Sunday, April 13, 2008

நீல தேசம்!!!


பச்சைப் பசேரென்ற உலகம்
அதை - அழியாமல் பாதுகாப்பது
அனைவருக்கும் கடமை.

கடமை மறந்து
கல்வியின் பயன் இழந்து
மனிதத்தை ஓங்கி உதைப்பதேன்?

மனித உணர்வுகளில் உணர்ச்சியூட்டி
மனித மரபுகளோடு களிசடை வாழ்க்கையை
அரங்கேற்ற அற்பர்ளின் அரங்கேற்றம்!

நம் பெருமை சீர்குழைய
நாமே கழமிறங்கிடின்
நாளை எப்போதும்
நரக வாழ்க்கைதான்!

காட்டெருமைக்குக் கூட
உண்டு கட்டுப்பாடு - ஆனால்
மேற்கத்தேயம் வளர்த்த
மனிதனுக்கு அது - தட்டுப்பாடு!

(லிங்கமும் யோனியும் சிலரால் வணங்கப்படுகிறதே! வணங்கும் போதும் கூட ஆபாசம் மறந்துவிடாமலிருக்கவோ?! கோயிலுக்குள்ளும் ஆயக் கலைகளாய் அறுவருக்கும் ஆபாசக் கலைகள்! மறைக்கப்பட வேண்டிய மர்ம உறுப்புக்களை தெய்வங்களே சந்தை போடலாகுமா?! ஆபாசமே தெய்வத்தின் தேடல் - தொடர்கிறது புராணங்கள்!!)

ஆபாசம்தான் அவன் வணங்கும் தெய்வம்!
ஆ! பாசம் என்பது வெறும் வேஷம்!

பச்சிளம் குழந்தையையும்
கழுகுக்கண்களால்..
பால் வடியும் முகங்களையும்
கரடிக் கரங்களால்..

கூடப்பிறந்த சகோதரிகளைக் கூட
குறிவைத்து குதருகின்றதே - ஒரு
உதவாக்கரைச் சமூகம்!
மேற்கத்தேய அழுக்குகள்
பிஞ்சு உள்ளங்களையும் அப்பிக் கொள்ள
பரிதவிப்புக்களோடு நாளைய விடியல்கள்..!

பச்சை பச்சையாய்
தளிர்த்திருந்த பொழுதுகள்
நம் வாழ்க்கைக்கு விடை கொடுக்க
பச்சை பச்சையாய் நீலச் செயல்கள்
பாதையெல்லாம் பயணம் நடாத்துகின்றன!

சதை வியாபாரம் சந்தைக்கு வர
சகதி விளம்பரங்கள் அரங்கேற்றப்படுகின்றன!
இதுதான் ஈனர்களின் மொழியில் நவீனம்!
அதுதான் அற்பர்களின் அகராதியில் நாகரீகம்!

புதியன தேடி புதுப் பயணம்!

இதோ சில முகவரிகள்...
குழந்தை முதல் குடுகுடு கிழடு வரை
பணப்பேயாடுகிறது அங்கே!

உடன் பிறந்த சகோதரிகளை
நோட்டுக்கள் நொண்டியாக்க
பிறந்த கோலத்தில் கூடப்பிறந்தவர்கள்!

பணம் பத்தும் செய்யும் என்பர்
ஆனால் - இதுவும் செய்யுமா?
அதோ பணத்துக்காய்
பந்தாடப்படும் அங்கங்கள்!

பண நோட்டுக்காய்
பாய்விரிக்கும் பச்சிளங்கள்!
மனிதா! முடிவுதான் என்ன?

மனிதம் விலை போனதால் - அங்கே
அப்பட்டமாய் ஆபாசம் ஆட்சி நடத்துகின்றது!

மேற்கத்தியக் காடுகளில்
நவீன மிருகங்களின்
நாறிப் போன கலாச்சாரங்கள்!!

பத்து வயதாகியும் கற்போடிருந்தால்
தோழிகளின் நச்சரிப்புக்கள்!
அனுபவிக்கத் தெறியாதவள் - இது
அவளுக்குக் கிடைக்கும் அன்பளிப்பு!

வீட்டறைக்குள் அமைதியாய்
ஆடிடும் ஆட்டங்களுக்கு
வீதி வீதியாய் விளம்பரங்கள்!
வீடு வீடாய் விலை போகின்றது
விபரீத அபலைங்கள்!

மஞ்சற் பத்திரிக்கை, நீலப்படம்..
கேள்விப்பட்டதுண்டு - ஆனால்
நீல நாடு, நீல தேசம் கண்டதுண்டா?

பச்சைப் பசேரென்ற
உலகை உருக்குலைத்து
வானத்தின் கலரோடு
கலந்து விடப்பார்க்கின்றது
வயாக்கிறா சமூகம்!

நீல தேசம் புனைகிறார்கள்
நீங்காத கவளையை விதைப்பதற்கு!
அப்போது அவனே முணுமுணுப்பான்
நிம்மதியைத் தொலைத்து விட்ட கவளையில்!

No comments: