Sunday, October 17, 2010

நபிமொழி

அஸ்மா பின்த் யஸீத்(ரலி) அறிவிக்கின்றார்கள்: 'பெண்களான எங்களைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், எங்களுக்கு ஸலாம் கூறினார்கள். (அபூதாவூது) திர்மிதீயில் வரும் ஹதீஸ் : ''நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் பள்ளியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பெண்களில் ஒரு கூட்டம் அங்கே அமர்ந்திருந்தது. உடனே அவர்கள் தன் கையால் சைகை மூலம் ஸலாம் கூறினார்கள்.'' (ரியாளுஸ்ஸாலிஹீன்: 864) உஸாமா(ரலி) அறிவிக்கின்றார்கள்: 'முஸ்லிம்களும், இணை வைப்போரும், சிலை வணங்கிகளும், யூதர்களும் கலந்து இருந்த ஒரு சபையை கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள்.'' (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 868)
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்: ''உங்களில் ஒருவர் அவைக்கு வருவாரானால், அவர் ஸலாம் கூறட்டும். (அங்கிருந்து) புறப்பட விரும்பினாலும் ஸலாம் கூறட்டும்! (புறப்படும் போது ஸலாம் கூறுதல் எனும்) பிந்தியதை விட, (வந்தபோது ஸலாம் கூறுதல் எனும்) முந்தியது ஒன்றும் அதிக முக்கியத்துவம் பெற்றதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 869)

No comments: