Sunday, April 13, 2008

என் கதி என்ன?

என்னை -உதறியது நம் சமூகம்!
வேண்டாதவனாய் வீழ்ந்து கிடக்கின்றேன்
வெட்கித் தலை குனிய எனக்கேது சொறனை!!

சலித்ததுவே என் வாழ்க்கை!
காலம் - மாற்றிடுமா என் போக்கை?!
தடை தாண்டிய பேச்சுக்கள் தான்
அறுத்துடுமோ என் நாக்கை?!

கல் நெஞ்சனாய் மாறுவேனா?
காடே கதியன்று போவேனா?
இல்லை -பாதியிலே எனையிழந்து
பரிதவித்துப் போவேனா?

புதிய வாழ்க்கை தனைப் புனைவேனா?
புத்தம் புதியன செய்வேனா?
இல்லை - பழமைதனைப் புதிதாய் முடிவேனா?

வாழ்க்கை என்பது பிழிந்தெடுத்த தேனா?
இல்லை- பூச்சிகளுக்கப்பால்
பதுங்கியிருப்பது தானா?

பாசம் என்பது வீணா?
அது போலி வேஷம் தானா?
இல்லை - போகப் போக மாறும் தானா?

அன்பு எனக்கு ஒளிவிளக்கு!
அனைவரிடமும் இருந்தால் - நலம் நமக்கு
அது இல்லாததால் தானே நாடே நாறிக் கிடக்கு!

போலிவாழ்க்கை ஒரு சுவரொட்டி!
பொய்ப் பிரச்சாரம் கண்டால் நில் எட்டி!
பசியென்றாலும் வாயில் தினித்துவிடாதே
அது சுடு ரொட்டி!

நிலைப்பது ஓரிரு நாட்களே!

No comments: