Thursday, March 27, 2008

இந்துக்களே! விழிமின்! எழுமின்!


ஒன்றே குலம் என்று பாடுவோம், ஒருவனே தேவனென்று போற்றுவோம்.. .. ..நம் நாடுகளில் இந்த வரிகளை அடிக்கடி நம் காதுகளுக்கு வானொலி தூதனுப்பிக் கொண்டிருக்கும். அவ்வரிகளில் உண்மையொன்று புரையோடிக் கிடப்பதை உணர்ந்தும் உணராதவர்களாய் நாற்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்!

இந்தியா சுதந்திரமடைந்து 50 வருடங்களைக் கடந்தும் அங்கு கொத்தடிமை முறையிலிருந்து மக்கள் விடுபட இயலவில்லை. 10-05-1987 தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இப்படி ஓர் செய்தியைத் தருகின்றது: கொத்தடிமைகள் விடுதலை இயக்கத்தின் தலைவர் கூறுகிறார்:- பீகார் மாநிலத்தின் தென் மாவட்டங்களான சாம்பரான், கோபால் பஞ்ச் போன்றவற்றில் மட்டும் 20,000 ஹரிஜன மக்கள் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

மனிதனை மனிதனாக மதிக்காதவன் மனிதனல்ல என்பது மனிதம் உள்ள அனைவரதும் கருத்தாகும். மிருகத்திலிருந்து பிறந்தான் மனிதன் என்கின்றது ஒரு சமூகம்! மனிதனை மிருகமாக நடாத்துகிறது இன்னொரு சமூகம்! இரண்டுமே மனிதனுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுக்க மறந்துவிட்டன. தீண்டத் தகாதவர்கள் ஹிந்துக்கள் அல்ல - இப்படி பறை அறிவிக்கிறார் பூரி சங்கராச்சாரியார். இந்த சங்கராச்சாரியாரைத்தான் பிராமணர்கள் தங்களுடைய மிகப் பெரிய தலைவராக கொண்டாடுகிறார்கள்.
- Indian Exprs, Afpril 4,1989.
'மனு' என்ற ஹிந்து தர்ம சாஸ்திரம் கூறுகின்றது: சூத்திரன் - காகம், தவளை, நாய் இன்னும் இவை போன்ற மிருகங்களைப் போலாவான். இவற்றைப் போல் இவன் ஊனம் உள்ளவன். இவற்றிலுள்ள பலவீனங்கள் அனைத்தும் இவனுக்கு உண்டு!!
வேதமும் கீழ் ஜாதி மக்களும்:
பிராமணர்களைப் பற்றித் தீதாகப் பேசிய சூத்திரனின் நாக்கை அறுத்திட வேண்டும். முதல் மூன்று உயர் ஜாதியினரோடும் தன்னைச் சமமாக எண்ணும் அளவுக்கு எந்தக் கீழ் ஜாதிக் காரனும் நெஞ்சுரம் கொண்டால் அவனை சவுக்கால் அடிக்க வேண்டும்.
- (அப்பஸ்தம்பா - தர்ம சூத்திரம்: 110-10-26)
வேதம் ஓதுவதைக் காதால் கேட்டுவிட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவன் காதுகளில் ஊற்றிட வேண்டும். அவன் வேதத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுத்து துண்டாக்கிட வேண்டும். வேத நாதங்களை அவன் உள்ளத்தில் தேக்கி வைத்தால் அவனது உடலைக் கண்ட துண்டங்களாகத் துண்டாடிட வேண்டும் என மனுவின் விதி 167-272 கூறுகின்றது.
(டா.சாட்டர்ஜி M.A, Phd (usa) யின் இந்துக்களே! விழிமின்! எழுமின்! என்ற நூலிலிருந்து ஒரு சில தகவல்கள் மட்டுமே மேலே தரப்பட்டுள்ளன. மேலும் அறிந்து விடியலை நோக்கிப் புறப்பட நூலை வாங்கிப் படியுங்கள்.)
உலக மனிதர்கள் எல்லோரும் ஒரு ஆபிரிக்கப் பெண்ணிலிருந்து பிறந்தவர்கள் என இன்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்து அறிவித்துள்ளனர். ஆதாம் ஏவாள் எனும் ஒரே ஜோடியிலிருந்து தான் மனித குலம் தோன்றியதாக இஸ்லாம் நமக்கு பாடம் புகட்டுகின்றன. ஒரு தாயிக்குப் பிறந்த மனிதர்களில் பிறப்பால் எப்படி உயர்வு தாழ்வு ஏற்பட்டது?! உண்மையில் தீண்டாமையைக் கற்பித்தவர்களே தீண்டத்தகாதவர்கள்!! ஊனமுற்ற உள்ளங்களில் மனிதாபிமானம் பிறப்பதென்பது அத்தி பூப்பதற்குச் சமமாகும்! இறையச்சம் உடையவர்களே உயர்ந்தவர்கள். இறையச்சம் அற்றோரே தாழ்ந்தவர்கள். பிறப்பால் எவனும் உயர்ந்தவனாகவோ, தாழ்ந்தவனாகவோ முடியாது என்பதுதான் உண்மை.
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் முதல் முஸ்லிம்கள் வரை அனைவரும் மதத்தின் பெயரால் நாராகக் கிழிக்கப் படுகிறார்கள். இதற்கு ஒரு முடிவு வேண்டாமா? மதத்தின் பெயரால் மனிதனை அடிமைப் படுத்துவதே வன்கொடுமை!
இந்துக்களே! அசத்தியத்திலிருந்து விழிமின்! சத்தியத்தை நோக்கி எழுமின்!
அஞ்சா நெஞ்சம் நமக்கு வேண்டுமென்றால் அறநெறி நமக்குத் தேவை. சத்திய மார்க்கம் நமக்கு வழிகாட்ட வேண்டும். தேடு நீயும் சத்தியத்தை. ஓயா வேட்கையோடு உலா வரட்டும் உன் சத்தியப் பயணம்.இந்துக்களே! விழிமின்! எழுமின்!

No comments: