Wednesday, December 8, 2010

'மெத்தக் கூர்மை மழுமொட்டை'



அனாச்சாரங்களைச் சுமந்து வரும்
மேற்கத்தேயப் புயல் - இன்று
மனித இதயங்களை ஆபாசத்தால் நனைத்துவிட்டதால்
துவட்ட முடியாமல் தடுமாறுகின்றது இளைய சமூகம்!

ஆபாச அழுக்குகளில் சருக்கி விழுந்தோர் ஏறாலம்
போதனை ஊற்றுக்களில் கூட - அவர்களை
சலவை செய்ய சானாக்கிய மற்ற நிலை!

ஆடைக்காய் அலைந்து ஆலைகள் பல கண்டு
கோடைகளில் கூட ஆடைகளகற்ற பலகியோர் - இன்று
குத்தூசியாய்க் குத்தும் குளிர்காலத்தில் கூட
ஆடைகளகற்றி அலையும் மானிடர் பாரீர்!!

மேலெலுந்து செல்லும் மேற்கத்தேய ஆசானே!
'மெத்தக் கூர்மை மழுமொட்டை' என்பதைப் போல்
எல்லை கடந்த எழுச்சிதான் - உன்னை
எளிலற்ற பன்பாட்டின் ஏழ்மைக்குத் தள்ளியதோ?!

மனிதன் வளம் பெற - அங்கே
மனிதமன்றோ செழிக்க வேண்டும்
பாவம் அந்தோ மனதர்காள்!
போலியாய்ப் புனையப்படும் பகட்டுக்குள்
புரையோடிவிட்டது அவர்கள் எதிர்காலம்!

கிஞ்சிற்றும் வெற்கமில்லா தோரனையில்
கிழடுகள் கூட அரவணைக்கும்
கிழிந்த பன்பாடொன்றை - அவர்கள்
எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்!

மனிதத்தைத் தொலைத்துவிட்டு
மடமையை மட்டும் அறுவடைசெய்யும்
மட்டரகக் கலாச்சாரம் - மேற்கத்தேய
சித்தாந்தத்தில் செதுக்கப்படுகின்றன!

ஆபாசக் கலைஞன் செதுக்கும் சிற்பங்களுக்கு
சதைவியாபாரிகளின் சந்தைகளில் அமோக வரவேற்பு!
சஞ்சலம் கொண்ட உள்ளங்கள்
சானாக்கியமாய் கொள்வனவு செய்கின்றன!

வலைப் பூக்களின் வராந்தாக்களில்
வகைவகையாய்ப் பூத்திருக்கின்றன
வயது வந்தோர்க்கு மட்டுமாய் - அங்கே
இளசுகளில் எதிர்காலம் திருடப்படுகின்றன!

நாளையைத் தொலைத்து விட்டு
நறைத்த சிந்தனைகளை மட்டும்
மண்டைகளிலேற்றி மனிதங்களை மட்டும்
திருடிக் கொள்ளும் மடமைச் சமூகம்! - அவர்கள்தான்
வாழத்தெறிந்தவர்களாம்!!!
- அபூ அரீஜ்




No comments: