Sunday, June 8, 2008

ஆயுதக் கலாச்சாரம் இரத்தக் குளியல் நடாத்தும் போதெல்லாம், மனித மண்டையோடுகள் காணிக்கையாக்கப் படுகின்றன! இப்போதெல்லாம் உலகில் மலிந்து விட்ட ஒரே பொருள் அதுதான்!

மழையால் வெள்ளம் வந்ததோ இல்லையோ ஆயுத மழையால் இரத்த வெள்ளம் எல்லா இடங்களிலும்! பாதனியற்று யாரும் நடக்க வேண்டாம் பாசிச ராணுவத்தின் இரத்தக் கறைகளாவது தப்பித் தவறி நம் காலில் ஒட்டிக் கொள்ளும் - கவணம்!

பாசிசத்தின் யாகம் முடிவடைய இன்னும் எத்தனை நறைபலி தேவைப்படுமோ? காலம் பதில் கூறட்டும்!

ஆடோ, மாடோ பலி கொடுக்கும் போது அவற்றுக்கு பல நிபந்தனைகள் வேண்டும் என்பர்! ஆனால் பாசிசத்தின் பலிக்கடாவுக்கு இருப்பது ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான், அது முஸ்லிமாக இருக்க வேண்டும்!!

சந்தனம் தெளித்து, சாம்பிராணிப் புகையிட்டு பலி கொடுக்கும் மடமை நீங்கி, இப்போதெல்லாம் இரத்தம் தெளித்து, இனத்தை அழித்துத்தான் அவை அரங்கேருகின்றன!!

இந்த நவீன மாற்றத்தை ஏற்படுத்தியது வேறுயாரும் அல்ல, உஷ்ஷ்ஷ் என்று உலகை அடக்கப் பார்க்கும் பசுத்தோல் போர்த்திய புலி. ஆம் மேற்கத்தேயப் புலி!

அவரின் சீடர்கள் யார் தெறியுமா? போனி வேடம் பூண்ட போலி நேயரும், இழுத்து இழுத்துச் சாகும் நிலை மறந்த மாற்றானும் தான்!!

இவர்கள் உருவாக்கிய தேசத்தில் இன்னும் பல பயங்கர பாசிச வாதிகளும், பளே கயவர்களும் உருவாகின்றனர். ஆச்சரியமல்ல, ஏனன்றால் கள்ளிமரத்தில் கள்ளிதானே பூக்கும். ரோசா பூக்குமா?
- ஆக்கம்: நிர்வாகி

No comments: