Friday, April 6, 2012

இலக்கியமற்ற இன்ப கீதம்!

என் செல்லக் குழந்தைகளின்
தெவிட்டாத சிரிப்பொழி
எதுகை மோனையற்ற தேனிசை!

கல்லம் கபடமற்ற
கலைச் சொற்ரொடர்
இலக்கியமற்ற இன்ப கீதம்!

ஒன்றரை வருடக் குழந்தையின்
ஒவ்வொரு வார்த்தைகளும்
அறுந்து விழும் அமுதக் கவிதை!

நளை பற்றிய கவளையற்ற
நகர்வுகள்தான் அவர்கள் வாழ்க்கை- ஆனால்
நாமோ அவதிப்படுவதெல்லாம் நாளைக்காய்த்தான

- அபூ அரீஜ்

No comments: