Saturday, February 21, 2009

வீட்டிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ

بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ ولاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ بِاللهِ
பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன், என் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து விட்டேன், மேலும் அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும், (நன்மையானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை.
(நூல்கள்: அபூதாவூது, திர்மிதி)
اَللَّهُمَّ إِنِّي اَعُوْذُ بِكَ اَنْ اَضِلَّ اَوْ اُضَلَّ اَوْ أَزِلَّ اَوْ أُزَلَّ اَوْ أَظْلِمَ اَوْ أُظْلَمَ اَوْ اَجْهَلَ اَوْ يُجْهَلَ عَلَيَّ
அல்லாஹும்ம இன்னி அஊது பிக அன் அளில்ல அவ் உளல்ல. அவ் அஜில்ல அவ் உஜல்ல. அவ் அழ்லிம அவ் உழ்லம. அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய.
பொருள்: யா அல்லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது (பிறரால்) நான் வழி தவறச் செய்யப்படல், அல்லது நான் பிசகிவிடுதல் அல்லது (பிறரால்) நான் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு அநீதமிழைத்து விடல் அல்லது (பிறரால்) நான் அநீதமிழைக்கப்பட்டு விடல், அல்லது நான் அறிவீனனாக ஆகிவிடல் அல்லது (பிறரால்) அறிவீனம் என்மீது ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.
(நூல்: அபூதாவூது)

No comments: