Sunday, April 13, 2008

கோடை காலம்!

என் வாழ்க்கையே ஒரு கோடை காலம்!
வசந்தம் தேடி சவுதி வந்தேன்

வரண்ட கோடை எனைத் துறத்திற்று!
ஆறுதல் தேடி பக்கம் சென்றால்
அரேபியர் பார்வை அணல் மூட்டிற்று!

பாலை வனத்தில் குடிப்பதற்கே தண்ணீரில்லை!
ஆனால் - அடிக்கடி நான் குளித்துக் கொள்வேன்!
வியர்வையே! பாலைவனமெங்கும் நீ வாழ்க!

கானல் நீரையே கண்டு பழகியதால்
என் வாழ்க்கையே இருண்ட பாலைவனம்!

பாலைவனச் சோலைகளுக்காய்
பந்தாடும் வாழ்க்கையாய் - என்
வாழ்க்கை உருளுகின்றது.

பாலைவனத்திலும் மிருகங்களுக்கு
பசியகற்றும் இறைவன் - என்
வாழ்க்கையின் வசந்தத்திற்கும்
வழிசெய்வான் என்ற எதிர்பார்ப்போடு
நடக்கிறேன் நாளையை நோக்கி..

No comments: