Tuesday, December 6, 2011

Sixth of December







1992 ஆம் ஆண்டு இதே நாள்இந்தியாவே உலக அரங்கில் தலை குனிந்து நின்ற நாள். இதே நாள் எனதருமை ஊடகவியல் சகோதரர்கள் அடிவாங்கி, உதை வாங்கி, ராமன் ஆண்ட அயோத்தி நகரின் தெருக்களின் புழுதியை பூசிக்கொண்ட நாள்.

என்னருமை சக பத்திரிக்கை தோழி தான் எவ்வாறு "கரசேவகர்" களின் சேவையை சந்தித்தேன் என சென்னையில் சம்பவம் நடந்த ஒருமாதத்திற்குள் கண்ணீர் விட்டு அழுதபடி விவரித்த நிகழ்வு நடந்த நாள்.

அம்பேத்கரின் உற்ற தோழர் மேலக்காலை சேர்ந்த முதுமையின் விளிம்பில் இருந்த, தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர், மர்ஹூம் அப்துல்லாஹ் அடியார் மற்றும் என் நண்பர் இஸ்லாத்தை ஏற்று என்னை கட்டித்தழுவிய நாள்.

பிலால் என்னும் பெயரை தேர்ந்தெடுத்து சூட்டிக்கொண்டு குழந்தை போல் மகிழ்ந்த நாள்.

ஒரு பாபர் மசூதி இடிக்கப்பட்டால் என்ன ஆயிரம் மசூதி நாம் கட்டுவோம் எனமுழங்கிய நாள். அது போலவே தன்னுடைய கிராமத்தில் மசூதியை கட்டியும் முடித்த அந்த பெரியவர் முஸ்லிமான நாள்.

நான் நினைவுகளின் அலைகளில் தத்தளித்துக்கொண்டுள்ளேன்.

பாபரி மஸ்ஜிதே அதே இடத்தில் உன்னை மீண்டும் கட்டும் நாளே என் வாழ்க்கையின் பொன்னாள். அந்த நாள் வருமோ?

Your'ச Zafrullah Rahmani

No comments: