக்தி’ என்று விளக்கம் கொடுப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதாகவே அமையும்.

இரண்டாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பெயர்கள் தொடர்பானது.

(1) அல்லாஹ்வுடைய திருநாமங்கள் அமைத்தும் அழகியவை, அழகின் சிகரத்தில் உள்ளவை, அதில் எந்தக் குறையும் கிடையாது. அவை கூடவே பண்புகளையும் கொண்டிருக்கின்றன.

‘அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன’ (அல்-அஃராப் 7:180)

உதாரணமாக ‘அர்ரஹ்மான்’ (அளவற்ற அருளாளன்) என்ற திருநாமத்தைக் குறிப்பிடலாம். இந்தப் பெயர் கூடவே ‘ அருள் ‘ என்ற பண்பையும் கொண்டிருக்கிறது.

அதேவேளை ‘காலத்தைத் திட்டாதீர்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் காலமாவான்’ (முஸ்லிம் – 2246) என்ற ஹதீஸை வைத்து ‘அத்தஹ்ரு’ (காலம்) என்பது அல்லாஹ்வுடைய திருநாமங்களில் ஒன்று என்று கூற முடியாது. ஏனெனில் இந்தச் சொல் அழகின் உச்சத்தையுடைய ஒரு பொருளை தருவதாக இல்லை. எனவே இந்த ஹதீஸின் கருத்து, ‘காலத்தை இயக்குகிறவன் அல்லாஹ்’ என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

ஹதீஸில் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘எனது கையிலேயே அதிகாரம் இருக்கிறது. நானே இரவையும் பகலையும் மாறிமாறி வரச் செய்கிறேன்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (7491), முஸ்லிம் (2246)

(2) அல்லாஹ்வின் திருநாமங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கொண்டவையல்ல.

‘யா அல்லாஹ்! உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய், அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய், அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய், அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்கள்: அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாக்கிம், – சில்ஸிலா ஸஹீஹாவில் ஷேய்க் அல்பானீ (ரஹ்) அவர்கள் இதனை ஸஹீஹ் என்று குறிப்பிடுகிறார்கள். ஹதீஸ் எண் – 199)

அல்லாஹ் தனது மறைவானவை பற்றிய ஞானத்தில் வைத்திருக்கும் அவனது பெயர்களின் எண்ணிக்கையை அவனைத் தவிர வேறு எவராலும் அறிந்து கொள்ள முடியாது.

‘நிச்சயமாக அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றை யார் சரிவர அறிந்து கொள்கின்றாரோ அவர் சுவனம் நுழைவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி (6410), முஸ்லிம் (2677))

இந்த ஹதீஸ் மேற்படி ஹதீஸுடன் எந்த வகையிலும் முரண்பட மாட்டாது. ஏனெனில் இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 தான் என்று வரையறை செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

(3) அல்லாஹ்வின் திருநாமங்கள் அறிவினடிப்படையில் அமைந்தவையல்ல. மாறாக அவை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு தான் அமையும். எனவே அவற்றில் கூட்டல், குறைத்தல் கூடாது. அல்லாஹ் தனக்குத் தாமாக சூட்டிக்கொண்ட, அல்லது நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு இருப்பதாகச் சொன்ன) பெயர்களே தவிர புதிதாக அவனுக்குப் பெயர்களை உருவாக்குவதோ, அல்லது அவன் தனக்கு சூட்டிக் கொண்ட பெயர்களை மறுப்பதோ பெரும் குற்றமாகும்.

(4) அல்லாஹ்வுடைய திருநாமங்கள் ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் தாத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. அத்துடன் அது கொண்டிருக்கும் பண்பையும் அறிவிக்கிறது.

மூன்றாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பண்புகள் (ஸிபத்துக்கள்) பற்றியது.

(1) அல்லாஹ்வுடைய பண்புகள் அனைத்தும் உயர்ந்தவை, பூரணமானவை, புகழுக்குரியவை. அவை எந்தக் குறைபாடும் கிடையாது.

வாழ்வு, அறிவு, ஆற்றல், கேள்வி, பார்வை, ஞானம், அருள், உயர்வு போன்ற பண்புகளை உதாரணமாகக் கூறலாம்.

‘அல்லாஹ்வுக்கோ உயர்ந்த பண்பு உள்ளது’ என்று அல்லாஹ் கூறுகின்றான். (அந்நஹ்ல்16:60)

அல்லாஹ் பூரணமானவன் எனவே அவனது பண்புகளும் பூரணமாக இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு பண்பு (ஸிஃபத்) பூரணத்துவம் இல்லாமல் குறைபாடுடையதாக இருந்தால் அது அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடாத ஸிஃபத்தாகும். மரணம், அறியாமை, இயலாமை, செவிடு, ஊமை போன்ற பண்புகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அல்லாஹ் தன்னைக் குறைபாடுடைய ஸிபத்துக்களால் வர்ணிப்பவர்களைக் கண்டிக்கிறான். அத்துடன் குறைகளிலிருந்து தன்னைப் பரிசுத்தப்படுத்துகிறான்.

‘ரப்பு’ என்ற நிலையில் இருக்கும் அல்லாஹ் குறைபாடுடையவனாக இருப்பது அவனது ருபூபிய்யத்தைக் களங்கப்படுத்தி விடும்.

ஏதாவது ஒரு ‘ஸிஃபத்’ ஒரு பக்கம் பூரணமானதாகவும் இன்னொரு பக்கம் குறைபாடு உள்ளதாகவும் இருந்தால் அந்தப் பண்பு அல்லாஹ்வுக்கு இருக்கிறது என்றோ அல்லது இருக்கக் கூடாது என்றோ ஒட்டு மொத்தமாகக் கூறக்கூடாது. மாறாக அதனைத் தெளிவு படுத்த வேண்டும். அதாவது அந்தப் பண்பு பூரணமாக இருக்கும் நிலையில் அது அல்லாஹ்வுக்குரிய பண்பு என்றும் குறைபாடுடையதாக இருக்கும் போது அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடாத பண்பு என்றும் கூற வேண்டும்.

உதாரணமாக, (المكر) மக்ர் (சூழ்ச்சி செய்தல்) (الخدع) கதஃ (ஏமாற்றுதல்) போன்ற பண்புகளைக் குறிப்பிடலாம்.

‘யாராவது சூழ்ச்சி செய்தால் பதிலுக்கு சூழ்ச்சி செய்தல்’ என்ற நிலையில் வரும்போது அது பூரணத்துவத்தை அடைகிறது. ஏனெனில் சூழ்ச்சி செய்தவனை எதிர் கொள்ள முடியாத அளவு பலவீனன் அல்ல என்ற கருத்திலேயே இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறல்லாமல் சூழ்ச்சி செய்தல் என்பது குறைபாடான ஒரு பண்பாகும்.

முதல் நிலையில் இப்படிப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்க வேண்டிய பண்புகளாகவும் இரண்டாவது நிலையில் இருக்கக் கூடாத பண்புகளாகவும் காணப்படுகின்றன.

இந்தக் கருத்திலே தான் பினவரும் வசனங்கள் அமைந்திருக்கின்றன.

‘அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கின்றான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்’ (அல்-அன்ஃபால்:30)

‘அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன்’ (அத்தாரிக்86:16,17)

‘நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றக் கூடியவன்’ (அந்நிஸா4:142)

அல்லாஹ் சதி செய்யக்கூடியவனா என்று நம்மிடம் வினவப்பட்டால், ஆம் என்றோ அல்லது இல்லையென்றோ பொதுப்படையாகக் கூறக்கூடாது. மாறாக யார் சதிசெய்யப்படத் தகுதியானவர்களோ அவர்களுக்கு சதி செய்யக் கூடியவன்’ என்றே கூற வேண்டும். அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

(2) அல்லாஹ்வுடைய பண்புகள் இரண்டு வகைப்படும்.

அ) (الثبوتية) அத்துபூதிய்யா: அதாவது அல்லாஹ் தனக்கு இருப்பதாகக் கூறிய பண்புகள் (உதாரணம்: வாழ்வு, அறிவு, சக்தி) அவை அல்லாஹ்வுக்கு இருக்கின்ற பண்புகள் என்று நம்ப வேண்டும்.

ஆ) (السلبية) அஸ்ஸலபிய்யா: அல்லாஹ் தனக்கு என்று மறுத்த பண்புகள் (உதாரணம்: அநீதி இழைத்தல்)

இப்படிப்பட்ட அவனுக்கு இருக்கக் கூடாத பண்புகளை மறுக்க வேண்டும். அதே நேரம் அதற்கு எதிரான பண்பு பூரணமான முறையில் அவனுக்கு இருக்கிறது என்று நம்ப வேண்டும்.

உதாரணமாக,

‘உமது இரட்சகன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்’ (அல்கஹ்ஃபு18:49) என்ற வசனத்தைக் குறிப்பிடலாம்.

இங்கு ‘அநீதி இழைத்தல்’ என்ற ‘ஸிஃபத்தை’ மறுக்கின்ற அதே நேரம் அவனுக்கு பூரணமாக ‘நீதி வழங்குதல்’ என்ற பண்பு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

(3) அல்லாஹ்வுக்கு இருக்கக்கூடிய பண்புகள் (الصفات التبوثية) இரண்டு வகைப்படும்.

அ) அவனுடன் எப்போதும் இருந்து கொண்டிருக்கக்கூடிய பண்புகள் (உதாரணம்: கேள்வி, பார்வை) இதற்கு அரபியில் (الذاتية) ‘தாதிய்யா’ என்று சொல்லப்படும்.

ஆ) அவன் நாடினால் செய்யவும், நாடினால் செய்யாமல் இருக்கவும் முடியுமான அவனுடைய செயல்களோடு தொடர்பான பண்புகள் (உதாரணம்: அல்லாஹ் வருவான், இறங்குகிறான்) இதற்கு அரபியில் (الفعلية) ‘fபிஃலிய்யா’ என்று சொல்லப்படும்.

சிலவேளைகளில் ஒரே ‘ஸிஃபத்’ ‘பிஃலிய்யா’வாகவும் ‘தாதிய்யா’வாகவும் இருக்கும். உதாரணம்: (கலாம்) பேசுதல்.

(4) ஒவ்வொரு ஸிபத் பற்றியும் பின்வரும் மூன்று கேள்விகள் எழுகின்றன.

  1. அல்லாஹ்வுடைய ‘ஸிஃபத்து’ யதார்த்தமானதா? அது ஏன்?
  2. அல்லாஹ்வுடைய ‘ஸிஃபத்தை’ விவரிக்க முடியுமா? ஏன்?
  3. அதற்கு படைப்பினங்களின் ‘ஸிஃபத்து’க்களைக் கொண்டு உதாரணம் கூற முடியுமா? ஏன்?

முதலாவது கேள்விக்கான பதில்:

ஆம்! அல்லாஹ்வின் ஸிஃபத்துக்கள் யதார்த்தமானவை. அரபு மொழியில் ஒரு சொல் பயன்படுத்தப்பட்டால் அதனுடைய யதார்த்தமான கருத்தில் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அடிப்படை விதி. அது அல்லாத வேறு அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு சரியான ஆதாரம் வேண்டும்.

இரண்டாவது கேள்விக்கான பதில்:

அல்லாஹ்வுடைய பண்புகளை விவரிக்க முடியாது. ‘அவனை அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள மாட்டார்கள்’ (தாஹா20:110) என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவனுடைய ஸிஃபத்துக்கள் பற்றி அறிவால் அறிந்து கொள்ள முடியாது.

மூன்றாவது கேள்விக்கான பதில்:

அவனது பண்புகள் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக மாட்டாது.

‘அவனைப் போல் எதுவும் இல்லை’ (அஷ்ஷுரா26:11) என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் மிக உயர்ந்த பண்புகளுக்கு சொந்தக்காரன் என்ற வகையில் அவனைப் படைப்பினங்களுக்கு ஒப்பிட முடியாது.

உதாரணம், விவரனம் இரண்டுக்குமிடையில் உள்ள வித்தியாசம்:

அல்லாஹ்வுடைய கை மனிதனுடைய கையைப் போன்றது என்று கூறுவது உதாரணம் கூறுவதாகும்.
அல்லாஹ்வுடைய கை இப்படிப்பட்டது என்று குறிப்பிட்ட ஒரு அமைப்பை அதற்கு உருவாக்குவது விவரிப்பதாகும்.

இவை இரண்டுமே கிடையாது.

நாலாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பண்புகளை மறுப்போருக்கு மறுப்புச் சொல்லுதல்:

அல்லாஹ்டைய பண்புகளில் அல்லது திருநாமங்களில் எதையாவது மறுப்போர் அல்லது குர்ஆன் ஹதீஸில் வந்துள்ளவற்றைத் திரிவுபடுத்துவோர் (المعطلة) ‘முஅத்திலா’ என்றும் (المؤولة) ‘முஅவ்விலா’ என்றும் அழைக்கப்படுவர்.

இவர்களுக்குப் பொதுவாக நாம் சொல்லும் மறுப்பு:

நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அல்குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமானதாகும். ஸலஃபுகள் சென்ற வழிக்கு முரணானதாகும். மேலும் உங்களுடைய கூற்றுக்கு எந்த பலமான ஆதாரமும் இல்லை என்பதாகும்.

Wednesday, April 2, 2008

அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட...

மனிதர்களும் ஜின்களும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் அல்லாஹ்வை வணங்கவேண்டும் என்பதற்காகத் தானே தவிர வேறில்லை!அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்: "இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை". (அல்குர்ஆன் 51:56)

அல்லாஹ்வை வணங்குவதற்காகவே நம்மைப்ப படைத்த இறைவன் அவனை நாம் எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையும் நமக்கு அவனது திருமறையின் மூலமும் அவனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாகவும் நமக்கு காட்டியிருக்கிறான். இந்த வழிகாட்டுதல்கள் இல்லாமல் வேறு ஒரு புதிய வழிழமுறையைப் பின்பற்றி நாம் அவனை வணங்குவோமேயானால் அல்லாஹ் அதனை ஏற்றுக்கொள்வதில்லை.

நாம் எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் மூன்று நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்!. அவைகளாவன: -
1) ஈமான்: ஈமானோடு சம்பந்தப்படாத அமல்கள் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

அல்லாஹ்வுத்தஆலா தன்னுடைய திருமறையிலே கூறுகிறான்: "அவர்கள் செய்து வந்த அமல்களைக் கவணித்து அவற்றைப் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவோம்". (அல்குர்ஆன் 25:23)

எனவே ஒருவருடைய அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவர் ஈமான் கொண்ட முஸ்லிமாக இருப்பது மிக மிக அவசியம்.

2) மனத்தூய்மை: நாம் எந்த ஒரு அமலை செய்வதாக இருந்தாலும் நன்மையை எதிர்பார்த்து இஹ்லாஸோடு செய்ய வேண்டும்.

அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: "ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்". (அல்குர்ஆன் 7:29)

துரதிருஷ்டவசமாக சிலரை நாம் பார்க்கிறோம் அவர்கள், அமல்களின் மூலம் மக்களிடையே பிரபலமடைய விரும்புகின்றனர். மனத்தூய்மையற்ற அமல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த அமல்களுக்கு மறுமையில் எவ்வித பலனும் கிடைப்பதில்லை.

3) நபி வழியைப் பின்பற்றுதல்: -எந்தவொரு வணக்கமாக இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் காட்டித்த தந்த வழிமுறையில் அவைகள் நிறைவேற்றப்படவேண்டும்.

அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: "அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்¢ இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக; ஆனால் நீங்கள் புறக்கணித்தால், அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை. (அல்குர்ஆன் 24:54)

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4:59)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -எவர் ஒருவர் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றைப் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது நிராகரிக்கப்படவேண்டியதாகும். ஆதாரம் : முஸ்லிம்.

ஆனால் நம்மில் சிலர் தங்களின் வழிகாட்டிகளாக ஸூபியாக்களையும், மகான்கள் என சிலரையும் நேரடியாகவே குர்ஆனுக்கும் ஹதீஸூக்கும் முரண்படும் விஷயங்களிலும் கூட அவர்களைப் பின்பற்றுவதைப் பார்க்கின்றோம். தங்களுடைய ஷெய்ஹூமார்கள் ஏதாவதொன்றைக் கூறிவிட்டால் அதுவே சிலரிடம் இறைவாக்காக மாறிவிடுவதைப் பார்க்கிறோம். குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக தெளிவான குர்ஆன் வசனமோ அல்லது ஆதாரமுள்ள ஹதீஸோ முன் வைக்கப்படும் போது அவைகளைக் கண்டு கொள்வதே இல்லை. தனி நபர் வழிபாட்டைத் தவிர்த்து அல்-குர்ஆனையும், ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களையும் பின்பற்றக்கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருளுமாறு வல்ல அல்லாஹ்வை எப்போதும் பிரார்த்திப்போமாக!