Thursday, April 17, 2008

சினிமாக்கள் உமிழ்ந்த எச்சங்கள் சில..

பொன்னான நேரம் மண்ணாய்ப் போகும் துயர்!
சமுதாய சீர்கேட்டிற்கு முதற் காரணியான காட்சி!
இஸ்லாமிய கலாச்சாரங்கள் சிதைவதற்கு வழிகோலுகின்றது!
மனிதனது உள்ளங்களிலே நயவஞ்சகத்தை உண்டாக்கும் விபரீதம்!
சில சமயங்களில் இன மோதல்களுக்குக் கூட வழிவகுக்கும் அபாயங்கள்!
சிறுவர்கள் மனங்களிலே சின்னச் சின்ன ஆசைகளை வளர்க்கின்றது!
வாலிப உள்ளங்களுக்கு வயாகரா ஏற்றி வேடிக்கைப் பார்க்கிறது இந்த சினிமா!
அந்திப்பட்டால் பாடங்களை மீட்டுவதில் ஆர்வம் காட்டிய மாணவர்கள் இன்று டி.வி.க்களுக்கு முன்னால் காட்சி தரும் சோகங்கள்!
நல்ல விஷயங்களை கேட்பது, படிப்பது போன்ற நல்லறங்களை விட்டும் நம்மைத் தடுக்கிறது.
குடிப்பழக்கம், புகைத்தல் போன்ற தீய பழக்க வழக்கங்களுக்குமிக விரைவில் மனிதனை அடிமையாக்கி வேடிக்கைப் பார்க்கின்றது இந்த சினிமாக்கள்!நாகரிகம், ஸ்டைல் என்ற பெயரில் சினிமா நடிகர்களால் இவைகள் ஊக்குவிக்கப்படுகின்றது!
நாகரீக மோகம் கொண்ட இளைஞர்களுக்கு நடிகர்கள் தானே ஆசிரியர்கள்!?
விபச்சாரத்தில் வழுக்கி விழ மனிதனை கூவி அழைக்கின்றது இந்த சினிமாக்கள்!
அரைகுறையாக காட்சி தரும் அழகு மங்கையர்களைக் கண்டு களிப்பதற்கென்றே ஒரு சமூகம் அலைமோதுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்!
இது தானே விபச்சார விபத்திற்கான முதல் எட்டு (படி)…!!

சமுதாய சீர் கேட்டிற்கு வித்திடும் இந்த சினிமாவைப் புறக்கணிப்போம் பொண்ணான நேரத்தை மண்ணாக்காது ஒவ்வொரு வினாடியையும் நல்ல விஷயங்களில் செலவு செய்வோம்.
நச்சுப் பாம்புக்குப் பெயர் தான் நல்லபாம்பு! சினிமாக்கள் எவ்வளவு தான் நல்ல தோல் போர்த்தினாலும் அது வடிகட்டிய அசிங்கம்… அசிங்கம்… அசிங்கம் தான்!

இந்த கேவலமான சினிமாக்களை புறக்கணித்து படிப்பு, வாசிப்பு போன்ற விஷயங்களில் கவணம் செலுத்துவதன் மூலம்காலத்தை வீணாக்காது காலத்தின் கண்ணியத்தைப் பேணுவோமாக!
-ஆக்கம்: நிர்வாகி

No comments: