Thursday, November 1, 2012

ஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்

ஷீஆ என்றால் குழு, அணி, கூட்டம்,பிரிவு என்று அர்த்தமாகும். அலி(ரலி) அவர்களுக்குச் சார்ப்பாக இயங்குவதாக காட்டிக் கொண்டு களம் இறங்கியதாலேயே அப்துல்லாஹ் இப்னு ஸபா வின் கூட்டத்தினர் ஷீஅத்து அலிஎன அழைக்கப்பட்னர். அலி(ரலி) அவர்களுக்கும் இக்கும்பலுக்கும் எத்தொடர்ப்புமில்லை என்பதால் நாளடைவில் ஷீஆஎன்று அழைக்கப்ப டலானார் கள். உண்மையில் ஷீஅத்து அலிஎன்பதை விட ஷீஅத்து இப்னு ஸபாஎன்று அழைப்பதே பொறுத்தமானது.
ஷீஆகூட்டத்தின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு ஸபா ஒரு யூதன். இஸ்லாத்தைக் ஏற்றுக் கொண்டதாக நடமாடி முஸ்லிம்களுக்குள் ஊடுறுவினான். இஸ்லாத்தின் நம்பகத்தன்மையை சிதைக்கும் நோக்கமாக இவன் கையாண்ட பிரச்சாரங்களில் ஒன்று, அலி(ரலி) அவர்களுக்கும் நபிகளாரின் குடும்பத்தினருக்கும் முன்னுரிமை வழங்கி அதிகாரத்தை அவர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்பதேயாகும். இவனது பிரச்சாரத்தின் போலித்தன்மையை அலி(ரலி) உட்பட அனைத்து சஹாபாக்களும் நன்கு புரிந்திருந்தனர். எனவே இவனுடைய சூழ்ச்சியில் சஹாபாக்கள் சிக்கிவிடவில்லை. (அஹ்லுல்பைத்களுடைய நிலை என்ன அவர்களுடைய அந்தஸ்த்துக்கள் என்ன? சஹாபாக்கள் அவர்களுக்கு கொடுத்த மதிப்பும் மரியாதையும் என்ன என்பதை நாம் தனியான தலைப்பில் நோக்குவோம். இன்ஷாஅல்லாஹ்.)
மரியாதைக்குரிய சஹாபாக்களான அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியோர் அலி(ரலி)யிடமிருந்து அதிகாரத்தை தட்டிப்பறித்த அநியாயக்காரர்கள், தாங்கள் செய்த தீங்குக்கு மன்னிப்புக் கோராமலே மரணித்து விட்டார்கள், அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.என்று அப்துல்லாஹ் இப்னு சபா பிரச்சாரம் செய்வதை கேள்வியுற்ற அலி (ரலி) அவர்கள் அவனைப் பிடித்து வருமாறு கட்டளையிட்டார்கள். அவன் பிடித்துவரப்பட்டதும் தாம் செய்த காரியத்தை ஏற்றுக் கொண்டான். அப்போது அலி(ரலி) அவனை தீயிலிட்டு கொன்றுவிடுமாறு உத்தரவிட்டார்கள். இதைக் கேட்ட மக்கள் அமீருல் முஃமினீனே! உங்களது நேசத்தின்பால் அழைப்பு விடுக்கக்கூடிய மனிதனை கொலை செய்யப் போகிறீர்களா? என்று கேட்டார்கள். அவனை மதாஇன் எனும் பகுதிக்கு அலி(ரலி) நாடு கடத்தினார்கள். இச்சம்பவத்தை அப்துல்லாஹ் இப்னு ஸஹீதுல் ஜுனைத் என்ற அறிஞர் இவாருன் ஹாதியுன் பைனஸ் ஸுன்னதி வஷ் ஷீஅத்தி என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். மேலும் கிதாபுர் ரவ்லா மினல் காபி பகாம் 2, பக்கம் 246 என்ற நூலிலும் பதிவாகியுள்ளது.)
இதன் பின்பும் இவனது பிரச்சாரம் ஓய்ந்து விடவில்லை. அலி (ரலி) கொலை செய்யப்பட்டபோது அலி மரணிக்கவில்லை. அவர் வானத்தின் பால் உயர்த்தப் பட்டுள்ளார் அவர் மரணித்து விட்டார் எனக் கூறி அவருடைய மூளையைக் கொண்டுவந்து 70 பேர் சாட்சி சொன்னாலும் ஏற்க மாட்டேன். அவர் மேகத்தில் இருக்கிறார். இடி அவரது ஓசை,மின்னல் அவரது பார்வையாகும்.என அப்துல்லாஹ் இப்னு ஸபா கூறினான். ஷீஆக்களின் இக் கொள்கையை ஸபஈய்யா என அழைக்கப்படுகிறது.. (நூல்: பிரகுன் முஆசிரதுன் தன்ஸிபு இலல் இஸ்லாமி, பாகம் 01, பக்கம் 145, அல்பிரகு பைனல் பிரக் பக்கம் 234)
அலி(ரலி) அவர்களுக்கு தெய்வீகத் தன்மையை உரிமை கொண்டாடும் கூட்டமும் ஷீஆவில் உருவானது. இக்கூட்டத்தை நஸீரியா எனப்படும். (இக்கூட்டமும் இன்று சிரியாவில் ஆட்சி செய்கிறது.) இது தவிர ஸைதியா, இமாமியா, இஸ்னா அஷரியா, இஸ்மாயிலியா, பாஹாயியா என பல பிரிவுகள் ஷீஆக்குள் தோற்றம் பெற்றன.
தங்களுடைய அபத்தமான பிரச்சாரங்களை முன்னெடுத்து இஸ்லாத்தின் அடிப்படைகளை ஒன்றன்பின் ஒன்றாக தகர்ப்பதில் தீவிரம் காட்டிய இக்கூட்டம் தங்களுடைய போலித்தன்மை வெளிப்படக்கூடாது என்பதற்காக அலி(ரலி) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் (அஹ்லுல்பைத்) மீதும் நேசத்தை காண்பிப்பதுஎன்ற முகமூடியை அணிந்து கொண்டு போலி ஹதீஸ் களை உருவாக்கினர்.
அலி(ரலி) அவர்களும் அவர்களது குடும்பமும் விஷேடமான மண்ணால் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட படைப்புகள் என்றும் அவர்கள் மனித சமுதாயத்தில் தனித்துவமானவர்கள் என்றும் அலி(ரலி)க்கு வந்த நபித்துவம் முஹம்மத் நபிக்கு ஜிப்ரீல்(அலை) கொடுத்து விட்டுப் போனார் என்றும் வாதிட ஆரம்பித்தனர்.
இதுபற்றி கூறும்போது: அல்குர்ஆனை(வஹீயை) அலிக்கு கொடுக்குமாறு அல்லாஹ் ஜிப்ரீலை அனுப்பிவைத்தான். அலியும் முஹம்மதும் தோற்றத்தில் ஒன்றாக இருந்ததனால் அலிக்கு கொடுக்க வேண்டிய வஹியை முஹம்மதுக்கு ஜிப்ரீல் கொடுத்து விட்டுப் போனார்என்கிறார்கள். (நூல்: அல்மனீயா வல்அமல். பக்கம். 30) ஷீஆவின் இக்கொள்கையை குராபிய்யா எனப்படும்.
அலிக்குரிய நபித்துவ உரிமையை முஹம்மத் (ஸல்) அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை. அல்லாஹ்வும் ஜிப்ரீலும் உரிய முறையில் நியாயம் தீர்க்கவுமில்லை என்றே இன்று வரை ஷீஆக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். எனவே முஸ்லிம்களிடமுள்ள குர்ஆனையும் ஹதீஸ்களையும் மொத்தமாக நிராகரித்ததோடு அவர்களுக்கென கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உருவாக்கிக் கொண்டனர்.
அத்தோடு நிற்கவில்லை. இறை நம்பிக்கையின் (ஈமானின்) அடிப்படை கோட்பாடுகளையே மாற்றி விட்டு புதிய கலிமாவை கொண்டு வந்தார்கள். இஸ்லாம் ஐந்து விடயங்களின்மீது நிறுவப் பட்டுள்ளது. 1.தொழுகை 2.நோன்பு 3.ஜகாத் 4.ஹஜ் 5.விலாயத்து அலி. (அலியின் தலைமைத்துவத்தை ஏற்பது) இந்த ஐந்தில் விலாயத்து அலியே மிகச் சிறந்தது என்றார்கள். (நூல்: அல்காபி)
நபி(ஸல்) அவர்கள் போதித்த உலக முஸ்லிம்கள் ஏற்றிருக்கின்ற கலிமாவுக்கு இது முரணானதாகும். விலாயத்து அலி ஈமானின் அம்சம்என்று ஒருபோதும் அல்லாஹ்வும் அவனது தூதரும் போதித்ததில்லை. அலி(ரலி) பெயரில் ஒரு மதத்தை உருவாக்குவது என்ற நிலையில் இவர்கள் கண்டுப் பிடித்த கலிமா தான் இது. இக்கலிமாவின் மூலம் இவர்களைத் தவிர ஏனையவர்கள் காபிர்கள் என்று முடிவுகட்டினார்கள்.
ஸஹாபாக்களை மட்டம் தட்டிப் பேச ஆரம்பித்தவர்கள், மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரலி) அபூதர் அல்கிபாரி (ரலி) ஸல்மா னுல் பாரிஸி (ரலி) ஆகியோரைத் தவிர எல்லா ஸஹாபாக்களும் காபிர்களாகி விட்டனர் என்றார்கள். (நூல்: கிதாபுர் ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 245)
இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக தங்களது உயிர், செல்வம் அத்தனையும் அர்ப்பணித்து சித்திரவதைகள் பலதை சந்தித்து பிறந்து வளர்ந்த மண்ணை விட்டும் வெளியேறி ஹிஜ்ரத்கள் செய்து யுத்தங்களை எதிர்கொண்டு மரணித்த உத்தம ஸஹாபாக்களை-அல்லாஹ்வினாலும் நபி(ஸல்) அவர்களாலும் சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட ஸஹாபாக்களை காபிர்களாக (முர்தத்களாக)வும் நயவஞ்சகர்களாகவும் ஷீஆக்கள் அன்று முதல் இன்றுவரை பேசிவருகின்றனர்.
ஆட்சி அதிகாரம்அலி(ரலி)க்குரியது என்று கூறியவர்கள் பிறகு அலிக்கு மட்டுமன்றி அவரது குடும்பத்தினருக்கும் ஷீஆ வின் பரம்பரையில் வந்த பன்னிரெண்டு இமாம்களுக்கும் அந்த அதிகாரம் உரியது என்றும் வாதிட்டனர்.
முஹம்மது இப்னு அலி ஹுசைன் இப்னு பாபவைஹி என்கின்ற ஷீஆக்காரர் கூறும்போது எவர் அலி (ரலி)யின் தலைமைத்துவத்தையும் அவருக்குப் பின்னால் வந்த (எமது) இமாம்களது தலைமைத்துவத்தையும் ஏற்க மறுக்கிறாரோ அவர் எல்லா நபிமார்களுக்கும் கொடுக்கப்பட்ட நபித்துவத்தை மறுத்தவர் போலாவார்”.
எவர் அலி (ரலி)யின் தலைமைத்துவத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு அவருக்குப் பின்னால் வந்த இமாம்களது தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறாரோ அவர் எல்லா நபிமார்களின் நபித்து வத்தையும் ஏற்றுக்கொண்டு முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்க மறுத்தவன் போலாவான்என்றார். (நூல்: ரிஸாலாதுல் இஃதிகாதாத் பக்கம் 103)
எவர் அலி (ரலி)யின் தலைமைத்துவத்தையும் அவருக்குப் பின்னால் வந்த (ஷீஆ) இமாம்களின் தலைமைத்துவத்தையும் ஏற்கமறுக்கிறாரோ அவர்கள் நிரந்தர நரகவாதிகள் என்பதை அறிவிப்பதுதான் ஷிர்க், குப்ர் என்ற வார்த்தையின் விளக்கமாகும் என முல்லா முஹம்மது பாகிர் மஜ்லிஸி என்ற ஷீஆக்காரர் குறிப்பிடுகிறார். (நூல்: பிஹாருல் அன்வார் 2390)
ஷீஆ என்கின்ற கொள்கையை ஏற்காமல் இருக்கும் எல்லா முஸ்லிம்களும் ஸஹாபாக்கள் காலத்திலிருந்து இன்றுவரை அனைவரும் காபிர்கள் நரகவாதிகள் என்பது ஷீஆக்களின் உறுதியான கொள்கையாகும். ஆனால் முஸ்லிம்களுடன் பேசும் போதும் பழகும் போதும் ஷீஆவும் சுன்னியும் ஒன்றுதான்எனக் கூறி தங்கள் கொள்கையின் விபரீதம் மக்கள் புரியா வண்ணம் நடிப்பார்கள். இவ்வாறு நடிக்க வேண்டும் என்பதே இவர்களது மதக் கொள்கையாகும். இதனை தக்கிய் அல்லது துக்யாஎனப்படும். ஷீஆவின் கொடூரம் பற்றி அறியாத அப்பாவி முஸ்லிம்கள் மாட்டிக் கொள்வதோடு அவர்களை ஷீஆ முஸ்லிம்என அழைக்கிறார்கள். இஸ்லாத்தின அடிப்படைகளை தகர்த்து விட்டு சஹாபாக்களை காபிர்கள் என்ற கொள்கையுடையவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?
ஷீஆவின் ஆன்மீகத்தின் குருபீடமாக அலி(ரலி) அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சித்தரித்ததுடன் அவர்களை தனிமனித வழிபாட்டுக்குரியவர்களாகவும் ஆக்கினார்கள். தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்ள நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஹதீஸ்களை முன்வைத்தால்தான் சமூக அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்காக போலி ஹதீஸ்களை உருவாக்கினார்கள்.
நானும் இம்ரானுடைய மகன் ஹாருனும் ஸகரியாவின் மகன் யஹ்யாவும் அபூதாலிபின் மகன் அலியும் ஒரே மண்ணிலிருந்து படைக்கப்பட்டோம். (நூல்: அல்பவா இதுல் மஜ்மூஆ பில்அஹா தீஸில் மவ்லூஆ பக்கம்.342)
நானும் அலியும் ஒரே ஒளியிலிருந்து படைக்கப்பட்டு ஆதம் (அலை)படைக்கப்படுவதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் அல்லாஹ்வின் அர்ஷின் வலது பக்கத்தில் இருந்தோம். (அல் பவாஇதுல் மஜ்மூஆ பில்அஹாதீஸில் மவ்லூஆ பக்கம்.343)
ஆதம் (அலை)தவறிழைத்தப்போது, யாஅல்லாஹ்! முஹம்மதின் பொருட்டாலும் அலி பாதிமா ஹஸன் ஹூசைன் ஆகியோரின் பொருட்டாலும் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன் என்று மன்னிப்பு கேட்டபோது அல்லாஹ் மன்னிப்பு வழங்கினான். (நூல்: அல்மவ்லூஆத் லிஇப்னி ஜவ்ஸி)
அஹ்லுல்பைத் எனும் எனது குடும்பம் நூஹ் நபியின் கப்பலைப் போன்றது. யார் அதில் ஏறினாரோ அவர் வெற்றிப் பெற்றார். யார் ஏறவில்லையோ அவர் அழிந்து விட்டார். (நூல்: மின்ஹாஜுல் கராமா பக்கம் 172)
எனக்குப் பின்னால் பன்னிரெண்டு இமாம்கள் இருக்கிறார்கள். அவர்களின் இறுதியானவர் மஹ்தியாவார். அவர்களின் தலைவர் அலி (ரலி)ஆவார். அவர்களுக்கு வழிப்பட்டவர் எனக்கு வழிப்பட்டவராவார். அவர்களுக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்த வராவார். அந்த பன்னிரெண்டு இமாம்களில் ஒருவரைக்கூட நிராகரித்தவர் என்னை நிராகரித்தவராவார். (நூல்: ரிஸாலாதுல் இஃதிகாதத் பக்கம் 103)
பன்னிரெண்டு இமாம்களும் எனது குடும்பத்தைச் சார்ந்தவர்கள். எனது விளக்கத்தை (அறிவை) அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்துள்ளான். அவர்கள் எனக்குப் பின்னால் கலீபாக்களாக இருப்பார்கள். அவர்கள் என்னால் வஸீயத்து செய்யப்பட்டவர்களாகவும் எனது பிள்ளைகளாகவும் எனது பரம்பரையைச் சார்ந்தவர்களாகவும் உள்ளார்கள். அவர்களுக்கு வழிப்பட்டவர் எனக்கு வழிப்பட்டவராவார். அவர்களுக்கு மாறுசெய்பவர் எனக்கு மாறுசெய்தவராவார். வானம் பூமியின் மீது வீழ்வதை விட்டும் அவர்கள் மூலமாக அல்லாஹ் பிடித்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் பூமியில் வாழ்வதனால்தான்
அல்லாஹ் பூமியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான். (நூல்: யவ்முல் இக்லாஸ் பீ லில்லில் காஹிமில் மஹ்தி பக்கம் 45)
சஹாபாக்களை சுவனவாசிகள் என்று ஏற்க முடியாது என மறுத்து போலி ஹதீஸ்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியதனால் ஷீஆக்கள், ராபிழிகள் என்றும் அழைக்கப்பட்டார்கள். ஹதீஸ்களை உருவாக்குவதில் இவர்களில் மூன்று சாரார் உள்ளனர்.
முதலாவது சாரார்: நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை (ஹதீஸை) செவியுற்றால் அதனை ஒரு அடிப்படையாக அல்லது முன்னுதாரணமாக மோடலாக (Model)” வைத்து பல ஹதீஸ்களை உருவாக்குவர். தம் இஷ்டம் போல் ஹதீஸ்களில் கூட்டல் குறைத்தல்களை மேற்கொள்வர்.
இரண்டாவது சாரார்: ஷீயாக்களின் இமாம்களில் ஒருவரான ஜஃபர் ஸாதிக் பெயரால் ஹதீஸ்களை உருவாக்கி, இந்த ஹதீஸை ஜஃபர் ஸாதிக் அறிவித்தார். அவருக்கு இன்னார் இன்னார் அறிவித்தனர் எனக் கூறி இறுதியில் நபி (ஸல்) அவர்கள்தான் இந்த ஹதீஸைக் கூறினார்கள் என்று கூறுவர். (ஜஃபர் ஸாதிக் பெயரில் முஸ்லிம்களுக்குள் இருக்கும் பக்தியின் காரணமாக அவர் பெயரில் மவ்லீதையும் கொண்டு வந்து சேர்த்தனர். இந்த உண்மையை அறியாத பலர் உள்ளனர்)
மூன்றாம் சாரார்: தங்கள் புத்திக்குப்பட்ட செய்திகளை யெல்லாம் அவர்கள் விரும்புகின்ற பிரகாரம் கூறி அவைகளையும் ஹதீஸ்கள் என்று அறிமுகப்படுத்துவார்கள். (நூல்: இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) அவர்களின் அல் மவ்லூஆத், பாகம் 1, பக்கம் 338)
போலி ஹதீஸ்களை உருவாக்கும் கேந்திரஸ்தலமாக மத்திய நிலையமாக கூபா நகரம் அமைந்திருந்தது. ஷீஆக்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு நகரமாக அன்றும் இன்றும் இது காட்சியளிக்கிறது.
இது பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும்போது, ஈராக் வாசிகளே! ஷாம் நாட்டுக்காரர்கள் உங்களை விடச் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அதிகமான நபித் தோழர்கள் அங்கு சென்றதுதான் இதற்கான காரணம். நாங்கள் அறிந்த விஷயங்களையே அவர்கள் அறிவித்தார்கள். உங்களிடத்தில் மிகக் குறைந்த நபித்தோழர்கள் தான் வந்தார்கள். ஆனால் நாங்கள் அறிந்த விஷயங்களையும் அறியாத பல விஷயங்களையும் எங்களுக்கு அறிவிக்கிறீர்கள். நாங்கள் அறியாத விஷயங்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தன? என்று ஆட்சேபித்தார்கள். (நூல: தாரீகுல் கபீர், பாகம் 1, பக்கம் 69)
போலி ஹதீஸ்களை உருவாக்கும் இவர்களது வேகத்தைப் பற்றி இமாம் சுஹ்ரி (ரஹ்) அவர்கள் விபரிக்கையில் எங்களிட மிருந்து ஒருசாண் அளவு ஹதீஸ் வெளியானால் அவர்களிடமிருந்து ஒரு முழம் அளவு ஹதீஸ் வெளியாகிறது.என்று கூறினார்கள். (நூல: இப்னு அஸாகிர்)
அதாவது நாங்கள் ஸஹீஹான ஒரு ஹதீஸை அறிவித்தால் ராபிளாக்கள் அது போன்று பத்து மடங்கு ஹதீஸ்களை உருவாக்கி விடுகிறார்கள் என்று அவர்களது பயங்கரமான போக்கை இமாம் சுஹ்ரி (ரஹ்) எடுத்துக் காட்டுகிறார்கள்.
அப்துர்ரஹ்மான் இப்னு மஹ்தி என்பவர் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களிடம் வந்து, நாங்கள் மதீனாவில் நாற்பது நாட்கள் தங்கியிருந்து கேட்கும் ஹதீஸ்களை ஈராக்கில் ஒரே ஒரு நாளில் கேட்டு விடுகிறோமே இது எப்படி என்று கேட்டார். அதற்கு இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறும்போது உங்களிடம் உள்ளது போன்று நாணய உற்பத்தி செய்யும் இயந்திரம் எங்களிடம் இல்லை. நீங்கள் இரவில் அச்சடித்து பகலில் செலவுசெய்கிறீர்கள்என்று குறிப்பிட்டார்கள். (நூல்: அல்முன்தகா பக்கம்-55)
கள்ள நாணயங்கள் (நோட்டுக்கள்) அச்சடித்து உண்மையான பண நோட்டுக்களுடன் கலந்து பாவனைக்கு விட்டுவிடுவது போல் போலிஹதீஸ்களை உருவாக்கி உண்மையான ஹதீஸ்களுடன் கலந்து விடுவதில் இவர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள்.
ஹம்மாத் இப்னு ஸலமா(ரஹ்) கூறுகிறார்கள். ராபிளாக்களைச் சார்ந்த ஷைக்கு ஒருவர் என்னிடம் அவர்களது நிலையைப் பற்றி கூறும்போது நாங்கள் ஒன்று சேர்ந்து ஒரு விஷயத்தை நல்லதென கருதினால் அந்த விஷயத்தை (செய்தியை நபியவர்கள் கூறிய) ஹதீஸாக உருவாக்கி விடுவோம்என்றார். (நூல்: மின்ஹா ஜுஸ் ஸுன்னா பாகம்.1 பக்கம்12- தத்ரீபுர்ராவி. பாகம்.1 பக்கம் 285)
தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த அம்சத்தை முக்கியமானதாகக் கருதுகிறார்களோ அதனை ஹதீஸ் என்ற பெயரில் உருவாக்கி விடுவதற்கும் தங்கள் பணிக்கு எச்செய்தி தடையாக இருப்பதாக உணர்கிறார்களோ அதனை முறியடித்து விடுவதற்கும் போலி ஹதீஸ்களைப் பயன்படுத்தி விட்டு நபியின்மீது பழியை சுமத்திவிடுவார்கள்.
ராபிளாக்களிடமிருந்து செய்திகளை பெற்றுக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அவர்கள் ஹதீஸ்களை இட்டுக்கட்டி அவைகளை மார்க்கமாக எடுத்துக் கொள்கின்றனர் என இமாம் ஷரீக் இப்னு அப்துல்லாஹ் அல்கானி (ரஹ்) கூறுகிறார்கள். (நூல்: மின்ஹஜுஸ் ஸுன்னா, பாகம் 01, பக்கம் 13)
ராபிளாக்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்டபோது அவர்களிடம் பேசாதீர்கள். அவர்களிடமிருந்து கிடைக்கும் எந்தச் செய்தியையும் அறிவிக்காதீர்கள். என்றார்கள். (நூல்: மின் ஹாஜுஸ் ஸுன்னா பாகம் 1, பக்கம் 13)
பொய்யின் முழுவடிவமாகச் செயல்பட்ட இவர்களிடமிருந்து வரும் எந்தவொரு செய்தியையும் ஏற்றுக் கொள்ளவும் கூடாது மற்றவர்களுக்கு அறிவித்துவிடவும் கூடாது என்று அவர்களது முகத்திரையைக் கிழித்துக் காட்டினார்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்.
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறும்போது: பொய்யைக் கொண்டு சாட்சி சொல்லக் கூடிய மனோ இச்சையைப் பின்பற்றக் கூடிய ராபிளாக்களை விட ஒரு கூட்டத்தை நான் கண்டதில்லை என்றார்கள். (நூல்: இக்திஸாரு உலூமில் ஹதீஸிலி இப்னி கஸீர். பக்கம் 109)
அலி(ரலி) அவர்களின் சிறப்புக்கள் பற்றி ராபிளாக்கள் உருவாக்கிய ஹதீஸ்களை கணக்கிட முடியாது என இமாம் இப்னுல் கையும் (ரஹ்) கூறுகிறார்கள். இமாம் அபூயஃலா ரஹ்) கூறும் போது அலி(ரலி) மற்றும் அஹ்லுல்பைத்கள் சிறப்பு பற்றி ராபிளாக்கள் உருவாக்கிய ஹதீஸ் மூன்று இலட்சத்தைச் சாரும் என்கிறார்கள். (நூல்:அல் மினாருல் முனீப் பக்கம்116. அல்வல்உ வில் ஹதீஸின் நபவி, பக்கம்76)
போலி ஹதீஸ்களை முன்வைத்து தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம் என்ற போக்கில் ராபிளாக்கள் களம் இறங்கினாலும் இவர்களின் அபத்தங்களை இமாம்கள் தக்க சமயத்தில் அடையாளம் காட்டினார்கள்.
சஹாபாக்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ராபிளாக்கள் உருவாக்கிய பொய்யான சில ஹதீஸ்களை கவனியுங்கள்.
உமர் (ரலி) சிஹாக் என்ற விபச்சார பெண்ணுக்குப் பிறந்தவர். அப்துல் முத்தலிப் அப்பெண்ணுடன் விபச்சாரம் செய்தபோது பிறந்தவர் தான் உமர்!
அபூ பக்கர் (ரலி) ஷைத்தானின் கொம்பு! அபூபக்கரும் உமரும் பொய்யர்கள் அநியாயக்காரர்கள் நயவஞ்சகர்கள் (முனாபிக்குகள்!) எவர் அவ்விருவரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாரோ அவர் ஜாஹிலியத்தான வழிகேடான மரணத்தையே தழுவினார்.
நிச்சயமாக உஸ்மான் (ரலி) சபிக்கப்பட்ட அசத்தியத்தில் இருந்தவர். எவர் உஸ்மானை ஏற்றுக் கொண்டவராக மரணித்தாரோ அவர் காளைமாட்டை வணங்கியவனை விட மிகப்பெரிய பாவத்தை செய்த அநியாயக்காரனாக மரணித்தவராவார்.
(இச்செய்தி ஷீஆக்களின் அடிப்படை கொள்கைகளை விளக்கும் நூல்களான உஸுலுல் காபி, பிஹாருல் அன்வார், ஹக்குல் யகீன் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளதாக அப்துல்லாஹ் இப்னு ஸஹீதுல் ஜுனைதி அவர்கள் ஹிவாருல் ஹாதியுன் பைனஸ் ஸுன்னதி வஷ்ஷீஅதி எனும் தனது நூலில் விபரிக்கிறார். பக்கம் 42, 43)
சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட இந்த உம்மத்தின் அதி சிறப்புக்குரிய அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான் (ரலி) ஆகியோரை ஷீஆக்கள் எந்தளவு கேவலமாக மதிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
முஆவியா எனது மிம்பரின் மீது நிற்கக் கண்டால் அவரைக் கொன்று விடுங்கள். (நூல்: ஷரஹ் நஹ்ஜுல் பலாகா பாகம் 01, பக்கம் 135)
யாஅல்லாஹ்! முஆவியாவுக்கும், அம்ரு இப்னுஆஸ் அவர்களுக்கும் பித்னா எனும் ஆடையை அணிவிப்பாயாக! அவர்கள் இருவரையும் நரகத்தில் தள்ளி விடுவாயாக (நூல்: மேற்படி நூல் பாகம் 01, பக்கம் 135)
முஆவியா(ரலி)யையும் அம்ரு இப்னு ஆஸ்(ரலி)யையும் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக தங்கள் வெறுப்பை வெளிக்காட்டும் முகமாக இப்படியான போலி ஹதீஸ்களை உருவாக்கி அச்சுறுத்தல் விடுத்தனர்.
அலி (ரலி)அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த மக்களின் நிலையைக் கண்ட ஷீஆக்கள் அந்த மரியாதையை துரும்பாக பயன்படுத்திக் கொண்டு அலி (ரலி) அவர்களின் சிறப்புக்களைப் போற்றிப் புகழ்ந்து இல்லாததும் பொல்லாததுமான கதைகளைக் கட்டி ஹதீஸ்களாகக் கூறி தங்கள் ஷீஆக் கொள்கையை வளர்க்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு கூறப்பட்ட சில செய்திகளைப் பாருங்கள்:
யார் ஆதம் (அலை)யின் அறிவையும், நூஹ் (அலை)யின் விளக்கத்தையும், இப்றாஹீம் (அலை)யின் பொறுமையையும், யஹ்யா (அலை)யின் பற்றற்ற தன்மையையும், மூஸா (அலை)யின் தோற்றத்தையும், ஈஸா (அலை)யின் இபாதத்தையும், காண விரும்புகிறாரோ அவர் அலியை பார்த்துக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) அவர்களின் அல்மவ்லூ ஆத் பாகம் 01, பக்கம் 17)
எவர் இப்றாஹீம் நபியின் சகிப்புத் தன்மையைப் பார்க்க விரும்பு கிறாரோ எவர் நூஹ் நபியின் அறிவைப் பார்க்க விரும்புகிறாரோ எவர் யூசுப் நபியின் அழகைப் பார்க்க விரும்புகிறாரோ அவர் அலியை பார்த்துக் கொள்ளட்டும். (மேற்படி நூல்: பக்கம் 17)
அலி (ரலி) அவர்கள் ஒரு வேலைக்காகப் போய், சூரியன் மறைந்த பின் வந்தார்கள். நபியவர்கள் அலியைப் பார்த்து அலியே! அஸர் தொழுது விட்டாயா? என்று கேட்டார்கள். அதற்கு அலி (ரலி) இல்லை என்று கூறினார். உடனே நபியவர்கள் யா அல்லாஹ்! அலி உனது தேவைக்காகவும் உனது நபியின் தேவைக்காகவும் போய்வந்தார் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஆகவே மறைந்த சூரியனை (அஸர் தொழுகைக்காக) நீ மீண்டும் உதிக்கச் செய்வாயாகஎன நபியவர்கள் பிரார்த்தித்தார்கள். உடனே சூரியன் உதித்தது. அலி(ரலி) அஸர் தொழுத பின் சூரியன் மறைந்தது. (நூல்: அல் மவ்லூஆத் பாகம் 01, பக்கம் 15)
என்னை மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் ஒரு மலக்கை கடந்து சென்றேன். அம்மலக்கு வெள்ளியிலான ஒருகட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவருடைய ஒரு கால் கிழக்கிலும் மற்றக்கால் மேற்கிலும் விரிந்து இருந்தது. அவருக்கு முன்னால் இருந்த ஒரு பலகையை உற்று பார்த்துக் கொண்டிருந்தார். உலகம் முழுவதும் அவருடைய இரு கண்களுக்கு மத்தியில் இருந்தன. படைப்புக்கள் அனைத்தும் அவருடைய இரு முழங்கால்களுக்கு மத்தியில் இருந்தது. அவருடைய கை மேற்கையும் கிழக்கையும் எட்டக் கூடியதாக நீண்டு இருந்தது.
ஜிப்ரீலே இவர் யார் என்று நான் கேட்டேன். இவர்தான் இஸ்ராயீல்! அவரிடம் சென்று ஸலாம் கூறு என்று ஜிப்ரீல் எனக்குக் கூறினார். நான் அவருக்கு ஸலாம் கூறினேன். அவரும் ஸலாத்திற்கு பதில் கூறி விட்டு உமது சாச்சாவின் மகன் அலி என்ன செய்கிறார் என்று வினவினார். எனது சாச்சாவின் மகன் அலியை நீங்கள் அறிவீர்களா என்று கேட்டேன். நான் எப்படி அவரை அறியாமல் இருப்பேன். உங்களது உயிரையும் உங்கள் சாச்சாவின் மகன் அலியின் உயிரையும் தவிர மற்றப் படைப் பினங்களின் உயிர்களை கைப்பற்றும் பொறுப்பை அல்லாஹ் எனக்கு ஒப்படைத்திருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ், உங்கள் இருவரினதும் உயிர்களை அவன் நாட்டப் பிரகாரம் கைப்பற்றுவான் எனக் கூறினார். (நூல: அல்மவ் லூஆத் பாகம் 01, பக்கம் 14,15)
உம்முஸலமாவே!. அலி எனது மாமிசத்தையுடையவர். அவருடைய இரத்தம் எனது இரத்தமாகும். மூஸா நபியிடம் ஹாருன் (அலை)க்குரிய அந்தஸ்து என்னிடத்தில் அலிக்கு உண்டு. அலியுடன் பொறாமைப்பட்டவர் என்னுடன் பொறாமைப்பட்டு நிராகரித்தவராவார். வானங்கள் மற்றும் பூமி படைக்கப் படுவதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சுவனத்தின் வாயிலில் இறைத்தூதரின் சகோதரர் அலி ஆவார் என எழுதப்பட்டிருந்தது.(நூல்: அல்வல்உ வில்ஹதீஸின் நபவி பக்கம்77)
நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜை முடித்து விட்டு மதீனா திரும்பும் வழியில் கதீர்கம்எனும் இடத்தில் எல்லா ஸஹாபாக்களையும் ஒன்று கூட்டி அலி (ரலி) அவர்களின் கையைப் பிடித்து கொண்டு இவர் என்னால் வஸீயத்து செய்யப்பட்டவர். எனது சகோதரர். எனக்குப் பிறகு கலீபாவாக வர இருப்பவர். எனவே இவருக்கு கட்டுப்பட்டு வழிப்படுங்கள் எனக் கூறினார்கள். (நூல்: அஸ்ஸுன்னா வ மகானதுஹா பித்தஷ்ரீ இல் இஸ்லாமி பக்கம் 79,80)
நான் அறிவின் தராசு, அலி அதன் இரு தட்டுக்கள், ஹஸன், ஹுஸைன் அத் தராசியின் கயிறுகள். பாதிமா தராசியின் தொடராக இருக்கிறார். எங்களிலிருந்து வரும் இமாம்கள் அத்தராசியின் தூண்கள். அத்தராசியில் தான் எங்களை நேசிப்பவர்களுடையவும், வெறுப்பவர்களுடையும் செயல்கள் அளக்கப்படுகின்றன. அந்த நேசத்தோடு எத்தனை பாவங்கள் செய்தாலும் அவன் கண்டிக்கப் படமாட்டான். அலிபாத்திமா, ஹஸன், ஹுஸைன் ஆகியோரை வெறுப்பது பாவமாகும். அந்த வெறுப்போடு செய்யப்படும் நன்மைகள் பயன்தராது. நான் கல்வியின் பட்டணம் அலி (ரலி) அதன் வாயில். எவர் அறிவைப் பெற நாடுகிறாரோ அவர் அந்த வாயிலுக்கு வரட்டும். (நூல்: அல் மவ்லூஆத், பக்கம் 350)
அலி (ரலி) மனிதர்களில் சிறந்தவர் என்று எவர் கூற வில்லையோ அவர் காபிராகி விட்டார். (நூல்: அல்மவ்லூஆத், பக்கம் 347)
முஹம்மதே! அலி (ரலி) மனிதர்களில் சிறந்தவர். எவர் அவரை மறுக்கிறாரோ அவர் காபிராகி விட்டார் என ஜிப்ரீல் (அலை) என்னிடம் கூறினார். (மேற்படி நூல்: பக்கம் 348)
அலி (ரலி)யை பார்ப்பது வணக்கமாகும். இபாதத்தாகும். (மேற்படி நூல்: பக்கம் 360)
அல்லாஹ் ஆதம் நபியைப் படைப்பதற்கு பதினான்கு வருடங்களுக்கு முன்னால் நானும் அலியும் அல்லாஹ்விடத்தில் ஒளியாக இருந்தோம். அல்லாஹ் ஆதமைப் படைத்தபோது அந்த ஒளியை இரு பிரிவாக பிரித்தான். அதில் நான் ஒரு பிரிவாகவும் அலி ஒரு பிரிவாகவும் ஆகினோம். (மேற்படி நூல்: பக்கம் 14,15)
நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு இருந்தோம். அப்போது ஒரு பறவை அதன் வாயில் பச்சை நிற முத்தை சுமந்து வந்து நபி (ஸல்) அவர்களின் மடியில் போட்டது. அதனை நபியவர்கள் எடுத்து முத்தமிட்டு விட்டு அதனைத் திறந்து பார்த்தார்கள். அதில் பச்சை நிறமுத்து இருந்தது. அதில் லாஇலாஹ இல்லல் லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்றும் அலியின் மூலமாக நபிக்கு உதவியுண்டு என்றும் எழுதப் பட்டிருந்தது. (மேற்படி நூல்: பக்கம்-15)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பள்ளியில் இருந்தபோது அலியைப் பார்த்து அல்லாஹ் உனக்கு எனது மகள் பாதிமாவை மணம்முடித்துத் தந்துள்ளான் என்று கூறி இதோ ஜிப்ரீல் எனக்கு இப்போது அறிவித்தார். நாற்பதாயிரம் மலக்குகளை சாட்சிகளாக வைத்து பாதிமாவை உனக்கு மணம் முடித்து தருகிறேன். (மண மக்களான) அலி பாதிமா மீது முத்து பவளங்களைச் சொரியுமாறு அல்லாஹ் (சுவர்க்கத்திலுள்ள) மரத்திற்கு கட்டளை யிட்டான். அது அவர்கள் மீது முத்து பவளங்களைச் சொரிந்தது. ஹுருல் ஈன்களும் அலியின் மீது முத்து பவளங்களை சொரிந்தனர் (மேற்படி நூல்: பக்கம் 15,16)
பகட்டான புகழாரத்தை உருவாக்கி போலி ஹதீஸ்களை உண்டாக்கிய ஷீஆவின் இப்போக்கைப்பற்றி இமாம் இப்னு அபீ அதீத் (ரஹ்) அவர்கள் கூறும்போது, “அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக பொய்யின் அடிப்படை, சிறப்புக்களை பற்றி குறிப்பிடும் ஹதீஸ்களாகத்தான் ஷீஆக்களிடமிருந்து வந்ததுஎன்று கூறுகிறார் கள். (நூல்: நஹ்ஜுல் பலாஹா பாகம் 02. பக்கம் 134)
அலி(ரலி) அவர்கள் அளித்த தீர்ப்புக்கள் அடங்கிய (நீண்ட சுருள்) ஏடு ஒன்று இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அதில் ஒரு(முழம்) அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு மற்றதை அழித்து விட்டார்கள். இச்செய்தியை அறிவிக்கும் இமாம் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் தமது முழங்கையை காண்பித்து இந்தளவு இப்னு அப்பாஸ்(ரலி) அழித்தார்கள் என்றார்கள். (நூல்: முகத்திமது முஸ்லிம்)
அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா(ரஹ்) கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஒரு மடல் வரையுமாறும் (அதில் குழப்பவாதிகளான ஷீஆக்களின் கருத்துக்கள்) எதுவும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறும் வேண்டி கடிதம் எழுதினேன்.(கடிதம் கண்ட) இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அவர் நல்ல பிள்ளை. அவருக்காக நான் சில விஷயங்களை நன்கு தேர்ந்தேடுத்து சொல்லக் கூடாதவற்றைத் தவிர்த்து விடப்போகிறேன்.என்று கூறிவிட்டு அலி (ரலி) அவர்கள் அளித்த தீர்ப்புக்களைக் கொண்டு வரும்படி கூறினார்கள். அவற்றில் சிலவற்றை எழுதத் தொடங்கினார்கள். ஒரு (குறிப்பிட்ட) விஷயம் வந்தபோது இப்படியெல்லாம் அலி(ரலி)அவர்கள் தீர்ப்பளித்திருக்க முடியாது வழி தவறியவர்தான் இப்படித் தீர்ப்பளித்திருப்பான்என்று கூறினார்கள். (நூல்: முகத்திமது முஸ்லிம்)
அலி(ரலி) அவர்கள் அளிக்காத தீரப்புக்கள் சொல்லாத செய்திகள் அவர்களது பெயரால் ஷீஆக்கள் புனைந்து வைத்ததையே இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அழித்ததோடு ஷீஆவின் துரோகத்தையும் அடையாளம் காண்பித்தார்கள்.

No comments: