Monday, April 12, 2010

ஒற்றுமை




உலகத்தாரின் குரல்கள் ஒலிக்கின்றன ஒற்றுமையாய்

நம் குரல்களும் ஒலிக்கின்றன - ஒற்றுமைக்காய்!

சாதித்தவர்கள் அவர்கள் - சருக்கி விழுந்தோர் நாம்தான்!!

பரிதவித்த ஓர் அப்பாவிச் சமூகமாய்

பாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறோம் - நம்மை

படித்த பாமர்களாய் ஆகிவிட்டோம் படிப்படியாக!

என் சமூகத்திற்கு நேர்ந்ததென்ன?

என் சமூகம் ஏன் தற்கொலை செய்யப்பார்க்கின்றதா?!

நானும், நீங்களும் சமூகத்தின் அங்கத்தவர்கள்!!

என் சமூகமே!

உன் எதிர்காலம் செழிக்க உனக்கு வேண்டும் இரு தகமைகள்:

1- இம்மையின் இன்னல்கள் அகல - ஒற்றுமையும்

2- மறுமையின் வளங்கள் செழிக்க - ஏகத்துவமும்.

இவ்விரண்டுக்கும் அர்ப்பணமாகட்டும் எம் எதிர்காலம்

சகோதரர்களே, கைகோர்ப்போம் நம் உருக்குளைந்த ஒற்றுமையை நிலைநாட்ட.

No comments: