Tuesday, February 10, 2009

மெளனங்கள்


முட்டைகளை
ஒத்திருக்கின்றன
மெளனங்கள்.

வெண்மையாலான ஓடு
வெளித்தெரியும்
சமாதானமாகவோ...சம்மதமாகவோ...!

உள்ளிருப்பு
தெரிவதில்லை
உடையும் வரை!

பொறுமை காத்து
பிரசவிக்கச் செய்யலாம்
புதிய பிறப்பை!

எனினும்..
உடைக்கப்பட்டே
உட்கொள்ளப்படுகின்றன
பெரும்பாலும்!

இன்னமும்
உடைக்கப்பட முடியாமலிருக்கும்
ஒற்றை முட்டையில்
உறைந்திருக்கலாம்
ஓர் மகா நிசப்தம்.


Thanks: பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

No comments: