Sunday, August 3, 2008

இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகள் இறந்து போன எந்த ஒரு முஸ்லிமையும் அவர் தன் பிள்ளைகள் மீது காட்டிய கருணையின் காரணமாக அல்லாஹ் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்யாமல் இருப்பதில்லை'' என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

அபூஸயீத் (ரலி), அபூஹூரைரா(ரலி) இருவரும் அறிவிக்கின்றார்கள்:
''ஒரு பயணத்தில் மூன்று பேர் சென்றால், அவர்களில் ஒருவரை அவர்கள் தலைவராக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) கூறினாhர்கள்.(ரியாளுஸ்ஸாலிஹீன்)

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நாங்கள் ஒரு பயணத்தில் இருந்த போது, தன் வாகனத்தில் இருந்த ஒருவர், வலதுபுறமாகவும் - இடதுபுறமாகவும் தன் பார்வையை திருப்பிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''(வாகனத்தின்) முதுகில் மேல் மிச்ச - இடமுள்ளவராக ஒருவர் இருந்தால், வாகன வசதி இல்லாத ஒருவருக்கு அதை ஒதுக்கட்டும்! ஒருவரிடம் பயண உணவில் மீதம் இருந்தால், பயண உணவு இல்லாதவருக்கு என அதைக் கொடுக்கட்டும்! என்று ஒவ்வொரு பொருட்களின் தனித்தனி வகைகளாக நபி (ஸல்) கூறினார்கள். மேல் மிச்சமாக உள்ள எதுவும் நமக்கு உரிமையானது அல்ல'' என்று நாங்கள் எண்ணும் அளவுக்குக் கூறினார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 969)

''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

No comments: