Sunday, April 18, 2010

நபிமொழி

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்: 'பானத்தில் ஊதுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ''பாத்திரத்தில் தூசியை நான் பார்க்கிறேன்'' என்று ஒருவர் கேட்டார். ''அதை எடுத்துப் போடுவீராக'' என்று நபி(ஸல்)கூறினார்கள். ''ஒரே மூச்சில் குடிப்பதால் நான் தாகம் தீர்க்க முடிவதில்லை'' என்று அவர் கூறினார். ''உன் வாயிலிருந்து குவளையை எடுப்பீராக (விட்டு, விட்டுக் குடிப்பீராக)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: 'நபி(ஸல்) அவர்கள், பாத்திரத்தில் மூச்சு விடுவதையும், அல்லது அதில் ஊதுவதையும் தடை செய்தார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்களுக்கு ''ஸம்ஸம்'' தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தேன். அவர்கள் நின்ற நிலையிலேயே குடித்தார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''உங்களில் எவரும் நின்று கொண்டு தண்ணீர் குடிக்க வேண்டாம். மறந்து (குடித்து) விட்டால் அவர் வாந்தி எடுக்கட்டும்'' என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்: ''தன் வேட்டியைத் தரையில் பட இழுத்து நடப்பவனை, மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்: ''வேட்டியில் இரண்டு கணுக்கால்களுக்கும் கீழிறங்கி இருப்பின், அது நரகில் உள்ளதாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: ( புகாரி, முஸ்லிம்)

No comments: