Monday, August 5, 2013

முஸ்லிம்கள் மீதான ஹிந்துத்துவாவினரின் பொய்ப் பிரசாரங்களுக்கு பேரா.அ.மார்க்ஸ்-தி.மு.க. வழக்கறிஞர்.பிரசன்னா நெத்தியடி பதில்!


Inline image 1

சேலத்தை சேர்ந்த பா.ஜ க.பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒருமித்து கண்டித்துள்ளன.வ ன்முறை கூடாது என்பதுதான் இஸ்லாமிய அமைப்புகளின் நிலைபாடாக இருந்து வரும் நிலையில்,ரமேஷ் கொலையை அரசியலாக்கி ஆதாயம் அடையத் துடித்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகள், ரமேஷ் மற்றும் கடந்த காலங்களில் தனிப்பட்ட
காரணங்களுக்காக கொல்லப்பட்ட ஹிந்துத்துவாவினரின் படுகொலை சம்பவங்களை முஸ்லிம்களோடு இணைத்து சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை மீடியாக்களில் விவாதப்பொருளாக மாற்றப்பட்டு பரபரப்பை கிளப்பி வருகிறது.இன (25 ந் தேதி) கலைஞர் செய்திகள் தொலைகாட்சியில் பேரா.அ.மார்க்ஸ்,சமூக ஆர்வலரும் தி,மு.க வழக்கறிஞருமான பிரசன்னா,திருவாரூர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகி கருப்பு என்கிற முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்ட விவாதம் நடை பெற்றது. 'தமிழகமா? கொலைக்களமா? என்ற தலைப்பில்
நடந்த இந்த விவாதத்தில்,தமிழகம் கொலைக்களமாக மாறுகிறதா?கொலைகளுக்கு மதச் சாயம் பூசப்படுகிறதா என்கிற கருப்பொருளுடன் நடந்த இந்த விவாதத்தில்...ப.ஜ.க வின் கருப்பு பேசிய போது,

''இந்துதுவா வாதிகளை கொலை செய்வது முஸ்லிம்க தான்.கோவை குண்டுவெடிப்பை உதாரணமாக சொல்லலாம் '' என்றவுடன் கருப்பின் பேச்சை எதிர்கொண்ட பேரா.மார்க்ஸ்,''நீங்கள் கோவை குண்டு வெடிப்பை எடுத்தால்,அதன் முழு வரலாற்றையும் நான் சொல்லவேண்டி வரும்''என்றவர், தொடர்ந்து ''முதன் முதலில் அப்துல் ஹக்கீம் என்ற முஸ்லிமை கொலை செய்து (கொலை பட்டியலை)
துவக்கி வைத்தது.அதன் பிறகு இரு தரப்பிலும் மாறி மாறி கொலைகள் நிகழ்ந்தன. ஒரு கட்டத்தில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.இந்த படுகொலைகளை காவல்துறையும் ஹிந்துத்துவாவினரும் சேர்ந்து செய்தனர்.அதன் பின்னர் தான் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.'' என்றார்.

இதே போல, முத்துப்பேட்டை ஊர்வலம் குறித்த பேச்சு வந்த போதும்,''முத்துப் பேட்டை கலவரங்களைத் தொடர்ந்து 4 முறை நான் குழுவினருடன் உண்மை அறியும் குழுவாக சென்று சம்பவங்களை ஆய்வு செய்திருக்கிறேன. முத்துப்பேட்டையின் வீதிகள் குறுகலானவை.அந்த வழியாக ஊர்வலமாக செல்லும் ஹிந்துத்துவாவினர்,முஸ்லிம் பெண்களைப்  பார்த்து அசிங்கமாக பேசுவதும், ஆபாச செய்கைகளை செய்வதுமாக செல்வது பிரச்சனைக்கு காரணம்.ஒரு கலவரத்தில சுமார் 1 கோடி ரூபாய் வரை முஸ்லிம்களின்
சொத்துக்கள் இழப்பிற்குள்ளாயன.சென்னை உயர்நீதி மன்றத்தில் கொடுத்த எங்களது உண்மை அறியும் குழுவின் பரிந்துரைகளை (மாற்றுப்பாதையில் ஊர்வலம் கொண்டு செல்லப்படவேண்டும் என மாற்றுப் பாதை திட்டத்தை வரைந்து,

அதன்படி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது,பேரா.மார்க்ஸ் குழுவினரின் பரிந்துரைகளையும் மனுவில் இணைத்து சமர்பித்திருந்தது) நீதி மன்றம் மாற்றுப் பாதைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுக்கு பின் நடந்த ஊர்வலத்தை கண்காணிக்க எங்கள் குழுவினருடன் சென்றோம்.கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மாடியிலிருந்து நாங்கள் கண்காணித்தோம்.

புதிய மாற்றுப் பாதையில் செல்ல மாட்டோம் என ஹிந்துத்துவாவினர் முரண்டு பிடித்தனர்.'' என பேரா.மார்க்ஸ் சொன்ன போது..''மார்க்ஸ தவறான செய்திகளை சொல்கிறார்'' என மறுத்தார் கருப்பு. ஆனால் பேரா.மார்க்ஸ் சொல்வது உண்மை என்பதற்கு நாம் உட்பட பலர் சாட்சி.அன்றைய தினம்,நமது மக்கள் ரிப்போர்ட்டின் நிருபர் குழுவினரான வேளச்சேரி சிராஜ்,கலிமுல்லா ஆகியோர் ஊர்வலம் குறித்த செய்தியை சேகரிக்க முத்துப்பேட்டையில் முகாமிட்டிருந்த னர்.அந்த செய்திகளை மக்கள் ரிப்போர்ட்டில்
வெளியிட்டிருந்தோம்.

புதிய மாற்றுப்பாதையில் போக மாட்டோம் என இதே கருப்பு,அப்போதைய திருவாரூர் மாவட்ட
காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் குமார் அபிநபு வின் காவல் வாகனத்தின் மீது ஏறி நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவாதத்தில் பேசிய வழக்கறிஞர் பிரசன்னா..''ஹிந்துத்துவாவினரின படுகொலை சம்பவங்களுக்கு பல்வேறு தனிப்பட் காரணங்கள் இருக்கின்றன.ஆனால் முஸ்லிம்களை நோக்கி கை நீட்டுவது தவறான போக்கு.

இது காவல்துறையின் கையாலாகததனம்.கா வல்துறையும் கூலிப்படையும்,ஹிந்துத்துவாவினரும்
முஸ்லிம்களை நோக்கி கை நீட்டுவது அருவருப்படிட்டர் ரமேஷ் கொலை நீங்கலாக(குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்ப டவில்லை.) படுகொலையான ஹிந்துத்துவாவினரை கொன்றவர்கள் யார்என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள்யாரும் முஸ்லிம்கள் இல்லை...'' என்றார்.

No comments: