Thursday, April 24, 2008

அரக்கர்களின் ஆராக் காமம்!

அன்று தொட்டு இன்று வரை அரக்கர்களின் அராஜகம் உலகாழுகின்றது! உணர்வற்ற பிண்டங்களாய் நாம் காலத்தைக் கடத்தும் போதெல்லாம் என் உணர்வே என்னை எச்சரிக்கின்றன!

அரசியல் வேட்டையில் பாவம் மனிதம் மாட்டிக் கொண்டது. ஆதிக்க சக்திகளுக்கு அது இல்லாததால் மனிதன் வேண்டாப் பொருளாய் ஆனான்!
உலகாழும் உணர்வுகள் மேற்கத்திய மண்டைகளை மரணிக்கச் செய்துவிட்டன! அநியாயமும், அரக்கக் குணமும் அவர்களின் உயர்ந்த பண்புகள்! நடிப்பும், நாடகமும் அவர்களது கைதேர்ந்த கலைகள்!

மனிதம் பேசி, அமைதி தேடி போலி வேடம் போடும் சங்கதிகள் நாளாந்தம் அரங்கேற்றப்படும் நாடகங்கள்! இறுதியில் பின்னனி சக்தியின் பிர்அவ்னியத் தனமும், முன்னனி முரடர்களின் போலி வேஷமும் பிய்த்துக் கொண்டு புறப்பட்டு விடுகின்றன!

அரபுகள் என்றால் அரக்கர்களுக்குக் கொண்டாட்டம் தான்!அங்கேதான், குருதியும் எண்ணெயும் மலிவாய்க் கிடைக்கும்! ஈவிரக்கமற்ற ஈனர்களின் பணப்பேய் இரத்தத்திலும் எண்ணெய் வடித்துப் பார்க்கின்றது!!!

அரக்கர்களின் ஆராக் காமம் அரபைப் புணர்ந்து தொலைக்கின்றன! புணர்ந்த மறுகனமே புனித தேசங்கள் கூட மரணப் பிறசவம் நடத்தின!!
உலகின் இளைய தலைமுறையினர் இலகுவாய்ப் புறிந்து கொள்ள இன்றே புனையப் படுகிறது இந்த இரத்த ஓவியம்! பார்ப்போருக்கெல்லாம் பளிச்சென்று புறிந்துவிடும் அவர்களின் அந்தக் காலங்கள்!!

பாவமறியாப் பச்சிளங் குழந்தைகளும், தள்ளாடும் வயதிலே இறுதி நாற்களை சுவாசித்துக் கொண்டிருக்கும் கிளடுகளும் கூட அவர்களின் குறிக்குத் தவறவில்லை! அவர்களின் கதறலும், துடிதுடித்து மடியும் போது எழுந்து மூர்ச்சையாகும் மரண ஓலங்களும் அவர்களுக்கு உயிர் கொடுக்கின்கறதோ!

பச்சை பச்சையாய் மனித மாமிசம் புசிக்கும் கரடிகளே! மிச்சமேதும் வைக்காமல் மனிதனை அழிக்கப்பார்க்கிறீரோ? மனிதத்தை அறுத்து, உணர்வுகளை உறித்து மண்டை ஓடுகளால் ஓர் சரித்திரம் படைக்கின்றீர்!உலக வரலாறுகளில் உங்கள் படைப்பு மட்டும் முதலில் நிக்கும் பயப்படாதீர் அரக்கர்களின் பட்டியலில்!!

மனிதத்தைக் கொன்று மாமிசத்தைத் திண்று மட்டரகக் கலாச்சாரம் நடாத்தும் சக்தியே!
ஆங்காங்கு அமைதியாய்க் காலம் கடத்திய அபலைகளைக் கூட உறுக்கேற்றி உருமாற்றியிருக்கிறாய்! நாளை என்பது சிகப்பாய் விடியத்தான் போகின்றது!

அரக்கர்களின் தேசத்தைக் கண்டு பிடித்தவன் இன்றுமட்டும் உயிருடன் இருந்தால் நிச்சயம் கவளையில் துவண்டு விழுந்திருப்பான்! ஏன் தெறியுமா? அவர்களின் ஆக்கங்களை விட அவர்கள் நிகழ்த்திய அழிவுகளே அதிகம்!!

மனித அழிவில் மகிழும் சக்தியே!
உன் ஒவ்வொரு கண்டு பிடிப்புக்குப் பின்னும் ஓராயிரம் பரிதவிப்புக்கள் பதுங்கியிருக்கின்றன. அவை சந்தைக்கு வருமுன்னே ஆயிரமாயிரம் உயிர்களைக் குடித்தல்லவா விளம்பரமாகின்றது!!

என் சமுதாயம் உனக்கு என்ன துரோகம் தான் செய்துவிட்டது! உன் உயர்வுக்கு வித்திட்டது தவறா? இல்லை உன் வளர்ச்சிப் படிகளில் படிக்கட்டாய்த் தேய்ந்ததுதான் குற்றமா? உண்ட வீட்டுக்கே உபத்திரவம் செய்தல் தகுமா?!

என் சமுதாயத்தின் இரத்தக் கறை, சலவை செய்ய முடியாமல் தோய்ந்து கிடக்கிறது! அமைதியின் நிழலில் நாற்காலியிடும் அந்த நாட்களுக்காக ஒரு உணர்ச்சியின் கதரல் கீதமிது!

என் அமைதி எனைத் துறத்துகிறது. என்னைப் போல் ஆயிரம் ஆயிரம் பேர்களில் உறக்கத்தைத் திருடியிருக்கிறாய்!

நாளைய சந்ததியினர் உலக வரைபடத்தில் அயோக்கிய தேசத்தைக் காணும் போதெல்லாம் ஒப்பாரிவைத்து அழமுன், அராஜகத்தை அழித்துவிட்டு புதியதாய் ஒரு தேசத்தை உருவாக்குவோம்!

மனிதத் தோரனையில் அந்த சத்ருக்களை எனக்கும் பிடிக்கவில்லை! இரத்த வெறியும், ஈவிரக்கமற்ற தொனியும் அவர்களின் கண்களில் தெறிகின்றன!இரத்த வாடையில்லா தேசம் வேண்டாம் என அறிக்கை விடுகிறார்கள்!

உலகமே உன்னை நேசிக்கிறேன்! உன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்திருக்கிறாயா? பூமியே உன்னை நன்றாகவே புறிந்து கொண்டேன். ஏனன்றால் என்னைப் போலவே உனக்கும் அபெரிமித அராஜகம் பிடிக்கவில்லை! என்னைப் பற்றி மட்டும் நான் பட்டியலிட விரும்பவில்லை. உன் உணர்வுகளையும் உலகுக்கு உணர்த்த விரும்புகிறேன்:

அமெரிக்க அராஜகத்தை சகிக்காது பூமித் தாய் மெய் சிலிர்க்கின்றாள்- நிலநடுக்கம்!

அங்குள்ள அரக்கர்களின் ஓயாத ஒழுக்கக் கேட்டைப் பார்த்து மூச்சிறைக்கிறாள் - புயல்!

சில போது பொறுக்க முடியாமல் சற்று அதிகமாகவே - சூறாவளி!
தன் மேற்கத்தேயக் குழந்தைகளின் கொடூரம் கண்டு அவள் கண்கலங்கும் போதெல்லாம் மேகமும் சேர்ந்து அழும் - மழை!

பூமியிலே இத்துனை அராஜகமா? பக்கத்து வீட்டுக்காரனும் எரிந்து விழுகிறான்- இடி!

மனிதப் பேய்களின் இரத்த வேட்டை கண்டு இடிந்து போய் உற்கார்கிறாள் - நிலச்சரிவு!

அந்த வீணர்கள், வீண் வம்புகளை விலைக்கு வாங்கும் போதெல்லாம் வியர்த்துப் போடுகிறாள் - வெள்ளம்!

பச்சைப் பசேரென்ற அவள் பட்டுப் புடவையை பச்சக் கயவர்கள் கலைகின்றனர் - காடொழிப்பு!

சில போது அவளே தானாய்க் கலைந்து கொள்கிறாள் - இலையுதிர் காலம்!

இதைக் கண்ட வான்மகன் கண்ணடிக்கின்றான் போலும் - மின்னல்!

கயவன் செயல் கண்டு அவளுக்கே வயிற்றைக் கலக்குகிறது - எரிமலை!

பிரானியர்களின் பிழைகளும், பித்தலாட்டங்களும் அனல் மூட்டுகின்றது - உஷ்னம்!

இறக்காமல் இறந்து கொண்டிருக்கும் ஒருவனின் நச்சு அவள் தேகத்தில் ஊறு விளைவிக்கின்றது - அழிவு, நாசம்!

அரக்கர்கள் தேடும் நாளைய பூமியை அன்று முதலே ஒத்திகை பார்க்கிறாள் - பாலைவனம்!
- ஆக்கம்: நிர்வாகி

No comments: