Thursday, April 17, 2008

பீரேங்கிளைத் துரத்தும் பிஞ்சுக் கரங்கள்!


பாலஸ்தீன மண்ணில்
பயங்கரவாதம் புடை சூழ
அதோகதியாய் ஆனது
அவர்களது எதிர்காலம்!

பசுமையாய் நினைக்கப்பட வேண்டிய
பச்சைப் பசேர் எதிர்காலம்
அவர்கள் உள்ளத்தில்
சிகப்பாய் காட்ச்சி தருகிறது!

அங்கோ - பறவைகள்
கிஞ்சிற்றும் கவளையற்று
தானியங்களைப்
பொருக்கிக் கொண்டிருக்க

சின்னஞ் சிருசுகளோ
கற்களைப் பொருக்கிக் கொண்டிருக்கின்றனர்
பீரேங்கிகளை எதிர் கொள்ள!!

குழந்தைகளின் அழுகைக் குரல் - அவள்
காதுகளை அடைந்ததோ இல்லையோ
பீரேங்கிகள் பிரசவிக்கும்
அதிர்வுகள் அவள் கண்களை நனைத்தது!

ஒரு தாய் பிரசவித்தால் - அங்கே
சந்தோஷ கணங்கள் ஜொலிக்கும்
ஒரு பீரேங்கி பிரசவித்தால் - அங்கே
கருமாரி ரணங்கள் அரங்கேரும்!!

மனிதனுக்கு மட்டும் ஏனிந்த வக்கிரப் புத்தி!?

ரணங்களை எரித்து சாம்பலாக்கி விட்டு
ரம்யத்தை மட்டும் விதைக்க வேண்டியவன்
மரணங்களை விதைத்து வில்லங்கம் செய்து
பிணங்களை அறுவடை செய்து கொண்டிருக்கிறான்!

விடியுமா அவர்கள் தேசம்?
ஏக்கத்தை மென்றவனாக
பிரயாணிக்கின்றேன் நாளையை நோக்கி
இளைய தலைமுறையாவது
தலைநிமிர்ந்து வாழட்டும் வழிவிடுங்கள்!

- ஆக்கம்: நிர்வாகி

No comments: