
'ஒருவனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் சொய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான்'.
விண்வெளிப்பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இருக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் கூட இந்த அனுபவத்தை உணர முடியும். விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்பதனை 1400 வருடங்களுக்கு முன்னர் எவரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். இத்தகைய காலகட்டத்தில் விண்வெளிப்பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியினால் எப்படிக் கூற முடியும்? அன்றைய காலப்பகுதியில் படைத்த இறைவனுக்கு மட்டுமே இது தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து அல்-குர்ஆன் இறைவாக்காகும் என்பது சந்தேகமற நிரூபனமாகின்றது. (6:125)
-ஆக்கம்/தொகுப்பு: நிர்வாகி
No comments:
Post a Comment