
1920 களில் ஒரு பொருளாதார மந்த நிலை தோன்றியது அதன் தாக்கம் 10 வருடங்கள் தொடர்ந்தன, ஆனால் இன்றைய பொருளாதார பாதிப்பானது அதை விட பயங்கரமானதாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
2015ம் வருடம் பஞ்சம் தோன்றும் என்றும் அதனால் மிகப்பெரிய அளவில் உலகில் உணவிற்கான பிரச்சினைகள் வரும் என்று UNO என்ற அமைப்பு எச்சரித்துள்ளது.

மனிதன் பொருளாதாரம் தேடும் இயந்திரமாக, ஒரு விலங்காக பொருளாதாரத்தை தீவிரமாக தேடும் போக்கினாலும், வியாபாரத்தை Gambling என்ற நிலைக்கு கொண்டுவந்ததன் காரணத்தால் ஏற்பட்டதுதான் இந்த உலக பொருளாதார மந்த நிலை.
அதாவது வேகமாக பொருள் தேடவேண்டும் உடனடியாக தேடவேண்டும் என்ற நிலை. அதுமட்டுமல்லாமல் அதிக அளவில் கொடுக்கப்பட்ட கடன்கள்,
No income, No job, No Assets, அதாவது வேலை தேவையில்லை, வருமானம் தேவை யில்லை, சொத்துக்களும் தேவையில்லை ஆனால் கடன் கிடைக்கும் என்ற ரீதியில் தாறுமாறாக கொடுக்கப்பட்ட கடன்கள் திரும்பி வரும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்ட பணம், அதனால் திவாலான நிதி நிறுவனங்களில் தொடங்கி ஆரம்பிக்கிறது இந்த உலக பொருளாதார மந்த நிலை.
அனைத்தும் கடன் மயம், கடனை வாங்கி கடனை விற்பது, கட்டட நிர்மாணத்திற்கு கொடுக்கப்பட்ட வரா கடன்கள் அதாவது கற்பனையை அடிப்படையாக வைத்து கொடுக்கப்பட்ட கடன்கள்.
ஒரு இடத்தில் இந்த வகையான கட்டிடம் வரப்போகிறது இன்ன இன்ன வசதிகள் நிறைந்தது என படங்களை காட்டி பணம் பண்ண ஆரம்பித்து அதற்காக கடன் கொடுக்க ஆரம்பித்து அவைகள் வராக் கடன்களாக போயின.
அமெரிக்காவைப் பொறுத்தவகையில் இந்த home loans எனப்படும் வீட்டுக் கடன்கள் அதிக அளவில் கொடுக்கப்பட்டதும், வீடுகளின் விலை ஏறினாலும் அதிக வட்டியை நோக்காக கடன்கள் வீடு வாங்குபவர்களுக்கு கொடுக்கப்பட ஒரு விதத்தில் அந்த கடன்கள் திரும்பி வராத நிலையில் வங்கிகள் மூழ்கிப்போகின என்கின்றன பத்திரிக்கைகள்.
அமெரிக்காவைப் பொறுத்தவகையில் இந்த home loans எனப்படும் வீட்டுக் கடன்கள் அதிக அளவில் கொடுக்கப்பட்டதும், வீடுகளின் விலை ஏறினாலும் அதிக வட்டியை நோக்காக கடன்கள் வீடு வாங்குபவர்களுக்கு கொடுக்கப்பட ஒரு விதத்தில் அந்த கடன்கள் திரும்பி வராத நிலையில் வங்கிகள் மூழ்கிப்போகின என்கின்றன பத்திரிக்கைகள்.

இவை அனைத்தும் எதை வைத்து கொடுப்பட்ட கடன்கள்? நிச்சயமாக அதிக வட்டியை எதிர்பார்த்து கொடுக்கப்பட்ட கடன்களே. ஆனால் நிலைமை கைமீறிப் போனது .
அதனால் தான் சொல்லப்படுகிறது ‘பொருளாதார உலகின் எய்ட்ஸ்தான் இந்த வட்டி,
இப்பொழுது உலக அறிஞர்கள் சொல்ல முனைகிறார்கள் வட்டியானது 0% அடையும் வரை இந்த பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்குமென்று.
1990களில் கம்யூனிஸ பொருளாதாரக் கொள்கை தோல்வி அடைந்தது, சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பி வந்த கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள் தந்த முதல் பேட்டியில் சொல்கிறார் ‘ கியூபாவிற்க்கு இனி கம்யூனிஸ பொருளாதாரம் உதவாது’ என்று.
அதே போல்தான் வட்டியை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையும் அடியோடு மாற்றப்பட வேண்டும்.
நான் எத்தனை சத்தியங்கள் வேண்டுமானலும் செய்யலாம் உலகில் வட்டியை சார்ந்த பொருளாதாரமானது வறுமையை ஒழிக்க முடியவே முடியாது என்று.
நான் எத்தனை சத்தியங்கள் வேண்டுமானலும் செய்யலாம் உலகில் வட்டியை சார்ந்த பொருளாதாரமானது வறுமையை ஒழிக்க முடியவே முடியாது என்று.
நன்றி: அகார் முகம்மது. இ
__._,_._
No comments:
Post a Comment