Tuesday, September 29, 2009

சமூகத்தின் விடியளில் நம் பங்கென்ன?

நான் மேகத்தைப் பார்த்து சந்தோஷப்படுவதுண்டு, ஏனென்றால் அவற்றைப் போல் சுதந்திரமாக பூமியில் எம்மால் சஞ்சாரம் செய்ய முடிவதில்லை. வன்முறை, அட்டூளியம், அனாச்சாரம், அசிங்கம், பாசிஸம், ஆக்கிரமிப்பு, அடக்குமுறை... இன்றைய உலகில் மலிந்து விட்ட பண்டமெனலாம்.

என் பள்ளிப்பருவத்து நாட்களை நான் அசைபோடுவதுண்டு, அக்காலம் என் வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே சுவாசித்து வாழ்ந்த நாட்கள்! இன்று அவை தொலைந்து போய் எத்தனையோ வருடங்களாகின்றன.

என் சகோதரங்கள் குதறப்படும் போதெல்லாம் பொழுதுகளை நான் மலையாச் சுமக்கிறேன். காலத்தை கட்டித் இழுத்துப் போக வேண்டியுள்ளது. நகர மறுக்கும் பொழுதுகளாய் அவை என்னை இன்னமும் இம்சைப்படுத்துகின்றன.
அடக்கு முறைக்கலாச்சாரத்தில் அவதிப்படும் அப்பாவிச் சமூகத்தின் அவலக் குரல் அலை மோத மனிதம் சுமக்கும் ஒரு உயிரினால் மன்டியிட்டு வேடிக்கை பார்க்க முடியவில்லையே! ஐயகோ, என் சமூகத்தின் அவலம் துடைப்போர் எங்கே? ஏனன்று கேட்கக் கூட நாதியற்று கட்டுண்டு கிடக்கிடக்கும் சிலர், வேடிக்கை பார்த்து வேண்டாதவர்களாய் ஒதுங்கி நிற்போர் பலர்!!

மனிதங்கள் மட்டும் அதிகமாய் வாழ்ந்த இப்புவியில் புதிதாய் முளைத்திருக்கும் மனிதர்களை என்னால் காணப்பிடிக்கவில்லை. எனக்கு அவர்கள் அவமானச் சின்னங்களாய் காட்சி தருகின்றனர். மனிதமற்று நடைப்பிணங்களாய் சஞ்சரிக்கும் பிண்டங்கள்!

என்னைப் போல் நீங்களும் உணர்வுள்ளவர்கள்தானே, சகோதரங்களுடன் பிறந்தோர்தானே, ஆனால் உணர்வுகள் மட்டும் உறங்கிப் போனதேனோ? நம் பிரார்த்தனைகளாவது அவர்ளது விடியலுக்கான காணிக்கையாகட்டும்.

உணர்வுள்ள ஒவ்வொருவரும் நம் சமூகத்தின் விடியலுக்காய் கடமைப்பட்டுள்ளோம். காலம் கடத்தாது கடமையாற்றும் திறமை புனைய வேண்டும். எம்மால் முடியும் ஏதாவது செய்ய எம்மால் முடியும்.

சகோதரா உன்னால் முடிமான ஒன்றையாவது செய்:
- ஒவ்வொரு தொழுகையிலும் பிரார்த்தனை செய்தல்.
- முடியுமான பொருளுதவி செய்தல்.
- ஆக்கங்கள் மூலம் மனிதக் கண்களை விளிக்கச் செய்தல்.
- இலவச வெப்தளங்களை நிருவி குரல் கொடுத்தல்.
- ஆக்கவியளாலர்களை ஊக்குவித்தல்.
- திறமைசாலிகள் உருவாக்கத்தில் பங்கேற்றல்.
- ஊடக வன்முறைகளை எதிர்த்து போரிடல்.
- நிஜங்களை மட்டும் உலக அரங்கேற்றம் செய்தல்.
- சமூக விளிப்புணர்வு மாணாடுகள், பட்டறைகள் போன்றவற்றை ஏற்படுத்துதல்.
- குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் வாழும், சிந்திக்கும் குடும்பங்களை உருவாக்கல்..

இப்படியான ஏறாளமான வழிகளில் குற்றுயிராய்த் தவிக்கும் நம் சமூகத்தைக் காப்பாற்ற பாடுபட முடியும். விளித்தெளும் உணர்வுகளை தடடியெழுப்புவோம். வீரத்தோடு வீருநடை போடும் வேங்கையாய் நம் செயல்கள் நிலைக்கட்டும்.

'எவர் முஸ்லிம்களுடைய விடயங்களில் கவணம் செலுத்தவில்லையோ, அவர் எம்மைச் சேர்ந்தவர் அல்ல' என்ற நபிகளாரின் வாக்கைக் கவணத்திற் கொண்டு, ஏதாவதொன்று செய்தே ஆக வேண்டும்.

No comments: