Sunday, December 12, 2010

மழலைச் செல்வங்கள்


குழந்தைச் செல்வங்கள் - அவர்கள்
குழுகுழுவென இதயத்தை நனைக்கும்
மழலைச் செல்வங்கள்!

கலகலவெனப் பேசி - மனசுகளை
பளபளவெனப் பூசும் கலைஞர்கள்!

குழந்தையின் அழுகை - ஒரு
இசையற்ற காவியம் - அது
இதயத்தைத் துளைத்து
கல்லையும் உருகச் செய்யும்!

குருகுருவென ஓடியாடி விளையாடும்
சிட்டுக் குருவிச் செல்வங்கள் - அவர்கள்
மனக்காயத்தின் தழும்புகளைக் கூட
புன்சிரிப்பின் பூரிப்பில் மாறச்செய்பவர்கள்!
- அபூ அரீஜ்

No comments: