Saturday, June 30, 2012

ஈரான் உலக அமைதிக்கு அச்சுறுத்தலா?!

Iran-atomதொடரும் அமெரிக்கஇஸ்ரேலிய தீவிரவாத செயல்களும், அதிகரித்து வரும் தடைகளும் ஈரான் அரசு மீதும், அந்நாட்டு மக்கள் மீதும் பிரயோகிக்கப்படுகிறது. இந்நிலையில், எவ்வித எதிர்ப்பும் ஈரானின் புறத்திலிருந்து உருவாகாத நிலையில் தாக்குதல் மிரட்டல்களையும் ஈரான் சந்தித்து வருகிறது. நியூக்ளியர் ஆயுதங்களை தயாரிக்க ஈரான் பெரும் ஆர்வம் கொண்டுள்ளது. ஈரான் உலக அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது’ என்று தவறான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

எல்லாவிதமான வெளிநாட்டு ஆக்கிரமிப்பையும் தடுக்கும் உரிமை ஈரானுக்கு சட்டரீதியாக உண்டு. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற பி.பி.சி., மர்டோக்கின் மீடியாக்கள், ஏ.பி.சி., நியூயார்க் டைம்ஸ், சி.என்.என். உள்பட முக்கிய சியோனிச ஊடகங்கள் வாயிலாக இப்பிரச்சாரம் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது. பல வருடங்களாக ஈரானை குறித்த உண்மைகளை வளைத்து ஈரானை பயங்கரவாத நாடாக சித்தரிக்கும் போக்கு நேர்மறையற்ற, எதிரி மனப்பான்மையுடன் நடத்தப்படும் ஊடக பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இத்துடன் இஸ்லாத்தையும் பயங்கரவாதமாக சித்தரிக்க முற்படுகிறார்கள்.

ஈரானுக்கு எதிரான 2 வது கட்ட போர்தான் ஊடகங்களை உபயோகித்து நடத்தப்படும் PROPAGANDA WAR என்றழைக்கப்படும் பிரச்சார யுத்தம். அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு முன்னரும் இந்த ககீOகஅஎஅNஈஅ ஙிஅகீ தீவிரமாக நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும் அணு ஆயுதங்களை நிர்மாணிக்கும் மிகப்பெரிய ஆயுத தொழிற்சாலைகள் உள்ளன என்ற பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் உண்மை என்னவெனில் சாதாரண மக்கள் மீது ஜப்பானிலும், ஈராக்கிலும் அணு ஆயுதங்களையும், பேரழிவு ஆயுதங்களையும் உலகில் உபயோகித்த ஒரே நாடு அமெரிக்கா ஆகும்.

இஸ்ரேல் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (NUCLEAR NON PROLIFERATION TREATY) இது வரை கையெழுத்திடவில்லை. இஸ்ரேல் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. இஸ்ரேலின் அணு ஆயுதங்களை கண்டும் காணாதது போல் நடிக்கும் அமெரிக்கா ஈரானிடம் கூறுகிறது, நீங்கள் அணு ஆயுதத்தை வைத்துக் கொள்ள உரிமையில்லை என்று. மேற்கத்திய நாடுகளும், முக்கிய சியோனிச ஊடகங்களும் இஸ்ரேலின் விரிவான அணு ஆயுத திட்டங்களை குறித்து வேண்டுமென்றே மூடி மறைக்கின்றன. மத்திய கிழக்கில் மிகப்பெரிய ஆபத்தாக திகழும் இஸ்ரேலின் மீதான கவனத்தை திசை திருப்புவதே இதன் நோக்கமாகும். இந்த கபட நாடகத்தை காணும் சர்வதேச சமூகமும் அமைதியாகவே இருந்து வருகிறது.

ஈரான் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்பதே முற்றிலும் அவதூறான பிரச்சாரமாகும். ஈரான் ஏதேனும் நாட்டை தாக்கவோ, தாக்குவோம் என்று மிரட்டல் விடுக்கவோ செய்யவில்லை. ஆனால், உண்மை என்னவெனில் எதிரி நாடுகளாக மாறியுள்ள அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மற்றும் இஸ்ரேலின் நியூக்ளியர் ஏவுகணைகள் மூலமாக அச்சுறுத்தலை ஈரான் சந்தித்து வருகிறது.

அமெரிக்காவில் வரி செலுத்தும் யூதர்கள் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உதவுகின்றனர். இஸ்ரேலுக்கு நவீன ராணுவமும், நூற்றுக்கணக்கான அணு குண்டுகளும் கைவசம் உள்ளன. நிபந்தனைகள் ஏதுமின்றி அமெரிக்கா அளிக்கும் ஆதரவின் பின்புலத்தில் இஸ்ரேல் பல தடவை அண்டை அரபு நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து, அந்நாடுகளை ஆக்கிரமித்தும் உள்ளது.
iran president
லெபனானில் 5 தடவை அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தியது. ஃபலஸ்தீன் மக்களுக்கு கடுமையான தடைகளை விதித்து அவர்களின் அன்றாட வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியது. அவர்களின் நிலங்களை பலப்பிரயோகம் மூலம் கைப்பற்றி Jewish Settlement என்று அழைக்கப்படும் யூத குடியிருப்புகளை கட்டும் பணியை சர்வதேச சட்டங்களையும், சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளையும் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. இஸ்ரேல் விரும்புவது அமைதியை அல்ல, மாறம்க தொடர்ச்சியான போரையும், தாக்குதலையும் தான் என்பதை அதன் முன்னாள், இன்றைய தலைவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

2008 டிசம்பரிலும், 2009 ஜனவரியிலும் 360 குழந்தைகள் உட்பட 1400 நிரபராதிகளான ஃபலஸ்தீன் மக்கள் காஸ்ஸாவில் கொல்லப்பட்டதை நாம் மறந்துவிட்டோமா? உலகிலேயே மிகவும் வன்முறை குணம் கொண்ட நேர்மறையற்ற அரசுதான் இஸ்ரேல். நாசிகளைப் போலவே இன அடிப்படையிலான கொள்கையை ராணுவ சக்தியின் மூலம் நடைமுறைப்படுத்தி ‘அகன்ற இஸ்ரேலை’ (GREATER ISRAEL) உருவாக்க இஸ்ரேல் முயற்சித்து வருகிறது.

அமெரிக்காவின் ஆதரவாளர்கள் ஆட்சி புரிந்த, ஆட்சி புரியும் எகிப்து, ஜோர்டான், லெபனான், சவூதி அரேபியா, யு.ஏ.இ. ஆகிய நாடுகளில் மேரிலாண்ட் பல்கலைக்கழகமும், ர்ஸாக்பி இண்டர்நேசனலும் இணைந்து அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பில் ‘மிகவும் அச்சுறுத்தலான இரண்டு நாடுகளின் பெயர்களை’ எழுதுமாறு கேட்டுக்கொண்டார்கள். பதிலளித்தவர்களில் 88 சதவீதம் பேர் அமெரிக்காவை மிகவும் அச்சுறுத்தலான நாடாக குறிப்பிட்டனர். 77 சதவீதம் பேர் இஸ்ரேல் என்று பதிலளித்தனர். 9 சதவீதம் பேர் மட்டுமே ஈரானின் பெயரை எழுதினர்.

ஐரோப்பிய கமிஷனின் ஐரோப்பிய பாரோமீட்டர் சர்வேயின் முடிவுகளும், மனித குலத்திற்கும், உலக அமைதிக்கும் மிகவும் அச்சுறுத்தலான நாடு இஸ்ரேல் என்றே குறிப்பிடுகின்றன. ஆகையால், இஸ்ரேலிடம் தான் அணு ஆயுதங்களை கைவிட நிர்பந்தம் அளிக்க வேண்டும் மாறாக ஈரானிடம் அல்ல. இஸ்ரேலின் மீது தான் தடைகளை கடுமையாக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த ‘ஈரான் மிரட்டல்’ அமெரிக்காவிடமிருந்தும், மேற்கத்திய நாடுகளிலிருந்தும் புதிய ஆயுதங்களை வாங்கி குவிக்கவும், ஃபலஸ்தீன் மீது உலகில் உருவாகிவரும் கவனத்தை திசை திருப்புவதற்குமாகும். அண்மையில் ஐ.நா.வின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) ஃபலஸ்தீனை உறுப்பினராக அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. நேஷனல் இண்டலிஜன்ஸ் எஸ்டிமேட்டின் ஆதரவுடன் பென்டகனும், 16 பிரபல அமெரிக்க ரகசிய உளவு ஏஜென்சிகளும் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்றும், ஈரான் ராணுவ ரீதியான அச்சுறுத்தல் இல்லை என்றும் உறுதி செய்துள்ளன.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஏகாதிபத்திய உபகரணமான சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூட ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்பதை நிரூபிக்க உறுதியான ஆதாரங்களை அளிப்பதில் தோல்வியையே தழுவியது. நியூயார்க்கர் மேகஸினில் ஸீமூர் ஹெர்ஷ் (SEYMOUR HERSH) கூறியது போல, ‘ஈரானுக்குள் பல வருடங்களாக ரகசியமாக இயங்கிய பிறகும், நவீன செயற்கை கோள் மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பிறகும், ஈரானிகளான பலரை உளவாளிகளாக பயன்படுத்திய பிறகும், அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்யும் எவ்வித ஆதாரங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது தான் இங்கும் (அமெரிக்காவிலும்) வெளிநாடுகளிலும் உள்ள ரகசிய புலனாய்வு துறை மற்றும் தூதரக பிரதிநிதிகளின் கருத்தாகும்’. சுருக்கமாக கூறினால் ஈரானின் அனைத்து அணுசக்தி திட்டங்களும், மின்சாரம்மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் அமைதியான, அனுமதிக்கப்பட்ட முறைகளில் உபயோகிப்பதற்காகும்.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் ஈரானின் அணு சக்தி திட்டம் அமைதியான, சட்டத்திற்கு உட்பட்ட அவசியத் தேவைகளுக்கு மட்டுமே உரித்தானது என்ற ஆதாரங்கள் தங்கள் வசம் இருந்த பிறகும், ஈரான் தடைகளுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கும் இலக்காக மாறியுள்ளது.

முக்கிய பிரச்சனை ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறதா? இல்லையா? என்பது அல்ல. மாறாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தலைமையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தை முன்னேறவிடாமல் பிற்படுத்தப்பட்ட நிலையிலேயே தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதே திட்டமாகும்.

ஈரான் மக்கள் மீது போர் தொடுப்பதை நியாயப்படுத்தும் கொடூரமான பொய்தான் இந்த அணு ஆயுத தயாரிப்பு பிரச்சாரம். ஈராக் விவகாரத்தில் நடத்தியது போன்று அமெரிக்க குடிமக்களை ஈரானுக்கு எதிரான போருக்கு தயார்படுத்தும் முயற்சிதான் இந்த நாடகங்கள். ஈராக்கில் இல்லாத ‘பேரழிவு ஆயுதங்கள் (WMD)’ என்ற மிரட்டலுக்கு பதிலாக ஈரானின் “அணு ஆயுதங்களை” குறித்து மக்களை திசை திருப்பும் பிரச்சாரம் வேகமாக நடைபெற்றுவருகிறது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக ஈராக் மக்கள் அமெரிக்க, பிரிட்டன் அதன் கூட்டணி நாடுகளின் மிகக் கொடூரமான தடைகளுக்கும், கூட்டுப்படைகளுக்கும், குண்டு வீச்சுகளுக்கும் பலியானார்கள். ஐந்து வயதிற்கு கீழான ஆறு லட்சம் குழந்தைகள் உள்பட இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட நிரபராதிகளான ஈராக்கின் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

அமெரிக்க பிரதிநிதி ஒருவர், ஈராக்கின் பிஞ்சுக் குழந்தைகள் கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தி இவ்வம்று கூறினார். “நாங்கள் சிந்திப்பது இது போதுமான விலைதான் (The Price we think is worth it)”. இது மனப்பூர்வமான கூட்டுப்படுகொலையாகும். சதாம் ஹுஸைனின் ஆட்சியின் கீழ் இருந்த ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும், அவை உலகிற்கு அச்சுறுத்தல் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆக்கிரமிப்பின் மூலமாக ஈராக்கை கைப்பற்றுவதை நியாயப்படுத்த அமெரிக்காவும், இஸ்ரேலும், பிரிட்டனும் இணைந்து ஜோடித்த பொய்களும், அசத்தியங்களும் அடங்கியது தான் இந்த குற்றச்சாட்டு. முக்கிய சியோனிச மீடியாக்கள் கொடூரமான பங்கை வகித்த இந்த பொய்ப்பிரச்சாரம் ஈராக்கை பயங்கரவாத நாடாக சித்தரிக்கவும், இரத்தம் சிந்துதலை நியாயப்படுத்தவும், பொது மக்களின் அபிப்ராயத்தை மாற்றி யெடுப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டது.

ஒரு தேசம் என்ற நிலையில் ஈராக்கை தகர்த்து எறிவது தான் ஆரம்ப லட்சியமாகும். ஒன்பது ஆண்டுகாலமாக நடந்த மிகக்கொடூரமான ஆக்கிரமிப்பிற்கு பிறகும் இப்பொழுதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் அவர்களின் கைப்பாவைகளால் ஆளப்படும் புதிய ஈராக் சீரழிந்த தேசமாகவே காட்சியளிக்கிறது. இதனை மேற்கத்திய கல்வியாளர்கள் ‘நவீனமயத்தில் இருந்து விடுதலை’ DEMODERNISATION என்று அழைக்கின்றனர்.

ராணுவமும், போலீசும் உள்பட அனைத்து ஈராக்கிய ஸ்தாபனங்களும் தகர்க்கப்பட்டன. சுகாதாரத் துறையும், கல்வித்துறையும் சீர்குலைக்கப்பட்டு தற்போதும் அதே நிலைமை தொடருகிறது. சாலைகளும், பாலங்களும், மின்சார நிலையங்களும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், அருங்காட்சியகங்களும், பள்ளிக்கூடங்களும் தகர்ந்து கிடக்கின்றன.

அது மட்டுல்ல அமெரிக்கா, பிரிவினை மற்றும் வன்முறையின் வித்துக்களை விதைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் சியோனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் ஈராக்கை பிளவுப்படுத்துவதே திட்டமாகும். குழந்தைகளும், பெண்களும் உள்பட இருபது லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி ஈராக்கிய மக்கள் கொலை செய்யப்பட்டனர். ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக மாற்றப்பட்டனர். முற்றிலும் நிராயுதபாணிகளான மக்கள் மீது முன் கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொடூர ஆக்கிரமிப்பு தான் ஈராக் மீதான தாக்குதல்.

முன்பு நாசி ஜெர்மனி மட்டுமே இத்தகைய கொடூரமான போர் குற்றங்களையும், ஆக்கிரமிப்பு போர்களையும் புரிந்துள்ளது. ஈராக்கிற்கு எதிராக ஆக்கிரமிப்பு போரை திட்டமிட்டு அதனை நடைமுறைப்படுத்திய அமெரிக்காவும், அமெரிக்காவின் சேவகர்களும் விசாரணை செய்யப்பட வேண்டும்.

ஈராக்கை கொடூரமாக தாக்கி அழித்த பிறகு அமெரிக்காவும், கூட்டணி நாடுகளும் மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக வேடமிட்டு லிபியாவையும் தகர்த்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் நேட்டோ படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். கத்தாஃபி மீதான பழைய பகையையும், லிபியாவின் எண்ணெய் வளத்தின் மீதான ஆர்வமும் அமெரிக்கா மற்றும் கூட்டணி படைகளின் லிபியா தாக்குதலுக்கு காரணமாகும். தாக்குதலின் விதையை விதைப்பதற்காக பிரிவினையை துருப்பு சீட்டாக அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் பயன்படுத்துவது வழக்கமாகும். அரபுலக சர்வாதிகாரிகளுக்கு நேசத்திற்குரிய நாடாக திகழ்ந்தது தான் அமெரிக்காவின் பாரம்பரியமாகும்.

இன்று, அந்த நாடுகளில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் கோரி நடக்கும் போராட்டங்களை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் சூழ்ச்சிகளை அரங்கேற்றவே அமெரிக்கா முயலும். ஒரு நாள் அமெரிக்காவிலேயே அந்நாட்டு குடிமக்களாலேயே ஆயுதப் போராட்டங்கள் உருவாகலாம். அப்பொழுது அமெரிக்கா என்ன செய்யும்?

முஅம்மர் கத்தாஃபியின் ஆட்சியின் கீழ் இருந்த லிபியாவைப் போலவே ‘மனித உரிமை மீறல்களுக்காக’ சிரியாவை அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இது சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது. ‘மனித உரிமைகள்’ என்ற வார்த்தையை கூற கூட உபயோகிக்க ஒரு அமெரிக்க அரசியல்வாதி வெட்கப்பட வேண்டும். மனித உரிமை மீறல்களுக்கு பிரசித்திப் பெற்ற அமெரிக்கா, சித்திரவதை, சித்திரவதைகளை பார்த்து ரசித்தல், அரசு பயங்கரவாதம், பாரபட்சம், அநீதி, இனவெறி என மனித உரிமை மீறல்களின் ஒட்டுமொத்த உருவமாக உள்ளது. உலகமெங்கும் சர்வாதிகாரிகளை ஆதரிக்கும் பாரம்பரியம் அமெரிக்காவிற்கு சொந்தம். இதர நாடுகளை குறித்து விமர்சிக்கும் தார்மீக உரிமை கூட அமெரிக்காவிற்கு இல்லை.

சிரியா மக்கள் மீது அமெரிக்கா காட்டும் கரிசனம் போலியானது. சிரியாவின் மீது தொடரும் போர் என்பது ஈரானுக்கு எதிரான போருக்கு சமமானது. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் சிரியாவும், ஈரானும் இடம் பெற்றுள்ளன. ஆகையால் சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது ஈரானின் மீதான தாக்குதலாகும்.

பஸ்ஸாருல் ஆஸாதின் தலைமையிலான சிரியா அரசை பதவி விலகச் செய்வதன் மூலம் ஈரானை தனிமைப்படுத்தி இப்பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதிக்கத்தை வலுப்படுத்தி ஈரானின் மீதான தாக்குதலை வலுப்படுத்துவதே அமெரிக்காவின் திட்டம். பஸ்ஸாருல் ஆஸாத் சிரியா மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து அமெரிக்கா சிரியாவின் மீது நடவடிக்கை எடுக்கும் என்று கருதினால் அந்த எண்ணமே தவறானது. அரபு நாடுகளில் இஸ்லாமியாவாதிகளின் கரங்களில் ஆட்சி செல்வதை அமெரிக்கா எப்பொழுதும் விரும்பாது. எகிப்திலும், துனீசியாவிலும் இஸ்லாமியவாதிகளின் வெற்றியை வேண்டா வெறுப்பாக ஆதரிக்கும் கட்டாயம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா விரும்பும் புதிய மத்திய கிழக்கு என்பது அமெரிக்காவின் சித்தாந்த கிழவன் பெர்னார்ட் லெவிஸின் மூளையில் உதித்த கொள்கையாகும். (The Emergence of Modern Turkey) என்ற நூலில் முஸ்தஃபா கமால் பாஷா உருவாக்கிய துருக்கியை மேற்காசியா முழுமைக்கும் முன்மாதிரியாக உயர்த்திகாட்டியிருந்தார் லெவிஸ்) அந்த கொள்கையோ, முஸ்தபா கமால் பாஷா, துருக்கியில் கிலாஃபத்தை ஒழித்துவிட்டு நடைமுறைப்படுத்திய இஸ்லாத்திற்கு விரோதமான தீவிர மதச்சார்பற்ற கொள்கை. இந்த கொள்கையின் அடிப்படையிலான புதிய மத்திய கிழக்கை உருவாக்குவதே அமெரிக்காவின் கனவாகும்.

அமெரிக்காவிற்கும், அதன் மேற்கத்திய கூட்டணி நாடுகளுக்கும் அணு ஆயுதங்களை குறித்த கவலை இருந்தால், இஸ்ரேலும் அடங்கிய மத்திய கிழக்கை அணு ஆயுதம் இல்லாத பிராந்தியமாக மாற்றுவதற்கு ஆக்கப்பூர்வமாக முயற்சிக்க வேண்டும்.

மனித உரிமைகளை குறித்த கவலை உண்மையில் அமெரிக்காவிற்கும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் இருக்குமானால், ஆப்கானிலும், ஈராக்கிலும் நேரடி மறைமுக ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும். குவாண்டனாமோ உள்ளிட்ட அனைத்து சித்திரவதை கூடங்களையும் இழுத்து மூட வேண்டும். காஸ்ஸா மக்கள் மீதான இஸ்ரேலின் ராணுவ தடையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதர நாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்.

அரச பயங்கரவாதம், ஆக்கிரமிப்பு, தாக்குதல் ஆகியவற்றின் மூலம் உலகை அடக்கி ஆள திட்டமிடும் அமெரிக்காவின் தலைமையிலான பலமான ராணுவ சக்தியின் அராஜகங்களை உலக நாடுகள் அமைதியாக கண்டு கொண்டிருக்கிறது. இந்த அராஜகங்கள் ஒரு நாள் நம் மீதும் நிகழ்த்தப்படும் என்பதை உலக நாடுகள் உணர வேண்டும். ஆகவே தன்னை பாதுகாக்க முயலும் ஈரானின் உரிமையை ஆதரிப்பதும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்ப்பதும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் கடமையாகும்.

Thanks to Popular Front of India

No comments: