Tuesday, September 29, 2009

படித்து இரசித்தவை

நான் அரபியில் படித்து இரசித்தவை - நீங்களும் இரசிக்க வேண்டாமா? தமிழில் தருகிறேன்:

அன்பு:
திருமணம் முடித்து சுமார் 20 வருடங்களின் பின்னர் அவள் தனது வாழ்க்கையிலேயே மிகவும் மோசமான உணவை அன்று சமைத்தாள். சோறு அரைப்பச்சை, இரைச்சி எரிந்து கரிக்கட்டை போலிருந்தது, ரசமோ உப்பும் புளியும் எல்லையைத் தாண்டி வாயில் வைக்க முடியாமலிருந்தது.
கணவனோ மிகவும் பொறுமையோடு வழமைபோல் உணவருந்தினான். மனைவியோ போதாக் குறைக்கு உண்ட பாத்திரங்களை கழுவவும் இல்லை, சுத்தம் செய்யவும் இல்லை. இப்படியிருக்க கணவனோ அன்போடு அவளை ஆரத்தழுவி இச்சென்று ஒரு முத்தமும் கொடுத்தான்.

மனைவி: என்னங்க.. எதுக்கு இந்த முத்தம்.
கணவன்: இன்று உனது சமையலும், நீ நடந்து கொண்ட விதமும் இன்னிக்கித்தான் கல்யாணம் முடித்த புதுப் பொண்டாட்டிய போல இருந்துச்சும்மா. அதான்!

நாமும் நம் துணைவியர்களோடு இப்படியல்லவா நடந்து கொள்ள வேண்டும். ஆனால் மின்னலும், இடியும் டயனிங் ஹாலில் நடக்க, படுக்கையறையில் அவளோ கண்ணீர் மழையில் நனைந்து கொண்டல்லவா இருக்கிறாள்.

உறுதி:
கடுமையாக வரட்சி நிலவிய காலமது, கிராமவாசிகள் அனைவரும் மழைவேண்டித் தொழத் தீர்மானித்தனர்... எல்லோரும் ஒரு வெளியில் ஒன்று கூடினர். அவர்களில் ஒருவர் மட்டும் 'கொடை'யுடன் வந்திருந்தார்!
அதுதான் உண்மையான உறுதியின் வெளிப்பாடு!

நற்பு:
உண்மையான நற்பு எதனை ஒத்திருக்க வேண்டும் தெறியுமா? ஒரு வயதுக் குழந்தையை நீ வானத்திலிருந்துதான் தூக்கி வீசினாலும் அது சிரித்துக் கொண்டுதானிருக்குமே அதற்குத்தான். ஏனன்றால் அந்தப் பிஞ்சுக்குத் தெறியும் ஒரு போதும் அதனை கீழே விழ விடாமல் நீ எப்படியாவது பிடித்துக் கொள்வாய் என்று!
அதுதான் உண்மை நற்பின் யதார்த்த நிலை!

எதிர்பார்ப்பு:
ஒவ்வொரு இரவும் நாம் உறங்கச் செல்லும் போது நாளை விழித்தெழுவோமா என்பதில் எந்த உறுதியுமில்லை. இருந்தாலும் நாளைக்காக நாம் திட்டம் தீட்டுவதை மறப்பது கிடையாதே!
அதுதான் திடமான எதிர்பார்ப்பு!

நில்... ஒரு நிமிடம் அமைதியாக புன்னகை.
வாழ்க்கையின் கருப்பு வெள்ளைப் பக்கங்களை நிதானத்துடன் பார். கருப்பை உன்னால் ஒருபோதும் வென்மையாக்க முடியாது. நாம் அதனை அழகாய் பயன்படுத்திக் கொள்கின்றோம்.

No comments: