Sunday, April 6, 2008

தொலைந்து போன இங்கிதம்!


மேகச்சரிகை பூமேனியை
புதிதாய் துவட்டும் போதெல்லாம்
புத்தம் புதிய சுவாசங்கள்
சுதந்திரத்தை உணர்த்தும்

சுதந்திரமாய் மனிதன் வாழ
சுருக்கமான வழியுண்டா?
சுத்திச் சுத்திப் பார்க்கிறேன்
சுள்ளென்று குத்துகின்றது
அமெரிக்க முள்!

வாழ விடுங்கள் மனிதனை
வழுக்கை விழ முன்னமே
கொஞ்சமேனும் சுவாசிக்கட்டும்
இழந்து போன சுகந்தங்களை!

படாத பாடுபட்டு
பக்குவமாய் வளர்த்து வந்த
பறவையொன்று வானிற் பறந்ததா?
இல்லை - பகைவர்கள் பையிலா?

இன்னல் பூத்த இவ்வுலகில்
இங்கிதம் தொலைந்து போனது!
மனிதனுக்கும்!
மற்றைய படைப்பிற்கும்!!

No comments: